Monday, June 20 21 comments

உனக்குள் நான்...






உனக்குள் நான் இருக்க 
வெளியில் எங்கெங்கோ 
தேடி கொண்டுயிருக்கிறாய்..
என்னை..!!

*****

உன் நேசத்தின் ஆழத்தை 
காண கோபம் கொள்கிறேன்
உன்னிடம்...


கடலை விட ஆழமானது 
உன் நேசம்..!!!

என் பொய் கோபம் 
அறியாத முட்டாள் 
பெண் நீ..!!!

********

நேசம் என்னும் புயலால் 
உன்னை தாக்கி சென்று விடுவேன்..!! 

நான் வந்த தடத்தோடு 
நிலைமாறாமல் ...
நீ..!!

******

உன்னை காண வேண்டுமென்றேன் 
ஒளியாய் வந்தாய் 
நான் விட்டில் பூச்சியாய் 
வருவதை அறியாமல்..!!! 
உன்னை கண்ட அக்கணமே 
உயிரற்று போனேன்..!!

*****

என் வீட்டு அறையெங்கும் 
உன் வாசம்
நீ சென்ற பின்பும்...!!! 

உன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு
உயிர் கொடுக்க மீண்டும் 
ஒரு முறை வந்து விட்டு போ..!!! 

******




என் நேசம் என்றும் பொய்யல்ல 
                                                 உன்னை போல்..!!!!





 
;