ஆயிரம் மழை துளிகள்
உன்னை சூழ்ந்திருக்க
ஒரு துளியாய் என்றும்
உன் நெற்றியில் நான்..!!
****
கோபித்து கொள்கிறாள்
அவள் வாசனையை
ரசிக்காமல்..
மண் வாசனையை
ரசிப்பதால்..!!!
****
அவளுடன் பேசுகையில்
இடியாய் இடித்து..
தொந்தரவு செய்கிறது
மழை..!!!
****
காத்திருந்த காதலர்களை
மேலும் காக்க வைக்கிறது
மழை..!!
*****
ரசித்து ரசித்து காதல்
மழையில் நனைந்தாலும்
காதல ஜுரம் விடுவதாயில்லை..!!
****
வேண்டுமென்றே குடையை
விட்டு செல்கிறான்
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...
*****
காதலர்களின் சாபத்தை
பெறுகிறது
மழை...
காதலனின் தாமதத்தால்..
****
பனித்துளி போல்
உன் மேல் மழைத்துளி..
மழைவிட்டாலும்
கூந்தல் சாரலின்
மழை விடுவதில்லை.
*****
ஒவ்வொரு மழையிலும்
ஒரு காதல் துளிர்விடுகிறது..
ஒரு காதல் கண்ணீரில்
கரைகிறது..!!
| Tweet | |||||



- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact