வாழ்க்கை பாதையில்
கை கோர்த்து நடந்து
கவலைகளை
மறந்தோம்..
நமக்கு நாம் என்றோம்..!!
ஆனந்தமாய் சுற்றி
திரிந்த நாட்களை
எண்ணி மகிழ்ந்தோம்,
நட்பில் பிழை கண்டு
ஒதுங்கி நின்றோம்
கண்ணீருடன்..!!
கவலைகள் போக்க
எவ்விடம் என்று அலைந்த
நமக்கு..
மேலும் கவலைகளே
பரிசாக வந்தன..!!
காயப்பட்ட மனதிற்கு
ஆறுதல் கூறினாலும்
வடுக்கள் மறைவதில்லை..!!
காயப்பட்ட மனமிது
மேலும் காயங்களை
தாங்காதென்று..
விலகி நின்று விலகி நின்று
காயப்படுத்துகிறது..!!
மாறிய வார்த்தைகள்..
மாற்றத்தை உணர்த்துகிறது
நமக்கு நாம் வார்த்தை
பொய்யாகி போனதின்று!..!!
நடப்பாய் கைகோர்த்து
சென்ற பாதையில்..
அமைதியை தேடி
தனிமையில் செல்ல
நினைத்த நட்பை
தோள் தட்டி
கண்ணீருடன்
வழியனுப்பியது
ஓர் நட்பு..!!!
| Tweet | |||||


- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact