Friday, January 6

பாசத்தை பழி தீர்க்க...






ஆயிரம் கனவுகள்
ஆயிரம் தவிப்புகள்
ஆயிரம் ஏக்கங்கள்
பிறக்க போகும் என்னிடம் ...


அனைவரையும்
பரபரப்பில் ஆழ்த்தி
நான் மட்டும் சுற்றி சுற்றி
ஆடிக்கொண்டிருக்க...
ஒன்றும் தெரியாதது போல்
வீரிட்டு அழுது வெளிவர..
ஆனந்த கண்ணீரின் வரவேற்பில்


பாதுகாப்பான இருட்டு
உலகிலிருந்து
பாதுகாப்பற்ற இருட்டு
உலகத்தில் இனி..!!


ஒன்றுமறியாமல்
கண்களை சிமிட்டிக் கொண்டிருக்கையில்
அவளின் அரவணைப்பில்
உறங்கிப் போனேன்...


எட்டி எட்டி உதைக்க 
அவள் தட்டி தட்டி கொடுக்க 
ஆழ்ந்த உறக்கத்தை கொடுத்த
அவளின் உறக்கம் கெடுத்தேன்..!!


பார்த்து பார்த்து செய்த உன்னிடம் 
பார்க்காமல் கூட செய்ததில்லை 
பார்த்து செய்தாலும்
பாசகடனை தீர்க்க முடியாது..!!


ஏதேதோ இல்லம் தேடி 
விட்டு செல்லும் உன்னை
பார்த்து போ என்னும் 
மனம் உன்னை தவிர வேறு யாருக்கு..??


ஆயிரம் ஆயிரம் துளி 
பாசத்தை கொடுத்துவிட்டு
ஒரு துளி பாசத்தை கூட 
எதிர்பார்க்காத உன்னை..


அடுத்ததொரு ஜென்மத்தில் 
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிறந்தால் பாசத்தை 
பழி தீர்த்துக் கொள்வேன்...!!



9 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதோர் ஆசை...

கவிதையும் அருமை...

சசிகலா said...

அடுத்ததொரு ஜென்மத்தில்
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிறந்தால் பாசத்தை
பழி தீர்த்துக் கொள்வேன்...!!

தாய்மைக்கு நிகர் வேறெதுவும் இல்லை அருமை

TERROR-PANDIYAN(VAS) said...

ஆஹா.. அருமை.. கவிஞருக்கு வாழ்த்துகள். :)

துரைடேனியல் said...

Ahaa...Azhagu Kavithai. Vaalthukkal.

டிராகன் said...

Good one Buddy !!!

ஆனா ..,ஒன்னே ஒன்னு இவ்ளோ நாள் காத்து இல்லாம ,கரண்ட் இல்லாம ,முன்னூறு நாள் இருக்கோமே ..,ச்சே என்ன வாழ்கைடா இது :))))))

பாலா said...

பாசத்தை பழி தீர்க்கும் ஒரே வழி இதுதான். ஆனால் தாய் பாசத்தை எப்படி பழி தீர்ப்பது? அடுத்த பிறவியிலும் இன்னொரு தாயின் வயிற்றில்தானே பிறப்போம்?

ஜெய்லானி said...

//அடுத்ததொரு ஜென்மத்தில்
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிறந்தால் பாசத்தை
பழி தீர்த்துக் கொள்வேன்...!!//

மனசை தொட்ட வரிகள் :-))

அன்புடன் நான் said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 
;