Monday, June 9

அவளோடு ஒரு பயணம் (சிறுகதை)




பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும்.  இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும்  பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ். 

பஸ் வருவதை பார்த்து  வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க,  பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள். 

இந்த கலவரத்தில்  பேருந்தை  தவறவிட்டனர்.

ஏற்கனவே லேட் இதுல இவளுக வேறென புலம்பிக் கொண்டே நகர்ந்தான் சந்தோஷ். 

அவனை பார்த்து திட்டி கொண்டே இருந்தாள்.

"ஏய் பவித்ரா விடு டி வாடி போகலாம்" அழைத்து சென்றாள் தோழி. 

மறுநாள் சந்தோஷ் பேருந்திற்காக காத்திருந்தான், இன்றும் தாமதமாகவே வந்தது.

பவித்ராவை கண்டதும் ஒதுங்கி கொண்டு கடைசியாக  பேருந்தில் ஏறினான்.  

சந்தோஷ் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவள் பார்கையில் குனிந்து கொண்டான். மீண்டும் அவள் திட்டி தீர்தாள்.

தோழியோ காதில் ஏதோ சொல்ல அவளுக்கும் விழுந்தது திட்டு. 

இறங்கும் இடம் வந்ததும்  கட கட வென ஓடி இறங்கி கொண்டான்.  

ஏய் மிஸ்டர், ஏய் மிஸ்டர்  குரல் கேட்டு திரும்பினான் பின்னால்  அவள்.

"என்னங்க வேணும் நான் தெரியாம தான் மோதினேன் சாரிங்க"

"என்ன தெரியாம மோதினே உனக்கு என்ன அவ்வளவு திமிர்"

அதெல்லாம் இல்லைங்க சொல்லி கொண்டிருக்கையில் டிக்கெட்டை மேலே எறிந்து விட்டுச்  சென்றாள்.

அடுத்த நாள் பேருந்தில் அவனை தேடி கொண்டிருந்தாள். அவனை எங்கும் காணவில்லை.  ஒரு இருக்கையில் குனிந்த தலையுடன் புத்தகத்தை  புரட்டி கொண்டிருந்தான்.

இன்றும் அதே மிஸ்டர் தொடங்கியது.

 "அட என்னங்க இன்னைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே எனக்கு சைட் அடிக்கிற அளவிற்கு தைரியம் இல்லைங்க" 

"அப்போ தைரியம் இருந்தா என்ன சைட் அடிப்ப அப்படித் தானே" 

"அட என்ன உங்களோட வம்பா போச்சு" 

மீண்டும் திட்டி டிக்கெட்டை எறிந்தாள்.

அடுத்தநாள்...

அவனை பார்த்தவுடன் அவள் சிரித்தாள். அவன் முறைத்து கொண்டே நகர்ந்து விட்டான்.  

இன்றும் அவள் பின்னால் செல்ல, அவள் வருவதை கண்டதும் நின்று.

"உனக்கு என்ன பெரிய அழகி நினைப்பா உன் முஞ்சை எல்லாம் எவனாவது பார்பானா ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா"

சந்தோஷ் கோவத்தோடு  திட்டி தீர்க. அவள் கண்ணீரோடு நின்றாள். 
டிக்கெட்டை முகத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றாள்.

உணவு இடைவேளையின் போது, அவளை திட்டியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவசரப்பட்டு திட்டிட்டோமோ, நினைத்து கொண்டே பாக்கெட்டில் கை வைத்தான். அவள் வீசியெறிந்த டிக்கெட் சுருண்டு கிடந்தது . 

பிரித்து  பார்தால் " ஐ லவ் யூ" என எழுதி இருந்தது.

அப்போது தான் உணர்ந்தான். அவள் டிக்கெட்டை எறியவில்லை ,  தன் காதலை எறிந்திருக்கிறாள். 

 மிகவும் மகிழ்ச்சியோடு அடுத்தநாள் காலை சென்றான். 

அவள் முகத்தை திரும்பி கொண்டாள். 

அவள் கையை பிடித்து, "உனக்கு நான் டிக்கெட் எடுக்கிறேன்" 

இன்னைக்கு மட்டுமா..? என்றாள்.

இல்ல வாழ்கை முழுவதும் எடுக்கிறேன் என்றான்.

அவன் கைகளை இருக்க பற்றி கொண்டாள் பவித்ரா.  

0 comments:

 
;