Friday, October 7

எங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..!!





நேற்று சந்தித்த
உறவு ஒன்று 
இரண்டாண்டில் வந்து நிற்க
ஓடிவிட்ட காலத்தை
நினைவுகளால் ஓட்டிப் பார்க்க
அன்று பழகியது போல 
இன்னும் அப்படியே ..
பழகிகொண்டிருப்பது 
தான் உன் சிறப்பு ..

ஒவ்வொருவரையும் 
நீ உறவை சொல்லி 
அழைக்கும் பொழுது 
உன்... அன்பின் ஆழம் 
தெரிகிறது....!! 
உன் மனதில் இருப்பவர்களை 
மட்டுமே நீ உறவுமுறையில்
அழைப்பாய்..!!

வாழ்த்து கவிதை எழுதி 
கொடுக்கும் உனக்கு..
ஒரு வாழ்த்து கவிதை..
இக் கவிதையை கண்டு 
கோபம் கொள்ளாமல் 
பொறுத்து கொள்ள 
சொல் உன் கவிதையை..!! 
  

என்னை ஒவ்வொரு முறையும் 
உறவுமுறை சொல்லி 
அழைக்கும் பொழுதெல்லாம்..
மரத்தில் நீர் ஊற்றியது போல் 
இறுகி கொள்கிறது...
நமக்கான.. 
பந்தம்..!!

வார்த்தைகள் வளர்கின்றன 
உன்னை பற்றி எழுதும் பொழுது..
உன் அன்பின் நீளம் 
அப்படி...!!


உன்னை வாழ்த்த வார்த்தைகள் 
தேடி கொண்டிருக்கும்..
பொழுது... 
வேறு வார்த்தைகள் 
கிடைக்கவில்லை..


எபோதும் போல் 
அண்ணா..!!
என்றே முடித்து கொள்கிறேன்..


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...


11 comments:

Unknown said...

மரத்தில் நீர் ஊற்றியது போல்
இறுகி கொள்கிறது...
நமக்கான..
பந்தம்..!!சூப்பர்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

சேலம் தேவா said...

எங்கள் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!! :)

நிகழ்காலத்தில்... said...

தம்பி வாரியர் தேவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்:)))))

Anonymous said...

Happy birth Day Annaa!!!

By
Maheswari

Prabu Krishna said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள்.....

டிராகன் said...

@ தேவா : வாழ்த்துக்கள் ..,( திரபூந்துர்த்தி மைன்ட் ல வச்சிகோங்க )

டிராகன் said...

யோவ் சவுந்தர் கவிதை ஒன்னும் புரியல ..,( ஒரு வேலை என்னக்கு இல்லக்கியம் புரியலையோ )

சௌந்தர் said...

shankar சொன்னது…
யோவ் சவுந்தர் கவிதை ஒன்னும் புரியல ..,( ஒரு வேலை என்னக்கு இல்லக்கியம் புரியலையோ )///

புரியதவரை பற்றி எழுதினா அப்படி தான் இருக்கும்...!! :))

ஆமா அது யாரு இலக்கியா..?? :)))

cheena (சீனா) said...

அன்பின் தேவா - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தேவா - வாழ்த்துக் கவிதை பகிர்வினிற்கு நன்றி சௌந்தர் = அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இக் கவிதையை கண்டு
கோபம் கொள்ளாமல்
பொறுத்து கொள்ள
சொல் உன் கவிதையை..!! //

வாவ்.. சௌந்தர். என்ன இப்படி கலக்குறீங்க!!

உங்க அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ;)

 
;