Monday, May 30 13 comments

சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!!



நீங்கள் எப்போதாவது சமையல்  எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா..???  நீங்கள் போன் செய்தவுடன்  அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..?? இது வரை யாரும் ஒரே போன் காலில் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்க முடியாது...!!!

எப்போது போன் செய்தாலும், நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபபோயகதில் உள்ளது பதில் வரும்...!!!


இந்த சமையல் எரிவாயு பதிவு செய்யும்  வேலையை எங்க அம்மா என்னிடம் தான் கொடுப்பாங்க, எரிவாயு பதிவு செய்ய எப்படியும் ரெண்டு நாள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுது எரிவாயு பதிவு செய்ய ஒரு புதிய முறை வந்துள்ளது...!!!! அதை பற்றி பார்ப்போம்

சமையல் எரிவாயு உருளையை பதிவு செய்ய 24 மணி நேர செல்பேசி தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் "இண்டேன்' சிலிண்டர்களைப் பெற இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 8124024365 என்ற செல்பேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பேசி எண்ணை அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யலாம்.



 ஒரு வாடிக்கையாளர் சமையல் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்றால் செல் பேசி இருக்க வேண்டும்..!!! லேன்ட் லைன் பதிவு செய்ய முடியாது..!!! நேரில் போனாலும் செல் போனில் பதிவு செய்யுங்கள் என கூறிவிடுகிறார்கள்..!!

ஒரு வாடிக்கையாளர் ஒரே  செல்பேசியில்  மட்டுமே எரிவாயு பதிவு செய்ய வேண்டும் வேவ்வேறு செல் போனில் பதிவு செய்ய முடியாது..!!!


குறைகள்

*  இந்த தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப் படுகிறது இலவச சேவையாக இந்த என்னை வைத்து இருக்கலாம்


*  முன்பெல்லாம் சமையல் எரிவாயு பதிவு செய்தால் பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது.


* முதலில் தொலைப்பேசியில் பதிவு செய்தால் சமையல் எரிவாயு எப்பொழுது வருமென்று கூறுவார்கள். இப்பொழுது அது தெரியாது.

*  இந்த தானியங்கி முறை பற்றி இன்னும் யாருக்கும் விழிப்புணர்வு செய்யாமல் இருப்பது... ஒரு பத்து முறை முயற்சி செய்த பிறகு எனக்கு தெரிந்தது... ஒரு சமையல் எரிவாயு பதிவு செய்ய மூன்று நிமிடம் ஆகிறது..!!!

*  செல் பேசியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் பேசி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்...???

*  ஒரே நம்பரில் இருந்து தான் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் போன் தொலைந்து விட்டால் வேறு நம்பரில் இருந்து எவ்வாறு எரிவாயு பதிவு செய்வது..???  

*  இந்த முறை இண்டேன், HP, இரண்டிற்கு மட்டும் அறிமுகம் செய்து இருக்கிறார்கள், இந்த முறையால் இண்டேன் நிறுவனத்திற்கு தான் லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனி தனியாக எரிவாயு பதிவு செய்தால் போன் மூலம் தனி வருமானம் வரும்.



சமையல் எரிவாயு  பதிவு செய்யும் முறை

1. 8124024365 இண்டேன் எரிவாயு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த எண்ணில் தான் தொடர்பு கொள்ள வேண்டும்

2. தமிழ் மொழிக்கு 1 அழுத்த வேண்டும்

3. உங்கள் எரிவாயு ஏஜென்ஸி தொலைப்பேசி என்னை STD CODE வுடன் பதிவு செய்ய வேண்டும்

4. ஏஜென்சி எண்ணை உறுதி செய்ய 1 அழுத்தவும் வேண்டும்  

5. உங்கள் கஸ்டமர் எண்ணை அழுத்தவும் வேண்டும்  

6. கஸ்டமர் எண்ணை உறுதி செய்ய 1 அழுத்த வேண்டும்

7. எரிவாயு புக்கிங் செய்ய 1 அழுத்த வேண்டும்

8. பதிவு செய்த பின்பு செல் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்... குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே நம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இவ்வாறு தானியங்கியில் பதிவு செய்வது சிறந்த முறை தான் ஆனால் இதில் பல குழப்பங்கள் இருக்கிறது...கடினமானதாக இருக்கிறது, சாமானிய மக்களால் இந்த முறையில் சமையல் எரிவாயுவை பதிவு செய்ய முடியாது, முன்பு இருந்த முறைய சிறந்ததாக இருந்தது. இந்த தானியங்கி முறையில் குழப்பங்களே இருகின்றன, மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் புரியும், என்ன இருந்தாலும் இயந்திரைதை நம்ப முடியாது.... மனிதர்களிடம் பதிவு செய்த பொழுதே எரிவாயு வீடு வந்து சேராது. இனி இந்த இயந்திரத்தை நம்பிகொண்டு இருக்க வேண்டுமா..??? மீண்டும் பழைய முறையை கொண்டு வந்தால் நல்லது. 


கலைஞர் அரசு வழங்கிய சமையல் எரிவாயுவுக்கு,  இந்த முறையில் பதிவு செய்ய முடியாது.




Tuesday, May 17 44 comments

AIRCEL கடுப்பேத்துறாங்க மை லார்டு.!!





சாதாரண மக்களெல்லாம் செல் போன் வாங்க ஆரம்பித்ததே ரிலையன்ஸ் செல் போன் வந்த பிறகு தான். 500 ரூபாய்க்கு இரண்டு செல் போன் கொடுத்தாங்க, அப்போது தான் நான் செல் போன் வாங்கினேன். நான்கு வருடமாக  ரிலையன்ஸ் செல் போன் பயன் படுத்தினேன், அதில் கூட அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டதில்லை, ஆனால் நான் இப்பொழுது ஏர்செல் சிம் கார்ட் பயன் படுத்து வருகிறேன், அதில் ஆரம்பம் முதல் பிரச்சனை தான்.

எங்க அண்ணன் வைத்து இருந்த சிம் கார்டை தான் நான் வாங்கி பயன் படுத்தினேன், அதில் ஏற்கனவே காலர் ட்யூன் இருந்தது, அடுத்தாக திரைப்பார்வை என்று ஒன்று இருந்தது, திரைப்பார்வை என்றால் தினமும் சினிமா செய்திகளை சொல்வார்கள்.

எங்க அண்ணனிடம் கேட்டேன் "ஏன் காலர் ட்யூன், திரைப்பார்வை எல்லாம் வைத்து இருக்கிறாய்..?" அதற்கு "அவன் நான் வைக்க வில்லை தானாக வந்துவிட்டது" என்று சொன்னான். அதை முதலில் நான் நம்பவில்லை, பிறகு அந்த சிம் கார்டை பயன் படுத்திய பொழுது தான் எனக்கு புரிந்தது...அவன் சொல்வது உண்மை என்று.

நான் ரீஜார்ஜ் செய்தவுடனே என் பைசா அணைத்தும் பிடித்து விடுவார்கள். காலர் டியூன்க்கு 30 ரூபாய், திரைப்பார்வைக்கு 30 ரூபாய், இப்படி நான் நான்கு ஐந்து மாதம் பணத்தை இழந்து வந்தேன்.. இதையெல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என எனக்கு தெரியாமல் இருந்தது, பின்பு கஸ்டமர் கேர்க்கு போன் செய்து இந்த காலர் ட்யூன் எடுக்க சொன்னேன் அதற்கு அவர்கள் நீங்கள் ஒரு sms அனுப்புங்கள் அப்போது தான் காலர் ட்யூன் எடுக்க முடியும், ஒரு smsக்கு ஐந்து ரூபாய் கட்டணம் என்று சொன்னார்கள்.

அடுத்த முறை கஸ்டமர் கேர்க்கு போன் செய்து, காலர் ட்யூன் எடுக்க வேண்டும் என நான் அதே பாட்டை பாடினேன். அவர்களும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என பாட்டை பாடினார்கள்நான் உடனே "சார் எனக்கு எப்படி மெசேஜ் அனுப்பவேண்டும் தெரியாது நீங்களே எடுத்து விடுங்க"..
"சரி காலர் ட்யூன் எடுத்து விடுகிறேன்" சொன்னார்கள்.

சரிங்க சார் என் பைசா திருப்பி வருமா என கேட்டேன்..??
திருப்பி தருவோம் சொன்னாங்க...(அடப்பாவிங்களா இதை முதலே சொல்லி இருந்தால் என் பைசா எல்லாம் வந்து இருக்குமே) ஒரு வழியா ஆறு தடவைக்கு மேல போன் செய்தது காலர் ட்யூனை எடுத்து விட்டேன்.

அப்படி இருந்தும் திரைப்பார்வைக்கு ஒரு பத்து தடவை போன் செய்த பிறகு தான் அதை எடுத்தார்கள். இப்படி எல்லாம் எடுத்து விட்டு ஒரு மூன்று நாள் கூட ஆகவில்லை அவர்களே பிரெண்ட்ஸ் சூன் என சொல்லி ஒன்றை வைத்து என்னிடம் இருந்து பணம் எடுத்து விட்டார்கள். மறுபடி கஸ்டமர் கேர்க்கு போன் செய்தது ஏன் இப்படி செய்கிறீர்கள் என சத்தம் போட்டேன் இதோ சார் உடனே எடுத்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.எனக்கு ரீஃபண்ட் தாங்க என கேட்டேன் இல்லை “இதற்கு ரீஃபண்ட் தர முடியாது என பதில் வந்தது. சரி எனக்கு வேண்டாம் நான் நெட்வொர்க் மாற்றி  கொள்கிறேன் சொன்னேன். சார் நான் மேல் அதிகாரிகளுக்கு உங்கள் புகாரை அனுப்புகிறேன், அவர்கள் சரி என்றால் உங்கள் பணம் உங்களுக்கு வந்து விடும் என்றார்கள்.
இந்த மாதம் வரை ஏர் செல் பிரச்னையோடு தான் இருக்கிறது

எனக்கு தெரிந்து ஏர் செல் பிரச்னை வந்து கொண்டு தான் இருக்கிறது இது எனக்கு மட்டும் தான் நடக்கிறதா இல்லை அனைவருக்கும் இப்படியா என தெரியவில்லை....
ஏர்டெல் நன்றாக இருக்கிறது அதில் இம் மாதிரியான பிரச்னைகள் வருவதில்லை... நான் ஏர்டெல்க்கு மாறபோகிறேன்..!!!   

ஏர்செல் பயன் படுத்தினால் வரும் நன்மைகள்

இவர்கள் பைசா எடுக்கும் நேரம் சரியாக 31ம் தேதி 12 மணிக்கு சரியாக பைசா எடுத்துவிடுவார்கள் காலையில் எழுந்தால் கணக்கில் ஒரு பைசாவும் இருக்காது.

ஒரு நாற்பது ரூபாய் உங்கள் கணக்கில் இருந்து கொண்டே இருந்தால் உடனே ஏதாவது தில்லு முள்ளு செய்தது உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள்.

கஸ்டமர் கேர்க்கு போன் செய்தால் ஒரு 15 நிமிடம் ஆகும்

நீங்கள் ஏர்செல் பயன்படுத்துபவர் என்றால் 198 போன் செய்தது உங்கள் பணத்தை திருப்பி கேட்கலாம்...

மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் உங்கள் கணக்கில் மூன்று ரூபாய் இருக்க வேண்டும் அப்போது தான் மெசேஜ் அனுப்ப முடியும்.

ஒரு நாளைக்கு ஏர்செலில் இருந்து 25 அழைப்புகள் வரும் இந்த பாடல் வையுங்கள், ஜோசியம் பாருங்க, லவ்டிப்ஸ் வேணுமா இப்படி என்னென்னமோ இரவு 9 மணி வரை வந்து கொண்டே இருக்கும்....

இன்னும் சொல்லிட்டே போகலாம் அந்த அளவுக்கு AIRCEL கடுப்பேத்துவாங்க



Tuesday, May 10 25 comments

என்னுள் பிறந்து கரைந்தவள் நீ....



காதல் கனவில் என்னுள் பிறந்து 
கரைந்தவள் நீ தானே!!!!
சிரித்தே கொல்லும் 
இராட்சசி நீ தானே !!
நொடிக்கொரு முறை கண்ணை மூடி திறக்கிறாயே
என்னை கைது செய்யவா?????
உன் பாதம் பட்ட சருகுகளும் 
உயிர்தெழுகிறதே...
கருவிழி மேகம் கொண்டு 
என்னில் நேச மழை பெய்தவளே!! 
பேசி பேசி தீர்த்தாலும் 
மீண்டும் கேட்க துடிக்கிறதே மனம்
குரலில் மாயம்செய்தவளே!!


உன் உள்ளங்கையில்
ஆயுள் முழுவதும் 
ஆயுள் ரேகையாக நான்...!!


உன் நேசத்தை உன் கண்களில் 
பார்கிறேன்...!!
உன் கண்கள்
என்னை காண்பிப்பதால்...!!! 


ஒரு முறை பூத்து 
ஓராயிரம் அர்த்தம் சொன்னவள் .....
மீண்டும் என்னுள் பூக்க துடிக்கிறாள்
அது ஏனோ..!!


உன் விழி பேசும் 
மொழிஅறியாமல் 
நான்..!!!!

உன் விழியிடம்
பாடம் கற்க வந்த 
என்னை ....

உன் இமையால் 
கைது செய்து
தர மறுக்கிறாயே
ஏன்..!!?? 


Monday, May 9 24 comments

ஆசைக்கும் ஓர் அளவுண்டு (கனிமொழி)





இப்பொழுது அனைவரும் முனு முனுக்கும் வார்த்தை...ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு தொடர்பு இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு" என்று கூறியது தான், பரபரப்பு செய்தி. தன் கட்சிக்காரரை காப்பாற்றினால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்று நினைத்து விட்டார் போல ராம் ஜெத்மலானி.

ஸ்பெக்டரம் விவகாரத்தில் முதல் காரணம் கனிமொழி தான் என ராம்ஜெத்மலானிக்கு தெரியாமலா இருக்கும்.... இப்பொழுது இந்த ராம் ஜெத்மலானி பற்றி பார்ப்போம் இவர் வாதாடிய பிரபல வழக்குகள்.

1. ஹர்சத் மேத்தா என்பவர் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 


2. கேதான் ப்ரேக் என்பவர் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 


3.நம் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு என்பவருக்கு ஆதரவாக 


4. இந்தியாவையே உலுக்கிய ஜெசிக்கா என்ற பெண்ணை கொலை செய்த மனுஷர்மா என்பவனுக்கு ஆதரவாக

5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்திரா காந்தியை கொலைசெய்தவர்களுக்கு ஆதரவாக 



இந்த வழக்குகளில் எல்லாம் குற்றவாளி யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இவர் எப்போதும் குற்றவாளிகளுக்கு மட்டும் தான் ஆஜர் ஆவாரா...?

கனிமொழிக்கு சில கேள்வி...

1.75 லட்சம் கோடி ஊழல் செய்தால்...மாட்டிக்கொள்வோம் என்பது தெரியாதா உங்களுக்கு...???

நீங்கள் சொல்லி தானே ராஜா..ஊழலுக்கு துணை நின்றார் இப்பொழுது அவரை தனியே விட்டு விட்டீர்களே..???


இப்பொழுது ராஜா தான் முழு காரணம் என்று உங்கள் வக்கீல் சொல்கிறாரே உங்களுக்கெல்லாம் பங்கு வந்து விட்டதால் தானே..???


கலைஞர் பொண்ணாக இருந்தும் எப்படி ஊழல் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு தெரியவில்லையே ஏன்..??

இப்பொழுது எதற்காக இவ்வளவு பணம் கொள்ளையடித்தீர்கள் உங்களுக்கு அடுத்த வேளை சோற்றுக்கா பஞ்சம்...???

ஏதோ மனதில் இருக்கும் கேள்விகள் இது இவையெல்லாம் அவர்கள் செவிக்கு எட்டாது என்பது எனக்கு தெரியும், இருந்தாலும் கேட்டு தான் பார்ப்போம் என்று ஒரு ஆசை தான்.

கனி மொழி மேடம் உங்கள் கட்சிகாரர்கள் தான் உங்களால் சிறை செல்கிறார்கள் என்றால் உங்கள் டிவியில் வேலை பார்ப்பவர்களும்...சிறை சென்று விடுவார்கள் போல, இனி உங்கள் தொலைக்காட்சிக்கு பணிபுரிய வந்தால் முன் பிணையுடன் தான் வேலைக்கு வரவேண்டும் போல.  

ஆசைக்கும் ஒரு அளவுண்டுஇப்படி பெருந்தொகையை கொள்ளை அடித்தால் சிறை செல்லாமல் எங்கு செல்வார்கள், பெண்ணின் ஆசை மிகப் பெரியது என்பதை நீங்கள் நிறுபித்து உள்ளீர்கள். ஜெயலலித்தாவையே மிஞ்சி விட்டீர்கள்...!!!

சிறை செல்லும் முன் உங்கள் தந்தையிடம் பயிற்சி பெற்றுகொள்ளுங்கள் சி பி ஐ விசாரணை முன்பு  எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதில் அவர் அனுபவசாலி...





டிஸ்கி : இந்த ஸ்பெக்டரம் ஊழல் வெளிவர காரணமாய் இருந்த சன்டிவிக்கு ஏதாவது இருக்கிறதா..???



Tuesday, May 3 13 comments

இன்றையநிலை..!!!



ஒவ்வொரு உறவுகளும் அழிந்து விட்டன, யாரும் உறவுகளை மதிப்பதில்லை  என்று கூறுகிறார்கள். ஆம் உறவுகள் பணத்திற்காக அழிந்து கொண்டு தான்  இருக்கின்றன, ஒருவன் எதன் மீது அதிகமாக நேசம் வைக்கின்றானோ அதுவே அவனுக்கு கிடைக்கும் என்பது நியதி.  மனிதன் பணத்தின் மீது மோகம் கொள்கிறான் அதனால்  அதுவே அவனுக்கு கிடைக்கிறது. முன்பு எல்லாம் உறவுகள் வேண்டுமென்று, அவர்கள் மீது பற்றுதலும் , பாசமும் இருந்தன, ஆனால்  இப்பொழுது பற்றுதல் என்பது பொருளின் மீது வந்து வந்துவிட்டது. கார் வேண்டும்,A/c வேண்டும், fridge வேண்டும் என்ற காரணங்களால், அவன் பணம் தேடுகிறான்.இதன் காரணமாக வீட்டை மறக்கிறான் உறவுகளை மறக்கிறான். இதனால் உறவுகள் என்பது தானாகவே அழிந்து வருகிறது. பொருள் தேடுவதற்காக மனிதன் ஓடிகொண்டே இருக்கிறான். வாழ்க்கைக்கு தேவை பணம் ஆனால் இப்பொழுது பணமேவாழ்க்கை ஆகிவிட்டது..!!


கணவன் மனைவி வேலைக்கு செல்லும் ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள். குழந்தைகள் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் காட்சிகளையும் நாம் காண முடிகிறது, (இருவர் வேலைக்கு செல்வது தவறு என்கிறீர்களா என்று கேட்காதீங்க ).பணம் தேடுவதற்காக  குழந்தைகளை இளம் வயதிலேயே காப்பகங்களில் கொண்டு போய் விட்டு படிக்க  வைக்கிறார்கள்.அவர்கள் படிப்பிற்காக தான் நாங்கள் பணம் தேடுகிறோம் என்று கூறுகிறார்கள் அதுவும் உண்மை தான். நான் மறுக்கவில்லை, ஆனால் குழந்தைகள் உங்கள் மீது பாசம் வைக்கிறதா இல்லையா ? யாருக்காக நீங்கள் பணம் சம்பாதிக்க இவ்வளவு  கஷ்டப்பட்டீர்களோ  அவர்கள் பின்நாளில் உங்களை தூக்கி எறிவார்கள் இது கண் கூடாக  பார்த்த உண்மை.

இதற்கு என்ன தான் முடிவு ?வேலைக்கு போக வேண்டுமா வேண்டாமா..? என்பது கேள்வியல்ல.ஆண் வேலைக்கு போகவேண்டுமா?பெண் வேலைக்கு போகவேண்டுமா?என்பதும் கேள்வி அல்ல.உறவுகளுக்காக யார் விட்டு கொடுக்கிறார்கள் என்பதே என் கேள்வி?. குழந்தைகளின் சந்தோசத்திற்காக சிறிது நேரம் செலவு செய்தால் தான் என்ன..?


நம் வாழ்வில்  கூட்டு குடும்பமே இல்லாமல் போய் விட்டது...முன்பு கூட்டு குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, என பல பேர் இருந்தார்கள், இன்று அப்படியில்லை தாத்தா, பாட்டி இருந்தாலே அது கூட்டு குடும்பம் என்று ஆகி விட்டது ...அந்த தாத்தா, பாட்டி கூட தேவையில்லை என்று சொல்கிறார்கள், அதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் பணமாக தான் இருக்கிறது, தாய் தந்தையால் பென்சன் வந்தால் அவர்களை மதிக்கிறார்கள் இல்லையென்றால் அவர்களை கண்டுகொள்வதே இல்லை, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நமக்கு என்று பொறுப்பு வரும் அவர்கள் மீதுமரியாதை கலந்த பயம் வரும். தாத்தா பாட்டி இருந்தால் குழந்தைகளுக்கு அவர்கள் பாசம் தெரியும். பின்னாளில் தன் தாய் தந்தையை எப்படி பார்த்து கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிந்து கொள்வார்கள், அம்மா அப்பா வேலைக்கு சென்று விட்டால் தாத்தா, பாட்டி பார்த்து கொள்வார்கள், நமது சின்ன வயதில் என்ன விஷயங்கள் நடக்கிறதோ அது அப்படியே மனதில் பதிந்து விடும்....நான் படித்த கதை ஒரு நினைவுக்கு வருகிறது....

ஒரு குடும்பத்தில் தன் அப்பா, அம்மா...அவர்களுக்கு வயதாகி விட்டது...அவர்களுக்கு என்று தனி பாய், சாப்பிடுவதற்கு தனி தட்டு, என வைத்து பார்த்து கொண்டார்கள். இதை தினமும் அந்த வீட்டு குழந்தைகள் கவனித்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் தாத்தா, பாட்டி இறந்து போய் விட்டார்கள். அவர்கள் பயன் படுத்திய பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்து விட்டார்கள் அதை பார்த்த குழந்தைகள், அந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்து வைத்தார்கள், அதை ஏன் எடுத்து கொண்டு வருகிறாய் என்று குழந்தைகளின் அம்மா கேட்டதற்கு உங்களுக்கும் வயதாகும் அப்பொழுது  நான் இதில் தான் உங்களுக்கு சாப்பாடு போடுவேன் என்று அந்த குழந்தை கூறும்...

உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அவ்வாறு தான் குழந்தகைளும் நம்மிடம் நடந்து கொள்வார்கள், சிறிய வயதிலே பணம், பிரிவினை பாகுபாடு என்று நீங்கள் நடந்து கொண்டாள் அதையே குழந்தை கற்று கொள்ளும். நாம் எப்போதும் முன் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களை கூட அவர்கள் நம்மிடம்  அறியாமலே கற்று கொள்கிறார்கள் 

குழந்தைகளை தனியாக விடுவதால் வரும் விளைவு 

*  நண்பர்களுடன் இருக்கும்போது அவர்களின் கெட்ட பழக்க தொற்றிக் கொள்ளுதல்

*  பெற்றோர் மீது அன்பு குறைகிறது அவர்கள் அன்பைத் தேடி தவறான வழிக்கு கூட செல்லலாம்...

*  சின்ன வயதில் தடம் மாறி போவார்கள். உதாரனமாக சிறு வயது குற்றவாளிகள் பலர் உருவாக காரணம் பெற்றோர்கள் அவர்களை சரியாக கவனிப்பதில்லை..
*  இதுவே ஒரு சின்ன பெண் அப்படி இருந்தால் அவள் மீது அன்பு செலுத்துவதாக இருக்கும் ஒருவர் மீது காதல் கொள்ளலாம்


*  மேலும் எது சரி எது தவறு என வழிகாட்டவும் கண்டிக்கவும் ள் இல்லாததால் வாழ்க்கை தடம் மாறுகிறது.


எனவே குழந்தைகளுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். அவர்களிடம் பள்ளியில் இருந்து  வந்தவுடன் என்ன நடந்தது என மனம் விட்டு பேசுங்கள், பிரச்சினைகளை கேளுங்கள். மாலை நேரத்தில் ஏதாவது பூங்காவிற்கு அழைத்து செல்லுங்கள். இது நல்ல உறவு வளரவும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையவும் உதவும்...


 
;