தனித்துவிடப்பட்ட
சிறகொன்று..
தன் பிம்பத்தை
பார்த்து துள்ளி
குதித்தது...
தன் வழித்துணையென..!!!
*******
சிறிது சிறிதாய்
சேர்த்த சிறகுகள்
பறந்துகொண்டிருக்கிறது..
நேசம் கொண்ட சிறகை விட்டு
*******
மலை பாதையில் தடுமாறி
கொண்டிருக்கையில்
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..
நிஜம் விட்டு போனதை
அறியாமல் நிழலை
பிடித்து கொண்டிருக்கும்..
காணா குருடன் நான்...!
*******
உருகும் மெழுகாய் நானிருக்க
உன் நினைவுகள்
பிரகாசமாய் எரிந்து
கொண்டிருக்கிறது...
என் இறுதிவரை
உன் நினைவுகள்
பிரகாசமாய்
எரிந்துகொண்டிருக்கும்..!!
*******
நேசம் கொண்டு
நேசம் கொண்டு
ஆறா காயத்தை
ஆற்ற தனிமையை
நோக்கி செல்கிறது
காயம் பட்ட மனம்..!!!
Tweet | |||||