Wednesday, February 15 10 comments

தனிமை...








தனித்துவிடப்பட்ட 
சிறகொன்று..
தன் பிம்பத்தை 
பார்த்து துள்ளி 
குதித்தது... 
தன் வழித்துணையென..!!!
*******


சிறிது சிறிதாய் 
சேர்த்த சிறகுகள்
பறந்துகொண்டிருக்கிறது..
நேசம் கொண்ட சிறகை விட்டு
*******


மலை பாதையில் தடுமாறி 
கொண்டிருக்கையில் 
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..


நிஜம் விட்டு போனதை 
அறியாமல் நிழலை 
பிடித்து கொண்டிருக்கும்..
காணா குருடன் நான்...!
*******


உருகும் மெழுகாய் நானிருக்க 
உன் நினைவுகள் 
பிரகாசமாய் எரிந்து 
கொண்டிருக்கிறது...


என் இறுதிவரை 
உன் நினைவுகள்
பிரகாசமாய்
எரிந்துகொண்டிருக்கும்..!! 
*******


நேசம் கொண்டு 
நேசம் கொண்டு 
ஆறா காயத்தை 
ஆற்ற தனிமையை 
நோக்கி செல்கிறது 
காயம் பட்ட மனம்..!!! 



 
;