Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Monday, June 2 2 comments

காசு பார்க்கும் கோச்சடையான்..!



ஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.

மோசன்  கேப்சர் தொழில்நுட்பங்கள் கொண்ட  திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின்  கண்களை பார்க்க முடியவில்லை.

ரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து மிகவும் வெறுப்படைந்தேன். சாதாரண ரசிகன் கூட ரஜினியை அழகாக வரைந்து விடுவார். ஆனால் இந்த சௌந்தரியா ஏன் இப்படி கடித்து குதறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே நாங்கள் படத்தை வரும் மனிதர்களை பார்த்து  போய் உள்ளோம். இதில் 3D காட்சியில்  ஓநாய் கூட்டம் வேறு அது ஓநாயா, அல்ல நரியா, என்பது சௌந்தரியாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

ரஜினியும் தீபிகா படுகோனும் சண்டையிடும் போது. கும்கி பட யானையின் கிளைமேக்ஸ்   சண்டை காட்சிகள் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கதை, திரைக்கதை.  என்று பார்த்தால் அதில் கே எஸ் ரவிகுமாரின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது. படத்தில் வசனத்தை தவிர வேற ஒன்றுமில்லை. ஆனால் இனியும் அவர் பின்னால் நாடு இருக்கிறதென்று வசனம்  வைப்பது படு காமெடியாக  உள்ளது.

 50 ரூபாய் தியேட்டர் கட்டணத்தை 120 ரூபாயென  அதிகரித்து வாங்குவது கொடுமையிலும் கொடுமை.  நான் கண்களை மூடி கொண்டு தான் படத்தை பார்த்தேன். அதனால் எனக்கு பாதி காசை திருப்பி கொடுங்கள், என சண்டையிட்டேன்.அவர் என்னை பார்த்து என்னப்பா படம் பார்த்து இப்படி ஆக்கிட்டே பார்த்து வீட்டுக்கு  போ என்றார்.

கோச்சடையான் என்னும் இந்த மோசன் கேப்சர்  சோதனை தோல்வியை சந்தித்துள்ளது. அந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட எலிகள் தான் நாம். அதுவும் பணம் கொடுத்து நான் சோதனைக்கு வருகிறேன், நான் சோதனைக்கு வருகிறேன், என்று அடித்துபிடித்து  சென்றோம்.  

இந்த (................) படத்தை வைத்து கொண்டு காசு பார்க்கும் ரஜினி கூட்டம். என்ன சொல்வது வேண்டாம்  அந்த கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சௌந்தரியா அவர்களே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் எங்க வேண்டுமானால்  வந்து பொய் சத்தியம் செய்கிறோம். ஆனால் இரண்டாம்பாகம் எடுத்துவிடாதீர்கள்.
Saturday, June 30 9 comments

சகுனி கார்த்திக்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??




ஒரு நல்ல படம் பார்க்கும் பொழுதே அந்த படத்தை பற்றி பதிவெழுத வேண்டுமென்று தோன்றும். அப்படி வழக்கு எண் பார்க்கும் பொழுது தோன்றியது ஆனால் அனைவரும் வழக்கு எண் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள் நாமும் ஏன் எழுத வேண்டுமென்று விட்டுவிட்டேன். 

ஆனால் சகுனி படம் பார்க்கும் பொழுது இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்ன தோன்றியது, படம் அந்த அளவிற்கு இருந்தது, படம் நன்றாக இல்லையென்றாலும் பொறுத்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் படத்திற்கு கொடுக்கும் பில்டப் பார்த்து பொறுக்கமுடியவில்லை

நல்ல படங்களை யெல்லாம்  மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள் சகுனி படத்தில் ஒரு வசனம் சொல்வார் கார்த்திக்.. சிப்ஸ் பாக்கெட்டில் காற்று அடைத்து விற்பனை செய்வது போல் மார்கெட்டிங் செய்ய வேண்டுமென்று அது போல் தான் இந்த படத்திற்கும் மார்கெட்டிங் செய்து கொண்டிருகிறார்கள். 

சகுனி எந்திரன் வசூலை முந்திவிட்டதாக சொல்கிறார்கள், முன்பு ஏழாம் அறிவு எந்திரன் வசூலை முந்தியதாக கூறினார்கள் இப்போது சகுனி...அப்படியென்றால் ஏழாம் அறிவு படத்தின் சாதனையை முறியடித்தது என்று தானே சொல்ல வேண்டும்...

படத்திற்கு இப்படி பில்டப் கொடுத்து தற்போதைய படத்தை ஓட்டி விடலாம் ஆனால் அடுத்தடுத்து வரும் கார்த்திக்கின் படங்களை எப்படி ஓடும்... நல்ல படமாக இருந்தாலும் ஓடாதே...!!  சன் பிக்சர்ஸின் நல்ல  படங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஓடாதா படங்களுக்கு கொடுத்த அதிக பில்டப் தான். 

வழக்கு எண்   போன்ற நல்ல படங்கள் எல்லாம் திரையரங்கை விட்டு தூக்கப்படுவதற்கு காரணம் சினமாகாரர்கள் தான். அதிக திரையரங்கை வாடகைக்கு எடுத்துகொள்கிறார்கள், நல்ல படங்கள் ஒதுக்கப்படுகிறது... வழக்கு எண் படத்திற்கு பிறகு வந்த படங்களிலே தடையற தாக்க நன்றாக இருந்தது ஆனால் அந்த திரைப்படத்தை யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை..    

மார்கெட்டிங் உலகத்திற்கு நாம் சென்று விட்டோம் அதனால் தான் எல்லாம் மார்கெட்டிங் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி கொண்டிருகிறார்கள்....    சரி சரி சகுனி படத்தை பற்றி ஒரு பத்தியாவது எழுதுவோம்..

சகுனியின் கதை அப்படி ஏதாவது இருக்கா...?? தன் வீட்டு அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்காக அரசு கார்த்திக்கின் வீட்டை கையகப்படுத்துகிறது அரசிடம் இருந்து எப்படி கார்த்திக் தன் வீட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.  மணிரத்தினம் போல் மகாபாரதத்தை உல்ட்டா செய்து எடுத்திருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால்  சகுனின்னு சொல்லி கார்த்திக்கும் சந்தனமும் சேர்ந்து போடுற மொக்கை போடுறாங்க போடுறாங்க இடைவேளை வரை மொக்க போட்டுட்டே இருக்காங்க.. 

இடைவேளைக்கு அப்பறம் என்ன செய்வார் பார்த்தா. அப்படி ஒன்னும் பெரிதாக  செய்யவில்லை  கவுன்சிலர் தேர்தல் வருது அதில் ராதிகாவிற்கு ஐடியா கொடுத்து அவர் வெற்றி பெறுகிறார்..  இவர் ஐடியா கொடுக்க  எதிர்க்கட்சி தலைவர்  முதல் அமைச்சர் ஆகிறார் சாதாரண சாமியார்க்கு  ஐடியா கொடுத்து அவரை மிகப்பெரிய சாமியாரை  மாற்றுகிறார் (சத்குரு ஜக்கி வாசுதேவ் போல்) இப்படி பலருக்கும் யோசனைகளை சொல்லி சொல்லி அவர்களை வெற்றி பெற வைக்கிறார்.. இது தான் சகுனி தனமாம்..!!


அது எப்படி தேர்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது..?? பல லாஜிக் மீறல்கள் தூள் படத்திலும் இதே கதை தான் ஆனால் அதில் ஒரு அமைச்சரை எப்படி பழி வாங்க முடியும் என்பது ஏற்று கொள்ளும் வகையில் இருந்தது ஆனால் சகுனியில் சொல்லப்படும் காட்சிகள் ஏற்று கொள்ள கூடியதாகயில்லை..  
படத்தின் பாடல்களும் சொல்லும் விதமாய் இல்லை சிறுத்தையின் பாதிப்பு படத்தின் பாடலில் தெரிகிறது மனசெல்லாம் மழையே பாடல் மட்டும் மனதை நனைய வைக்கிறது 

சகுனியில் கார்த்திக் சற்று சறுக்கி இருக்கிறார் அவர்கள் உறவுகாரர்களே படத்திற்கு தயாரிப்பாளர்கள் என்பதால் அதிக பில்டப் கொடுத்து கொண்டிருகிறார்கள்... சகுனி தோல்வி அடைந்ததை யாரும் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள் ஆனால் இவர்கள் கொடுத்த பில்டப் தான் தோல்வியை பற்றி இப்படி பேசி வைக்கிறது.  


படம் நன்றாகயிருந்தால் பார்க்கப்போகிறோம் இல்லையென்றால் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போக போகிறோம் அதை விட்டு விட்டு வசூல் சாதனை என்று சொல்லி ஏன் எங்களை வேதைனை படுத்த திரைக்கு அழைக்குறீர்கள்..??  கார்த்திக்கிற்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??  

Wednesday, October 27 39 comments

"வ" மைனா பார்க்கலாம்...!



இந்த தீபாவளிக்கு எந்த படத்திற்கு போகலாம் என்று இருப்பவர்களுக்காக இந்த பதிவு. ஏதோ என்னால் முடிந்த சமூகசேவை... 


எந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது (யாருப்பா அது சிரிக்கிறது)...உண்மை தான் சிவா நடித்து வெளி வர இருக்கும் படம் "வ குவாட்டர் கட்டிங்" 


"என்னது எனக்கு கட்டிங் தரிங்களா என்று எல்லாம் கேட்க்க கூடாது"..படத்தின் பெயர் "வ" என்றால் தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது "குவாட்டர்" என்ற பொருள்...எப்படியெல்லாம் அர்த்தம் சொல்றாங்க பாருங்க...!


ஒய் நாட் புரொட‌க்சன், கிளவுட் நைன் இணைந்து படத்தை தயாரித்து உள்ளார்கள். தமிழ்படத்தை அடுத்து சிவா நடித்து வெளிவர இருக்கும் படம் இது. ஆரியா நடித்த ஓரம்போ படத்தை தொடர்ந்து புஸ்கர்-காயத்ரி இயக்கும் 2-வது படம்...சிவாவிற்கு தமிழ்படம் வெற்றிக்கு பிறகு வருகிற படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது... எஸ்.பி.பி சரண், லேகா வாஷிங்டன் நடித்து இருக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவுள்ளார்..

கதை என்ன என்றால் நம்ம சிவா வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வருகிறார்..மறு நாள் வெளிநாட்டிற்கு போகிறார் போகும் முன் விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.‌பி.சரண்...சிவாவின் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகிறவர் தான் சரண்..சிவாவின் அனைத்து ஆசையும் தீர்த்து வைக்கிறார் சரண். இரவு 12 மணிக்கு மேல் குவாட்டர் குடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார் சிவா எப்படி குவாட்டர் குடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை...சென்னையில் இரவில் என்னவெல்லாம் நடக்கும் அதையெல்லாம் படத்தில் இடம் பெரும் என்று புஸ்கர்&காயத்ரி கூறுகிறார்கள்...



மக்கள் : இந்த படத்தில் என்ன தான் மெசேஜ் இருக்கு 
இயக்குநர்: என்னடா எல்லாத்துக்கும் மெசேஜ் கேட்டு அலையுறீங்க...







இந்த படத்தின் பாடல்களே என்ன படம் என்று கேட்க்க வைத்தது "மைனா" எதார்த்தமான படங்களை தந்துகொண்டிருக்கும்  பிரபுசாலமன் தான் (கொக்கி,லீ படங்களின்) இயக்குநர். சலோம் ஸ்டுடியோ தயா‌ரிப்பில் கல்பாத்தி அகோரம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் இமான் இசை மிகவும் புது விதமாக இருக்கிறது அனைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது.. மைனா படத்தின் நாயகனாக கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற விதார்த்தும், நாயகியாக சிந்து சமவெளி படத்தில் நடித்த அமலா பாலும் நடித்துள்ளனர்.

இதுவும் ஒரு காதல் கதை தான் மைனா என்ற மலைசாதி பெண்ணுக்கும், சுருளி என்ற டிரைவருக்கும் ஏற்படும் காதலும், காதலுக்காக எதையும் செய்யும் அவர்களின் துணிச்சலும்தான் படத்தின் மையம். பருத்தி வீரன் போல தான் இருக்கும் என்று தெரிகிறது...

இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு இரண்டு நாளாக தூக்கமே வரவில்லை என்று சொல்கிறார் மைனா படம் என்ன பேய் படமா..? தெரியலை... 

எதார்த்தமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைனா படம் பார்க்கலாம். நகைசுவையாக படம் பார்க்கணும் என்றால் வா குவாட்டர் கட்டிங் படம் பார்க்கலாம்... 


Tuesday, September 14 43 comments

இவன் தான் எந்திரன்....








ரஜினியின் கதை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.தொடக்கத்தில் ஏழையாக இருந்து மீண்டும் பணக்காரர் ஆவார். இப்படித்தான் படத்தின் கதைகள் இருக்கும். அப்படி இருந்தும் அடுத்த படம் என்ன கதையாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


எப்போதும் ரஜினி படம் வந்தாலே அனைவருக்கும், ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல எந்திரன் படத்திற்க்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது. முதலில் இந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்தது, பட்ஜெட்உயர்ந்து கொண்டே சென்றதால், படம் பாதியில் நின்றது. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்தது. 


இசை வெளியிட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது 


150 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது எந்திரன், இதுவரையில் எந்த இந்திய திரைப்படமும் செய்யாத சாதனையை எந்திரன் எட்டியுள்ளது. ஏற்கனவே தமிழில் பெரும் தொகைக்கு விற்பனையான எந்திரன் படம், தெலுங்கில் 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு மொழி மாற்று திரைப்படம் இந்த அளவுக்கு விற்பனை. ஆனது இது தான் முதல் முறை, கன்னட உரிமை சுமார் 9.5 கோடி, விற்பனை ஆனது, மலையாளத்தில் ஆறு கோடிக்கு வாங்கியுள்ளனர். இது மம்முட்டி, மோகன்லாலின் நேரடிப் படங்களை விட எந்திரன், அதிக விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது, கேரளாவில் மொழி மாற்றம் செய்யாமல் அப்படியே தமிழில் வெளியிட போவதாக தெரிவித்து உள்ளனர்.






ஒரு படத்தில் வில்லனுக்கு, ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த படத்தின் விறு விறுப்பு அதிகமாக இருக்கும். வில்லன் டேனி டென்சொங்கப்பா ஹிந்தி திரையுலகில் பெரியநடிகர், பிரபலப் படமான குர்பானியில் நடித்து இருக்கிறார், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்கிறார்,


எல்லோரும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்று அள்ளி விடுகிறார்கள், ஏதோ எனக்கு தெரிந்ததை நானும் சும்மா அள்ளி விடுகிறேன்.



ரஜினி விஞ்ஞானி (ஆமா இது யாருக்கும் தெரியாது ) பத்து வருட கடின உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார், அந்த ரோபோவிற்கு மனிதனுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது, ரோபோ ஐஸ்வரியாவை காதல் செய்கிறது, அப்போது ஒரு கனவு பாட்டு, அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன் போல பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா? .....


ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினியின் பேச்சை கேட்க மறுக்கிறது, ரஜினிக்கே துரோகம் செய்கிறது எல்லாம் காதல் படுத்தும் பாடு, வில்லனும் ரோபோவும் ஒரு ஒப்பந்ததிற்க்கு வருகிறார்கள் "நீ " நான் சொல்வதை கேட்டால் உன்னை ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்கிறேன், என்று வில்லன் சொல்கிறார் அதை நம்பி வில்லன் சொல்வதை கேட்டு மக்களுக்கு எதிராக செயல் படுகிறது ரோபோ, எல்லா வேலைகளும் முடிந்தவுடன் வில்லன் ரோபோவை அழித்து விடுகிறார்.


ரோபோ ரஜினியிடம் சென்று உதவி கேட்கிறது என்னை காப்பாற்றுங்கள், என்று கேட்க்கிறது ரஜினி மீண்டும் அந்த ரோபோவை சரி செய்து தன் திறமையை நிருபித்து, எப்படி வில்லனை அழித்தார் என்பது தான் மீதி கதை. இந்த மாதிரி கதை கண்டிப்பா இருக்கவே இருக்காது...ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


*  படத்தின் பலம்: ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா பச்சன், சன் பிக்சர், A.R ரஹ்மான், அமரர் சுஜாதா, ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சந்தானம், கருணாஸ்.






*  படத்தின் பலவீனம் : பெரிய பட்ஜெட்

*  தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கிடைத்து விடும் ஆனால் இந்த படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் தான் 



 
;