Monday, July 14

நீ வாசிக்க..!





உனக்காகப் படைக்கப் பட்ட 

கவிதைகளெல்லாம் 
நீ வாசித்த பின்னே 
பிறவிப் பலனை 
பெறுகிறது..!

*****

ஒற்றை துளியில் 

ஓர் கவிதை 



உந்தன் பொட்டு..!

*****


உன்னோடு நான் 

ரசித்த காட்சி திரையில் 
உன் நினைவோடு 
அசைபோட்டு கொண்டிருகிறேன் 



உந்தன் நினைவுகள் 
என் திரையில்..!!!

*****

நீ பயணிக்கையில்


உன்னோடு நானும் 

பயணிக்கிறேன்..
காற்றோடு உன் 
கூந்தலை உரசிய படி..!!

*****

உன் வாசிப்பு எல்லாம் 

நானாகி போகின்றேன்..!

என் சுவாசிப்பு எல்லாம் 
நீயாகி போனாய்..!

*****


கவிதை எழுத தொடங்கினால் 

உந்தன் பெயரையே 
உமிழ்கிறது எந்தன் 
எழுதுகோல்..!



பொறாமை கொண்டு 
வீசி எறிய எண்ணுகிறேன் 
உந்தன் பெயரை முத்தமிட்டதால் 
உயிர் பிச்சையிடுகிறேன்..!

*****


ஒரு ஊடலில் 

மற்றொரு ஊடலின் 
நினைவு..! 
புன்னைகையுடன் 
ரசிக்கிறேன்.! 



உன் வருகைக்காக 
ஒற்றைகால் 
கொக்கைப் போல் 
காத்திருக்கிறேன்..! 



என் தேடலும் சுகமானது..!

*****


நீ பேசாத போது 

உன் வார்த்தைகளோடு 
பேசிக் கொண்டிருப்பேன்..!



உன் மௌனம் கலையும் வரை..!

*****


நித்தம் நித்தம் உன் நினைவுகளால் 

கண் இமைக்க மறக்கிறேன்...
விழிகளில் நீ இருப்பதால்...!! 



ஆனந்தமாய் சுற்றித்திரிந்த 
என்னை ஆர்ப்பாட்டமாய்
கைது செய்கிறாய்
விழியால் ..!!

*****


பேசிகொண்டிருக்கையில் கவிதை 

சொல் என்கிறாய்..! 



நான் கேட்டுகொண்டிருக்கிறேன் 
நீ பேசு..!






1 comments:

ராஜி said...

நான் கேட்டுகொண்டிருக்கிறேன்
நீ பேசு..!
>>
இது காதலிக்கும்போது சொல்றது..., காதலி மனைவியானப் பின் சொல்றது, “வாய மூடு”.

 
;