ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை திரும்பப் பெறவும் முடியாது. இன்னும் கூட விலை உயரும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி விட்டார். இவர் மக்களுக்கு சலுகை தரமால் வேறு யாருக்கு சலுகை தர போகிறார்? அரசு இருப்பதே மக்களுக்கு சலுகை தருவதற்கு தான், முதலாளிக்கு சலுகைதர அல்ல.
ஆமாம்டா உங்களுக்கு எல்லாம் சும்மா வருகிறது, சும்மா கார் அதுக்கு போடும் டீசல் சும்மா, விமானத்தில் பறப்பதற்கு சும்மா, ரயில் பயணம் சும்மா, இது எல்லாம் யார் பணம் எங்கள் வரி பணம் எங்கள் வரி பணத்திலே கும்மிஅடித்து விட்டு கடைசில எங்களுக்கே ஆப்பா......?
பிரதமர் பேட்டி: நாங்கள் கோடி கோடியா வாங்க வேண்டியதை வாங்கி விட்டோம், இனி மக்கள் இருந்தால் என்ன செத்தால் எங்களுக்கு என்ன 110 கோடி மக்களில் 50 கோடி பேர் செத்தாலும் கவலையில்லை, காசு வாங்கி கொண்டு வோட்டு போட இன்னும் 60 கோடி பேர் இருக்கிறார்கள்.
காசு வாங்கி கொண்டு ஒட்டு போட்டால் இப்படி தான் நடக்கும். போன ஆட்சியிலே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். அப்போதே ஒரு அமைச்சர் சொன்னார் , அவர் பெயர் மணிசங்கர் அய்யர். புடவை, சினிமாவுக்கு, எல்லாம் பணம் செலவு செய்யும் நீங்கள், இதற்கும் செலவு செய்யுங்கள் என்று சொன்னார். அப்போது அவர் தான் பெட்ரோலியத் துறை அமைச்சர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, காங்கிரஸ்கு வோட்டு போட்டவர்களும், ஒரு காரணம் ஏன் என்றால் நீங்கள் தானே வோட்டு போட்டு ஆட்சி அமையுங்கள் என்று அனுப்பி வைத்தது நீங்கள் தானே. காங்கிரஸ்க்கு ஒட்டு போட்டா இதுதான் கதி, இவனுங்க ஆட்சியில்தான் போபர்ஸ், போபால்-விஷவாயு என பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது, இனிமேலும் மக்கள் காங்கிரஸ்க்கு ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால்,இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
இதனால் விலை வாசி உயர்வு. விவசாயிகள் தான் முதலில் ஏற்றுவார்கள் ஆவர்கள் என்ன செய்வார்கள் மின்சாரமும் கிடையாது (டீசல் பயன்படுத்துகிறார்கள்) பிறகு லாரிகாரன் விலை ஏற்றுவார்கள், அந்த பொருளை வாங்கும் புரோக்கர்கள் விலையை ஏற்றுவார்கள், அந்த பொருளை வாங்கும் சில்லறை வியாபாரிகள் விலையை ஏற்றுவார்கள், இப்படி இது ஏறி கொண்டு போகும்.....
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த மறு நாளே, ஓட்டல்களில் விலை உயர்ந்து விட்டது, இந்த விலைவாசி உயர்வால் கவலை படாதவர்கள் இரண்டுபேர், ஒருவர் பிச்சகாரன், இன்னொருவர், கோடிஸ்வரன், இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை எங்களை போல் நடுத்தர மக்கள் தான் மிகவும் பாதிக்க படுகிறோம். வாடகை கொடுத்தே எங்கள் ஆயுள்முடிந்து விடுகிறது.
அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் துன்பப்படுகிறோம்.
Tweet | |||||