Monday, May 31 18 comments

பாடாய் படுத்தும் சீரியல்




இந்த சீரியல் ரொம்ப பாடாய் படுத்துகிறது... காலை 10.30 தொடங்கி இரவு 10.30 வரைக்கும் இந்த சீரியல் பெயர்கள், பாருங்கள் காலை 10.30.மகள் ,11.00 மெட்டிஒலி, 11.30 கஸ்தூரி, 12.00 உறவுகள் 12.30 அனுபல்லவி,1.00 வசந்தம்,1.30 இளவரசி, 2.00 அத்திப்பூக்கள் ,2.30 ஒரு மொக்க படம் போடுவார்கள் அதை யாரும்பார்க்க  கூடாது என்பதற்காக ,மொக்க படம் போடுகிறார்கள்,  நல்ல படம் பார்த்தால்  மக்கள் தூங்க மாட்டார்கள் அதனால் தான் மொக்க படம் போட்டு தூங்க வைத்தால்  தான் மாலை 6.00 மணிக்கு சீரியல் பார்க்க முடியும் அதனால் தான் இப்படி மொக்க படம் போடுகிறாக்கள்.








ஒரு வழியா  படம் முடிஞ்சி உடனே சீரியல், 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி,  7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம்,  8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே,  10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது...

இப்படி மக்கள் ஏன் சீரியல்  பைத்தியம் ஆக இருக்காங்க தெரியவில்லை, ஒரு சிலர் காலை 10.30 டிவி முன் உட்கார்ந்தால் மதியம் 2.30  மணி வரை அவர்கள் டிவியை விட்டு அப்படி இப்படி என்று நகரமாட்டார்கள் எங்கள் வீட்டிலும் சீரியல் பார்பதற்கு இருக்காங்க அவர்கள் விளம்பரம் வரும் போது சேனல் மற்ற கூடாது என்பார்கள் ஏன் என்றால் ஒரு நிமிடம் தவறாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக .

இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30  நிமிடங்களில்  நேரத்தில் எத்தனை நிமிடங்கள்  நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம் போடுகிறாகள். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அதற்கு  நம்ம பேரரசு படமே பரவாயில்லை அப்படி இருக்கும். நாடகம் முடிந்தாலும் மியூசிக் வந்து கொண்டு இருக்கும்...

நாடகத்தில் அனைத்து கிரிமினல் வேலையும் நடக்கும். கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது,பிறந்த குழந்தையை கடத்துவது,மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது, நீங்கள் கேட்கலாம் இது எல்லாம் சினிமாவில் வரவில்லையா என்று அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். சினிமா  என்பது கொலையை நாம்  போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் நாடகம் பார்த்து  கொண்டு இருந்தார்கள் . நாடகம் பார்க்கிற சுவாரசியம் அடுப்பில் பால் இருப்பதை மறந்து விட்டார் அவ்வளவுதான் பால் பொங்கி கேஸ் அடுப்பு அணைந்து கேஸ் லிக் ஆகிகொண்டு இருந்தது  அப்போது கூட அவருக்கு தெரியவில்லை பக்கத்து வீட்டிலிருந்து வந்து என்ன உங்க வீட்டில் கேஸ் வாடை  வருகிறது என்று கேட்ட உடன் சென்று பார்த்தார்கள், பால் வைத்ததை மறந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது பிறகு கேஸ் அனைத்து வந்தனர் யாரும் பார்கவில்லை என்றால் அவளுதான் அவர்கள் கதி....

அட இப்படி பெண்கள் தான் நாடகம் பார்கிறார்கள்  என்றால் இந்த ஆண்களும் பார்கிறார்கள்.எங்க மாமா ஒருவர் காலை எங்காவது வெளியே செல்வர், அந்த வேலை முடியாமலே அவசரம் அவசரம் ஆக விட்டுக்கு நாடகம் பார்க்கவேண்டும் என்று வந்து விடுவர்  8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவர். வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார் யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவர், சாலை தாண்டும்  போது வண்டி வருவதை பார்க்க மாட்டார்.அப்படி என்ன நாடகம் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை.

பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது.அனைத்து சீரியல்களிலும் இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லைமை சீரியல் இருக்கவே இருக்காது. கோலங்கள் சீரியல் விட்டா ஒரு ஜென்மம் போட்டு இருப்பாங்க அதையும் நம்ம மக்கள்  பார்ப்பார்கள் கோலங்கள் சீரியலில் இந்த அபிசேக் நான்கு  கல்யாணம் பண்ணுவாரு.

ஒரு ஆணுக்கு  ரெண்டு பெண்கள் சண்டை போடுவது,அனைத்து சீரியல்களிலும் வரும்  என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள். இவர்களை யார் தான் திருத்துவர்களோ...




Saturday, May 29 0 comments

வாக்களிக்க வாருங்கள் முன்னோட்டம்




வணக்கம் மக்கள்ஸ்,

அண்மையில் சில நாட்கள் நீங்கள் சில வலைப்பூக்களில் திரையுலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் தொடர்பான பதிவினை படித்திருப்பீர்கள். சரி படிச்சாச்சு அப்பிடி என்னதான் நடக்கப்போகிறது என்ற ஆர்வம உங்களுக்கு இருக்கும். அதே நேரம் எனக்கு பிடித்தவர் இவர்கள் தெரிவில் இருப்பாரா? எங்கே வாக்களிக்கணும் எப்படி வாக்களிக்கணும் என்ற எண்ணங்கள் வந்து போகலாம்.

இன்னும் சிலருக்கோ இந்த சின்ன பசங்க என்னத்தை கிழிக்கப்போறாங்க பார்க்கலாம் என்ற ஆசையும் இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் இன்னும் சில மணி நேரங்களில் விடை கிடைக்கப்போகின்றது. வலைப்பூ மட்டுமன்றி Face Book, Twitterஇலும ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாங்களும் தெரிவுகளை அறிவித்து வாக்கெடுப்பை ஆரம்பிக்கும் அந்த அரிய நேரத்துக்காக காத்திருக்கின்றோம்.எங்கள் முயற்சியின் வெற்றிக்காக காத்திருக்கின்றோம்.

ஒரு சில பேரோடு ஆரம்பித்து பின்னர் சக பதிவர்களிடம் வியாபித்து நாடு கடந்து இருக்கும் பதிவர்களின் அமோக ஆதரவிலும். இந்த வாக்களிப்புகள் இடம் பெற இருக்கின்றன. புதிய தளம் இதற்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகின்றது......இறுதி நேரத்தில் இருக்கின்றோம். மிக விரைவில் உங்கள் கைகளில் வாக்களிப்புகளோடு அந்த தளமும் வர காத்திருக்கின்றது..

தயாராகுங்கள். ......







3 comments

செல்வராகவன் பிரேம்ஜி சண்டை போடும் வீடியோ காட்சி

செல்வராகவன் பிரேம்ஜி சண்டை போடும் வீடியோ காட்சி








Friday, May 28 9 comments

வாக்களிக்க வாருங்கள்...


என்னுடைய முந்தய பதிவு உழவனின் எதிர்காலம் கேள்விக்குறியா?  யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் வந்துள்ளது நன்றி ;  யூத் ஃபுல் விகடன் 


வலைபதிவு நண்பர்கள் சேர்ந்து திரைதுறை கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக,  வலைப்பூ குழு ஒன்று விருது வழங்க உள்ளது. சென்றவருடம் SSHATHIESH in பார்வை  வலைத்தளத்தில் வாக்களிப்பு நடைபெற்றது.அதே போல் இந்த வருடம் ஒரு குழுவாக சேர்ந்து நடைபெற இருக்கிறது. 

இதில் நீங்கள் உங்கள் வாக்களிப்பும், கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.  இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல வரவேற்ப்பு  காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். 

பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 


அனால் இந்த விழாவுக்கு அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்று நாங்கள் யாரையும் மிரட்டமாட்டோம்.நீங்களும்  இந்த குழுவில் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம். இது ஒரு புதிய முயற்சி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இன்னும் சில நாட்களில் உங்கள் அபிமான திரை கலைஞ்ர்களுக்கு வாக்களிக்க தயாரக இருங்கள்... 















Thursday, May 27 12 comments

உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா?






இந்தியாவின் முதுகு எலும்பாய் இருப்பது விவசாயம் தான் ஆனால் நம் நாட்டில் விவசாய பொருளுக்கு உரியவிலை மட்டும் கிடைப்பது இல்லை,அவர்கள் பொருளை நேரடியாக விற்பனை செய்வது கிடையாது,தரகர்கள் மூலமாக தான் விற்பனை செய்கிறாக்கள்.தரகர்கள் உரிய விலை கொடுப்பது இல்லை, தரகர்கள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர் பொருளை வைத்து இருந்தால் கெட்டுபோய்விடும், வேறு வழி  இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்   இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. 


இது என்ன தங்கமா வெள்ளியா நாளைக்கு விற்பனை செய்து கொள்ளலாம், என்று நினைப்பதற்க்கு காய்கறிகள் கனிகள் இரண்டு நாள் விட்டால் கெட்டுபோய்விடும். இதனால் இவர்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர் இதனால் நஷ்டம் ஏற்படுகிறது இப்படி விலை கிடைக்காத காரணத்தால், விவசாயி தன் நிலத்தை ரியல்எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்று விடுகிறார்கள். இவர்கள் நிலத்தை விற்பனைக்கு தராவிட்டால், அவர்களை மிரட்டுவது அவர்கள் நிலத்தை அபகரிப்பது இப்படி செய்கின்றனர் இதுவும் விவசாயி நிலம் கட்டிடம் ஆவதற்கு ஒரு காரணம். 


அரசியல்வாதிகள் விவாசய நிலத்தை அபகரிக்கும் அரசியல் வாதிகள் உதாரணமாக சிலபேரை சொல்லுகிறேன் 
ஜனாதிபதி பிரதிபாபாட்டீலின் கணவர்,ஏழைவிவசாயி ஒருவரிடம் இருந்து நிலத்தை அபகரித்தார், அந்த விவசாயிக்கு தெரியாமலே நிலத்தின் பெரும் பகுதியை தன் பெயருக்கு மாற்றிகொண்டார்.பிரதிபாபாட்டீல் கணவரான, தேவிசிங்ஷெகாவத். பிறகு அந்த விவசாயி வழக்கு தொடர்ந்து நிலத்தை திருப்பிவாங்கினர்.


ஜனாதிபதியின் கணவரே நிலத்தை அபகரிக்கும் பொழுது நம்ம ஊரு கவுன்சிலர் நிலத்தை அபகரிப்பது ரெம்பா சாதாரண விஷயம்.

எப்பவும் நாம் (இந்தியா) தான் அரிசி ஏற்றுமதி செய்வோம் ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு,முதல் முறையாக இந்தியா அரிசி இறக்குமதி செய்து உள்ளது. இந்த நிலைமை இப்படியே போனால் இந்தியாவில் இன்னும் 10  வருடத்தில் விவசாயம் என்றால் என்ன என்று கேட்கும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு (இந்தியா) என்னதான்  தெரியும் அமெரிக்காவில் போய் பிச்சைதான் எடுப்பார்கள்.


அமெரிக்கக்காரன் என்ன சொல்லுவான், இந்தியாவில் இரண்டு வேலை சாப்பாடு சாப்பிட்டவன் இன்று மூன்று வேலை சாப்பிடுகின்றான் அதனால் தான் பஞ்சம் வந்து விட்டது என்று சொல்லுவான்.  அப்படி பஞ்சம் வந்தால் என்ன செய்வது? நாம் ஒருத்தனை ஒருத்தன் அடித்து சாப்பிடும் நிலைமை வந்தாலும் வரலாம். 
என்னுடைய இந்த பதிவு உழவனின் எதிர்காலம் கேள்விக்குறியா?  யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் வந்துள்ளது நன்றி ;  யூத் ஃபுல் விகடன் 





Tuesday, May 25 7 comments

போலி சாமியார்கள்

எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்தலும் 
சாமியார் வாயில் இருந்து லிங்கம் எடுத்தால் போதும் நாம் போய் வரிசையில் நின்றுஎனக்கும் ஒரு லிங்கம் எடுத்து தாருங்கள் என்று கேட்போம் .
போலி சாமியார்கள் பல வகை அவர்களை பற்றிதான் பார்க்க போகிறோம் 


சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா சாமி கும்பிட சென்றார் அங்கு அவர் சாமி கும்பிடு கொண்டு இருந்தார் ஷில்பா, அப்போது ஒரு பூசாரி வந்து அவரது கன்னத்தில் முத்தம் இட்டார். கோவில் பூஜை தான் நடக்கும் இது என்ன வகை பூஜை தெரியவில்லை. 

இங்கோ சிதம்பரம் கோவில் உள்ளே தேவாரம் திருவாசகம் பாட கூடாதுன்னு சொல்லுவார்கள் ஆன்னால் இவர்கள் மட்டும் அங்கு காம லீலை நடத்துவர்கள்.


இந்த சாமியாரை பார்த்தால் உங்களுக்கு  மிகவும் கோபம் வரும் இந்த சாமியார்க்கு காலில் அதிகம் சக்தி இருக்கிறதாம், இவர் கால் நாம் மீது பட்டால் நமக்கு எல்லாம் நோயும் குணம் அடைந்து விடுமாம் இதுதான் முட நம்பிகையின் உச்சம் 

அதற்காக இப்படி கை குழந்தை மீது ஏறி நிற்பது?
இந்த சம்பவம் நடந்தது,பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில்.அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.


இப்பொழுது ஒரு பெண் சாமியார் இவர் திருவண்ணாமலையில் இவர் இருக்கிறார்,   இவரிடம் குறி கேட்கவேண்டும் என்றால் ஒரு புல் பாட்டில் தரவேண்டும் இவர் குறி சொல்லும் போது கஞ்ச அடித்து கொண்டுதான் குறி சொல்லுவர்.ஏன் இப்படி குடித்து விட்டு குறி சொல்லுகிறிகள் என்று கேட்டதற்கு அது நான் இல்லை என் மீது கருப்ப சாமி வருவர் என்கிறார். 





Monday, May 24 9 comments

சென்னை பழசு சென்னை புதுசு

 சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம்  மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. 




சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி,  மார்வாரி, வங்காளி, பஞ்சாபி , ஆகியவை பயனில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேச படுகிறது.
அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.


இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி  சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.
                                  
                             பழைய எழும்பூர் 






                          புதிய எழும்பூர் ரயில் நிலையம்       






                   பழைய  சென்ரல் ரயில் நிலையம்




                   புதிய சென்ரல் ரயில் நிலையம் 




                  பழைய சென்னை உயர்நீதி மன்றம்




               புதிய சென்னை உயர்நீதி மன்றம் 




                       பழைய மெரினா  கடற்கரை 




                         புதிய மெரினா கடற்கரை 




                               பழைய மவுண்ட் ரோடு




                                புதிய மவுண்ட் ரோடு




                               பழைய parrys corner






                               புதிய parrys corner










Sunday, May 23 2 comments

உங்கள் வலைபதிவு விரைவில் பிரபலம் அடைய வேண்டுமா?

தமிழ் வலைப்பதிவர்களுக்காக வலைபதிவு இணைப்பு பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. 


முதற்கட்டமாக முதல் 101 பதிவர்கள் இலவசமாக பதியலாம். பிற்பாடு 9 பெட்டிகளுக்கு 9 யுஸ் டொலர் (அதாவது ஒரு 100 பிக்ஸல் அடங்கிய பெட்டிக்கு 1 டொலர்) அறவிடலாம் என இருக்கிறார்.முடிந்தவரை தங்கள் புகைப்படத்துடன் 9 பெட்டிகளில் இணையுங்கள். தளம் அழகாக உருவாகும்.


மின்மினியில் ஏன் இணைய வேண்டும்?
உங்கள் வலைபதிவு விரைவில் பிரபலம் அடைய மின்மினி உதவும்   அதனால் மின்மினியில் இணையலாம்,நாம் வலைபதிவை அதிகம் பேர் பார்க்க இது உதவும்.

இது வலைபதிவின் இணைபின் புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
அப்புறம் minmni.com    சீட் கிடைக்கலைன்னு ஃபீல் பண்ணுவீங்க  


மேலும்  தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பார்க்கலாம்   






Saturday, May 22 1 comments

மங்களூர் வந்த விமானம் விபத்து! 158 பேர் பலி!

மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் தரையிறங்கிய
சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.

துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் இன்று காலை 6.30 மணியளவில்  விபத்தில் சிக்கியது.


மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் 6 மற்றும் 158 விமானப் பயணிகள் உள்பட 166 இருந்தனர்.

விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், விமானியின் தவறே இதற்குக் காரணம் என்றும் முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பைலட் செர்பியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

மங்களூர் விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங், ரூ.2 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.






கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த விபத்தால் பெரும் அதிர்ச்சியும் கவலையும் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கூறினார்.



Wednesday, May 19 21 comments

இதுதானா புனிதம்?

காசி என்றால் புனித தளம் என்றும், காசிக்கு சென்று கங்கையில்   குளித்து நீராடினால்  பாவங்கள்
போகும் என்றும் நாம் நினைத்து கொள்கிறோம், ஆனால் காசிக்கு சென்று கங்கை குளித்தால் பாவம் போகுமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம்
தொற்றுநோய் வரும் என்பது நிச்சயம்.

இறந்த உடலை காசியில் கரைப்பது பெரிய புண்ணியமாக கருதுகிறார்கள். சிலர் தங்கள் வாழ்நாளை காசியில் முடித்துக்கொள்ள இங்கு வந்து தங்குகிறார்கள். அவர்கள் இருந்தஇடத்திலேய, உயிரை விட்டுவிடுகின்றனர்,அவர்களை அப்படியே கங்கையில் விட்டுவிடுகின்றனர்.  இந்த சுற்றுசுழல் ஆய்வாளர்களும் இதை கண்டுகொள்வது இல்லை.இப்படி பல மர்மங்கள்  காசியில் உள்ளன.

 குறிப்பு:  இளகிய நெஞ்சம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம்.

                      
இது யாகம் குண்டம் இல்லை பிணத்தை தான் எரிக்கிறாக்கள்


           அங்கு ஒரு பிணம் மிதந்து கொண்டு இருக்கிறது


                                            

பிணத்தை காகம் உணவாக உட் கொள்கிறது அவரின் உடல் உறுப்புகள் வெளியே



                                              

கங்கையில் நடுவில்  பிணம் மிதந்து கொண்டு இருக்கிறது

                      

                                      சடலங்களின் எலும்புகள்...



கரைஒதுங்கும் சடலங்களின் எலும்புகள்                          






பிணங்கள் இருக்கும் கங்கையில் தண்ணிரை தீர்த்தமாக எடுக்கும் ஒரு துறவி 



இந்த புகைபடத்தை பார்த்தபின் நீங்கள் இந்த கங்கையில் குளித்து தண்ணிரை தீர்த்தமாக குடிப்பதாக நினைத்து பாருங்கள்.

நன்றி :புகைபடம் sweetsarathi


Tuesday, May 18 3 comments

குறும்பு விலங்குகள்

                                    கண்ணாமுச்சி ரே... ரே...




                                 பச்சை குதிரை தாண்டுறா...




                  hands அப். சார்... நான் அந்த பாலை குடிக்கலை



                                                
      என்ன திமிரு    தண்ணி அடிச்சிட்டு தம் வேற அடிக்குது




எரியாத சுவடிகள் பவன் எதோ போட்டோ கமெண்ட்ஸ் போட்டு இருக்கானாம்





                                                                  
                                      சைலன்ஸ் பிளீஸ்...                  












Monday, May 17 0 comments

வடிவேல் கலைஞர்ரை பார்த்த மறுநாள் சிங்கமுத்து கைது





நடிகர் வடிவேலு, தன்னுடன் நடித்து வந்த சிங்கமுத்து 7 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை கமிஷ்னரிடம் புகார் கொடுத்திருந்தார்.இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் சிங்கமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.  இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் மீண்டும் தனக்கு சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வடிவேலு, புகார் தெரிவித்தார்.  இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் திடீர் என்று சிங்கமுத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்று செய்தியாளர்களிடம் நடிகர் சிங்கமுத்து கூறினார்.

அவரது வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் பேசும் போது, அரசியல் செல்வாக்கு பின்னணியில் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம். இதில் மனித உரிமை மீறல் உள்ளது. ஜனநாயகத்துக்கு விரோதமாக பொய் வழக்கு போடப்பட்டு சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார், என்று தெரிவித்தார்.

வடிவேல் கலைஞர்ரை பார்த்த மறுநாள் சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார் .
வடிவேல் எதாவது வளர்ச்சி நிதி கொடுத்து இருப்பாரோ?


0 comments

டான்ஸ் மாஸ்டராக கலக்கிய புரூஸ்லீ!

23 வயதான அந்த இளைஞனுக்கு இரண்டு ஆசைகள் மட்டும் மனதில் உருப்போட்டுக்
கொண்டிருந்தன. ஒன்று சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும். மற்றொன்று,
குங்பூ கலையை பிரபலப் படுத்த வேண்டும். இரண்டுமே சாத்தியமானது அடுத்த
ஏழு வருடத்தில்!
உடலை உறுதியாக்க உடற்பயிற்சி, உள்ளத்தை மேம்படுத்த தத்துவம் சார்ந்த படிப்பு என
தன்னை உடலாலும், மனதாலும் மேம்படுத்திக் கொன்ட புரூஸ்லீயின் வேகம்... காற்றை
விட விரைவானது! ஆம் ஒருவர் உள்ளங்கையை திறந்து மூடுவதற்குள் அந்த இடத்தை
அடித்து விடுவர் புரூஸ்லீ!

விட்டில் யாருக்கும் அடங்காமல், ஹாங்காங் தெருக்களில் உள்ளூர் தாதாவாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த புரூஸ்லீ, ஒரு அரசியல்வாதியின் மகனை அடித்து துவைக்க, தந்தையால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவில் இரவில்  வேலை, பகலில் சினிமாவுக்காக தேடுதல் என்று விடாமுயற்சியும், துணிவும் அவரை உச்சத்தில் கொண்டு சென்றன.

புரூஸ்லீ கராத்தே,குங்பூ என அனனத்து சண்டைக் கலைகளும் தெரியும்.அது மட்டும்ன்றி நடனம் ஆடுவதிலும் சிறந்தவர் என்பது பலருக்கு தெரியாது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், யாரோடு சண்டைக்கு நின்றாலும், எதிராளி எப்படி, எந்த சண்டை முறை
என்றாலும் பார்க்கும் வழக்கமே இல்லை. முதல் அடியாக நொடிப்பொழுதில் அடித்து
எதிராளியை சாய்த்து விடும் துணிவும், உறுதியும் உடையவர் புரூஸ்லீ.

உலகளவில் உள்ள அனைத்து சண்டைக்கலை சாம்பியன்களையும் தம்மால் வெல்லமுடியும் என்று தன்னம்பிக்கையுடன் பேசிய புரூஸ்லீக்கு, தினமும் உடற்பயிற்சிசெய்யாவிட்டால் தூக்கம் வராது! இவரை உலக தாதா என்றுதான் ஹாலிவுட்டில்,அழைப்பார்கள்.

தம்மிடம் கராத்தே கற்றுக் கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணையே மணந்துகொண்டார்.     புரூஸ்லீயின் வாழ்கை முறையும் ஒரு சினிமா ஆக்க்ஷன் நாயகனுக்குரியதிரைக்கதை அமைப்பில் அமைப்பில் அமைந்தது. அன்னால் ஒரே ஒரு வருத்தம்...

இந்த நாயகன் 33 வயதிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது தான் சோகமான முடிவு!
                          இது நான் அண்மையில் படித்த செய்தி









Friday, May 14 7 comments

அஜித் மகள் அனோஷ்கா புகைபடம்






                                                                          




                                        




                                                          




                                          


6 comments

விளையாட்டு வினையாகும்

                                                                            
 
மரண இடி... 




நண்பா பைக் மாத்திக்கலாமா...




no comment




உள்ளலே யாராவது இருக்கீங்களா...  





சார்...  என்  காதை கடிக்கிறான் சார்...




இரு உன் கண்ணை நோன்டிடுறேன்





 ஹெல்மட் போட்டும் பலன் இல்லை





குருவி  படம் பார்த்து பறக்கலாம்னு ஆசை பட்டேன் அதான் இப்படி
                                  











 
;