பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்து இருந்தான் அருண். பொறியியல் படிப்பில் சேருவதுதான் அவனின் அடுத்த இலக்கு. இது அவன் நண்பர்களுக்கும் நன்றாகவே தெரியும், நண்பர்களும் அவனை ஊக்கபடுத்துவார்கள். நீ தான் நம் வகுப்பிலே முதல் மாணவன் உனக்கு என்ன கவலை சுலபமாக சீட் கிடைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார்கள்.
ஆனால் அருணுக்கு ஒரே கவலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நிறைய செலவு ஆகும் இவர்கள் வீட்டில் அவ்வளவு வசதி கிடையாது, அருணின் அப்பா நெல் மண்டியில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஓரு நாள் வேலை செய்தால் 150 ரூபாய் கிடைக்கும், பள்ளி படிப்பை அங்கும் இங்கும் கடன் வாங்கி தான் படிக்க வைத்தார்.
கல்லுரி படிப்பு குறித்து என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை, அருணனை கூப்பிட்டு நீ என்னப்பா படிக்க போகிறாய் என்று கேட்டார்... அப்பா நான் தகவல் தொழில் நுட்பம் ( IT) படிக்க போறேன்..அப்பா...அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தம்பி என்றார். இலவச இடம் கிடைத்தால் முதல் ஆண்டு மட்டும் 40 ஆயிரம் ஆகும், மொத்தம் 2 லட்சம் வரை செலவு ஆகும்... நம்மளிடம் அவ்வளவு பணம் இல்லையேப்பா...சொத்தை விற்று படிக்க வைக்கலாம் என்றால் நம்மளிடம் எந்த சொத்தும் கிடையாது என்று புலம்பி கொண்டு இருந்தார். இந்த கலை கல்லூரியில் படிக்க என்ன செலவு ஆகும் தம்பி? அருணை கேட்க்க அவனுக்கு வார்த்தை வரவில்லை அதற்க்கு அதிகபட்சம் 5000 இருந்தால் போதும் அப்பா. நீ ஏன் அந்த படிப்பில் சேர்ந்து படிக்க கூடாது. இல்லை எனக்கு அதில் விருப்பம் கிடையாது (IT) படிக்க தான் எனக்கு விருப்பம்,
கவலையுடன் வேலைக்கு சென்றார் அருணின் அப்பா. வேலை செய்யும் நண்பர் உடன் பேசிக்கொண்டு இருந்த போது பையன் படித்து முடித்து விட்டால் உங்களுக்கு கவலை இல்லை, வேலைக்கு வந்து இப்படி மூட்டை சுமக்க வேண்டிய அவசியம் கிடையாது, அருணின் அப்பா, அப்படி நடந்தால் எனக்கும் சந்தோசம் தான், எங்கு நடக்க போகுது அவன் ஆசை படும் படிப்பை படிக்க வைக்க லட்ச கணக்கில் ஆகும், என்று சொல்கிறான், என்ன செய்வது என்று புரியவில்லை நண்பர்: அவன் சின்ன பையன் அவனுக்கு குடும்ப கஷ்டம் தெரியாது நீ தான் சொல்லி புரிய வைக்கணும். இருப்பது ஒரே பையன் அவனுடைய ஆசையை நிறைவேற்ற முடிய வில்லையே,என்ன செய்வது என் வீட்டில் வந்து பிறந்து விட்டான், வேறு எங்காவது பிறந்து இருந்தால் அவன் இன்னும் நல்லா இருந்து இருப்பான். என்ன செய்வது தேர்வு முடிவு வரட்டும் என்று சொல்லி கொண்டு வீட்டுக்கு போனார் அருணின் அப்பா.
மறு நாள் காலை தேர்வு முடிவு பார்ப்பதற்கு பள்ளிக்கு சென்றான் அருண், அவனை நண்பர்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள், எதிபார்ததை போல அவனே பள்ளியில் அதிகம் மதிப்பெண் பெற்றிருந்தான். பாராட்டுகள் குவிகிறது, அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றான். அப்பா அம்மா விற்கும் ஒரே மகிழ்ச்சி, அருண் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்க சென்றான், அருணின் அப்பா கலை கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்றார்.
இருவருமே ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தனர், அருண் ஆசையாக அந்த விண்ணப்பத்தை காட்டுவதற்குள் அருணின் அப்பா கலை கல்லூரி விண்ணப்பத்தை கொடுத்து இதில் கையொப்பம் போடு என்று சொல்ல அருணுக்கு முகம் வாடியது, இல்லை என்னால் கலை மற்றும் அறிவியல் படிக்க முடியாது என விவாதம் செய்தான். அருணின் அப்பா எனக்கு அவ்வளவு பணம் யாரும் கடன் தர மாட்டாங்க நான் என்ன செய்வேன், நான் தான் மூட்டை தூக்கி குடும்பம் நடத்துறேன், உன்னைய எப்படியாவது, பொறியியல் படிப்பில் சேர்த்து விட. முயற்சி செய்தேன், என்னால் ஒன்னும் செய்ய முடியலை, சொல்லி கண்ணீர் விட்டார் அருணின் அப்பா. அழுவாதீங்க அப்பா நான் கலைகல்லூரியில் சேர்ந்து படிக்கிறேன். என்று சொன்னான் அருண்.
சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. நானும் அம்மாவும் பணம் விசயமா ஒருவரை பார்க்க போறோம் நீ இங்கேய இரு நாங்கள் போய்விட்டு சீக்கிரம் வந்து விடுகிறோம், என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பினார்கள், என்ன இருந்தாலும் அப்பாவை சமாதானம் செய்யவே அப்படி கூறினான் அருண். அவனுக்கு அதில் விருப்பம் இல்லை. யாரும் இல்லாத அறை அவன் மனதை குழப்புகிறது. நம்ம இருந்து அப்பாவுக்கு கஷ்டம் கொடுப்பதை விட தற்கொலை செய்து கொள்ளாம் என்று தவறான முடிவுக்கு வருகிறான்.
கயிறை எடுத்து மின்விசிறி மீது போட்டான், நாற்காலிய எடுத்து போட்டு நிற்க அந்த கயிறை எடுத்து கழுத்தில் மாட்டினான், அப்போது எங்கு இருந்தோ ஓரு தட்டான் பூச்சி வந்து அவனை வட்டம் அடித்தது அவன் மேல் உட்கார்ந்தது, அவனும் பார்த்தான், தட்டான் பூச்சி பற்றி படித்தது நினைவில் வந்தது. சில நாள் வாழும் தட்டான் பூச்சியே சந்தோஷமாக சுற்றி திரியும் பொழுது நான் மட்டும் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் நினைத்து இறங்கி விட்டான், கலை கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், அந்த படிப்பு கூட இல்லாமல் எத்தனையோ மாணவர்கள் இருக்கிறார்கள், என்ன ஓரு முட்டாள் தனம் செய்ய பார்த்தேன், என்று மனதிற்குள் சொல்லி கொண்டே மின்விசிறியின் பொத்தானை அழுத்தினான், அந்த தட்டான் பூச்சி மின்விசிறியில் அடி பட்டு இறந்தது தன் கடமையை செய்து விட்ட ஆனந்தத்தில்..
அருணின் அப்பா பணம் வாங்கி கொண்டு வந்தார். அருணை கூப்பிட்டு நாளை உங்க பள்ளிக்கு நம்மளை வர சொல்லி இருக்காங்க காலை போகணும் சீக்கிரம் எழுந்து கிளம்பனும். என்று சொல்லி தூங்க சென்றனர். காலை பள்ளியில் பள்ளி உரிமையாளர் வந்து உங்க பையனால் இந்த பள்ளிக்கு பெருமை, அடுத்து என்ன படிக்க வைக்க போறிங்க? சிறிது நிமிட அமைதிக்கு பின், (bsc) படிக்க போவதாக அருண் சொல்ல,ஏன் பொறியியல் படிக்க வேண்டியது தானே, என்று கேட்டார்.
அருணின் அப்பா எங்களுக்கு அவ்வளவு வசதி கிடையாது என்று சொன்னார், படிப்பதற்கு வசதி தேவை இல்லை நான் கல்வி கடன் வாங்கி தருகிறேன் அதை அவன் படித்து முடித்து வேலைக்கு போகும் போது திருப்பி செலுத்தினால் போதும், அதுக்கு யாராவது ஜாமீன் இருக்கனும் சொல்லுவாங்க, நான் போடுறேன் ஜாமீன் கையெழுத்து நான் போடுறேன் என்ன படிக்க வையுங்கள், விழா ஏற்பாடு செய்து உங்க மகனுக்கு சான்றிதழ் தருவோம் என்று சொல்லத்தான் உங்களை அழைத்தோம். அருண் பெருமிதத்துடன் பொறியியல் கவுன்சிலிங் சென்றான், ஓரு தட்டாம் பூச்சி அவன் மேல் வந்து உட்கார்ந்தது...