Showing posts with label வாழ்த்துவோம். Show all posts
Showing posts with label வாழ்த்துவோம். Show all posts
Friday, October 7 11 comments

எங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..!!





நேற்று சந்தித்த
உறவு ஒன்று 
இரண்டாண்டில் வந்து நிற்க
ஓடிவிட்ட காலத்தை
நினைவுகளால் ஓட்டிப் பார்க்க
அன்று பழகியது போல 
இன்னும் அப்படியே ..
பழகிகொண்டிருப்பது 
தான் உன் சிறப்பு ..

ஒவ்வொருவரையும் 
நீ உறவை சொல்லி 
அழைக்கும் பொழுது 
உன்... அன்பின் ஆழம் 
தெரிகிறது....!! 
உன் மனதில் இருப்பவர்களை 
மட்டுமே நீ உறவுமுறையில்
அழைப்பாய்..!!

வாழ்த்து கவிதை எழுதி 
கொடுக்கும் உனக்கு..
ஒரு வாழ்த்து கவிதை..
இக் கவிதையை கண்டு 
கோபம் கொள்ளாமல் 
பொறுத்து கொள்ள 
சொல் உன் கவிதையை..!! 
  

என்னை ஒவ்வொரு முறையும் 
உறவுமுறை சொல்லி 
அழைக்கும் பொழுதெல்லாம்..
மரத்தில் நீர் ஊற்றியது போல் 
இறுகி கொள்கிறது...
நமக்கான.. 
பந்தம்..!!

வார்த்தைகள் வளர்கின்றன 
உன்னை பற்றி எழுதும் பொழுது..
உன் அன்பின் நீளம் 
அப்படி...!!


உன்னை வாழ்த்த வார்த்தைகள் 
தேடி கொண்டிருக்கும்..
பொழுது... 
வேறு வார்த்தைகள் 
கிடைக்கவில்லை..


எபோதும் போல் 
அண்ணா..!!
என்றே முடித்து கொள்கிறேன்..


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...


Tuesday, August 30 13 comments

குட்டிக்கு ஒரு வாழ்த்து..





அன்பில் விளைந்த 
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள் 
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க 
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு 
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க 
நேரத்திற்கே நேரம் 
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே 
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் இரண்டு வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
(சித்)அப்பா என்று நீ 
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும் 
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின் 
சிறகடிப்பினை யாரேனும் 
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!






Friday, August 5 72 comments

ஆனந்தமாய் வாழ்த்துவோம்...






நானும் மதுரை ஆனந்தியும் சேர்ந்து சித்ரா பிறந்தநாள் அன்னைக்கு அவங்களை கலாய்க்கலாம் என நினைத்தோம், (சித்ராவிற்கு பிறந்தநாள் கவிதை எழுதி கொடுத்த ரேவாவுக்கு இன்னும் 10 ரூபாய் பாக்கி தரனும்) அன்று பார்த்து ப்ளாக் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து விட்டது, அன்று அவர்களை கலாய்க்க முடியவில்லை ஆனால் இன்று மதுரைகாரிக்கு பிறந்தநாள், அவரை அன்புடன் கலாய்த்து இருக்கிறோம் மேலும் கவிதை எனப்படும் கிழ் வரும் சேமியா, நவாப்பழம் போன்ற வரிகளில் சந்தேகம் இருப்பினும் விளக்கம் கேட்பவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். 





அனா சொன்னா நீ ஆவனா சொல்வே 
ஆனாவுனா தாத்தா பத்தி பேசி 
கண்ணீர் விடுவ..!!!

நீ கற்றுக்கொடுத்தும் 
பள்ளியில் முதல் மாணவன் 
உன் மகன்..!!! 
அடடா ஆச்சரிய குறி... 

மாமியார் இல்லாததால 
சேமியாவை கொடுமை செய்யும் 
அழகிய தமிழ் மகள் நீ...!! 

உன்னை தேவதை என நம்பி வந்து 
ஒரு ஜீவனை ஏமாற்றி 
நேசத்தை கொட்டும் 
ராட்சசி நீ..!!!



குட்டி இதயத்துடன் வந்தவனிடம் 
குட்டி குட்டி ஊடல்கள் செய்து...
குட்டி குட்டி பாசாங்கு செய்கிறாய்..
நீ பிறந்த தினத்திலாவது ...
நேசத்தை காண்பித்து 
அவனை கொல்லாமல் இரு... !! 

அவனுக்கும் நேசத்தின் அளவை 
காண்பிக்க கிடைத்தது ஒரு நாள் 
அது உன் திருநாள்...!! 
அத் திருநாளே போதும் 
ஒரு நாள் என்றான்..!!!

நவாப் பழம் தின்னும் 
கிளியே..!!!
அத பச்சை குழந்தையிடம் 
பிடிங்கி தின்னும் கிளியே..!! 
குழந்தையிடம் சண்டையிடும் 
குழந்தை நீ...!!!

பூக்கும் மலரெல்லாம் உனக்காக 
முழு நிலவுவும் உன் வாசலில் 
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக .. 
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக..
இப்படியெல்லாம் பொய் 
சொல்கிறேன் உனக்காக..!!!





உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு 
உன்னை வாழ்த்த கிடைத்த ஒரு நாள் 
அது உன் பிறந்த நாள்...


இன்று பூத்த மலராய்.. 
என்றும் வாடா மலராய் 
இருக்க உன்னை வாழ்த்துகிறோம்.. 



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் 

ஆனந்தி கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு பதிவு போட்டுவிட்டேன், மொக்கையா இருந்தாலும் நல்லா இருந்தாலும் அது ஆனந்தியையே போய் சேரும்.. 



soundar

 
;