Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Monday, July 14 1 comments

நீ வாசிக்க..!





உனக்காகப் படைக்கப் பட்ட 

கவிதைகளெல்லாம் 
நீ வாசித்த பின்னே 
பிறவிப் பலனை 
பெறுகிறது..!

*****

ஒற்றை துளியில் 

ஓர் கவிதை 



உந்தன் பொட்டு..!

*****


உன்னோடு நான் 

ரசித்த காட்சி திரையில் 
உன் நினைவோடு 
அசைபோட்டு கொண்டிருகிறேன் 



உந்தன் நினைவுகள் 
என் திரையில்..!!!

*****

நீ பயணிக்கையில்


உன்னோடு நானும் 

பயணிக்கிறேன்..
காற்றோடு உன் 
கூந்தலை உரசிய படி..!!

*****

உன் வாசிப்பு எல்லாம் 

நானாகி போகின்றேன்..!

என் சுவாசிப்பு எல்லாம் 
நீயாகி போனாய்..!

*****


கவிதை எழுத தொடங்கினால் 

உந்தன் பெயரையே 
உமிழ்கிறது எந்தன் 
எழுதுகோல்..!



பொறாமை கொண்டு 
வீசி எறிய எண்ணுகிறேன் 
உந்தன் பெயரை முத்தமிட்டதால் 
உயிர் பிச்சையிடுகிறேன்..!

*****


ஒரு ஊடலில் 

மற்றொரு ஊடலின் 
நினைவு..! 
புன்னைகையுடன் 
ரசிக்கிறேன்.! 



உன் வருகைக்காக 
ஒற்றைகால் 
கொக்கைப் போல் 
காத்திருக்கிறேன்..! 



என் தேடலும் சுகமானது..!

*****


நீ பேசாத போது 

உன் வார்த்தைகளோடு 
பேசிக் கொண்டிருப்பேன்..!



உன் மௌனம் கலையும் வரை..!

*****


நித்தம் நித்தம் உன் நினைவுகளால் 

கண் இமைக்க மறக்கிறேன்...
விழிகளில் நீ இருப்பதால்...!! 



ஆனந்தமாய் சுற்றித்திரிந்த 
என்னை ஆர்ப்பாட்டமாய்
கைது செய்கிறாய்
விழியால் ..!!

*****


பேசிகொண்டிருக்கையில் கவிதை 

சொல் என்கிறாய்..! 



நான் கேட்டுகொண்டிருக்கிறேன் 
நீ பேசு..!






Thursday, June 12 1 comments

உன் வருகையில் கவி..






அதிகாலை 
தேனீர் கோப்பையுடன்
உன் அருகில்
நான் ..!
சுவை குறைந்ததென 
பருகச்சொல்லி 
மீண்டும் சுவைக்கிறாய் ..!

காதலோடு துவங்கியது நம் விடியல்..!


*****
நீ பொய் உரைப்பது
அழகென்று தெரிந்து
கொண்டேன் ..!
என்னை அழகென்ற போது..!

******

விக்குதடா நினைக்காதே
என்றாய்..!
நினைக்காவிடில் 
உன் சுவாசம் நின்றுவிடும்..! 
சுவாசம் நின்றுவிட்டால் 
நேசம் நின்றுவிடும்..!
நேசம் நின்றுவிட்டால் 


நம் வாசம் மறைந்து விடும்..!



*****
விழியில் விழுந்த தூசியை 

போல் ஒட்டி கொண்டேன்..
கண்ணீரை தவிர வேறேதும் தந்ததில்லை 
இதுவரை..!


******
பேசிக்கொண்டிருக்கையில் 

இமைகளை மட்டும் மூடாதே 
எத்தனை முறை தான் 
சிறை படுவது..!


*******
உன் நேசத்தை 

சிறிது சிறிதாக சேகரிக்கிறேன் 
எறும்பை போல..! 
ஊடலின் போது தேவைப்படும் 
கொறித்துகொள்கிறேன்..!

என்னை விட இந்த 
எறும்பிற்கு உன்மேல் 
அப்படியென்ன காதல் 
கடித்துவிட்டு செல்கிறதே.!


*****
நீ பேசாத நேரத்திலும் 
உன்னோடுபேசி கொண்டிருக்கிறேன் 


நீ பேசிய வார்தைகளோடு..!

*****
ஊடலில் தொடங்கி 

கெஞ்சலில் நெருங்கி 
கொஞ்சலில் முடிகிறது
உன் பார்வை..!


*****

நீயில்லாத பொழுது 


யாரும் செல்லாத வெறிச்சோடிய 
பாதை போல் கவி வர மறுக்கிறது..!

நீ வருகையில் 
கவி தேனீக்களை
போல் சுற்றுகிறது..!


*****
தனிமையில் 

நடைபோட 
பாதச்சுவடும் 
வர மறுத்து 
அடம் பிடிக்கையில் 
நீ மட்டும் 
வருகிறாய்..!
ஏனோ..?!




Friday, June 6 1 comments

மெல்லிய மலரொன்று..!




ஜன்னல் வழியே 
புன்னகை மொட்டு உதிர்த்து
எட்டி எட்டி பார்கிறாய்..!

எட்டாத இடத்தில் நீ இருந்தும் 
உன் வாசம் கண்டு 
மயங்கி போகிறேன்..! 

நீ சாய்ந்தாடுகையில் 
நானும் சாய்ந்தாடுகிறேன்..! 

நீ உதிரும் போது 
தாங்க ஓடோடி வருகிறேன்..! 

யாரேனும் பறிக்க எண்ணினால் 
கலங்கித்தான் போகிறேன்..!

இன்னோரு முறை 
என் வீட்டில் பூத்து விடு 
வேண்டாம் 
ஜன்னல் வழியே...!
Wednesday, June 4 2 comments

நீயாகிய நான்..!




என் சுவாசமே நீ யென்பதால் 
உள்வாங்கி வெளியிடுகிறேன் 
நீ இல்லையனில் மரணித்து 
உன்னை தேடி 
காற்றில் அலைந்து கொண்டிருப்பேன்

சுவாசமே காதாலாக..!



என்னை விட்டு விலகுவது உமக்கு 
சந்தோசமெனில் என்றென்றும்
நிலைத்திருக்கும்..!

இறுதி சுவாசம் உள்ளவரை


***********************

என்னை விட என் எழுதுகோலுக்கு
காதல் அதிகமாகிவிட்டது..
உன்னை பற்றி எழுத 
முண்டியடித்து செல்கிறது..!


********************************

மலர் கண்காட்சி என்றார்கள் 
தேடிகொண்டிருகிறேன்
உன்னை..!


**********************

உன் விரல் பட்ட மகிழ்ச்சியில்
துள்ளி குதித்து 
தற்கொலை செய்து 
கொள்கிறது 

நீ உண்டு எறியும்
சாக்லேட் பேப்பர்..!


********************************

நான் இங்கு உன்னுடன் 
மெளனமாக பேசிகொண்டிருக்கிறேன்..!
நீ அங்கு மெளனமாக 

சண்டையிட்டு கொண்டிருக்கிறாய்..!


Friday, December 13 1 comments

கரை தீண்டாமலே செல்கிறாய்


அருவி போல் நேசத்தைக் கொட்டினாலும் 
பாறை போல் தேயாமல் இருகிறாய் 
என்னுள் மின்சாரமிருந்தும் 
உன்னைத் தாக்கமாலே செல்கிறேன்..! 

நீ செல்லும் பாதையில் 
ஓடையாய் வந்தாலும் 
கரை தீண்டாமலே செல்கிறாய்..!

வெள்ளமென்ன பாய்ந்தாலும் 
அணை போட்டே தடுக்கிறாய்...!

காத்திருந்து காத்திருந்து 
காற்றில் கரைந்தாலும் 
மீண்டும் உன்னைக் காணவே...
மழையாய்... அருவியாய்...ஓடையாய்...!

Monday, May 21 4 comments

சிறகடிக்கிறேன்...



உன்னை காணவே சிறகடிக்கிறேன் 
என்னை காண துடிப்பதை அறியாமல்... 
தேடி தேடி களைத்து 
கிளையில் அமர்கையில்... 
எங்கிருந்தோ வந்து
உன் அலகால் அழகுசேர்த்து 
களைப்பாற்றுகிறாய்...!


விழுந்து கொண்டிருக்கிறேன் 
ஒவ்வொரு துளியாய்.. 
உன் பூமி நெஞ்சை கிழித்து செல்கிறேன்
ஒவ்வொரு துளியாய்.
காணமல் கரைந்தே போகிறேன் 
ஒவ்வொரு துளியாய் 
உன் நெஞ்சில் ஈரம் கொள்ள 
மீண்டும் பிறக்கிறேன் ஒவ்வொரு துளியாய்...!


காதல்  உன்  நெஞ்சில்  துடிக்க 
என் இதயத்தை   தருகிறேன் 
துடிக்காத  உன்  இதயத்தை  கொடு 
துடிக்கவைகிறேன்..! 



வெறிச்சோடிய பாதைகள் 
சப்தமில்ல அலைகள்..
சப்தமில்ல காற்று..
சப்தமிடும் சப்தமில்ல அலைபேசி 
சாலையோர பூக்களின் மழை..
யாவும் தெரிவதில்லை 
உன் வருகையை
எதிர்நோக்கும் பொழுது...!! 

சரித்திரத்தில் இடம் பெற
சாதனை படைக்க வேண்டுமாம் 
அல்லது காதலிக்க வேண்டுமாம் 
வா நாம் காதலித்து சாதனை
படைப்போம்...!





Wednesday, February 15 10 comments

தனிமை...








தனித்துவிடப்பட்ட 
சிறகொன்று..
தன் பிம்பத்தை 
பார்த்து துள்ளி 
குதித்தது... 
தன் வழித்துணையென..!!!
*******


சிறிது சிறிதாய் 
சேர்த்த சிறகுகள்
பறந்துகொண்டிருக்கிறது..
நேசம் கொண்ட சிறகை விட்டு
*******


மலை பாதையில் தடுமாறி 
கொண்டிருக்கையில் 
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..


நிஜம் விட்டு போனதை 
அறியாமல் நிழலை 
பிடித்து கொண்டிருக்கும்..
காணா குருடன் நான்...!
*******


உருகும் மெழுகாய் நானிருக்க 
உன் நினைவுகள் 
பிரகாசமாய் எரிந்து 
கொண்டிருக்கிறது...


என் இறுதிவரை 
உன் நினைவுகள்
பிரகாசமாய்
எரிந்துகொண்டிருக்கும்..!! 
*******


நேசம் கொண்டு 
நேசம் கொண்டு 
ஆறா காயத்தை 
ஆற்ற தனிமையை 
நோக்கி செல்கிறது 
காயம் பட்ட மனம்..!!! 



Monday, January 23 10 comments

உன்னை பற்றி...







என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!


தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து 
விடாதே...
மடிந்தே விடும்...!!!


ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து 
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!



ரோஜா செடி ஒன்று 
வளர்த்து வருகிறேன்
உனக்காக.. 
என்னை போலவே 
தினமும் பூத்து பூத்து
வாடி கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...!!



உனக்காக காத்திருக்கிறேன்
உன் பாதையில்...
தனியாக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
உன் விழியருகே காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி பார்வைக்காக...!!



உன் வருகைக்காக 
காத்திருந்து காத்திருந்து 
வாடி போனேன் 
உயிரற்று..
என் வசந்த காலம் 
எப்போது 
தொடங்குமென 
காத்திருக்கிறேன் 
ஏக்கத்தோடு...!!!



Friday, January 6 9 comments

பாசத்தை பழி தீர்க்க...






ஆயிரம் கனவுகள்
ஆயிரம் தவிப்புகள்
ஆயிரம் ஏக்கங்கள்
பிறக்க போகும் என்னிடம் ...


அனைவரையும்
பரபரப்பில் ஆழ்த்தி
நான் மட்டும் சுற்றி சுற்றி
ஆடிக்கொண்டிருக்க...
ஒன்றும் தெரியாதது போல்
வீரிட்டு அழுது வெளிவர..
ஆனந்த கண்ணீரின் வரவேற்பில்


பாதுகாப்பான இருட்டு
உலகிலிருந்து
பாதுகாப்பற்ற இருட்டு
உலகத்தில் இனி..!!


ஒன்றுமறியாமல்
கண்களை சிமிட்டிக் கொண்டிருக்கையில்
அவளின் அரவணைப்பில்
உறங்கிப் போனேன்...


எட்டி எட்டி உதைக்க 
அவள் தட்டி தட்டி கொடுக்க 
ஆழ்ந்த உறக்கத்தை கொடுத்த
அவளின் உறக்கம் கெடுத்தேன்..!!


பார்த்து பார்த்து செய்த உன்னிடம் 
பார்க்காமல் கூட செய்ததில்லை 
பார்த்து செய்தாலும்
பாசகடனை தீர்க்க முடியாது..!!


ஏதேதோ இல்லம் தேடி 
விட்டு செல்லும் உன்னை
பார்த்து போ என்னும் 
மனம் உன்னை தவிர வேறு யாருக்கு..??


ஆயிரம் ஆயிரம் துளி 
பாசத்தை கொடுத்துவிட்டு
ஒரு துளி பாசத்தை கூட 
எதிர்பார்க்காத உன்னை..


அடுத்ததொரு ஜென்மத்தில் 
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிறந்தால் பாசத்தை 
பழி தீர்த்துக் கொள்வேன்...!!



Tuesday, November 29 15 comments

சரிந்து கிடந்தேன்...





விதை போட்டவன்
சென்றுவிட
சிலரால் மிதி பட 
சிலர் மேய்ந்து விட 

அவளின் கண்ணீர் பட 
எதோ துளிர்த்து விட்டேன்..!!!

என் நிழலில் பலரிருந்தும்
நான் வெயிலில் நிற்பதை 
காணமல் சென்றனர்..!!!

இளைப்பாறும் பறவைகளும் 
எச்சமிட்டே செல்கின்றன...!!

நேசம் கொண்டு 
பலர் கல்லெறிய..
கண்ணீருடன் கனி 
அமுதை கொடுக்க...

கனியை உண்டு 
என் மீதே தூக்கி
எறிகிறான் விதையை..!

தாக்குபிடிக்க முடியா
காற்று தாக்கி 
சரிந்து கிடந்த என்னை 
தூக்கி சென்று...  

சிலர் மிதித்து கொண்டிருக்க 
சிலரோ தீ மூட்டிய 
பசியாறினர்..!!

 
;