Thursday, June 12

உன் வருகையில் கவி..






அதிகாலை 
தேனீர் கோப்பையுடன்
உன் அருகில்
நான் ..!
சுவை குறைந்ததென 
பருகச்சொல்லி 
மீண்டும் சுவைக்கிறாய் ..!

காதலோடு துவங்கியது நம் விடியல்..!


*****
நீ பொய் உரைப்பது
அழகென்று தெரிந்து
கொண்டேன் ..!
என்னை அழகென்ற போது..!

******

விக்குதடா நினைக்காதே
என்றாய்..!
நினைக்காவிடில் 
உன் சுவாசம் நின்றுவிடும்..! 
சுவாசம் நின்றுவிட்டால் 
நேசம் நின்றுவிடும்..!
நேசம் நின்றுவிட்டால் 


நம் வாசம் மறைந்து விடும்..!



*****
விழியில் விழுந்த தூசியை 

போல் ஒட்டி கொண்டேன்..
கண்ணீரை தவிர வேறேதும் தந்ததில்லை 
இதுவரை..!


******
பேசிக்கொண்டிருக்கையில் 

இமைகளை மட்டும் மூடாதே 
எத்தனை முறை தான் 
சிறை படுவது..!


*******
உன் நேசத்தை 

சிறிது சிறிதாக சேகரிக்கிறேன் 
எறும்பை போல..! 
ஊடலின் போது தேவைப்படும் 
கொறித்துகொள்கிறேன்..!

என்னை விட இந்த 
எறும்பிற்கு உன்மேல் 
அப்படியென்ன காதல் 
கடித்துவிட்டு செல்கிறதே.!


*****
நீ பேசாத நேரத்திலும் 
உன்னோடுபேசி கொண்டிருக்கிறேன் 


நீ பேசிய வார்தைகளோடு..!

*****
ஊடலில் தொடங்கி 

கெஞ்சலில் நெருங்கி 
கொஞ்சலில் முடிகிறது
உன் பார்வை..!


*****

நீயில்லாத பொழுது 


யாரும் செல்லாத வெறிச்சோடிய 
பாதை போல் கவி வர மறுக்கிறது..!

நீ வருகையில் 
கவி தேனீக்களை
போல் சுற்றுகிறது..!


*****
தனிமையில் 

நடைபோட 
பாதச்சுவடும் 
வர மறுத்து 
அடம் பிடிக்கையில் 
நீ மட்டும் 
வருகிறாய்..!
ஏனோ..?!




1 comments:

Seeni said...

அனைத்தும் அருமை

 
;