Monday, July 14 1 comments

நீ வாசிக்க..!





உனக்காகப் படைக்கப் பட்ட 

கவிதைகளெல்லாம் 
நீ வாசித்த பின்னே 
பிறவிப் பலனை 
பெறுகிறது..!

*****

ஒற்றை துளியில் 

ஓர் கவிதை 



உந்தன் பொட்டு..!

*****


உன்னோடு நான் 

ரசித்த காட்சி திரையில் 
உன் நினைவோடு 
அசைபோட்டு கொண்டிருகிறேன் 



உந்தன் நினைவுகள் 
என் திரையில்..!!!

*****

நீ பயணிக்கையில்


உன்னோடு நானும் 

பயணிக்கிறேன்..
காற்றோடு உன் 
கூந்தலை உரசிய படி..!!

*****

உன் வாசிப்பு எல்லாம் 

நானாகி போகின்றேன்..!

என் சுவாசிப்பு எல்லாம் 
நீயாகி போனாய்..!

*****


கவிதை எழுத தொடங்கினால் 

உந்தன் பெயரையே 
உமிழ்கிறது எந்தன் 
எழுதுகோல்..!



பொறாமை கொண்டு 
வீசி எறிய எண்ணுகிறேன் 
உந்தன் பெயரை முத்தமிட்டதால் 
உயிர் பிச்சையிடுகிறேன்..!

*****


ஒரு ஊடலில் 

மற்றொரு ஊடலின் 
நினைவு..! 
புன்னைகையுடன் 
ரசிக்கிறேன்.! 



உன் வருகைக்காக 
ஒற்றைகால் 
கொக்கைப் போல் 
காத்திருக்கிறேன்..! 



என் தேடலும் சுகமானது..!

*****


நீ பேசாத போது 

உன் வார்த்தைகளோடு 
பேசிக் கொண்டிருப்பேன்..!



உன் மௌனம் கலையும் வரை..!

*****


நித்தம் நித்தம் உன் நினைவுகளால் 

கண் இமைக்க மறக்கிறேன்...
விழிகளில் நீ இருப்பதால்...!! 



ஆனந்தமாய் சுற்றித்திரிந்த 
என்னை ஆர்ப்பாட்டமாய்
கைது செய்கிறாய்
விழியால் ..!!

*****


பேசிகொண்டிருக்கையில் கவிதை 

சொல் என்கிறாய்..! 



நான் கேட்டுகொண்டிருக்கிறேன் 
நீ பேசு..!






Thursday, June 12 1 comments

உன் வருகையில் கவி..






அதிகாலை 
தேனீர் கோப்பையுடன்
உன் அருகில்
நான் ..!
சுவை குறைந்ததென 
பருகச்சொல்லி 
மீண்டும் சுவைக்கிறாய் ..!

காதலோடு துவங்கியது நம் விடியல்..!


*****
நீ பொய் உரைப்பது
அழகென்று தெரிந்து
கொண்டேன் ..!
என்னை அழகென்ற போது..!

******

விக்குதடா நினைக்காதே
என்றாய்..!
நினைக்காவிடில் 
உன் சுவாசம் நின்றுவிடும்..! 
சுவாசம் நின்றுவிட்டால் 
நேசம் நின்றுவிடும்..!
நேசம் நின்றுவிட்டால் 


நம் வாசம் மறைந்து விடும்..!



*****
விழியில் விழுந்த தூசியை 

போல் ஒட்டி கொண்டேன்..
கண்ணீரை தவிர வேறேதும் தந்ததில்லை 
இதுவரை..!


******
பேசிக்கொண்டிருக்கையில் 

இமைகளை மட்டும் மூடாதே 
எத்தனை முறை தான் 
சிறை படுவது..!


*******
உன் நேசத்தை 

சிறிது சிறிதாக சேகரிக்கிறேன் 
எறும்பை போல..! 
ஊடலின் போது தேவைப்படும் 
கொறித்துகொள்கிறேன்..!

என்னை விட இந்த 
எறும்பிற்கு உன்மேல் 
அப்படியென்ன காதல் 
கடித்துவிட்டு செல்கிறதே.!


*****
நீ பேசாத நேரத்திலும் 
உன்னோடுபேசி கொண்டிருக்கிறேன் 


நீ பேசிய வார்தைகளோடு..!

*****
ஊடலில் தொடங்கி 

கெஞ்சலில் நெருங்கி 
கொஞ்சலில் முடிகிறது
உன் பார்வை..!


*****

நீயில்லாத பொழுது 


யாரும் செல்லாத வெறிச்சோடிய 
பாதை போல் கவி வர மறுக்கிறது..!

நீ வருகையில் 
கவி தேனீக்களை
போல் சுற்றுகிறது..!


*****
தனிமையில் 

நடைபோட 
பாதச்சுவடும் 
வர மறுத்து 
அடம் பிடிக்கையில் 
நீ மட்டும் 
வருகிறாய்..!
ஏனோ..?!




Monday, June 9 0 comments

அவளோடு ஒரு பயணம் (சிறுகதை)




பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும்.  இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும்  பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ். 

பஸ் வருவதை பார்த்து  வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க,  பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள். 

இந்த கலவரத்தில்  பேருந்தை  தவறவிட்டனர்.

ஏற்கனவே லேட் இதுல இவளுக வேறென புலம்பிக் கொண்டே நகர்ந்தான் சந்தோஷ். 

அவனை பார்த்து திட்டி கொண்டே இருந்தாள்.

"ஏய் பவித்ரா விடு டி வாடி போகலாம்" அழைத்து சென்றாள் தோழி. 

மறுநாள் சந்தோஷ் பேருந்திற்காக காத்திருந்தான், இன்றும் தாமதமாகவே வந்தது.

பவித்ராவை கண்டதும் ஒதுங்கி கொண்டு கடைசியாக  பேருந்தில் ஏறினான்.  

சந்தோஷ் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவள் பார்கையில் குனிந்து கொண்டான். மீண்டும் அவள் திட்டி தீர்தாள்.

தோழியோ காதில் ஏதோ சொல்ல அவளுக்கும் விழுந்தது திட்டு. 

இறங்கும் இடம் வந்ததும்  கட கட வென ஓடி இறங்கி கொண்டான்.  

ஏய் மிஸ்டர், ஏய் மிஸ்டர்  குரல் கேட்டு திரும்பினான் பின்னால்  அவள்.

"என்னங்க வேணும் நான் தெரியாம தான் மோதினேன் சாரிங்க"

"என்ன தெரியாம மோதினே உனக்கு என்ன அவ்வளவு திமிர்"

அதெல்லாம் இல்லைங்க சொல்லி கொண்டிருக்கையில் டிக்கெட்டை மேலே எறிந்து விட்டுச்  சென்றாள்.

அடுத்த நாள் பேருந்தில் அவனை தேடி கொண்டிருந்தாள். அவனை எங்கும் காணவில்லை.  ஒரு இருக்கையில் குனிந்த தலையுடன் புத்தகத்தை  புரட்டி கொண்டிருந்தான்.

இன்றும் அதே மிஸ்டர் தொடங்கியது.

 "அட என்னங்க இன்னைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே எனக்கு சைட் அடிக்கிற அளவிற்கு தைரியம் இல்லைங்க" 

"அப்போ தைரியம் இருந்தா என்ன சைட் அடிப்ப அப்படித் தானே" 

"அட என்ன உங்களோட வம்பா போச்சு" 

மீண்டும் திட்டி டிக்கெட்டை எறிந்தாள்.

அடுத்தநாள்...

அவனை பார்த்தவுடன் அவள் சிரித்தாள். அவன் முறைத்து கொண்டே நகர்ந்து விட்டான்.  

இன்றும் அவள் பின்னால் செல்ல, அவள் வருவதை கண்டதும் நின்று.

"உனக்கு என்ன பெரிய அழகி நினைப்பா உன் முஞ்சை எல்லாம் எவனாவது பார்பானா ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா"

சந்தோஷ் கோவத்தோடு  திட்டி தீர்க. அவள் கண்ணீரோடு நின்றாள். 
டிக்கெட்டை முகத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றாள்.

உணவு இடைவேளையின் போது, அவளை திட்டியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவசரப்பட்டு திட்டிட்டோமோ, நினைத்து கொண்டே பாக்கெட்டில் கை வைத்தான். அவள் வீசியெறிந்த டிக்கெட் சுருண்டு கிடந்தது . 

பிரித்து  பார்தால் " ஐ லவ் யூ" என எழுதி இருந்தது.

அப்போது தான் உணர்ந்தான். அவள் டிக்கெட்டை எறியவில்லை ,  தன் காதலை எறிந்திருக்கிறாள். 

 மிகவும் மகிழ்ச்சியோடு அடுத்தநாள் காலை சென்றான். 

அவள் முகத்தை திரும்பி கொண்டாள். 

அவள் கையை பிடித்து, "உனக்கு நான் டிக்கெட் எடுக்கிறேன்" 

இன்னைக்கு மட்டுமா..? என்றாள்.

இல்ல வாழ்கை முழுவதும் எடுக்கிறேன் என்றான்.

அவன் கைகளை இருக்க பற்றி கொண்டாள் பவித்ரா.  
Friday, June 6 1 comments

மெல்லிய மலரொன்று..!




ஜன்னல் வழியே 
புன்னகை மொட்டு உதிர்த்து
எட்டி எட்டி பார்கிறாய்..!

எட்டாத இடத்தில் நீ இருந்தும் 
உன் வாசம் கண்டு 
மயங்கி போகிறேன்..! 

நீ சாய்ந்தாடுகையில் 
நானும் சாய்ந்தாடுகிறேன்..! 

நீ உதிரும் போது 
தாங்க ஓடோடி வருகிறேன்..! 

யாரேனும் பறிக்க எண்ணினால் 
கலங்கித்தான் போகிறேன்..!

இன்னோரு முறை 
என் வீட்டில் பூத்து விடு 
வேண்டாம் 
ஜன்னல் வழியே...!
Wednesday, June 4 2 comments

நீயாகிய நான்..!




என் சுவாசமே நீ யென்பதால் 
உள்வாங்கி வெளியிடுகிறேன் 
நீ இல்லையனில் மரணித்து 
உன்னை தேடி 
காற்றில் அலைந்து கொண்டிருப்பேன்

சுவாசமே காதாலாக..!



என்னை விட்டு விலகுவது உமக்கு 
சந்தோசமெனில் என்றென்றும்
நிலைத்திருக்கும்..!

இறுதி சுவாசம் உள்ளவரை


***********************

என்னை விட என் எழுதுகோலுக்கு
காதல் அதிகமாகிவிட்டது..
உன்னை பற்றி எழுத 
முண்டியடித்து செல்கிறது..!


********************************

மலர் கண்காட்சி என்றார்கள் 
தேடிகொண்டிருகிறேன்
உன்னை..!


**********************

உன் விரல் பட்ட மகிழ்ச்சியில்
துள்ளி குதித்து 
தற்கொலை செய்து 
கொள்கிறது 

நீ உண்டு எறியும்
சாக்லேட் பேப்பர்..!


********************************

நான் இங்கு உன்னுடன் 
மெளனமாக பேசிகொண்டிருக்கிறேன்..!
நீ அங்கு மெளனமாக 

சண்டையிட்டு கொண்டிருக்கிறாய்..!


Monday, June 2 2 comments

காசு பார்க்கும் கோச்சடையான்..!



ஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.

மோசன்  கேப்சர் தொழில்நுட்பங்கள் கொண்ட  திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின்  கண்களை பார்க்க முடியவில்லை.

ரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து மிகவும் வெறுப்படைந்தேன். சாதாரண ரசிகன் கூட ரஜினியை அழகாக வரைந்து விடுவார். ஆனால் இந்த சௌந்தரியா ஏன் இப்படி கடித்து குதறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே நாங்கள் படத்தை வரும் மனிதர்களை பார்த்து  போய் உள்ளோம். இதில் 3D காட்சியில்  ஓநாய் கூட்டம் வேறு அது ஓநாயா, அல்ல நரியா, என்பது சௌந்தரியாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

ரஜினியும் தீபிகா படுகோனும் சண்டையிடும் போது. கும்கி பட யானையின் கிளைமேக்ஸ்   சண்டை காட்சிகள் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கதை, திரைக்கதை.  என்று பார்த்தால் அதில் கே எஸ் ரவிகுமாரின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது. படத்தில் வசனத்தை தவிர வேற ஒன்றுமில்லை. ஆனால் இனியும் அவர் பின்னால் நாடு இருக்கிறதென்று வசனம்  வைப்பது படு காமெடியாக  உள்ளது.

 50 ரூபாய் தியேட்டர் கட்டணத்தை 120 ரூபாயென  அதிகரித்து வாங்குவது கொடுமையிலும் கொடுமை.  நான் கண்களை மூடி கொண்டு தான் படத்தை பார்த்தேன். அதனால் எனக்கு பாதி காசை திருப்பி கொடுங்கள், என சண்டையிட்டேன்.அவர் என்னை பார்த்து என்னப்பா படம் பார்த்து இப்படி ஆக்கிட்டே பார்த்து வீட்டுக்கு  போ என்றார்.

கோச்சடையான் என்னும் இந்த மோசன் கேப்சர்  சோதனை தோல்வியை சந்தித்துள்ளது. அந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட எலிகள் தான் நாம். அதுவும் பணம் கொடுத்து நான் சோதனைக்கு வருகிறேன், நான் சோதனைக்கு வருகிறேன், என்று அடித்துபிடித்து  சென்றோம்.  

இந்த (................) படத்தை வைத்து கொண்டு காசு பார்க்கும் ரஜினி கூட்டம். என்ன சொல்வது வேண்டாம்  அந்த கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சௌந்தரியா அவர்களே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் எங்க வேண்டுமானால்  வந்து பொய் சத்தியம் செய்கிறோம். ஆனால் இரண்டாம்பாகம் எடுத்துவிடாதீர்கள்.
Saturday, May 31 1 comments

தேவதையின் கோலம்.. (சிறுகதை முயற்சி)



வழக்கம் போல நைட் ஷிப்ட் முடித்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தான், கார் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தது. 
ஐந்து வீட்டை கடந்து கார் நகர்ந்தது .

என்றும் பார்க்காத காட்சியை அன்று அவன் கண்டான்.

இந்த காலை வேளையில் ஒரு பெண் கோலம் போடுகிறாளே, அதுவும் சென்னை பெண்ணா இவள்..?

என்ற ஆச்சரியத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.. மறு நாள் தெரு முனையில் இறங்கி மனதில் திட்டத்தோடு நகர்ந்து கொண்டிருந்தான்.

அன்ன பறவையொன்று அங்கு ஓவியம் தீட்டி கொண்டிருந்தது,

அருகில் சென்றான் சட்டென கைகளை பிடித்து இனி கோலமெல்லாம் போடாதே, சிறிது நேரம் அமர்ந்து விட்டுபோ என தபு சங்கரின் கவிதயை சொல்லிச்சென்றான்.

இவன் மனதில் பதிந்த காட்சி அவள் மனதில் பதியத் தொடங்கியது , அவன் குரல் சட்டென பிடித்த விரல்கள் காட்சிகள் மனதில் ஓடி கொண்டிருந்தது.

நிமிர்ந்து பார்தாள், வீட்டின்னுள்ளே அவன். அவளின் பதற்றம் நிறைந்த கண்கள் புன்னகையை வரவழைத்தது அவனுக்கு.

பின்னால் அவனின் அம்மாவை கண்டதும் அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

இன்னொரு அறையிலிருந்து அவளின் அம்மா வெளிவர வாங்க வாங்க,
என்ன வெள்ளிக்கிழமை தானே வரேன் சொன்னீங்க ...?

இவன் எங்க என்ன இருக்க விட்டான். என்று சொல்ல அம்மா என்று யாரும் கேட்காதவாறு குரல் எழுப்பினான்.

அறைக்குள் சென்று ஸ்வேதா இவரை தான்மா உன் அப்பா பார்த்து இருக்கார்.

நீ புடவைய கட்டிட்டு வாமா..?

அம்மாவின் குரல் பூமியில் அவளோ வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தாள்.

அறை் கதவு திறந்தது.

பார்வை விலகாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

தனியா நான் பேசட்டுமா..? என்றான் அம்மாவிடம் சம்மதம் வருவதற்குள் தனியாக சென்றான்.

அம்மாவை பார்வை பார்த்து விட்டு அவளும் சென்றாள்.

அவள் கையை பிடித்து என் வீட்டுக்கு வந்து கோலம் போட உனக்கு சம்மதமா.?

என்றும் என் கைகளை இப்படியே இறுக பற்றிக் கொண்டால் போதும்.

எனக்கு எல்லாம் சம்மதம். என்றாள் புன்னகை மிளிர.

***செளந்தர்***

சும்மா ஒரு முயற்சி செய்தேன் தவறிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் அடிப்பவர்களுக்கு தனியறை ஒதுக்கப்படும் 
Thursday, May 22 0 comments

நித்தம் நித்தம் நினைகையில்



இமையெனும் வில்கொண்டு
பார்வையில் அஸ்திரம் ஏந்துகிறாயே ..!

கர்ணன் கவசம் தோற்கும் 
உன் நேசதிற்கு முன் நான் எம்மாத்திரம்..!

*****

பிரம்மன் தீட்டிய காகிதமல்ல நீ..!
பிரம்மனுக்காக தீட்டப்பட்ட தூரிகை நீ..!

*****

வீதியில் விலாசம்
தேடிய அவளின் 
விலாசம் நானென்று யார் சொல்வது ..!

*****

நித்தம் நித்தம் 
நினைகையில் விக்குதடி
உனக்கு..!

முத்தம் கூட பத்தலடி
விக்குதடி உனக்கு..!

போதுமென விட்டு விட்டு
போகாதே விக்குமடி உனக்கு.! 

எட்டி வந்து தீர்த்தாலும் 
விக்குமடி உனக்கு..!

****

எங்கிருந்தோ பறந்து 
என்னை உரசுகையில் 
நானும் பறக்கவே நினைக்கிறேன்
அழைத்து செல்வாயா..?

Monday, March 24 1 comments

2014 பாராளுமன்ற தேர்தல் என் பார்வை..



தமிழககட்சிகள் தேர்தல் என்றால் முதலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தான் முடிவு செய்வார்கள். ஒரு கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறதென்றால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து அவர்களை வளரவிடாமல் செய்வது தான் திமுக அதிமுகவின் வேலை ஒரு காலத்தில் திமுக அதிமுகவின் அடுத்த சக்தியாக இருந்த வைகோவுடன் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து செல்வாக்கை அழித்தனர், அடுத்ததாக இதே வழியை பாமகவிற்கும் கையாண்டனர் அவர்கள் செல்வாக்கும் தற்போது சரிந்து கிடக்கிறது, 

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக இம்முறை திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு அடிபட்டது கூட்டு சேர்ந்திருந்தால் தேமுதிகவிற்கு அது சரிவையே தந்திருக்கும், அந்த வகையில் விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைத்து தப்பித்துகொண்டார் , கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வருவது அவரின் தேசிய அரசியல் பார்வைகள் வளர்ந்திருக்கிறது என்றே நினைக்க தோன்றுகிறது.

பாஜக கூட்டணிக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் என்னவென்றால் இந்துக்கள் வாக்கு ஜாதிகட்சியின் வாக்குகள், திமுக அதிமுக எதிர்வாக்குகள் , மோடியின் பெயரால் கிடைக்கபோகும் வாக்குகள்  பலமாக கருதப்படுகிறது , சிறுபான்மையினர் வாக்குகள் இந்த கூட்டணிக்கு கிடைக்காதென்பது பலவீனமே..

எந்த தேர்தலில் இல்லாதது இந்த பாராளுமன்ற தேர்தலில் நடக்கப் போகிறது திமுகவும் அதிமுகவும் 35 தொகுதிகளில் நேரடியாய் போட்டியிடுகின்றன. யாருக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருகின்றதென இந்தத் தேர்தலில் நன்றாக தெரிந்துவிடும், திமுகவின் பலம் சிறுபான்மையினர் வாக்குகள், ஸ்டாலின் தலைமை, இளைஞர்களின் வருகை,   ஆனால் பெரிய அளவில் கூட்டணியில்லை சகோதர யுத்தம் கோஷ்டி பூசல் என பலவீனத்துடன் இந்தத் தேர்தலை சந்திக்கிறது. திமுகவை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் கட்சியை பலப்படுத்தவேண்டும். சட்டசபைத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என கூட்டணி வைத்து கூட்டணி வைத்து பல இடங்களில் உதயசூரியன் சின்னம் இல்லாமலே போகின்றன அதனாலே இந்த தேர்தலை திமுக சில 35 இடங்களில் நின்று கட்சியை பலப்படுத்தி 2016 சட்டசபை தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறவேண்டுமென்பது தான் திமுகவின் தற்போதைய இலக்கு 

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத காங்கிரஸ் தனிமைபடுத்த பட்டதற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்பாடுகளே காரணம். ஆந்திராவில் தெலுங்கான உதயம் என்றவுடன் ஆந்திர காங்கிரஸ் என்னனென்ன எதிர்ப்பு தெரிவித்தார்கள் பாராளுமன்றமே அதிர்ந்தது ஆனால் தமிழக காங்கிரஸார் இலங்கை தமிழர் பிரச்சனை மீனவர்கள் பிரச்சனையில் எந்த எதிர்ப்புதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர் இப்பொழுது அதன் பலனை அனுபவிக்க தொடங்கிவிட்டனர் கூட்டணியென்றால் போட்டி போட்டு சீட்கேட்க்கும் காங்கிரஸார் தற்போது சீட் என்றால் ஓடி ஒளியும் நிலையில் உள்ளனர்.காங்கிரஸ்க்கு போதாது இந்த தண்டனை போட்டியிடும் அணைத்து வேட்பாளரும் வைப்புதொகையை இழக்கவேண்டும் வாக்கு வங்கி இல்லாமல் செய்யவேண்டும் அப்பொழுது தான் வரும் தேர்தலில் யாரும் காங்கிரஸ்வுடன் கூட்டணி வைக்க தயங்குவார்கள்.காங்கிரஸ்க்கு ஒட்டு போடும் மனநிலமையில் நம் மக்களிடையே இல்லாமலிருப்பது மகிழ்ச்சியே..

சரி இப்போது அதிமுகவிற்கு வருவோம் இந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதா சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும் நன்றாகவே ஆட்சி செய்துவருகிறார் குறிப்பாக அவர் வழக்கமாக செய்யும் தவறுகள் ஏதும் செய்யாமல் இருப்பதே அவரின் பலம், பலவீனம் என்று பார்த்தால் கூட்டணி கட்சிகளை மதிக்காமலிருப்பது, சிகப்புசட்டைகாரர்களை வெளியேற்றியது, கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவது இவரின் பலவீனம், மின்வெட்டு பிரச்னையால் தொழில்துறையினர் இன்னமும் அவதிப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் கொள்ளை, என பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் இருக்கும் அதிமுகவின் ஒட்டு வங்கி அப்படியே சிதறாமல் இவருக்கே வரும் என்பது மிகப்பெரிய பலம்.

தமிழகத்தில் கூட்டணியில்லையென்றாலும் தேர்தலுக்கு பின் கூட்டணி வைத்து கொள்ளாமல் என்ற எண்ணத்துடன் தமிழக கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது, அதிமுக பாஜகவுடனும், திமுக காங்கிரஸ்வுடனும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது, அப்படி ஒருவேளை கூட்டணி வைத்தார்களே ஆனால் தமிழர்களை முட்டாளாக்கும் செயல் மீண்டும் மீண்டும் அப்படி தமிழர்களை இனி முட்டாள்களாக்க முடியாது இளைஞர்களின் சிந்தனையும் அரசியல் பார்வையும் தற்போது அபராமாக இருக்கிறது.. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அவர்கள் கையாண்டால் திமுக அதிமுகவிற்கு காங்கிரஸ் நிலையே ஏற்படும்

 
;