Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Friday, March 11 42 comments

பேர் சொல்லும் பிள்ளை....!!





ஸ்ரீஅகிலா அக்கா பெயர் மீது காதல் என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார்கள். பெயர் மீது காதல் நீ வேற எதையாவது எழுதி மானத்தை வாங்கிடாதே என்றார்கள்...

என் முழு பெயர் சௌந்தரபாண்டியன்....நாங்கள் பாண்டி சாமி கும்பிடுவோம், அதனால் குடும்பத்தில் ஒருவருக்கு பாண்டி என வருவது போல பெயர் வைக்க வேண்டுமாம் அதனால் எனக்கு சௌந்தரபாண்டியன் வைத்தார்கள். எங்க பாட்டி தான் இந்த பெயரை தேர்வு செய்ததாக எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அனைவரும் என்னை சௌந்தர் என அழைப்பார்கள்.

இந்த ஏன் வைத்தார்கள் மாற்றி வைத்திருக்கலாமே என தோன்றியதில்லை, எனக்கு வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்து பார்த்ததும் இல்லை .நான் எங்கு சென்றாலும் என் பெயரில் ஒருவர் இருப்பார். நான் படிக்கும் போதும் அப்படி தான் என் வகுப்பில் இரண்டு பேர் இருந்தார்கள், ஒருவன் சௌந்தர்ராஜன், இன்னொருவன் சௌந்தரபாண்டியன் இப்பொழுது பதிவுலகிலும் ஒருவர் வந்து விட்டார்.

இப்படி பெயர் மாற்றம் இருப்பதால் பள்ளியில் பல குழப்பங்கள் வரும் அவனுடைய விடைத்தாளை என்னிடம் கொடுத்து விடுவார்கள் என் விடைத்தாள் வேற ஒருவரிடம் போய்விடும்.....பள்ளியில் யாரவது சௌந்தரபாண்டியன் தேடி வந்தால் போதும் நாங்கள் இருவரும் எழுந்து நிற்போம், யாராவது எங்கள் பெயரை சொல்லி தேடி வந்தால் இருவரும் வெளியே சென்று சுத்தி விட்டு வருவோம்....டீச்சர் அடிக்கும் பொழுது பெயர் சொல்லி கூப்பிடுவாங்க அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க!



என்பெயரை அனைவரும் மாற்றி மாற்றி கூப்பிடுவார்கள் மாற்றி மாற்றி எழுதுவார்கள் சுந்தர்,சவுந்தர், சவுந்தர்ராஜா..கூப்பிடுவாங்க அட டா என்பெயரை சரியா சொல்லுங்க என்பேன் மீண்டும் அப்படி தான் கூப்பிடுவாங்க..என்னிடம் நன்கு பழகியவர்கள் என்னை சௌந்தர் என்றே அழைப்பார்கள் புதியதாக பார்ப்பவர்கள் சௌந்தரபாண்டியன் என்று அழைப்பார்கள்...எனக்கும் சௌந்தர் என்று அழைப்பது தான் பிடிக்கும்...சௌந்தரபாண்டியன் என்றால் அர்த்தம் என்ன பார்த்தேன் அதில் சௌந்தர் என்றால் அழகு பாண்டியன் என்றால் பண்டைய என அர்த்தம் வருகிறது....எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்...

என்பெயருக்கு என்ன பலன் என்று பார்த்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் 

சௌந்தரபாண்டியன்
பெயர் விளக்கம்: பழமையான அழகு
விளக்கம்: இப்பெயரை உடையவர்கள் கலகலப்பாக பழகுபவர்களாகவும் நன்கு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் பிடிக்கும். இவர்கள் கற்பனைத்திறன் உடையவர்களாகவும் பல விசயங்களை செய்து பார்க்க முயற்சிப்பார்கள். எதையும் ஆர்வத்துடனும் அறிவுபூர்வமாகவும் அணுகுவார்கள். இவர்கள் நேர்மறையான மனோபாவத்துடனும் பலவித விசயங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். எதையும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்ய முயற்சிப்பார்கள். சுதந்திரத்துடனும் புது இடங்களில் தயக்கமில்லாமலும் பழகுவார்கள். வேலையில் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருக்கும். அதே சமயம் இவர்களுக்கு அடக்கியாள்வது மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் வீண் செலவு செய்பவர்களாகவும் நடிப்பவர்களாகவும் நடந்து கொள்ளலாம். சில சமயங்களில் பொறுமையில்லாதவர்களாகவும் மற்றவர்களை டாமினேட் செய்யலாம். சில சமயங்களில் முரட்டுத்தனமாக கூட நடந்துகொள்ளலாம்.....

இந்த பலனில் வருவது 75 சதவிகிதம் உண்மை...என் பெயரை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிவிட்டேன்.....தொடர் பதிவு யாராவது கூப்பிட வேண்டும் என அகிலா சொன்னாங்க அதனால் நான் நாலுபேரை மாட்டிவிடுகிறேன். நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை..!!!

 பெயர் விளக்கம் மற்றும் பலன் தேடிதந்த எஸ்.கே அவர்களுக்கு நன்றி...


இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு) 

அருண்பிரசாத் (என்னை எத்தனை தொடர் பதிவுக்கு மாட்டி விட்டிங்க) 

அன்புடன் ஆனந்தி (சீக்கிரம் எழுதிடுவாங்க ரொம்ப சுறு சுறுப்பு)

கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)

Monday, January 10 58 comments

திரும்பி பார்க்கிறேன்...



2010  நடந்த முக்கியமான விஷயத்தை பற்றி  திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி கௌசல்யா அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். திரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை! 

2010 பெரிய விஷயம் ஏதும் நடக்கவில்லை...இணையம் பற்றி தெரியும் ஆனால் வெப்சைட்கள் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஒரு நாள் தமிழில் எதையோ தேடி கொண்டு இருக்கும் பொழுது தமிழிஷ் என் கண்ணில் பட்டது அதில் இருந்து சில சில ப்ளாக்குகளை பார்த்தேன். நான் எந்த ப்ளாக் சென்றாலும் ஒரு வலைப்பூவை உருவாக்கவும் என்று சொல்லியது, என்ன இது என்று தெரியாமல் வலைப்பக்கம் தொடங்கினேன். ஆனால் எப்படி தமிழிஷில் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. பிறகு நானே தெரிந்து கொண்டேன்.


நான் எழுத ஆரம்பித்து 30 பதிவுகளுக்கு அதிகம் பின்னூட்டம் கிடைக்கவில்லை எனக்கு சில பதிவுகளை மட்டும் மிகவும் பிடிக்கும் அதில் போலி சாமியார்கள் என்ற பதிவில் சில சாமியார்களை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்ததாக விவாசாயிகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பொழுது அந்த பதிவு தமிழ்மணத்திற்கு இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது... பொறுமை கடலினும் பெரிது ஒரு பதிவு போட்டு இருந்தேன் அந்த புகைப்படங்களை பார்க்கவே முடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். பிறகு கதைகள் எழுத ஆரம்பித்தேன் சில உண்மை கதைகளையும் எழுதி இருக்கிறேன் அதில்  மண்டை ஓடு தான் மிச்சம்என்ற பதிவு தமிழ்மணம் இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது. 

சில சர்ச்சைக்குரிய பதிவுகளையும் நான் எழுதி இருக்கிறேன் கடவுளும் நானும். என்ற ஒரு பதிவை எழுதினேன் அதில் சில கேள்விகள் கேட்டேன் அதில் விவாதம் எல்லாம் வந்தது. அந்த பதிவுக்கு எதிர்பதிவு போட்டாங்க இந்த தொடர அழைத்தவங்க. அடுத்த பதிவு  பெண்களின் புதிய கலாச்சாரம்என்ற பதிவு சில பெண்கள் குடிக்கிறார்கள் புகை பிடிக்குறாங்க என்று போட்டேன் அவ்வளவு தான் சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் அந்த புகைப்படத்தை எல்லாம் எடுக்க சொன்னார்கள் என்னால் எடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் ...

நண்பர்கள் 


தினம் ஒரு பதிவு போட்டு கொண்டு இருந்தேன் .முதன் முதலில் எனக்கு நண்பர் ஆனவர் கே.ஆர்.பி செந்தில் தான். நான் முதலில் பார்த்தும் அவரை தான் .ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்க வில்லை என்று கேட்டார்..எனக்கு எப்படி வைக்கவேண்டும் என தெரியாது என்றேன் உடனே வாயிஸ் சாட்ல வந்து எப்படி வைக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு எங்கு இருக்கின்றீர்கள் என்ன செய்யறீங்க...அப்படியே பேசினோம். நான் நாளை அடையாறு வருகிறேன் என்று சொன்னேன் எங்க வருகிறிர்கள் சொல்லுங்க நான் உங்களை பார்கிறேன் என்றார். மறுநாள் இருவரும் சந்தித்தோம், 30 நிமிடம் பேசிகொண்டோம் பதிவுலகை பற்றி எனக்கு சொன்னார். மீண்டும் சந்திப்போம் என்று சொன்னார் இன்னும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை.இப்போதும் பேசினார் நான் வீட்டுக்கு அழைப்பேன் வருகிறேன் என்று சொல்வார். இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.

அதன் பிறகு தேவா நண்பர் ஆனார் முதலில் சாட்ல பேசி கொண்டு இருந்தோம் பின்பு போன் வாயிஸ் சாட் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒரு குடும்ப நபர் போல இதுவரை இருந்து வருகிறோம்.

அடுத்தாக அன்புடன் ஆனந்தி, இவங்க கூட தான் முகப்பு புத்தகத்தின் எங்க பார்த்தாலும் கும்மி அடிப்பேன், ரொம்ப அன்பானவங்க...

அடுத்தாக கௌசல்யா இவங்க பதிவை பார்த்தால் இவர் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்று தெரியும் ஆனால் மிகவும் நல்லவர் உண்மைய தான் சொல்றேன் நம்புங்க இப்போது குடும்ப நண்பராக ஆகிவிட்டார்..எங்க அம்மாவிடம் என்னை மாட்டி விடுபவரும் இவர் தான் அதான் சொன்னேன் இவங்க ரொம்ப நல்லவங்கன்னு. எங்க அம்மாவிடம் பேசும் ஒரே பதிவர் இவர் தான். 


இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள் இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்...இவர் போடும் பின்னூட்டம் மட்டும் தான் அப்படி இருக்கும் மிகவும் அன்பானவர்...அப்பறம் டெரர் ,LK,ரமேஷ், விஜய் பிரசாத்,வெறும் பையன், அருண் பிரசாத், பாலாஜி,ராம்சாமி, பிரியமுடன் ரமேஷ், ஜீவன்,கணேஷ் மங்குனி அமைசர்,கார்த்திக் குமார், ஆனந்தி, சித்ரா,இந்திரா, வினோ,சி.பி.செந்தில்குமார், ஆர்.கே.சதீஷ்குமார், இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...


அடுத்ததாக என் வயது உடைய நண்பர்கள் மரியாதையை எல்லாம் கொடுத்துகொள்ளமாட்டோம். எஸ்கே செல்வா, கல்பனா, சுபத்ரா, இதில் செல்வா அனுப்பும் மொக்கை sms நான் தினம் படித்து தொலைக்கிறேன்..வரும் மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணாலும் கண்ணுக்கு தெரியுது..இவங்க நான்கு பேரிடமும் அடிக்கடி போன்லே பேசுவேன்... ரொம்ப நல்ல best friends...

ரொம்ப நேரம் நண்பர்களை பற்றி சொல்லிவிட்டேன் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள் பதிவு அளவு அதிகமானதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் என் நண்பர்கள் தான் 


 2011 இல் என்ன எதிர்பார்ப்பு 

நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது. அதனால் எனக்கு எதிர்பார்ப்பு என்பது பெரிதாக இல்லை. பதிவுலக எதிர்பார்ப்பு என்றால் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும் என்பது தான். எல்லோரும் பதிவு எழுத வந்த புதியதில் தினம் ஒரு பதிவு போடுவார்கள். அப்படியே சிறிது மாதம் தொடரும் பிறகு அந்த பதிவர் காணமல் போய் விடுவார் தொடர்ந்து மூன்று வருடங்கள் பதிவு எழுதுபவரை விரல் விட்டு எண்ணி விடலாம்...பதிவு எழுதுவதை தொடர வேண்டும் அவ்வளவு தான். 

திரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்கலும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு. 

இந்த பதிவை தொடர அழைப்பது



Wednesday, January 5 64 comments

ஒரு கடிதம் எழுதினேன்....




காதல்கடிதம் தொடர் எழுத சொல்லி இந்திரா அழைத்தார்கள் என்ன எழுதுவது எப்படி என்ன எழுதுவது தெரியவில்லை இதற்க்கு முன்பு காதல் கடிதம் கொடுத்து இருந்தாலும் ஏதாவது ஐடியா இருக்கும். அந்த அனுபவமும் எனக்கு இல்லை...சரி எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்


போனை எடுத்து திவ்யாவுக்கு போன் செய்து அழைத்தேன் என்ன என்றாள் "உன்னிடம் முக்கியமான விஷயம் உடனே உன்னிடம் பேசணும் வர முடியுமா" கேட்டேன். அதற்கு சரி வருகிறேன். என்றாள் சரி திவ்யா "நீ பீச் ஸ்டேஷன் வந்து விடு நான் அங்கு காத்திருக்கேன்" "சரி டா நான் வருகிறேன் bye" என்று போனை துண்டித்தாள்.

"வா திவ்யா எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்".. 

"இல்லடா சௌந்தர் சீரியல் பார்த்துவிட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது சரி என்ன விஷயம் சொல்" என்றாள்

"ஒன்றும் இல்லை ஒரு லவ் லட்டர் எழுதணும் அதான் உன்னை எழுத சொல்லாம் என்று வர சொன்னேன்"

"அட பாவி யாருக்கு டா"

"நான் சொல்றேன் நீ முதலில் எழுது" 



கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

என்றதும் திவ்யா முறைத்து பார்த்தாள்...நான் அந்த பக்கம் திரும்பி கொண்டேன் 
பாட்டாவே படிச்சிட்டியா? என்றேன் என்னை அடிக்கை துரத்தி கொண்டு வந்தாள்.
 என்னிடம் கோபித்து கொண்டு கிளம்பினாள். 

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Hello! can you give me lift? aah.. Thank You!

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don’t talk to me! Hey Taxi Taxi Taxi.

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா


உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்

நான் இப்படி சொல்லவும் அவளுக்கு கோபம் மேலும் அதிகரித்தது "ஏண்டா ஏதோ love letter எழுதணும் சொல்லி என்னை வரசொல்லிட்டு விளையாடிட்டு இருக்கே" நான் "இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தா இந்நேரம் தென்றல் சீரியல் பார்த்து கொண்டு இருந்து இருப்பேன்" "விளையாடாமல் யாரை லவ் பண்றே சொல்..? 

உன்னை தான் என்றேன். வெண்டைக்காய்  மாதரி பேசாதே ஏதாவது உருப்படியா சொல் என்றாள் அதன் உன்னை லவ் பண்றேன் என்றேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். சரி என் பாக்கெட்டில் எழுதி வைத்து இருந்த காதல் கடிதத்தை எடுத்து கொடுத்தேன். அதை படித்து விட்டு மீண்டும் எனக்கு அடி......என்ன எழுதி இருந்தேன் பாக்குறீங்களா "படித்தவுடன் கிழித்து விடவும்" போட்டு இருந்தேன் என்னை கிழித்து விட்டாள் ...

உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான 
என் காதலை சொல்ல !!!!.

டிஸ்கி : சென்ற பதிவில் நான் மங்குனியை பற்றி எழுதியதாக எல்லாம் நினைத்து கொண்டார்கள் அது வெறும் கற்பனையே 



Wednesday, December 29 52 comments

எனக்கு பிடித்த பாடல் 2010



2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத  மதி அழைத்ததால்...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்களும் பிடிக்கும் அதில் இருந்து குறிப்பிட்ட சில பாடல்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்....ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்காக பத்து பாடல்களை தேர்வு செய்து இருக்கிறேன்.   

10) தமிழ்ப்படம்... இந்த படம் முழுவது ஒரே காமெடி தான்..அதுவும் இந்த பாடலில் விஜய். ரஜினி, தனுஷ், சிம்பு அனைவரையும் கிண்டல் செய்து இருப்பார்கள்...விஜய்யை போல நடனம் ஆடுவது எல்லாம் சூப்பர் இப்போதும் இந்த பாடலை பார்த்தால் கூட நன்றாக சிரிப்பு வரும்....பாடல் வரிகள் எல்லாம்...நன்றாக இருக்கும்.

பச்ச, மஞ்ச, கருப்பு தமிழன் நான் 
உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நான்தான் 
என்ன மிஞ்ச எவனும் இங்குயில்லை
நம்ம தாய் குலத்திற்க்கும் நான்தான் செல்ல பிள்ள

2011 நம்ம கையில 

சந்திப்போம் தோழ நம்ம சட்ட சபையில 
எவனுக்கும் என்ன கண்டா
உள்ளுக்குள்ள நடுங்கும் 
என் பார்வை பட்டால் சிங்கமும் பதுங்கும்

பாடியவர் : முகேஷ்



9 கோவா படத்திலே உருப்படியான...பாடல் என்றால் இது தான் ஜெய் மட்டும் தனியாக உட்கார்ந்து கேட்பார் அவர் மட்டும் இல்லை நாமும் தனியாக உட்கார்ந்து கேட்டால், கேட்டு கொண்டே இருக்கலாம்...  

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

பாடல் பாடியவர் அஜீஸ் & ஆண்ட்ரியா 


8 ) வம்சம் இந்த படத்தில் இது தான் ஓபன் சாங் இந்த பாடலுக்கு முன்பு அந்த ஊரை பற்றி ஒரு பில்டப் கொடுப்பார்கள்...அதற்கு ஏற்றார் போல் அந்த பாடலும் இருக்கும் ...இந்த பாடலில் இசையும் பாடல் வரிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்  

மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு
ஏ கூட்டங்கூட்டி வாராரு
கோயில் மாலை வாங்கத்தான்
கும்மிக்கொட்டும் குமரிங்க குலவ சத்தம் ஓங்கத்தான்

பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : மாணிக்கவிநாயகம், வேலுமுருகன், பாண்டிராஜ்


7) அங்காடிதெரு இந்த படம் ஒரே கவலையா இருக்கும்...பாடல்களே நன்றாக இருக்கும் அதிலும் உன் பேரை சொல்லும் போது வருகிற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் அவர்கள் வேலை செய்யும் கடையில் மட்டும் எடுத்து இருப்பார்கள் எடுத்தவிதமும் நன்றாக இருந்தது. பாடல்வரிகளும் நன்றாக இருக்கும் 

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல், ஹரி சரண்



6) பாணா காத்தாடி...இந்த படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்த படத்தில் வரும் தாக்குதே கண் தாக்குதே என்ற பாடல் பிடிக்கும்...அந்த பாடலின் இசை அதை படமாக்கிய விதம் எனக்கு பிடிக்கும்


பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏர்த்ததே



5 )மதராசபட்டினம்..இந்த படத்தில் பழைய சென்னையை காண்பித்து இருப்பார்கள்...இந்த பாடல்வரிகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்


வாம்மா துரையம்மா இது வங்கக் கரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஹ ஹ ஹ அதே தான்
கட்டைவண்டியில் போவோம்
டராமல் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உதித் நாராயண், 

4) மைனா...இந்த பாடல் முன்பே பிடித்து இருந்தது...வரிகள் எல்லாம் பிடிக்கும் பாடல் மலையில் படமாக்கிய விதம் நன்றாக இருந்தது


கையை புடி கண்ணு பாரு...
உள் மூச்சை வாங்கு...நெஞ்சோடு நீ..
கொஞ்சம் சிரி... எட்டுவையி..

தோல்சாய்ந்து தூங்கு இப்போது நீ...
மொதுவா பாடு.... எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது...
சாதனா சர்கம், நரேஷ் ஐயர்

3) நான்  மகான்  அல்ல.  இந்த படத்தில் இறகை போல...இந்த பாடலில் கார்த்திக் செய்யும் ரீயாக்சன் ரொம்ப நல்லா இருக்கும்...பாடல் வரிகள் அதை விட சூப்பர்..யுவன் குரலில்......   

இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு



2) எந்திரன் படத்தில் அனைத்து பாடலும் எனக்கு பிடிக்கும் குறிப்பாக இந்த பாடல்..ரொம்ப பிடிக்கும். பாடல் ஆரம்பிக்கும் பொழுது ரோபோ உடம்பில் இருதயம் துடிப்பது போல காண்பித்து இருப்பார்கள்..அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ரஜினி ரொம்ப சூப்பரா நடனம் ஆடி இருப்பார்...ஐஸ்வரியா அதை விட நன்றாக நடனம் ஆடி இருப்பார் .

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அழைக்குதோ
பூச்சியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

பாடகர்: ரகுமான், Kash n Krissy



1) மன்மத அம்பு இப்போது அனைவருடைய செல் போனிலும் இந்த பாடல் தான் கேட்கிறது. நீல வானம் ..இந்த பாடலை கமல் விஜய் டிவியில் பாடினர் அடடா என்ன சூப்பரா பாடுகிறார் அதை பார்த்து கொண்டே இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மெலோடி பாடலிலே இது தான் சிறப்பு. கமலே எழுதி அவரே பாடிஇருப்பார். 

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..





இன்னும் பாடல்கள் நிறைய இருக்கிறது ஆனால் பத்து பாடல் தான் எழுதணும் கூறியதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் இந்த தொடரை தொடர அன்புடன் ஆனந்தி அவர்களை அழைக்கிறேன்





Friday, December 17 80 comments

பெண் குரல்....!



அருண் பெண் குரல் பாடல்கள் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்..பெண் குரல் மட்டும் இருக்கும் பாடல்களை தேடி தேடி பார்த்தேன் எல்லாம் பூவை வைத்தே பாடல்கள் இருக்கிறது என்னடா பத்து பாடல்கள் சொல்லனுமே என்று தேடி தேடி பார்த்து உங்களுக்காகச் சொல்கிறேன்...



1 இந்த பாடலை இப்போதும் டிவியில் போட்டால் சவுண்ட் அதிகம் வைத்து இந்த பாடலை கேட்ப்பேன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இன்னும் இந்த பாடலை கேட்கும் போது இப்போது வந்த புதிய பாடல் போல இருக்கும் நீங்க கொஞ்சம் இந்த பாடலை கேட்டு பாருங்க பணம் எல்லாம் தர வேண்டாம் சும்மா தான் கேளுங்க.



கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்


கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் கண்கள்


கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்


பாடியவர்கள் : அனுபமா தேஷ்பாண்டே


2 நமக்கு எல்லாம் நிறைய ஆசை இருக்கும் சில ஆசைகள் நிறைவேறும் சில ஆசைகள் நிறைவேறாத ஆசையாக இருக்கும். ஆசைகளை வைத்தே எழுதி இருப்பார் வைரமுத்து, ஏ.ஆர் ரஹ்மானின் முதல் படம் இது, முதல் படத்திலே தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை


3 மார்கழி மாதம் வந்ததால் இந்த பாட்டு இன்று காலை டிவியில் போட்டார்கள் நன்றாக இருக்கிறதே இதையும் பட்டியலில் சேர்த்து கொண்டேன் இதுவும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடியவர் : ஷோபா, எழுதியவர் வைரமுத்து

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்


மார்கழி மாதம் இவங்களுக்கு என்ன ஆசை உங்களுக்கு இந்த மாதிரி ஆசை இருக்கிறதா..?





4 நேருக்கு நேர் படத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தேவா இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்

மனம் விரும்புதே உன்னை உன்னை 
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி...




5 இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அனைத்தும் எனக்கு பிடிக்கும் ஆனா அது என்ன பாடல் என்று உங்களுக்கு சொல்ல மாட்டேன். இந்த பாடல் படமாகிய விதம் நன்றாக இருக்கும்...வரிகள் எல்லாம் மிகவும் அருமையா 
இருக்கும் நான் ஜெயா மேக்ஸில் அதிகம் பார்த்த பாடல் இது. பாடியவர் :சித்ரா
பாடியவர் :சுஜாதா எழுதியவர் : வைரமுத்து. 


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே





6  இந்த பதிவை நான் எழுதி கொண்டு இருக்கும் பொழுது பக்கத்துக்கு வீட்டில் யாரோ இந்த பாடலை பாடினார்கள் (அது யார் என்று கேட்க கூடாது ) உடனே இந்த பாடல் நன்றாக இருக்குமே என்று பாடலை பார்த்தேன்...ஒரு ஐந்து,ஆறு தடவை பார்த்தேன் கேமரா என்னமா விளையாடி இருக்கு...நீங்களும் ஒரு தடவை பாருங்க 
பாடியவர் :சுஜாதா எழுதியவர் : வைரமுத்து. 


காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை....




7 ஒரு காதலி காதலனிடம் எப்படி இருக்கவேண்டும் என காதலி கேட்பது போலே இருக்கும் தாமரையின் வரிகள் அழகா இருக்கும் ஹரிஸ் ஜெயராஜ் இசை மயில் இறகு போல இருக்கும் 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்




8 இதில் நிறைய பூக்கள் பெயரைகளை சொல்லி இருப்பார்கள்.பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பாடல் முழுவது பூ தான் வரும். பாடியவர் : நித்யஸ்ரீ

 என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ?
 பூவ பூவ பூவ பூவ பூவே
 பூவ பூவ பூவே
 ஒவ்வொரு நாளும் ஒரு அழகில் பூத்து நீ குலிங்கினாய்
வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்?



9 இந்த படத்தில் எங்க அஜீத் வருவார் அந்த காரணத்திற்காகவே இந்த பாடல் பிடிக்கும் 

கண்ணாமூச்சி ஏனடா...என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை கேட்டேன் 



10 குரு படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. என்னதான் இருந்தாலும் ஏ ஆர் ரஹ்மான்...போல எவராலும் இசை அமைக்க முடியாது .  பாடல் ஒளிபதிவு செய்த விதம் மிகவும் எனக்கு பிடித்தது...



நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்..


இந்த பதிவை தொடர நான் அழைப்பது





Monday, November 15 56 comments

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...



warrior தேவா ரஜினி படங்களை  பற்றி தொடர் பதிவு எழுத சொன்னார் நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லை என்றாலும் ரஜினி படங்களை பார்த்து விடுவேன் ஒருதடவை படையப்பா படம் பார்க்க சென்றோம்  ரஜினி படம் பார்க்கப்போனால் டிக்கெட் உடனே கிடைத்து விடுமா என்ன...?  3 மணி ஆட்டத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு  பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை...!அதில் ரஜினி டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்போது எந்திரனில் என்னமா டான்ஸ் ஆடுறார்...இதுவரை ரஜினி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார் 

10 : நினைத்தாலே இனிக்கும் 
இந்த படத்தில் கமல் கூட நடித்து இருப்பார் MSV குரலில் ரஜினி பாடும் சிவசம்போ பாடல் எனக்கு பிடிக்கும் இதில் டேப் ரெக்கார்டில் ஒரு குரல் வரும் அதை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது..அந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு காட்சியில் ரஜினி சிகிரெட்டை எடுத்து பற்ற வைப்பார் அதே போலே பத்து தடவை செய்யவேண்டும் என்று சொல்வார் பூர்ணம் விஸ்வநாதன், அந்த காட்சிகள் எனக்கு பிடிக்கும் 



9 : ஆறிலிருந்து அறுபது வரை
எதார்த்தமான திரைப்படம் இந்தப்படத்தை ஒரு நாள் டிவியில் பார்த்தேன். ரஜினியின் நடிப்பு அபாரமாக இருந்தது, இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன வயதில் அப்பா இறந்து விடுவார் ரஜினி தான் குடும்பத்தை காப்பாற்றுவார் தம்பி தங்கையை படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பார் ஆனால் தம்பி தங்கை இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் குடும்பம் கஷ்டப்படும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தாலி பறித்து விடுவார்கள் அப்போது ரஜினி காப்பாற்றி கொடுப்பார் அந்த பெண் வாழ்த்தி "உங்க குடும்பம் நல்லா இருக்கணும்" சொல்வார் ரஜினி வீட்டுக்கு வரும் பொழுது அவர் மனைவி குடிசை தீ  விபத்தில் இறந்து விடுவார் இந்த காட்சி உருக்கமான காட்சி. இப்போது உள்ள மனிதர்களுக்கும் இந்த கதை பொருந்தும்


8 : தில்லு முல்லு 
ரஜினியின் படங்களில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த படத்தில் முழுவதும் நகைச்சுவை இருக்கும் எனக்கு அந்த இன்டர்வியூ காட்சிகள் பிடிக்கும் இறுதி காட்சியில் கமல் வருவது மேலும் சிறப்பு ...ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...


7 : படையப்பா   
இந்த படத்தில் இவர் ஓபனிங் சீன் ரொம்ப சூப்பரா இருக்கும் ye who are you man ரம்யா கிருஷ்ணன் கேட்க என் பேரு படையப்பா...என்று பாடல் ஆரம்பிக்கும் அந்த காட்சிமுதல் கடைசி காட்சி வரை ரஜினி பட்டையை கிளப்பி இருப்பார் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் படையப்பா தான் மிக பெரிய திருப்பு முனை.. பிடித்த காட்சிகள் ஒரு காட்சியில் சிவாஜி, ரஜினியை கூப்பிட்டு சல்யூட் அடிக்க சொல்வார். ரஜினி சல்யூட் அடித்தவுடன் "யாரு இவன் என் பையன்" என்று சொல்வார்....

6 : பில்லா
இந்த படத்திற்கு முன்பு தான் எம் ஜி ஆர் ரஜினியை கூப்பிட்டு "நீ என்ன சூப்பர் ஸ்டாரா" என்ன கேட்டு மிரட்டியதாக சொன்னார்கள் அதற்க்கு தான் முள்ளும் மலரும் பாடலில் "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" எனக்கு ஒரு கவலை இல்லைஎன்ற பாடல் வைத்தார்.ரஜினி பில்லா படத்திற்கு பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து காட்டினார். பிடித்த காட்சிகள் ஓட்டலில் இருந்து ரஜினி தப்பிக்கும் பொழுது நடக்கும் காட்சிகள் பிடிக்கும் ரெண்டாவது ரஜினியின் நடிப்பு பிடிக்கும் இந்த படத்தை எங்க அஜித் நடித்து இருப்பார்  துளி கூட ரஜினியின்சாயல் இல்லாமல். அடுத்து "பில்லா" II வர போகிறது ...   


5 : சந்திரமுகி
பாபா படத்திற்கு பிறகு வந்த படம் "நான் யானை இல்லை குதிரை" என்று சொல்லி அதை செய்து காட்டியவர் ரஜினி. படம் முதல் பாதி காமெடியாக சென்று கொண்டு இருந்தாலும், சந்திரமுகி வந்த பிறகு படம் வேகம் அதிகரிக்கும் வேட்டையன் வந்த பிறகு அட என்னமா வில்லன் கதாபாத்திரம் நடிக்கிறார் ரஜினி இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் வேட்டையன் தான். லக்க லக்க லக்க.... சொல்லும் அந்த காட்சியை ரஜினியே வைத்து இருக்கிறார் விரைவில் "சந்திரமுகி" பார்ட் II வருகிறது 

4 : சிவாஜி 
ஷங்கர்இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி: த பாஸ்...80 களில் வந்த ரஜினியை அப்படியே இளமையாக காட்டினார் ஷங்கர்.வெள்ளைக்காரன்  மாதிரி  வந்து  கலக்கினர். பிடித்த காட்சி, வில்லன்  ஆதி  ஜெயிலுக்கு  போகும்  போது  ரஜினி  பேசும்  அந்த  வசனம் சூப்பரா இருக்கும். கிளைமேக்ஸில் மொட்டை பாஸ் வருவார். எப்போதும் ரஜினி படத்தில் எதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்... 


3 : எந்திரன்.
ரஜினி ரசிகர்கள் முதல் அனைத்து சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த திரைப்படம். எப்போதும் போல ரஜினிக்கு ஓபன் சாங் இல்லை ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் பிடித்த படம் . ரஜினி மாதிரியே ரோபோ நடந்து வரும்...அது எனக்கு பிடித்தகாட்சி 

2 : படிக்காதவன் 
அண்ணன் தம்பி கதை சிவாஜி அண்ணன் ரஜினி தம்பி. அண்ணி கொடுமை தாங்காமல், அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டை வீடு வெளியேறுவார் ரஜினி. தன் தம்பியை படிக்க வைத்து தான் படிகாதவனாய்..! பிடித்த காட்சி அம்பிகா கர்ப்பமா இருப்பதாக நினைத்து தன் காரில் ஏற்றுவார் வண்டி போகாது மறு நாள் பார்த்தா அம்பிகா கர்ப்பமா இருக்க மாட்டார் அதற்க்கு மறு நாள் கர்பமா இருப்பார் அந்த காட்சியில் ரஜினி குழப்பமா இருப்பார் அந்த காட்சி நன்றாக இருக்கும் இப்போதும் அந்த காட்சியை பார்த்தாலும் அந்த காட்சியை ரசித்து சிரிக்கலாம் 


1 பாட்ஷா   
பாட்ஷா  போல எத்தனையோ படம் எடுத்தாலும் இந்த படத்தை போல வேறு எந்த படமும் வெற்றி பெற வில்லை ஆனந்தராஜ் ரஜினியை போட்டு அடிப்பார் "என்னடா" ரஜினி அடி வாங்குகிறார் என்று இருந்தால் அடுத்த காட்சியில் ரஜினி அடிப்பார் அந்த காட்சியில் ரஜினி அவர் தம்பியை "உள்ளே போ" என்று சொல்வார் இன்னும் அந்த வசனம் எனக்கு கேட்டு கொண்டு இருக்கிறது சண்டை முடிந்த உடன் அவர் வயிற்றில்  இடைவேளை என்று போடுவார்கள் இன்னும் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் பாட்ஷா மாதிரி எத்தனை படம் வந்தாலும் ஒரே ஒரு பாட்ஷா தான். பாட்ஷா பார்ட் II விரைவில்...! எப்போதும் ரஜினி படம் என்றால் பாட்ஷா தான் முதலிடம்




 
;