Thursday, May 6

மீண்டும் வருவாரா பிரபாகரன்...


யாழ்ப்பாண சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளால் 
நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.


இந்த சம்பவம் கடந்த 30ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை நேரடியாக கண்ட பொதுமக்களின் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் தகவலை 
அனுப்பியுள்ளார். இதையடுத்து நீதிபதி இ.த.விக்னராஜா நேற்று இந்த விஷயம் தொடர்பாக விளக்கத்தை கொடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இப்படி ஆண் என்றால் இப்படி நிர்வாணபடுத்துவதும் பெண் என்றால் அவர்களை மானபங்கம் செய்வதும் இவர்களின் வாடிக்கை, ஆகிவிட்டது.


முன்பு  இவர்கள், இப்படி செய்ய, பயப்படுவார்கள் ஆனால் இப்பொழுது  பிரபாகரன் இல்லை என்று இவர்கள் தைரியமாக, இப்படி பட்ட கொடுங் செயலை,செய்துகொண்டு இருகிறாக்கள்.
இதற்காக நான்  உயிருடன் இருக்கிறேன்  என்று பிரபாகரன் சொல்ல வேண்டும். அப்போதுதான் சிங்கள அரசு பயப்படும். இவர்களை யார்தான் காப்பாற்றுவார்களோ.






0 comments:

 
;