Monday, May 17

வடிவேல் கலைஞர்ரை பார்த்த மறுநாள் சிங்கமுத்து கைது





நடிகர் வடிவேலு, தன்னுடன் நடித்து வந்த சிங்கமுத்து 7 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை கமிஷ்னரிடம் புகார் கொடுத்திருந்தார்.இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் சிங்கமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.  இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் மீண்டும் தனக்கு சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வடிவேலு, புகார் தெரிவித்தார்.  இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் திடீர் என்று சிங்கமுத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்று செய்தியாளர்களிடம் நடிகர் சிங்கமுத்து கூறினார்.

அவரது வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் பேசும் போது, அரசியல் செல்வாக்கு பின்னணியில் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம். இதில் மனித உரிமை மீறல் உள்ளது. ஜனநாயகத்துக்கு விரோதமாக பொய் வழக்கு போடப்பட்டு சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார், என்று தெரிவித்தார்.

வடிவேல் கலைஞர்ரை பார்த்த மறுநாள் சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார் .
வடிவேல் எதாவது வளர்ச்சி நிதி கொடுத்து இருப்பாரோ?


0 comments:

 
;