வழக்கம் போல நைட் ஷிப்ட் முடித்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தான், கார் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தது.
ஐந்து வீட்டை கடந்து கார் நகர்ந்தது .
என்றும் பார்க்காத காட்சியை அன்று அவன் கண்டான்.
இந்த காலை வேளையில் ஒரு பெண் கோலம் போடுகிறாளே, அதுவும் சென்னை பெண்ணா இவள்..?
என்ற ஆச்சரியத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.. மறு நாள் தெரு முனையில் இறங்கி மனதில் திட்டத்தோடு நகர்ந்து கொண்டிருந்தான்.
அன்ன பறவையொன்று அங்கு ஓவியம் தீட்டி கொண்டிருந்தது,
அருகில் சென்றான் சட்டென கைகளை பிடித்து இனி கோலமெல்லாம் போடாதே, சிறிது நேரம் அமர்ந்து விட்டுபோ என தபு சங்கரின் கவிதயை சொல்லிச்சென்றான்.
இவன் மனதில் பதிந்த காட்சி அவள் மனதில் பதியத் தொடங்கியது , அவன் குரல் சட்டென பிடித்த விரல்கள் காட்சிகள் மனதில் ஓடி கொண்டிருந்தது.
நிமிர்ந்து பார்தாள், வீட்டின்னுள்ளே அவன். அவளின் பதற்றம் நிறைந்த கண்கள் புன்னகையை வரவழைத்தது அவனுக்கு.
பின்னால் அவனின் அம்மாவை கண்டதும் அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.
இன்னொரு அறையிலிருந்து அவளின் அம்மா வெளிவர வாங்க வாங்க,
என்ன வெள்ளிக்கிழமை தானே வரேன் சொன்னீங்க ...?
இவன் எங்க என்ன இருக்க விட்டான். என்று சொல்ல அம்மா என்று யாரும் கேட்காதவாறு குரல் எழுப்பினான்.
அறைக்குள் சென்று ஸ்வேதா இவரை தான்மா உன் அப்பா பார்த்து இருக்கார்.
நீ புடவைய கட்டிட்டு வாமா..?
அம்மாவின் குரல் பூமியில் அவளோ வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தாள்.
அறை் கதவு திறந்தது.
பார்வை விலகாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
தனியா நான் பேசட்டுமா..? என்றான் அம்மாவிடம் சம்மதம் வருவதற்குள் தனியாக சென்றான்.
அம்மாவை பார்வை பார்த்து விட்டு அவளும் சென்றாள்.
அவள் கையை பிடித்து என் வீட்டுக்கு வந்து கோலம் போட உனக்கு சம்மதமா.?
என்றும் என் கைகளை இப்படியே இறுக பற்றிக் கொண்டால் போதும்.
எனக்கு எல்லாம் சம்மதம். என்றாள் புன்னகை மிளிர.
***செளந்தர்***
சும்மா ஒரு முயற்சி செய்தேன் தவறிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் அடிப்பவர்களுக்கு தனியறை ஒதுக்கப்படும்
| Tweet | |||||




- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact