உன் நினைவால்
சிரமப்பட்டு
கண்ணயர்ந்தால்
கனவுகளில் வந்து
எழுப்பி விடுவதே
உன் வாடிக்கை..!!!
*
உன்னுடன் செல்லும்
போதெல்லாம்..
மழை வர வேண்டி
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து
உன் விரலையும் பிடிக்க... !!
*
என்ன பற்றி கவிதை
சொல் என்கிறாய்..
உன் இரு வரி இமைகள்
சொல்லும் கவிதையவிடவா
நான் சொல்லி விட போகிறேன்...!!
*
எழுதிய கவிதை
எல்லாம் எனக்கா
என்பாய்..
இல்லையென்பேன்..
உன் கோவத்தில்
மீண்டும் பிறக்கிறது
உனக்கான கவிதைகள்..!!
உன் நினைவுகள்
உறக்கமற்ற விழியை
தந்தாலும்..
நடுஇரவில்..
விழிகள் உறக்கத்தை
நோக்கி செல்ல..
மனதை எட்டி
உதைத்து
எழுப்புகிறது
உன் நினைவுகள்..!!
| Tweet | |||||




- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact