Friday, December 13

கரை தீண்டாமலே செல்கிறாய்


அருவி போல் நேசத்தைக் கொட்டினாலும் 
பாறை போல் தேயாமல் இருகிறாய் 
என்னுள் மின்சாரமிருந்தும் 
உன்னைத் தாக்கமாலே செல்கிறேன்..! 

நீ செல்லும் பாதையில் 
ஓடையாய் வந்தாலும் 
கரை தீண்டாமலே செல்கிறாய்..!

வெள்ளமென்ன பாய்ந்தாலும் 
அணை போட்டே தடுக்கிறாய்...!

காத்திருந்து காத்திருந்து 
காற்றில் கரைந்தாலும் 
மீண்டும் உன்னைக் காணவே...
மழையாய்... அருவியாய்...ஓடையாய்...!

1 comments:

Jeyamaran said...

Superb nanba vaalthugal....

 
;