Monday, June 6

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!



இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.


    இப்படத்தை உங்கள் வலைபக்கத்தில் கெஜட்டில் சேர்த்து கொள்ளுங்கள் 

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள். குழந்தைகளையும் அழைத்து வாருங்கள் அவர்களுக்கு ஈழ  நிகழ்வைப் பற்றி அடுத்த தலைமுறைக்கும் தெரியவரும்.  

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.





மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.


நன்றி : கும்மி 




வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .



6 comments:

ஷர்புதீன் said...

அடியேன் கோவையில், இங்கே எதுவும் உண்டான்னு விசாரிக்கணும்

சௌந்தர் said...

ஷர்புதீன் சொன்னது…
அடியேன் கோவையில், இங்கே எதுவும் உண்டான்னு விசாரிக்கணும்////

தமிழ் நாடு முழுவதும் அங்காங்கே நீர்நிலைகள் இருக்கும் இடத்தில் வைப்பதாக இருந்தது பின்பு முதலில் சென்னை வைப்போம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்...சென்னையில் கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்தே தமிழ்நாடு முழுவது செய்வார்கள்

உமர் | Umar said...

//சென்னையில் கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்தே தமிழ்நாடு முழுவது செய்வார்கள்//

வரவேற்பை பொறுத்து அல்ல. ஒவ்வொரு நகரங்களிலும் இதனை முன்னெடுத்துச் செல்லும் தன்னார்வலர்கள் அமைவதை பொறுத்து மற்ற நகரங்களிலும் அதே நாளில் நடைபெறக்கூடும். நதியோ, கடலோ இல்லாத நகரங்களில் வேறு பொது இடங்களில் இதை நடத்தலாம் என்று கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. கோவையில் வ.ஊ.சி. பூங்காவில் இதனை நடத்த ஆர்வலர்கள் முன்வரும் பட்சத்தில் அங்கேயும் நடத்த உத்தேசித்துள்ளோம்

ஷர்புதீன் said...

கோவையில் இது குறித்த விசயங்கள் செய்வதற்கு அடியேன் ரெடி., வருகின்ற ஞாயறுக்கு அப்புறம் ப்ரீ தான்!

ஷர்புதீன் said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

கண்டிப்பாக..

 
;