Monday, June 20

உனக்குள் நான்...






உனக்குள் நான் இருக்க 
வெளியில் எங்கெங்கோ 
தேடி கொண்டுயிருக்கிறாய்..
என்னை..!!

*****

உன் நேசத்தின் ஆழத்தை 
காண கோபம் கொள்கிறேன்
உன்னிடம்...


கடலை விட ஆழமானது 
உன் நேசம்..!!!

என் பொய் கோபம் 
அறியாத முட்டாள் 
பெண் நீ..!!!

********

நேசம் என்னும் புயலால் 
உன்னை தாக்கி சென்று விடுவேன்..!! 

நான் வந்த தடத்தோடு 
நிலைமாறாமல் ...
நீ..!!

******

உன்னை காண வேண்டுமென்றேன் 
ஒளியாய் வந்தாய் 
நான் விட்டில் பூச்சியாய் 
வருவதை அறியாமல்..!!! 
உன்னை கண்ட அக்கணமே 
உயிரற்று போனேன்..!!

*****

என் வீட்டு அறையெங்கும் 
உன் வாசம்
நீ சென்ற பின்பும்...!!! 

உன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு
உயிர் கொடுக்க மீண்டும் 
ஒரு முறை வந்து விட்டு போ..!!! 

******




என் நேசம் என்றும் பொய்யல்ல 
                                                 உன்னை போல்..!!!!





22 comments:

ஷர்புதீன் said...

ஆகா, பயபுள்ள எந்த பொண்ணையோ ரொம்ப உத்து பார்த்துட்டான் போல ..

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



Share Here

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

asaththal kavithaigal.

கூடல் பாலா said...

காதல் ...காதல்.....காதல்....

கடம்பவன குயில் said...

கவிதை நல்லா இருக்கு சௌந்தர்.
நல்ல அழகான வார்த்தைகள். தொடரட்டும் கவிதை மழை.

Anonymous said...

நல்லா இருக்கு ....

Harini Resh said...

//உன்னை காண வேண்டுமென்றேன்
ஒளியாய் வந்தாய்
நான் விட்டில் பூச்சியாய்
வருவதை அறியாமல்..!!!
உன்னை கண்ட அக்கணமே
உயிரற்று போனேன்..!!//

இனிமையான கவிதை

மாலதி said...

//உனக்குள் நான் இருக்க
வெளியில் எங்கெங்கோ
தேடி கொண்டுயிருகிறாய்..
என்னை..!!//காதல் ...காதல்.....காதல்....

பாலா said...

//உன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு
உயிர் கொடுக்க மீண்டும்
ஒரு முறை வந்து விட்டு போ..!!!


சூப்பர்ங்க...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஐ... கவித ...கவித....!! :))

Unknown said...

கவித கவித...மாப்ள எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது ஹிஹி!

ரேவா said...

நாங்களும் வந்துட்டோம்ல...கவிதை கலக்கல் ஹ ஹ

மங்குனி அமைச்சர் said...

nice....

paavam payapullaiya kaaththu karuppu adichchirukkum pola

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கூடிய அழகிய காதல் கவிதைகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
உன்னை காண வேண்டுமென்றேன்
ஒளியாய் வந்தாய்
நான் விட்டில் பூச்சியாய்
வருவதை அறியாமல்..!!!
உன்னை கண்ட அக்கணமே
உயிரற்று போனேன்..!!//////

என்னை சிலிர்க்க வைத்த வரிகள்..

vidivelli said...

நேசம் என்னும் புயலால்
உன்னை தாக்கி சென்று விடுவேன்..!!

நான் வந்த தடத்தோடு
நிலைமாறாமல் ...
நீ..!!

nalla kavithai
vaalththukkaL..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்...நல்லா இருக்குங்க... இதுவும் கற்பனை தான்னு சொல்ல போறீங்களா? ஒகே ஒகே...:))

vidivelli said...

வாழ்த்துக்கள்.......
நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது

உணவு உலகம் said...

நல்ல கவிதையை நானும் வாழ்த்துகிறேன்.

அம்பாளடியாள் said...

உன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு
உயிர் கொடுக்க மீண்டும்
ஒரு முறை வந்து விட்டு போ..!!!

எல்லா வரிகளும் எதார்த்தமான
முறையில் மிக அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.அவைக்கமைய இறுதியில்
கொடுக்கப்பட்ட தகவலும் பொருத்தமாக
இருந்தது.மொத்தத்தில் தங்கள் கவிதை
அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் அசத்துங்கள்.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

 
;