Monday, October 10

உன் நினைவுகள்...




உன் நினைவால் 
சிரமப்பட்டு 
கண்ணயர்ந்தால்
கனவுகளில் வந்து 
எழுப்பி விடுவதே
உன் வாடிக்கை..!!!
*


உன்னுடன் செல்லும் 
போதெல்லாம்..
மழை வர வேண்டி 
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து 
உன் விரலையும் பிடிக்க... !!
*

என்ன பற்றி கவிதை 
சொல் என்கிறாய்..
உன் இரு வரி இமைகள் 
சொல்லும் கவிதையவிடவா 
நான் சொல்லி விட போகிறேன்...!!
*

எழுதிய கவிதை 

எல்லாம் எனக்கா 
என்பாய்..
இல்லையென்பேன்..
உன் கோவத்தில் 
மீண்டும் பிறக்கிறது 
உனக்கான கவிதைகள்..!!


உன் நினைவுகள் 
உறக்கமற்ற விழியை 
தந்தாலும்..
நடுஇரவில்..
விழிகள் உறக்கத்தை 
நோக்கி செல்ல.. 
மனதை எட்டி 
உதைத்து 
எழுப்புகிறது 
உன் நினைவுகள்..!!



17 comments:

dheva said...

///உன் நினைவுகள்
உறக்கமற்ற விழியை
தந்தாலும்..
நடுஇரவில்..
விழிகள் உறக்கத்தை
நோக்கி செல்ல..
மனதை எட்டி
உதைத்து
எழுப்புகிறது
உன் நினைவுகள்..!!//

அட்டகாசம்....!!!

dheva said...

//என்ன பற்றி கவிதை
சொல் என்கிறாய்..
உன் இரு வரி இமைகள்
சொல்லும் கவிதையவிடவா
நான் சொல்லி விட போகிறேன்...!!//

செம!!! செம!!!

dheva said...

//உன்னுடன் செல்லும்
போதெல்லாம்..
மழை வர வேண்டி
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து
உன் விரலையும் பிடிக்க... !!!///

நாசம் பண்ணிட்ட போ.....!

எப்போதும் குடையோடே
நடக்கிறேன்...
ஒரு மழை பெய்யாதா
என்ற ஏக்கத்துடன்...
அப்போதாவது
ஒடுங்கிக் கொள்வாயே...
குடைக்குள் என்னோடு...!

இப்டியும் சொல்லலாம்..!

dheva said...

ஆமாம். தம்பி... கேக்க மறந்துட்டேன்...

யாரு அந்த பொண்ணு????

Unknown said...

ஒருவரின் நினைவுகளே அழகான கவிதை தான், அந்த நினைவுகளை கவி பட சொன்னது அழகு தம்பி..எனக்கு பிடித்தது :)

என்ன பற்றி கவிதை
சொல் என்கிறாய்..
உன் இரு வரி இமைகள்
சொல்லும் கவிதையவிடவா
நான் சொல்லி விட போகிறேன்...!

சௌந்தர் said...

dheva சொன்னது…
ஆமாம். தம்பி... கேக்க மறந்துட்டேன்...

யாரு அந்த பொண்ணு????///

நல்லா சரியான ரூட் ல தானே போனீங்க ஏன் ரூட் மாறுறீங்க... avvvvvv

சௌந்தர் said...

dheva கூறியது...
//உன்னுடன் செல்லும்
போதெல்லாம்..
மழை வர வேண்டி
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து
உன் விரலையும் பிடிக்க... !!!///

நாசம் பண்ணிட்ட போ.....!

எப்போதும் குடையோடே
நடக்கிறேன்...
ஒரு மழை பெய்யாதா
என்ற ஏக்கத்துடன்...
அப்போதாவது
ஒடுங்கிக் கொள்வாயே...
குடைக்குள் என்னோடு...!

இப்டியும் சொல்லலாம்..!///

னீங்க சொன்னது சூப்பரோ சூப்பர்... னா

Unknown said...

சௌந்தர் சொன்னது…

dheva சொன்னது…
ஆமாம். தம்பி... கேக்க மறந்துட்டேன்...

யாரு அந்த பொண்ணு????///

நல்லா சரியான ரூட் ல தானே போனீங்க ஏன் ரூட் மாறுறீங்க... avvvvvv

இதோ டா இவர் கவிதையா எழுதுவாராம் கவிதைக்கு காரணம் யாருன்னு கேட்டா தப்பான ரூட்ல போறதா சொல்ற, நீ எங்கயும் மாட்டிக்காத தம்பி

சௌந்தர் said...

ரேவா கூறியது...
சௌந்தர் சொன்னது…

dheva சொன்னது…
ஆமாம். தம்பி... கேக்க மறந்துட்டேன்...

யாரு அந்த பொண்ணு????///

நல்லா சரியான ரூட் ல தானே போனீங்க ஏன் ரூட் மாறுறீங்க... avvvvvv

இதோ டா இவர் கவிதையா எழுதுவாராம் கவிதைக்கு காரணம் யாருன்னு கேட்டா தப்பான ரூட்ல போறதா சொல்ற, நீ எங்கயும் மாட்டிக்காத தம்பி//

அக்கா வழியே என் வழி :))

Unknown said...

அக்கா வழியே என் வழி :))


:(

வெளங்காதவன்™ said...

:)

aotspr said...

உங்கள் கவிதைக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

MANO நாஞ்சில் மனோ said...

உன்னுடன் செல்லும்
போதெல்லாம்..
மழை வர வேண்டி
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து
உன் விரலையும் பிடிக்க... !!//

காதலான வரிகள் அருமை..!!!!

Unknown said...

தூங்கா நினைவகள்...நல்கவிதை

Suji... said...

Sppechless... Fantastic.... :)

ம.தி.சுதா said...

மனவெளியில் மிகவும் ஆழமான தொடுகை

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

ஷைலஜா said...

உன் நினைவாள்
சிரமப்பட்டு
கண்ணயர்ந்தால்
கனவுகளில் வந்து
எழுப்பி விடுவதே
உன் வாடிக்கை..!!!
*
<,,>>

நினைவாளா ? நினைவால் என்றிருக்கணுமே? அல்லது அவளைப்பற்றிய நினைவு வாளாய் அறுக்குதா? எதுன்னாலும் கவிதை அருமை!

 
;