Monday, November 21

ஓர் நட்பு..!!!





வாழ்க்கை பாதையில் 
கை கோர்த்து நடந்து 
கவலைகளை 
மறந்தோம்..
நமக்கு நாம் என்றோம்..!!

ஆனந்தமாய் சுற்றி 
திரிந்த நாட்களை 
எண்ணி மகிழ்ந்தோம்,
நட்பில் பிழை கண்டு 
ஒதுங்கி நின்றோம் 
கண்ணீருடன்..!!

கவலைகள் போக்க 
எவ்விடம் என்று அலைந்த 
 நமக்கு..
மேலும் கவலைகளே 
பரிசாக வந்தன..!!

காயப்பட்ட மனதிற்கு 
ஆறுதல் கூறினாலும் 
வடுக்கள் மறைவதில்லை..!!

காயப்பட்ட மனமிது 
மேலும் காயங்களை
தாங்காதென்று..
விலகி நின்று விலகி நின்று
காயப்படுத்துகிறது..!!

மாறிய வார்த்தைகள்..
மாற்றத்தை உணர்த்துகிறது 
நமக்கு நாம் வார்த்தை 
பொய்யாகி போனதின்று!..!!

நடப்பாய் கைகோர்த்து 
சென்ற பாதையில்..
அமைதியை தேடி 
தனிமையில் செல்ல 
நினைத்த நட்பை 

தோள் தட்டி 
கண்ணீருடன் 
வழியனுப்பியது
ஓர் நட்பு..!!!

8 comments:

ஷர்புதீன் said...

யாருப்பா .... எழுதிகொடுத்தா! நல்லாருக்கே! அனேகமா சவுந்தர் எழுதிதினதா இருக்கும்

:-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நட்பின் வலியோடும் வலிமையோடும் ஒரு அழகிய கவிதை..

வாழ்த்துக்கள்...

Harini Resh said...

//நடப்பாய் கைகோர்த்து
சென்ற பாதையில்..
அமைதியை தேடி
தனிமையில் செல்ல
நினைத்த நட்பை

தோள் தட்டி
கண்ணீருடன்
வழியனுப்பியது
ஓர் நட்பு..!!!//
Supper :)

MANO நாஞ்சில் மனோ said...

அழகான பூ நட்பூ....!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. கவிதை சூப்பர்.. உங்க எழுத்து நடையில் நல்ல வரவேற்கத்தக்க மாற்றம் தெரியுது..!

தொடர்ந்து எழுதுங்க.. :))

ஷைலஜா said...

நட்பைப்பற்றிய கவிதை நயம்!

யுவராணி தமிழரசன் said...

அருமை!

 
;