Monday, January 23

உன்னை பற்றி...







என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!


தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து 
விடாதே...
மடிந்தே விடும்...!!!


ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து 
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!



ரோஜா செடி ஒன்று 
வளர்த்து வருகிறேன்
உனக்காக.. 
என்னை போலவே 
தினமும் பூத்து பூத்து
வாடி கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...!!



உனக்காக காத்திருக்கிறேன்
உன் பாதையில்...
தனியாக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
உன் விழியருகே காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி பார்வைக்காக...!!



உன் வருகைக்காக 
காத்திருந்து காத்திருந்து 
வாடி போனேன் 
உயிரற்று..
என் வசந்த காலம் 
எப்போது 
தொடங்குமென 
காத்திருக்கிறேன் 
ஏக்கத்தோடு...!!!



10 comments:

Harini Resh said...

அருமையான கவிதை சௌந்தர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையாக கவிதை......

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அழகான குட்டி கவிதைகளின் தொகுப்பு.. வாழ்த்துக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் அருமை ! பாராட்டுக்கள் !

Madhavan Srinivasagopalan said...

த்ரிஷா இல்லேன்னா திவ்யா..
போ.. போ.. லைப்ல போயிட்டே இரு...

Learn said...

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Anonymous said...

முதன் முதலாய் வருகிறேன்...
நல்லா வந்திருக்கு கவிதை வாழ்த்துக்கள்...

School of Energy Sciences, MKU said...

தம்பி ரொம்ப பாதிக்கப் பட்ட மாதிரி இருக்கே? உடம்ப பார்த்துக்கோ பிரதர்! வாழ்த்துக்கள் !

PARTHASARATHI SUBRAMANIAN said...

////நீ திரும்பி பார்த்து
விடாதே...
மடிந்தே விடும்//// Awesome lines..

நேத்து தான் தான் Girl friende இல்லன்னு சொன்னீங்க; கவித உருகி உருகி எழுதிருக்கீங்க!!!
ஒவ்வொரு வார்த்தையும் முத்து முத்தாய் உள்ளது!!!

Asiya Omar said...

நல்லாயிருக்கு சௌந்தர்.நீண்ட நாட்கள் ஆச்சு உங்க ப்ளாக் வந்து.வருகைக்கு நன்றி.

 
;