Friday, June 6

மெல்லிய மலரொன்று..!




ஜன்னல் வழியே 
புன்னகை மொட்டு உதிர்த்து
எட்டி எட்டி பார்கிறாய்..!

எட்டாத இடத்தில் நீ இருந்தும் 
உன் வாசம் கண்டு 
மயங்கி போகிறேன்..! 

நீ சாய்ந்தாடுகையில் 
நானும் சாய்ந்தாடுகிறேன்..! 

நீ உதிரும் போது 
தாங்க ஓடோடி வருகிறேன்..! 

யாரேனும் பறிக்க எண்ணினால் 
கலங்கித்தான் போகிறேன்..!

இன்னோரு முறை 
என் வீட்டில் பூத்து விடு 
வேண்டாம் 
ஜன்னல் வழியே...!

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதைப்பா புனைந்து சென்ற விதம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
;