Wednesday, July 14

பதிவர்கள் முன்னேற்ற கழகம்....



                                                        
                                                      
எதற்கு உங்களை இங்கு அழைத்தேன் என்றால் நீண்ட நாட்களா என்னை எப்போது கட்சி தொடங்க போறிங்கனு  கேட்டு வந்தார்கள்  என் தொண்டர்கள்.   நானும் மேல இருப்பவன் சொல்லவேண்டும் என்று சொல்லி வந்தேன். இப்போது தான் எங்க வீட்டு மேல இருப்பவர் சொன்னார் நீங்கள் இப்போ கட்சி தொடங்கலாம் என்றார் அதனால்  உடனே கட்சி தொடங்கலாம் என்று முடிவு எடுத்து விட்டேன், மேல இருப்பவன் சொல்லி தான் நான் எதையும் செய்வேன். அறிமுக மாநாடு அன்று உங்களை சந்திக்கிறேன்.. கட்சி பெயர் ப.மு.க. (பதிவர்கள் முன்னேற்ற கழகம்).        








பதிவர்கள் முன்னேற்ற கழகம். அறிமுக மாநாடு.        
வரவேற்புரை:கோமாளி செல்வா 
இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் என் முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எதையாவது தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருக்கும் அரபு நாடு தேவா அவர்களே... சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் செந்தில் அவர்களே...சுடுதண்ணி புகழ் ஜெய்லானி அவர்களே.... நாஞ்சில் எக்ஸ்பிரஸ் ஓட்டி கொண்டு இருக்கும் நாஞ்சில் அவர்களே... திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி அவர்களே.... பெண்களுக்கு சமைக்க தெரியாது என்று தெரிந்து சமயல் குறிப்பு தரும் (US) உழவர் சந்தை அன்புடன் ஆனந்தி அவர்களே.....மற்றும் ஜெயமாறன் அவர்களே, வில்சன் அவர்களே, ஜீவன் அவர்களே, ரொம்ப நல்லவன் ரமேஷ் அவர்களே, அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.... 



அடுத்தாக தேவா அவர்கள் பேசுவார்...

நான் நம்ம தலைவர் அவர்களை எப்போதோ இருந்து சொல்லிவருகிறேன். நமக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்துக்கு நாம் தான் 2011 ஆட்சியை புடிப்போம், என்று சொல்லி வந்தேன். தலைவர் எனக்கு போன் செய்து நான் கட்சி தொடங்க போவதாக சொன்னார், என் தேடலை ஒத்தி வைத்து விட்டு  வந்து விட்டேன்.   நிச்சயம்  2011 நமது ஆட்சி தான், வளர்க ப.மு.க... வளர்க தலைவர் குடும்பம்...நன்றி வணக்கம்.....என் தேடல் தொடரும்....




அடுத்து செந்தில் அவர்கள் பேசுவார்....

மேடையில் அமர்ந்து இருக்கும் என் நண்பர் தேவா அவர்களே, மற்றும் இங்கு அமர்ந்து இருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிர்க்கும் மேலான தலைவர் அவர்களே.... நீங்கள் கட்சி தொடங்க போவதாக என்னிடம் சொன்னீர்கள்... அப்போது  நான் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருந்தேன் உடனே அந்த முதலாளியை விடுமுறை கேட்டேன் அவன் இல்லை என்றான் நான் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தேன்.வருடம் முழுவதும் விடுமுறை கொடுத்து விட்டான். தலைவரே உங்களுக்காக என் வேலையை தியாகம் செய்து இருக்கிறேன்; அந்த 40 கோடியில் எனக்கும் எதாவது செயுங்கள் தலைவரே...


எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் எங்கள் தலைவர்.. இப்போது பேசுவார்..

பெரியோர்களே தாய்மார்களே,மற்றும் என் வலை பதிவு உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம், எனக்கு ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால் என்னை கட்சி தொடங்கும் படி நீங்கள் வற்ப்புறுத்தி கேட்டு கொண்டதால் இந்த கட்சி தொடங்கினேன், எனக்கு பதவி ஆசை கிடையாது.. ஓரு 40 கோடி 50 கோடி வாங்கி விட்டு, ஆண்டவன் கிட்ட தான் கூட்டணி என்று சொல்வேன்...மேலும் இப்படி ஓரு கட்சியை ஆரம்பித்து மக்களை குழப்புவது தான் எங்கள் திட்டம்.
           

தலைவர்:சௌந்தர்          
துணை தலைவர்:விஜய் 
பொருளாளர்: தேவா 
செயலாளர் :கே.ஆர்.பி.செந்தில்   
கொள்கைபரப்பு செயலளர்:நாஞ்சில் பிரதாப்

மற்ற பதவி எல்லாம் யார் யார் எவ்வளவு பெட்டி தருவிர்களோ அவர்களுக்கு பதவி தரப்படும்...



மாநாட்டு தீர்மானம்
1 அனைவருக்கும் இனைய செலவு அரசே ஏற்க்க வேண்டும்

2 வைரஸ் வராமல் தடுக்க அனைவர் வீட்டுக்கும் சென்று அவர்கள் கணினி மீது ப்ளீசிங்  பவுடர் அடிக்க வேண்டும்.

3 பதிவுகளுக்கு அரசே ஆட்களை வைத்து ஓட்டு போட வைக்க வேண்டும்    

4 பதிவர்களுக்கு z பிரிவு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் 

5 பதிவர்களுக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும் 

6  பதிவிற்கு மாதம் 1000 ஊக்க தொகை தரவேண்டும் 

7 எங்கள் அரபு நாட்டு தேவா எதையோ தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறார் அதை கண்டு பிடித்து தரவேண்டும். 

8 நாங்கள் ஆட்சியை அமைக்க நீங்கள் ராஜனாமா செய்து விட்டு எங்களுக்கு பதவி பிரமானம் செய்து 
வைக்க வேண்டும்.
9 செந்தில் அவர்களின் பதிவுகளை நாட்டுடமை ஆக்க வேண்டும்.



ஜெயமாறன்: இப்போது நன்றி உரை 
மைக்ரோசப்ட் துறைக்கு நன்றி, இனைய சேவை அளிக்கும் b,s,n,l மற்றும் மின்சார துறைக்கு நன்றி,இந்த மாநாட்டுக்கு வந்த  அணைவருக்கும் நன்றி நன்றி நன்றி........  


















216 comments:

«Oldest   ‹Older   201 – 216 of 216   Newer›   Newest»
Prathap Kumar S. said...

இன்னைக்க டபுள் செஞ்சுரி அடிக்காம போகமாட்டோம்ல கண்ணா சொளந்தர் கும்மியை யாரு ஆரம்பிச்சரங்கறது முக்கியமில்லை யாரு முடிச்சாங்கறதுதான் முக்கியம்....

Prasanna said...

என்னய்யா.. பதவி ஆச காமிச்சி இப்படி ஆக்கிட்டீங்களே.. பரவா இல்ல, ஐ அம தி 200 :)

Prathap Kumar S. said...

மாநாட்டு தீர்மானத்துல ஒண்ணை விட்டுப்புட்டீங்க தல
நம்ம மாம்சு தேவாவோட வலைப்பதிவை தேசிய வலைப்பதிவா அங்ககீகரிக்கனும்....

Prasanna said...

//தேவாவோட வலைப்பதிவை தேசிய வலைப்பதிவா அங்ககீகரிக்கனும்//

இதுக்கு சட்டத்துல எடம் இருக்கு.. ஒரு ஆர்டினன்ஸ் போட்டு செஞ்சூட்லாம் :)

School of Energy Sciences, MKU said...

ஏப்பா, எனக்கு எதுவும் இல்லையா?

ஜில்தண்ணி said...

@வில்சன் சொன்னது…

//ஏப்பா, எனக்கு எதுவும் இல்லையா? //

அட வட உங்களுக்குத்தான்,உணவுத் துறை என்ன சொல்றீங்க :))

School of Energy Sciences, MKU said...

ஹ்ம்ம் . . . எப்படி கண்டுபிடிக்குறாங்க??? இன்னும் பயிற்சி வேண்டுமோ?

ஜெயந்தி said...

ஒருநாள் ஊருல இல்ல இங்க இவ்வளவு கூத்து நடந்துபோச்சா? கட்சியே ஆரம்பிச்சாச்சா. நல்ல வேல பின்னூட்டத்துல எனக்கு பதவி கிடைச்சிருச்சு. இல்லேன்னா நானும் எல்கே சேர்ந்து கட்சிய உடைச்சிருப்பேன். தப்பிச்சீங்க.

சீமான்கனி said...

அரசியல் பதிவுனதும் கும்மிக்கு குறைவே இல்லாம வந்து குவியுது...சௌந்தர்....சக்கை போடு...

Anonymous said...

தேடல் தேவாவுக்கு விரைவில் தலைவர் பதவி அல்லது பொது செயலாளர் பதவி கொடுக்க வெண்டும் என்று அகில உலக இந்திய தமிழ்நாடு மருதுபாண்டி ரசிகர் மன்றம் சார்பாக கேட்டு கொல்லுகிறொம்

செல்வா said...

எனக்கு நமது ப.மு.க சார்பாக மொக்கயரசர் காலத்தில் சிறந்து விளங்கிய " மொக்கை வளர்ப்பு சங்கம் என்கிற அமைப்பினை ஏற்படுத்தி அதில் ஏதேனும் பதவியை தருமாறு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

சௌந்தர் said...

@@ப.செல்வக்குமார்
ப.மு.க. மொக்க பேரவை தலைவர்:செல்வக்குமார்

Karthick Chidambaram said...

//எல்லா பதிவர்களுக்கும் இலவச ரயில் பாஸ்- அமைச்சர் பிரசன்னா அறிவிப்பு//

ரயில் எப்ப தலைவா தருவீங்க ? சீக்கிரம் சொல்லுங்க.
சொக்கா .... சொக்கா... ஒரு ரயிலுன்னா சும்மாவா ....? எத்தன பெட்டியோ ( அட! ரயில் பெட்டிய சொன்னேங்க )?
அதுல ஒரு பெட்டிய கொடுத்தா பதவி வேறயாம் ? ( சரிதானே சௌந்தர் - இஞ்சின கூட எடுத்துங்குங்க )

ப. மு . க வாழ்க ... பெட்டி வாழ்க .... பதவி வாழ்க ... சௌந்தர் தம்பியும் வாழ்ந்துட்டு போகட்டும் ... :-)

beer mohamed said...

அதிரடி செய்தி சொல்வது என்னவென்றால் உங்கள் செயிதியை வெளியிட போகிறேன் அதனால் என்னை உங்கள் அமைச்சரசையில் எனக்கு செய்தி அமைச்சராக நியமனம் செய்யணும், இல்லையென்றால் எனக்கு அதரவு தரும் 40 பதிவரகளை வைத்து வால்பையனை தல்வைராகவும்,நரசிம்மனை செயலாளராகவும், உண்மைத்தமிழன் அவர்களை பொருளாளராகவும் , முக்கியமாக டோண்டுவை அமைப்பு தலைவராகவும் செயல் படுவோம்,இது அதிரடி எச்சரிக்கை

ரோஸ்விக் said...

அடப்பாவிகளா அம்மா கொடநாட்டுல தூங்குன உடனே ஆளாளுக்கு பெட்டியத் தூக்கிகிட்டு கெளம்பிட்டீங்களா... ? :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எப்படிங்க இப்படி எல்லாம்...சூப்பர்... மகளிர் அணி எல்லாம் இல்லியா உங்க கட்சில... சும்மா கேட்டேன் .... இதில் உள்குத்து எதுவும் இல்லை என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.... ஹி ஹி ஹி

«Oldest ‹Older   201 – 216 of 216   Newer› Newest»
 
;