Sunday, January 16

விருதும் நன்றியும்...




தமிழ்மணம் விருது பற்றி முதலில் எனக்கு தெரியாமல் இருந்தது. நம் பதிவையெல்லாம் தமிழ் மணத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்கள் ஆனால் எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லை, பின்பு அவர்களே மின்னஞ்சல் அனுப்பினார்கள், அதில் மூன்று இடுகைகளை அனுப்பும் மாறு கேட்டு இருந்தார்கள், நான் எழுதியதில் எது நல்ல பதிவு எது என்று தேர்ந்தெடுத்தேன்உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா?மண்டை ஓடு தான் மிச்சம்இதுதானா புனிதம்?, என்ற மூன்று பதிவுகளை அனுப்பி இருந்தேன்.இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்லை, சும்மாதான் அனுப்பிவைத்தேன். முதல் சுற்றில் தேர்வாகி இருந்தது. சரி முதல் சுற்று தானே, ரெண்டாவது வருகிறதா என்று பார்ப்போம் என்று இருந்தேன், இரண்டாம் சுற்றில் தேர்வாகி இருப்பதாக பிரியமுடன் ரமேஷ் சொன்னார். விருது வரவில்லை என்றாலும் பரவாயில்லை இறுதி சுற்று வரை தேர்வாகி விட்டோம், இது போதும் என்றிருந்தேன். ஏனென்றால் போட்டியில் இருந்தவர்கள் எல்லாம் பெரிய பதிவர்கள், நன்றாக எழுத கூடியவர்கள். அதனால் எனக்கு ஆரம்பம் முதல் சிறிது நம்பிக்கையின்மை இருந்தது. நேற்று தான் தமிழ்மணம் விருது அறிவிப்பு நாள் என்று எனக்கு தெரியாது 

 அடுத்ததாக பதிவுலகில் அண்ணா என்று அழைக்கப்படுபவர், நிச்சயம் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது என்றால், அதுதேவா அவர்கள் மீது தான். அவர் எழுதும் பதிவுகள் அனைத்து நன்றாக இருக்கும். அதிலும் அவர் எழுதும் பதிவுகள் அனைத்து நல்ல எழுத்துகள், நல்ல சிந்தனைகள், நல்ல கருத்துகள், என்று இருக்கும். இவர் எழுத்துக்களும் புதுமையாக இருக்கும், புது புது வார்த்தைகளாக இருக்கும், இவரால் நான் நிறைய வார்த்தைகள் தெரிந்து கொண்டேன். இவர் எழுதும் பதிவுகள் சும்மா விளையாட்டிற்கு புரியவில்லையென்று சொன்னாலும், அவருக்கு தெரியும் எங்களுக்கு எல்லாம் புரிகிறது என்று! தேவா எங்களுக்கு எல்லாம் நண்பராக கிடைத்தது எங்களுக்கு எல்லாம் பெருமை தான். 

 இவர் வெறும் பையன் என்றுசொல்வதை விட ஜோதி என்று சொன்னால் தான் இப்பொழுது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருக்கு எல்லாம் தெரியும்...முன்பை விட இவர் இப்பொழுது மிகவும் நன்றாக எழுதுகிறார், கவிதையெல்லாம் எழுதுகிறார், இவர் எழுதுவதும் இப்பொழுது எல்லாம் புரியவில்லை அதனால் இவர் நல்ல பதிவர்...நாங்கள் பதிவு எழுத வந்து ஒரு வருடத்திற்குள் எங்களுக்கு இப்படி பெரிய திரட்டி முலம் விருது கிடைத்து இருப்பது எங்களுக்கு எல்லாம் பெருமை தான். இனி நான் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை! இனி நல்ல பதிவுகளாக எழுத வேண்டும், என நினைத்து கொண்டு இருக்கேன்...கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.


நேற்று தான் தமிழ்மணம் விருது அறிவிப்பு நாள் என்று எனக்கு தெரியாது, நேற்று என் பதிவுக்கு.. ஒரு பின்னூட்டம் வந்தது. மண்டை ஓடு தான் மீச்ச்ம் பதிவு இரண்டாம் பரிசு பெற்று இருப்பதாக அந்த பின்னூட்டம் பார்த்தவுடன் தான் நினைவுக்கு வந்தது. அட என் பதிவுக்கும் விருது கிடைத்து இருக்கிறதா என்ற சந்தோஷப் பட்டு கொண்டேன். பிறகு நம் நண்பர்கள் யார் வெற்றி பெற்று இருகிறாக்கள் என்று பார்த்தேன். தேவா, ஜெயந்த இவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்று இருந்தார்கள்,   நண்பர்களுடன் முன்னேறுவது கூடுதல் பலமாக இருக்கிறது. 


                ==> அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவு - 7 

மண்டை ஓடு தான் மிச்சம்  - சௌந்தர்--இரண்டாம் பரிசு

               ==> சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவு 13

 எனது ஆன்மீகப் பயணம்....!  - தேவா--இரண்டாம் பரிசு
               
              ==> தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள் என்ற பிரிவு -18


விருதுகள் என்பது பலருக்கு ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது, அதிலும் பெரிய இடத்தில் இருந்து விருது வரும் பொழுது மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. எங்களுக்கு  வாக்களித்த அனைவருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் சார்பிலும் என் நண்பர்கள் சார்பிலும் நன்றி தருவித்து கொள்கிறேன், எங்களை தேர்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


தமிழ் மண விருதின் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவே நினைக்கிறேன். அந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரிய பொறுப்பினை கொடுத்திருக்கிறது. நிறைய வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். என்னுடைய வாசிப்பு எனக்கு சிந்திக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறது. நிச்சயாமாய் நல்ல கருத்துள்ள கட்டுரைகளையும் கதைகளையும் தருவேன் என்ற நம்பிக்கை எனக்குத் துளிர்த்திருக்கிறது.




மீண்டும் தமிழ் மணத்திற்கும், என்னை வாசித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!




36 comments:

Anonymous said...

வடை வடை ,,,,,,,,,,,




விருது பெற்ற முவருக்கும் வாழ்த்துகள்

Ram said...

பங்கேற்ற அனைவருக்குமே வாழ்த்துக்கள்..

dheva said...

நன்றிகள் தம்பி...& உனக்கு வாழ்த்துக்களும்....

நல்ல கட்டுரைகளை தரவேண்டிய பொறுப்பு உன் தலையில் இருக்கிறது......

ஹா.. ஹா..ஹா. கொஞ்சம் பாத்து செய்ங்க.. இனிமே .. சரியா?

dheva said...

//விருது பெற்ற முவருக்கும் வாழ்த்துகள்//

கல்பனா @ ஏம்மா வடை எடுத்த அவசரத்துல மூவருக்கும் ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துடுச்சே...........! வட போச்சே.................

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் சவுந்தர் ............. நல்ல விஷயம் .........

மங்குனி அமைச்சர் said...

dheva கூறியது...

நன்றிகள் தம்பி...& உனக்கு வாழ்த்துக்களும்....

நல்ல கட்டுரைகளை தரவேண்டிய பொறுப்பு உன் தலையில் இருக்கிறது......

ஹா.. ஹா..ஹா. கொஞ்சம் பாத்து செய்ங்க.. இனிமே .. சரியா?////


அட ஆமாங்க சவுந்தர் ......உங்களுக்கு பொறுப்பு கூடிப்போச்சு ............

எஸ்.கே said...

விருது பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் நண்பர்களே..... பொறுப்பு கூடிடுச்சுன்னு எங்களை வறுத்தெடுத்திடாதிங்கப்பா.... !

Anonymous said...

அண்ணா வடை தான் முக்கியம் அதில் மிஸ்டேக் இல்லையே அப்போ எனக்கு தான் வடை நீங்க கூட வட மிஸ்டேக் பண்ணி இருக்கீங்க...உங்களுக்கும் வடை போச்சி

சௌந்தர் said...

அட என்ன எல்லாரும் பொறுப்பு கூடிடுச்சுன்னு சொல்றீங்க அதுவே பயமா இருக்கு...!

எல் கே said...

congrats and wishes

Unknown said...

உங்களுக்கு எனது பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களும் செளந்தர்..

TERROR-PANDIYAN(VAS) said...

வெற்றிபொற்ற அனைவருகும்... அண்ணன் எஸ்.கே சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்...

என்னா சௌந்தர் பொங்கல் முடிஞ்சி போச்சி ஒன்னு இல்லையா... பாத்து எதோ போட்டு கொடுபா... :))

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்.திறமைசாலிகளுக்கு விருதும் பாராட்டும் கிடைப்பது சந்தோஷம்,,அதே நண்பர்களாக இருந்து விட்டால் கூடுதல் சந்தோஷம்

உமர் | Umar said...

வாழ்த்துகள் சௌந்தர்.

உண்மைத்தமிழன் said...

விருது பெற்ற உங்கள் மூவருக்கும் எனது வாழ்த்துகள்..!

சுபத்ரா said...

Hearty Congrats!

Anonymous said...

வாழ்த்துக்கள்..

ஆமினா said...

விருது பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

ஹேமா said...

இன்னும் நிறைய எழுதச்சொல்லித் தரமான ஊக்குவிப்பு இந்த விருது.நிறைவான வாழ்த்துகள் சௌந்தர்.

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

மூவருக்கும் வாழ்த்துகள் இதை தான் இவ்வளவு விவரமா சொல்லியிருக்கேன்......

அப்புறம்....
எங்கே ....
எப்போ....
உங்களில் ஒருவர் சிங்கையிதான் இருக்கிறார்....

சுசி said...

வாழ்த்துகள் சௌந்தர்.

வெங்கட் said...

மூவருக்கும் என் வாழ்த்துக்கள்..

Menaga Sathia said...

3வருக்கும் வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

விருது பெற்ற சௌந்தர்,தேவா,வெறும்பய மூவருக்கும் வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

விருது பெற்ற அனைவருக்கும்..

[im]http://www.berea.k12.oh.us/bhs/lib/bhs/congrats.gif[/im]

வினோ said...

வாழ்த்துக்கள் சௌந்தர்...

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்துக்கள். உங்கள் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்.

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்

Kousalya Raj said...

வாழ்த்துக்கள்...!! இன்னும் பல சாதனைகள் புரிய இந்த விருது ஊக்குவிக்கும்.

நன்றி.

ஆனந்தி.. said...

My hearty wishes..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விருது பெற்ற உங்கள் மூன்று பேருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

தொடர்ந்து பதிவுலகில் கலக்குங்க.. :-)

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

இம்சைஅரசன் பாபு.. said...

வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள் .........

Jaleela Kamal said...

வாழ்த்துகக்ள்

 
;