விதை போட்டவன்
சென்றுவிட
சிலரால் மிதி பட
சிலர் மேய்ந்து விட
அவளின் கண்ணீர் பட
எதோ துளிர்த்து விட்டேன்..!!!
என் நிழலில் பலரிருந்தும்
நான் வெயிலில் நிற்பதை
காணமல் சென்றனர்..!!!
இளைப்பாறும் பறவைகளும்
எச்சமிட்டே செல்கின்றன...!!
நேசம் கொண்டு
பலர் கல்லெறிய..
கண்ணீருடன் கனி
அமுதை கொடுக்க...
கனியை உண்டு
என் மீதே தூக்கி
எறிகிறான் விதையை..!
தாக்குபிடிக்க முடியா
காற்று தாக்கி
சரிந்து கிடந்த என்னை
தூக்கி சென்று...
சிலர் மிதித்து கொண்டிருக்க
சிலரோ தீ மூட்டிய
பசியாறினர்..!!
| Tweet | |||||






- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact