Wednesday, June 4

நீயாகிய நான்..!




என் சுவாசமே நீ யென்பதால் 
உள்வாங்கி வெளியிடுகிறேன் 
நீ இல்லையனில் மரணித்து 
உன்னை தேடி 
காற்றில் அலைந்து கொண்டிருப்பேன்

சுவாசமே காதாலாக..!



என்னை விட்டு விலகுவது உமக்கு 
சந்தோசமெனில் என்றென்றும்
நிலைத்திருக்கும்..!

இறுதி சுவாசம் உள்ளவரை


***********************

என்னை விட என் எழுதுகோலுக்கு
காதல் அதிகமாகிவிட்டது..
உன்னை பற்றி எழுத 
முண்டியடித்து செல்கிறது..!


********************************

மலர் கண்காட்சி என்றார்கள் 
தேடிகொண்டிருகிறேன்
உன்னை..!


**********************

உன் விரல் பட்ட மகிழ்ச்சியில்
துள்ளி குதித்து 
தற்கொலை செய்து 
கொள்கிறது 

நீ உண்டு எறியும்
சாக்லேட் பேப்பர்..!


********************************

நான் இங்கு உன்னுடன் 
மெளனமாக பேசிகொண்டிருக்கிறேன்..!
நீ அங்கு மெளனமாக 

சண்டையிட்டு கொண்டிருக்கிறாய்..!


2 comments:

Seeni said...

அருமை ஜி..

இமா க்றிஸ் said...

சிலது முன்பு பகிர்ந்த போது படித்துவிட்டேன்.
அழகாக எழுதுறீங்க சௌந்தர்.

 
;