Tuesday, October 5

நாட்டை திருத்துங்கள்...


எப்படியாவது ஒரு பதிவு எழுதி இந்த நாட்டை திருத்தி விடலாம் என்று யோசித்து, யோசித்து, எனக்கும் ஒன்றும் தோன்ற வில்லை அட நம்ம நடிகர்கள் தான் படத்தில் நாட்டை திருத்துறாங்க அவர்களிடம் போய் எதாவது ஐடியா கேட்கலாம் என்று செல்கிறேன் நீங்களும் வாங்க.... 


நான் முதலில் போன இடம் சத்தியராஜ் வீடு

சத்தியராஜ் : வாங்க தம்பி, என்ன வேண்டும்? நான் நன்கொடை எல்லாம் கொடுப்பது இல்லை, வாங்குவது மட்டும் தான்.   

நான் : இல்லை சார் நான் அதுக்கு வரலை,  

சத்தியராஜ் : அப்போ "என் பையனை வைத்து படம் எடுக்கப் போறிங்களா?  

நான் : அட உங்க பையன் நடிகரா சொல்லவே இல்லை, 

சத்தியராஜ் : சரி அப்போ நீங்க எதுக்கு தான் வந்தீங்க 

நான் : அதான் சார் இந்த நாட்டை திருத்தனும் அதுக்கு ஒரு ஐடியா வேண்டும் அதுக்கு தான் உங்களிடம் வந்தேன். 

சத்தியராஜ் : என்ன இந்த நாட்டை திருத்த போறியா அப்போ என் படத்தை யார் பார்ப்பார்கள்? இப்போ நீ இந்த நாட்டை திருத்தி என்ன பண்ண போறே, அப்படியே நீ சொன்னா திருந்தி விடுவாங்களா போய் வேலையை பாருடா 

நான் : சார்... சார்... ஏதாவது ஐடியா கொடுங்க சார் நான் போயிடுறேன், 

சத்தியராஜ் : இவனுங்க எல்லாம் திருந்தி விட்டால் என் படத்தை எவன் பார்ப்பான் ஐடியா எல்லாம் தர முடியாது   




அடுத்து ரஜினியிடம் சென்றேன். நான் சென்றவுடன் வாங்க வாங்க என்ன சன் பிக்சர் 40 கோடி கொடுத்து விட்டார்களா 

நான் : என்ன சார் இன்னும்மா உங்களுக்கு சம்பளம் தரமாட்டுறாங்க, 

ரஜினி : நான் சென்னையில் இருக்கும் போதே தெரியலையா இன்னும் எனக்கு சம்பளம் தரலை, 

நான் : (ஆமா ஆமா தந்து இருந்தா இவர் இந்நேரம் இமயமலை போய் இருப்பார்)

ரஜினி : சரி சரி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கோபத்துடன் கேட்டார்... ரஜினி நாட்டை திருத்தி என்ன செய்ய போறே நானே இன்னும் சம்பளம் வரல கடுப்புல இருக்கேன் நீ வேற வந்து நாட்டை திருத்துறேன், வீட்டை திருத்துறேன் சொல்லிக்கிட்டு போடா அந்த பக்கம். 

நான் : சார்....அவனுங்க உங்களுக்கு சம்பளம் தருவாங்கனு இன்னுமா நம்புறீங்க 

ரஜினி : அடபாவி என்னடா சொல்றே? 

நான் : ஹா ஹா ஹா உண்மையை சொல்றேன்!

யாரும் இதுவரை எந்த ஐடியாவிம் தரலை சரி டாக்டர் விஜயிடம் போனால் எதாவது ஐடியா தருவார் அவர் தான் மூன்று படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதனால் நேரா A.V.M.ஸ்டுடியோவில் போய் பார்க்கலாம் என்று போனேன் நான் சென்று கொண்டு இருக்கும் பொழுது ஒரு குரல் கேட்டது யாரு அது என்று திரும்பி பார்த்தேன் அங்கே விஜய் இருந்தார், என்னை பார்த்து  

விஜய் : எப்படி இருக்கு என் புது கெட்டப் என்று கேட்டார். 

நான் : ஒன்றும் தெரியவில்லை அவரிடமே கேட்டேன் என்ன கெட்டப் என்று கேட்டேன் 


விஜய் : தன் தலை முடியை காண்பித்து hair coloring செய்து இருக்கேன் பாருங்கள், எப்படி இருக்கு என் கெட்டப் படம் ஓடுமா? 

நான் : என்ன விஜய் திடீர் என்று இப்படி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டிர்கள், 

விஜய் : சரி சௌந்தர் நீங்க எதுக்கு வந்தீங்க? 

நான் : அதான் விஜய், இந்த நாட்டை திருத்த ஒரு ஐடியா வேண்டும் அதான் வந்தேன் நான் சொல்லி முடிப்பதற்குள் 

விஜய் : நான் வேண்டும் என்றால் நடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டார் 

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். சார் நீங்க எவ்வளவு நல்லவர் உங்களை போய் எல்லோரும் கலாய்கிறாங்க...நீங்க ரொம்ப நல்லவர்னு சொன்னேன் 

விஜய் : சரி சௌந்தர் இதுக்கு ஐடியா தரலாம வேண்டாமா என்று அப்பாவிடம் கேட்டு சொல்றேன்


அடுத்து நான் போன இடம் உள்ளே போகும் போதே அந்த பாடல் எனக்கு கேட்டது அட பொன்னான மனசே பூவான மனசே வெக்காத பொண்ணு மேல ஆசை.... உள்ளே போனேன் T.R. இருப்பார் என்று உள்ளே நுழைந்தேன் அந்த பாடலை பாடி கொண்டு இருந்தவர் சிம்பு .. நான் கூப்பிட்டு பார்த்தேன் அவர் என்னை பார்க்க வில்லை சிறிது நேரம் கழித்து பக்கத்து அறையில் இருந்து T.R வந்தார் 

T.R : வாங்க தம்பி நம்ம கட்சில சேர வந்திங்களா? 

நான் : சார் நானே நாட்டை திருத்தலாம் ஒரு ஐடியா கேக்கலாம் என்று வந்து இருக்கேன். 

T.R: ஓஹ அப்படியா இனி என் பையனை ஒழுங்கா இருக்க சொல்றேன் 

நான் : சார் அவர் எந்த தப்பு இப்போ பண்றது இல்லையே   

T.R : அப்படியா தம்பி சரி இப்போ நான் என்ன செய்யணும் நான் வேண்டும் என்றால் ஒரு படம் எடுத்து தரவா? 

நான்: ஆதெல்லாம் வேண்டாம். கெட்டு போகும் நாடு அப்படியே கெட்டு போகட்டும். நாங்கள் பேசி முடிக்கும் வரை சிம்பு அந்த பாடலை இன்னும் பாடி கொண்டு இருந்தார். T.Rரிடம் கேட்டேன் என்ன இவர் இன்னும் அதே பாடலை பாடி கொண்டு இருக்கிறார் அவன் அப்படிதான் ரெண்டு வருசமா ஒரே பாட்டை பாடி கொண்டு இருக்கிறான்


எனக்கு எங்கும் நாட்டை திருத்த ஐடியா கிடைக்க வில்லை என்ன செய்வது...??

ஒன்றும் புரியாமல் ஒருவித சோகத்துடன் நடந்து வந்து கொண்டு இருந்தேன்....

அப்போது ஏதோ ஒரு குரல் எனக்கு கேட்டது யார் குரல், "முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும்

 ஆமாம் சரிதான் இது எனக்கு இப்பதான் புரிகிறது.

"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"



60 comments:

vinthaimanithan said...

:)))

செல்வா said...

அட அட , என்னமா பீல் பண்ணி எழுதிருக்காரு ..?

செல்வா said...

// "ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்.//

சரியா இருக்கறதுனா என்ன ..? நான் சரியா தானே இருக்கேன் .!!

கருடன் said...

@சௌந்தர்

அப்பொ நான் நல்ல பதிவு எழுதினாலும் நாடு திருந்தாதா??? அட பாவமே!!!

செல்வா said...

எங்க தல கமல் கிட்ட கேக்காம விட்டுட்ட ..! நீயெல்லாம் என்ன பிரபல பதிவர் ...?

செல்வா said...

///அப்பொ நான் நல்ல பதிவு எழுதினாலும் நாடு திருந்தாதா??? அட பாவமே!!!
//
உங்களுக்கும் நல்ல பதிவுக்கும் என்ன சம்பந்தம் ..!

இம்சைஅரசன் பாபு.. said...

//எங்க தல கமல் கிட்ட கேக்காம விட்டுட்ட ..! நீயெல்லாம் என்ன பிரபல பதிவர் ...? //
தலங்கறது கமல் இல்ல தம்பி அது அஜித் ..............................

எஸ்.கே said...

//"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"//
காமெடி பதிவாயிருந்தாலும் மெஸேஜ் வச்சீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க!

செல்வா said...

//நான் : ஹா ஹா ஹா உண்மையை சொல்றேன்!
//
இதுக்கு பேருதான் பஞ்ச் டயலாக்கா..?

செல்வா said...

//தலங்கறது கமல் இல்ல தம்பி அது அஜித் ..............//
எங்க தலைவர் அப்படின்னு சொல்லுரக்கு மாதி சொல்லிட்டேன் ..
ஏன்னா எங்களுக்கு (கமல்) புரியாம பேசித்தான் பழக்கம் ..

செல்வா said...

///காமெடி பதிவாயிருந்தாலும் மெஸேஜ் வச்சீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க!
//

மெசேஜ் எல்லாம் ஒண்ணும் இல்ல.. இத்தோட விட்டுட்டா அடி தாங்க முடியாதுள்ள , அதைய சமாளிக்கரக்கு தான் இந்த பில்ட் அப் .

இம்சைஅரசன் பாபு.. said...

//ஏன்னா எங்களுக்கு (கமல்) புரியாம பேசித்தான் பழக்கம் //
தேவா அண்ணன் ன கூப்பிடுங்க.இங்க ஒருத்தர் புரியாம பேசுறாரு

வெங்கட் said...

Super-nga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம டெரர் கிட்ட கேட்டிருக்கலாமே. அவர்தான் இப்ப ரொம்ப திருந்திட்டாராமா? அண்ணன் அஜித் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அவர் அதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள நாடு திருந்திருக்கும்.

Anonymous said...

//இவனுங்க எல்லாம் திருந்தி விட்டால் என் படத்தை எவன் பார்ப்பான் ஐடியா எல்லாம் தர முடியாது//
//நான் வேண்டும் என்றால் நடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டார்//
ஹா ஹா.. வர வர உன் நகையுனர்ச்சி அதிகமாயிட்டே போகுது.. குட் :)

வெங்கட் said...

@ டெரர்.,

// அப்பொ நான் நல்ல பதிவு எழுதினாலும்
நாடு திருந்தாதா??? அட பாவமே!!! //

அப்ப ஒருவேளை ரமேஷூம்., அருணும்
பதிவி எழுதறதை நிறுத்தினா
நாடு திருந்துமோ என்னமோ..?!!

செல்வா said...

//அப்ப ஒருவேளை ரமேஷூம்., அருணும்
பதிவி எழுதறதை நிறுத்தினா
நாடு திருந்துமோ என்னமோ..?!!

//

இவுங்களுக்கு நம்ம பிரச்சினை தெரியுமோ தெரியாதோ ..?

அருண் பிரசாத் said...

//அப்ப ஒருவேளை ரமேஷூம்., அருணும்
பதிவி எழுதறதை நிறுத்தினா
நாடு திருந்துமோ என்னமோ..?!!//

முதல்ல வெங்கட்டை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்

(எதைன்னுலாம் கேக்ககூடாது. அவர நிறுத்த சொல்லு நான் நிறுத்தரேன்)

செல்வா said...

//(எதைன்னுலாம் கேக்ககூடாது. அவர நிறுத்த சொல்லு நான் நிறுத்தரேன்)
/

அது சரி ..

elamthenral said...

//"அப்போது ஏதோ ஒரு குரல் எனக்கு கேட்டது யார் குரல், "முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும்//"
சௌந்தர் தம்பி, இந்த குரல் எனக்கும் அடிகடி கேட்கும் திரும்பினால் என் அம்மாவின் குரலாகதானிருக்கும்....

dheva said...

நாடு திருந்தணும்னா .............



எல்லோரும் பதிவு எழுதறத நிறுத்தணும்....!


முடியுமா????? ஹா...ஹா...ஹா...!

செல்வா said...

//எல்லோரும் பதிவு எழுதறத நிறுத்தணும்....!


முடியுமா????? ஹா...ஹா...ஹா...!

//

அது சப்ப மேட்டர் ..!!

Anonymous said...

கலக்கலோ கலக்கல்

Anonymous said...

தன் தலை முடியை காண்பித்து hair coloring செய்து இருக்கேன் பாருங்கள், எப்படி இருக்கு என் கெட்டப் படம் ஓடுமா?
//
ஹாஹாஹா

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி ஒரு சின்ன விசியத்துக்கு இவ்ளோ கஷ்டப் பட்டு இருக்கியே , இரு நாட்டை எப்படி திருத்துரதுன்னு நான் சொல்லித்தர்றேன்,

நாடைட்
ட்நாடை
டைநாட்
டைட்நா

பல ஸ்டைல்ல திருத்தி எழுதி இருக்கேன் , உனக்கு எது புடிக்குதோ அதை எடுத்துக்கோ , பத்தலைன்னா சொல்லு இன்னும் திருத்தி தர்றேன்

சௌந்தர் said...

@@@மங்குனி அமைசர்

ரொம்ப நல்லாவே நாட்டை திருத்தி விட்டிர்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

//நாடைட்
ட்நாடை
டைநாட்
டைட்நா
பல ஸ்டைல்ல திருத்தி எழுதி இருக்கேன் , உனக்கு எது புடிக்குதோ அதை எடுத்துக்கோ , பத்தலைன்னா சொல்லு இன்னும் திருத்தி தர்றேன்//

எப்படி எல்லாம் திருதுறாங்க பபா .........புல்லரிக்குது ................

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…


எப்படி எல்லாம் திருதுறாங்க பபா .........புல்லரிக்குது ................////

அப்புறம் என்ன? நம்ம பயபுள்ள ஒருவன் நாட்டை எப்படி திருத்துரதுன்னு அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கான் , எவன் எவன் கால்லையோ போயி விழுந்திருக்கான் நீங்கள் எல்லாம் ஏன்னா பண்ணிக்கிட்டு இருந்திங்க , பிளடிச்டுபித்ஸ்

ஹேமா said...

சௌந்தர்...மங்குனி அமைச்சர் சொன்னபடி கேட்டீங்கன்னா சீக்கிரமா திருத்தல்ல்ல்லாம் !

செல்வா said...

/ எவன் எவன் கால்லையோ போயி விழுந்திருக்கான் நீங்கள் எல்லாம் ஏன்னா பண்ணிக்கிட்டு இருந்திங்க , பிளடிச்டுபித்ஸ்
//

நான் முதல்லையே சொன்னேன் , நம்ம மங்குனி கிட்ட கேளுடா அப்படின்னு .
இவன் தான் கேக்கலை .!!

Kousalya Raj said...

//சார் நீங்க எவ்வளவு நல்லவர் உங்களை போய் எல்லோரும் கலாய்கிறாங்க...நீங்க ரொம்ப நல்லவர்னு சொன்னேன்//

அது என்ன அடிக்கடி விஜயை வம்புக்கு இழுக்கிற..?!! விஜய் ரசிகர்கள் யாரும் இங்க இல்லையா...??

சௌந்தர் சிரிச்சு முடியல....!! இங்க படிச்சிட்டு சிரிப்பு போலீஸ் பக்கம் வேற போயிட்டேன்.....அப்புறம் terror போஸ்ட்.....இப்படி தொடர்ந்து தனியா சிரிச்சிட்டு இருக்கிறத, என் பசங்க ஒரு மாதிரி பார்த்திட்டு போறாங்க..

சௌந்தர் said...

Kousalya சொன்னது…
//என் பசங்க ஒரு மாதிரி பார்த்திட்டு போறாங்க.////

@@Kousalya
பசங்களுக்கு உண்மை தெரிந்து இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Kousalya சொன்னது…

//சார் நீங்க எவ்வளவு நல்லவர் உங்களை போய் எல்லோரும் கலாய்கிறாங்க...நீங்க ரொம்ப நல்லவர்னு சொன்னேன்//

அது என்ன அடிக்கடி விஜயை வம்புக்கு இழுக்கிற..?!! விஜய் ரசிகர்கள் யாரும் இங்க இல்லையா...??

சௌந்தர் சிரிச்சு முடியல....!! இங்க படிச்சிட்டு சிரிப்பு போலீஸ் பக்கம் வேற போயிட்டேன்.....அப்புறம் terror போஸ்ட்.....இப்படி தொடர்ந்து தனியா சிரிச்சிட்டு இருக்கிறத, என் பசங்க ஒரு மாதிரி பார்த்திட்டு போறாங்க..
////

ஒன்னும் கவலைப்படாதிங்க உங்கள இப்படி பாத்து பாத்து அவுங்களுக்கு பழகி போயிருக்கும் , தலைல அடிச்சுகிட்டு போயிகிட்டே இருப்பானுக

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் சொன்னது…


நான் முதல்லையே சொன்னேன் , நம்ம மங்குனி கிட்ட கேளுடா அப்படின்னு .
இவன் தான் கேக்கலை .!////

செல்வா மங்குனி இவ்வளவு அறிவாளி எனக்கு தெரியாது

Kousalya Raj said...

//மங்குனி அமைசர் சொன்னது…

ஒன்னும் கவலைப்படாதிங்க உங்கள இப்படி பாத்து பாத்து அவுங்களுக்கு பழகி போயிருக்கும் , தலைல அடிச்சுகிட்டு போயிகிட்டே இருப்பானுக//

அது என்னவோ சரிதான்...இப்ப கூட தலைல அடிச்சிட்டு தான் போனாங்க...ஆமா இது எப்படி உங்களுக்கு தெரிந்தது..??!!!!

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் சொன்னது…



செல்வா மங்குனி இவ்வளவு அறிவாளி எனக்கு தெரியாது
////

என்னது தெரியாதா , டேய் கதவ சாத்துங்கடா, தப்பி ஓட விட்றாதிங்க , நானும் இந்த ஆறுமாசமா எல்லா கிட்டயும் கேட்டேன் எல்லாரும் தெரியும் தெரியுமுன்னு சொன்னானுக , இவன் மட்டும் தெரியாதுன்னு சொல்லிட்டாண்டா , விடாதிங்கடா அடிங்க , மூச்சு திணற திணற அடிங்கடா, அடிச்சுகிட்டே இருங்கடா ...... ஹெலோ யாருப்பா அங்க எனக்கு ஒருடீ சொல்லு

மங்குனி அமைச்சர் said...

Kousalya சொன்னது…



அது என்னவோ சரிதான்...இப்ப கூட தலைல அடிச்சிட்டு தான் போனாங்க...ஆமா இது எப்படி உங்களுக்கு தெரிந்தது..??!!!!
////

ஹி.ஹி.ஹி................... இப்படித்தான் ஊரையே கொஞ்சம் ஒரு மாதிரியா ஆக்கிகிட்டு இருக்கோம்

செல்வா said...

//செல்வா மங்குனி இவ்வளவு அறிவாளி எனக்கு தெரியாது//
அடடா இது கூட தெரியாதா ..? இத விட அவரு பெரிய அறிவாளி தெரியுமா ..?
எடுத்துக்காட்டா ஒண்ணு சொல்லுறேன் கேளு
அவரு மூளை எவ்ளோ பெரிசு தெரியுமா ..?
இந்த உலகத விட பெரிசு , கடல் தண்ணிய விட பெரிசு ,
சூரியன விட பெரிசு .. அப்புறம் அப்புறம் அவருக்கு இருக்குற அறிவுக்கு
என்ன சொல்லலாம் ..........................
(கோடிட்ட இடத்தை நிரப்புக )

இம்சைஅரசன் பாபு.. said...

//சௌந்தர் சிரிச்சு முடியல....!! இங்க படிச்சிட்டு சிரிப்பு போலீஸ் பக்கம் வேற போயிட்டேன்.....அப்புறம் terror போஸ்ட்.....இப்படி தொடர்ந்து தனியா சிரிச்சிட்டு இருக்கிறத, என் பசங்க ஒரு மாதிரி பார்த்திட்டு போறாங்க//
எங்க தலைவர் சொல்லிருகாங்க .......
சந்தோசம் தான் வாழ்கை ன்னு..............
என்னையும் என் பொண்ணு ,என் மனைவி எல்லோரும் கேப்பாங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்புறம் அப்புறம் அவருக்கு இருக்குற அறிவுக்கு
என்ன சொல்லலாம் ..........................
(கோடிட்ட இடத்தை நிரப்புக )..............//

மாமா பிஸ்கோத்து.....பிம்ளிக்க ..........பிம்ம
நான் நிரப்பிட்டேன்

செல்வா said...

///மாமா பிஸ்கோத்து.....பிம்ளிக்க ..........பிம்ம
நான் நிரப்பிட்டேன்

//

ஆகா , ஆகா ..!! என்னே அறிவு .. என்னால் இவ்விடத்தில் என்ன கூறுவதென்றே தெரியவில்லை.. தங்களின் அறிவுத்திறனில் சொக்கிப்போகின்றேன் ..!!

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…



மாமா பிஸ்கோத்து.....பிம்ளிக்க ..........பிம்ம
நான் நிரப்பிட்டேன்
////

ஆமா கிழிச்ச , நீயும் ரெண்டு கோடு பிளாங்கா நிரப்பாம விட்டு இருக்கியே ???

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா கிழிச்ச , நீயும் ரெண்டு கோடு பிளாங்கா நிரப்பாம விட்டு இருக்கியே //

எவ்வளவுக்கு எவ்வளவு பிழை( கோடு ) இருக்கிறதோ அவ்வளவு பிஸ்கோத்தை சேர்த்து கொள்ளவும்

என்னது நானு யாரா? said...

"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"

இது இது இதுத்தான் சூப்பர் ஃபினிஷிங் டச் சௌந்தர். சூப்பரு! நகைசுவையோட கலக்கிட்டீங்க போங்க!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///"முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும///

ஹா ஹா ஹா.. அச்சச்சோ... சிரிச்சு முடியல... சௌந்தர்..
ஆனாலும் உங்களுக்கு சமுதாய அக்கறை ரொம்ப ஜாஸ்தி தான் போங்க. :-)))

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஆமா கிழிச்ச , நீயும் ரெண்டு கோடு பிளாங்கா நிரப்பாம விட்டு இருக்கியே //

எவ்வளவுக்கு எவ்வளவு பிழை( கோடு ) இருக்கிறதோ அவ்வளவு பிஸ்கோத்தை சேர்த்து கொள்ளவும்
/////

நான் டீ சொன்ன டீ இன்னும் வரல , அதுக்குள்ளே பிஸ்கட்டா , ஓ....... பஸ்ட்டு பிஸ்கட் அப்புறம் டீயா

மங்குனி அமைச்சர் said...

Ananthi சொன்னது…

///"முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும///

ஹா ஹா ஹா.. அச்சச்சோ... சிரிச்சு முடியல... சௌந்தர்..
ஆனாலும் உங்களுக்கு சமுதாய அக்கறை ரொம்ப ஜாஸ்தி தான் போங்க. :-)))
////

ஹலோ வாங்க வாங்க எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம் ?

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? சொன்னது…

"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"

இது இது இதுத்தான் சூப்பர் ஃபினிஷிங் டச் சௌந்தர். சூப்பரு! நகைசுவையோட கலக்கிட்டீங்க போங்க!
////

யப்பா சாருக்கும் , ஆனந்தி மேடத்துக்கு இன்னும் ரெண்டு டீ சேத்து சொல்லு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஹலோ வாங்க வாங்க எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம் ? //

ஆஹா... ஒரு நிமிஷம்.. ப்ளாக் மாத்தி கமெண்ட் போட்டுட்டேன்னு சந்தேகம் வந்திருச்சு. :-))
வரவேற்பெல்லாம் பலமா இருக்கே?? ரொம்ப நன்றி அமைச்சர் அவர்களே.. :-)
சௌந்தர்.. ஏதும், பிளான் இருக்கா???

Unknown said...

superrrrrrrrrrrrrrr.... pathivu pa. sema comedy. thirunthanum thiruththanum, thirunthuvom.

சுசி said...

சூப்பர் சிரிப்பு தான் போங்க.

Jeyamaran said...

*/எனக்கு எங்கும் நாட்டை திருத்த ஐடியா கிடைக்க வில்லை என்ன செய்வது...??

ஒன்றும் புரியாமல் ஒருவித சோகத்துடன் நடந்து வந்து கொண்டு இருந்தேன்....

அப்போது ஏதோ ஒரு குரல் எனக்கு கேட்டது யார் குரல், "முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும்

ஆமாம் சரிதான் இது எனக்கு இப்பதான் புரிகிறது.

"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"/*


Thala arumaiyana message..............
ithula comedy vera Engappa antha Ajith thambi........

எல் கே said...

//ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"//

உண்மைதான்

சிவராம்குமார் said...

கடைசிலே கருத்து வேற! ;-)

NaSo said...

"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"///

எனக்கு ஓட்டு போடுங்கள். ஒவ்வொரு மனிதனையும் நான் திருத்திக் காட்டுகிறேன். (அப்பாடா எப்படியோ ஒரு வாக்குறுதி கொடுத்தாச்சு)

தனி காட்டு ராஜா said...

:)))

Unknown said...

ஹா ஹா ஹா..

நல்ல பதிவு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன நண்பா.. இப்படி திடீர்ன்னு... நாட்ட திருத்துறேன்... வீட்ட திருத்துறேன்னு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha... super creativity...

Unknown said...

//ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்//
கடைசி கருத்து உண்மை.
பதிவு நல்லா இருக்கு ..

 
;