Wednesday, December 29

எனக்கு பிடித்த பாடல் 2010



2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத  மதி அழைத்ததால்...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்களும் பிடிக்கும் அதில் இருந்து குறிப்பிட்ட சில பாடல்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்....ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்காக பத்து பாடல்களை தேர்வு செய்து இருக்கிறேன்.   

10) தமிழ்ப்படம்... இந்த படம் முழுவது ஒரே காமெடி தான்..அதுவும் இந்த பாடலில் விஜய். ரஜினி, தனுஷ், சிம்பு அனைவரையும் கிண்டல் செய்து இருப்பார்கள்...விஜய்யை போல நடனம் ஆடுவது எல்லாம் சூப்பர் இப்போதும் இந்த பாடலை பார்த்தால் கூட நன்றாக சிரிப்பு வரும்....பாடல் வரிகள் எல்லாம்...நன்றாக இருக்கும்.

பச்ச, மஞ்ச, கருப்பு தமிழன் நான் 
உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நான்தான் 
என்ன மிஞ்ச எவனும் இங்குயில்லை
நம்ம தாய் குலத்திற்க்கும் நான்தான் செல்ல பிள்ள

2011 நம்ம கையில 

சந்திப்போம் தோழ நம்ம சட்ட சபையில 
எவனுக்கும் என்ன கண்டா
உள்ளுக்குள்ள நடுங்கும் 
என் பார்வை பட்டால் சிங்கமும் பதுங்கும்

பாடியவர் : முகேஷ்



9 கோவா படத்திலே உருப்படியான...பாடல் என்றால் இது தான் ஜெய் மட்டும் தனியாக உட்கார்ந்து கேட்பார் அவர் மட்டும் இல்லை நாமும் தனியாக உட்கார்ந்து கேட்டால், கேட்டு கொண்டே இருக்கலாம்...  

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

பாடல் பாடியவர் அஜீஸ் & ஆண்ட்ரியா 


8 ) வம்சம் இந்த படத்தில் இது தான் ஓபன் சாங் இந்த பாடலுக்கு முன்பு அந்த ஊரை பற்றி ஒரு பில்டப் கொடுப்பார்கள்...அதற்கு ஏற்றார் போல் அந்த பாடலும் இருக்கும் ...இந்த பாடலில் இசையும் பாடல் வரிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்  

மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு
ஏ கூட்டங்கூட்டி வாராரு
கோயில் மாலை வாங்கத்தான்
கும்மிக்கொட்டும் குமரிங்க குலவ சத்தம் ஓங்கத்தான்

பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : மாணிக்கவிநாயகம், வேலுமுருகன், பாண்டிராஜ்


7) அங்காடிதெரு இந்த படம் ஒரே கவலையா இருக்கும்...பாடல்களே நன்றாக இருக்கும் அதிலும் உன் பேரை சொல்லும் போது வருகிற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் அவர்கள் வேலை செய்யும் கடையில் மட்டும் எடுத்து இருப்பார்கள் எடுத்தவிதமும் நன்றாக இருந்தது. பாடல்வரிகளும் நன்றாக இருக்கும் 

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல், ஹரி சரண்



6) பாணா காத்தாடி...இந்த படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்த படத்தில் வரும் தாக்குதே கண் தாக்குதே என்ற பாடல் பிடிக்கும்...அந்த பாடலின் இசை அதை படமாக்கிய விதம் எனக்கு பிடிக்கும்


பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏர்த்ததே



5 )மதராசபட்டினம்..இந்த படத்தில் பழைய சென்னையை காண்பித்து இருப்பார்கள்...இந்த பாடல்வரிகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்


வாம்மா துரையம்மா இது வங்கக் கரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஹ ஹ ஹ அதே தான்
கட்டைவண்டியில் போவோம்
டராமல் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உதித் நாராயண், 

4) மைனா...இந்த பாடல் முன்பே பிடித்து இருந்தது...வரிகள் எல்லாம் பிடிக்கும் பாடல் மலையில் படமாக்கிய விதம் நன்றாக இருந்தது


கையை புடி கண்ணு பாரு...
உள் மூச்சை வாங்கு...நெஞ்சோடு நீ..
கொஞ்சம் சிரி... எட்டுவையி..

தோல்சாய்ந்து தூங்கு இப்போது நீ...
மொதுவா பாடு.... எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது...
சாதனா சர்கம், நரேஷ் ஐயர்

3) நான்  மகான்  அல்ல.  இந்த படத்தில் இறகை போல...இந்த பாடலில் கார்த்திக் செய்யும் ரீயாக்சன் ரொம்ப நல்லா இருக்கும்...பாடல் வரிகள் அதை விட சூப்பர்..யுவன் குரலில்......   

இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு



2) எந்திரன் படத்தில் அனைத்து பாடலும் எனக்கு பிடிக்கும் குறிப்பாக இந்த பாடல்..ரொம்ப பிடிக்கும். பாடல் ஆரம்பிக்கும் பொழுது ரோபோ உடம்பில் இருதயம் துடிப்பது போல காண்பித்து இருப்பார்கள்..அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ரஜினி ரொம்ப சூப்பரா நடனம் ஆடி இருப்பார்...ஐஸ்வரியா அதை விட நன்றாக நடனம் ஆடி இருப்பார் .

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அழைக்குதோ
பூச்சியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

பாடகர்: ரகுமான், Kash n Krissy



1) மன்மத அம்பு இப்போது அனைவருடைய செல் போனிலும் இந்த பாடல் தான் கேட்கிறது. நீல வானம் ..இந்த பாடலை கமல் விஜய் டிவியில் பாடினர் அடடா என்ன சூப்பரா பாடுகிறார் அதை பார்த்து கொண்டே இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மெலோடி பாடலிலே இது தான் சிறப்பு. கமலே எழுதி அவரே பாடிஇருப்பார். 

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..





இன்னும் பாடல்கள் நிறைய இருக்கிறது ஆனால் பத்து பாடல் தான் எழுதணும் கூறியதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் இந்த தொடரை தொடர அன்புடன் ஆனந்தி அவர்களை அழைக்கிறேன்





52 comments:

ஆனந்தி.. said...

அட...எல்லாமே எனக்கு புடிச்ச பாட்டுக்கள்...:)))

மங்குனி அமைச்சர் said...

ஆஹா ....இன்னும் இந்த சாங் செலக்சன் முடியலையா ???? நடத்துங்க ...நடத்துங்க .........

நல்ல தேர்வு சௌந்தர் சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் இந்த தொடர்பதிவுகள் முடியலியா.......? இதுக்கும் ஒரு கெடாவெட்டு வைக்கனும் போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பாடல்கள், நல்ல செலக்சன்ஸ்....!

எஸ்.கே said...

அருமையான தேர்வுகள்! தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

எப்ப தான் இந்த தொடர் பதிவை நிறுத்த போறாங்களோ தெரியலையே .....சரி உன்னோட பாடல் எல்லாம் அருமை சௌந்தர் (template கமெண்ட்ஸ் தான் என்ன செய்ய ?)

Anonymous said...

எங்க பாத்தாலும் 2010 பாடல்கள், படங்கள்னு பதிவு மழையா பெய்யுது..
எப்பதான் முடிப்பீங்க???

Ramesh said...

என்னங்க தொடர்பதிவுங்கறது பதிவுலகோட கலாச்சாரம்.. அது எப்படி முடியும்.. பாவம்.. இவரப்போய் கலாய்க்கறீங்க அதுக்காக..

நல்ல தொகுப்பு நண்பா...

இப்படி போட்டுட்டு போவீங்களா...
அச்சச்சோ நானும் ஓட்டிட்டனோ..

சௌந்தர் said...

இந்திரா சொன்னது… 7
எங்க பாத்தாலும் 2010 பாடல்கள், படங்கள்னு பதிவு மழையா பெய்யுது..
எப்பதான் முடிப்பீங்க??////

இந்திரா நீங்க கூப்பிட்ட தொடர் பதிவு எழுதலாம் இருந்தேன் நீங்க தான் வேண்டாம் சொல்லிடிங்களே

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பாடல்கள், நல்ல செலக்சன்ஸ்....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்னும் இந்த தொடர்பதிவுகள் முடியலியா.......? இதுக்கும் ஒரு கெடாவெட்டு வைக்கனும் போல இருக்கே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாமே எனக்கு புடிச்ச பாட்டுக்கள்...:)))

சௌந்தர் said...

பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 8
என்னங்க தொடர்பதிவுங்கறது பதிவுலகோட கலாச்சாரம்.. அது எப்படி முடியும்.. பாவம்.. இவரப்போய் கலாய்க்கறீங்க அதுக்காக..

நல்ல தொகுப்பு நண்பா...

இப்படி போட்டுட்டு போவீங்களா...
அச்சச்சோ நானும் ஓட்டிட்டனோ..////

விடுங்க விடுங்க ரமேஷ் என்ன இருந்தாலும் நம்ம பசங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான தேர்வுகள்! தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Ramesh said...

//இது வரை இல்லாத உணர்விது

வாம்மா துரையம்மா இது வங்கக் கரையம்மா

நீல வானம் நீயும் நானும்//

இந்த மூனும் எனக்கும் பிடிக்கும்..

நல்ல தொகுப்பு செளந்தர்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாடல் எல்லாம் அருமை சௌந்தர்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தொகுப்பு செளந்தர்...

சௌந்தர் said...

வெறும்பய கூறியது...
இன்னும் இந்த தொடர்பதிவுகள் முடியலியா.......? இதுக்கும் ஒரு கெடாவெட்டு வைக்கனும் போல இருக்கே?////

நண்பா இரு மதி கிட்ட சொல்றேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஓகே வந்த வேலை முடிஞ்சது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெயஸ்ரீ என்னை கூப்பிடுறா.. போய் என்னான்னு கேட்டுட்டு வரேன்..

சௌந்தர் said...

வெறும்பய கூறியது...
ஜெயஸ்ரீ என்னை கூப்பிடுறா.. போய் என்னான்னு கேட்டுட்டு வரேன்.///

டெரர் அடிக்கப் போறார்...உன்னை

karthikkumar said...

நல்ல தேர்வு மச்சி (சத்தியமா டெம்ப்ளேட் இல்ல )

அருண் பிரசாத் said...

இது சரி வராது போல...இரு ஒரு புனைவு எழுதறேன்

sathishsangkavi.blogspot.com said...

Very Nice songs.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் கூறியது...

ஆஹா ....இன்னும் இந்த சாங் செலக்சன் முடியலையா ???? நடத்துங்க ...நடத்துங்க .........

நல்ல தேர்வு சௌந்தர் சார்///

மங்கு அடிச்சு கூட கேப்பாங்க . தொடர் பதிவு எழுதிடாத

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10 paattu?

Unknown said...

நல்ல தொகுப்பு..

Anonymous said...

வம்சம் பாட்டு தவிர அனைத்து பாட்டும் எனக்கும் பிடிக்கும் :)

மாணவன் said...

பத்துப் பாட்டு அனைத்துப்பாடல்களுமே அருமையான தேர்வு அண்ணே

பகிர்வுக்கு நன்றி

மாணவன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.........

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன் .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உம்.. நடக்கட்டும்.நடக்கட்டும்.. இந்த ஆட்டம் முடிஞ்சதும் வாரேன்.. ஹி..ஹி

Praveenkumar said...

அருமையான படங்கள் தொகுப்பு..!! முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சௌந்தர்...!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///இந்த தொடரை தொடர அன்புடன் ஆனந்தி அவர்களை அழைக்கிறேன்///

ஹி ஹி ஹி... மறுபடியுமா???? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

(என் மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கைக்கு......ரெம்ப நன்றிங்கோ...
எப்படியும்ம்ம்ம்ம்ம்ம்... ஆளு வச்சாவது..... அடுத்த வருஷத்துக்குள்ள...எழுதிருவேன்..)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சாங் செலெக்ஷன் எல்லாம் நல்லா இருக்கு... எல்லாம் கலந்த கலவை மாதிரி இருக்கு..
தேங்க்ஸ்.. :-))

I mean.. melody, folk.....mixed varieties selections.. Good choices :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எச்சூஸ்மி.....

விடாது கருப்புன்னு சொல்லுவாகளே.... அது இது தானுங்களா...???

சும்மா ஒரு டவுட்டு..
ஹி ஹி ஹி.. :-))

Anonymous said...

வாவ் !!! எல்லாமே எனக்கு புடிச்ச பாட்டுக்கள்

THOPPITHOPPI said...

உங்களது ரசனை அருமை

Jeyamaran said...

*/9 கோவா படத்திலே உருப்படியான...பாடல் என்றால் இது தான் ஜெய் மட்டும் தனியாக உட்கார்ந்து கேட்பார் அவர் மட்டும் இல்லை நாமும் தனியாக உட்கார்ந்து கேட்டால், கேட்டு கொண்டே இருக்கலாம்...

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ /8


nanbaa ithu enakkum romba pidikkum ithavida intha patta jaikku mattum sogama varathu enakku romba pidikkum ithu ennoda opnion than

Asiya Omar said...

பாடல் தேர்வு ரசிக்கும்படி உள்ளது சகோ.

டிலீப் said...

அருமையான தெரிவுகள்
2010-ன் சிறந்த 20 பாடல்கள்

ஹேமா said...

கமலின் பாடலுக்குப் பிறகு எதுவுமே அழ‌கில்லை சௌந்தர் !

Philosophy Prabhakaran said...

வம்சம் படத்து மன்னாதி மன்னரு உங்களுக்கும் பிடித்திருப்பதில் ஆச்சர்யம்...

Kousalya Raj said...

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே...!

நல்ல பாடல்களின் தொகுப்பு...! தமிழ் படம் பாட்டு மட்டும் கொஞ்சம் வித்தியாசம். மற்றவை எல்லாம் நானும் ரசிக்கும் பாடல்கள்.

Mathi said...

THANK U SOUNDER !! FOR ACCEPTING MY INVITATION.NICE SONGS.DIFF COLLECTIONS

எம் அப்துல் காதர் said...

அருமையான கலக்'சென்ஸ்' நண்பா!!

செல்வா said...

பாருயா எப்புடியெல்லாம் எழுதுறாங்க ..!!a

ஆர்வா said...

கோவா பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.. அடிக்கடி அந்த பாட்டை கேட்பேன். நல்ல தேர்வுகள்

Sriakila said...

'உன் பேரை சொல்லும்போதே' பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும், பாட்டு மட்டுமல்ல படமும்.

'இரும்பிலே இருதயம்' எந்திரன் பாட்டு என் பாப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

அனைத்துப் பாடல்களையும் முணுமுணுத்துப் பார்த்தால் கதம்ப சாதம் நினைவுக்கு வருகிறது.

வெல்டன் செளந்தர்!

Jaleela Kamal said...

பாடல் தேர்வுகள் அருமை

Jaleela Kamal said...

பாடல் தேர்வுகள் அருமை

Harini Resh said...

'உன் பேரை சொல்லும்போதே' பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)
அருமையான பாடல் தேர்வுகள் :)

 
;