Monday, December 13

அரசியல் கட்சியில் சேரும் பதிவர்கள்...!




தேர்தல் வர போகிறது அரசியல்கட்சிகள் எல்லாம் மும்முரமாக தேர்தல் வேலைகள்  பார்த்து கொண்டு இருக்கிறார்கள்......நடிகர்கள் எல்லாம் அய்யாவையும்,அம்மாவையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் நடிகர்கள் எல்லாம் கட்சியில் சேர்வதை பார்த்து நமது பதிவர்களுக்கும் ஆசை வந்து அதில் சிலர்  கட்சியில் சேர்வதற்காக  கட்சி ஆபீஸ் வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்கு  நேர்முக தேர்வு ஒன்றை வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்தார்கள்......... அவை எப்படி என்று பார்ப்போம்.

முதலில் அம்மா கட்சி வாசலில் போய் நின்றவர் நம்ம தலைவர் பன்னிக்குட்டி ராமசாமி
தொண்டகள் : உன் பெயர் என்ன..? 

ராம் : பன்னிக்குட்டி ராமசாமி 

அருகில் உட்கார்ந்து இருந்த அம்மா என்னய்யா பேரு இது பன்னிகுட்டி, நாய் குட்டின்னு...இவரை கட்சியில் சேர்க்கலாமா  வேண்டாமா என்று பார்த்து சொல்லுங்கப்பா...

தொண்டர்கள் : இவரை கட்சியில் சேர்த்தால் நாம் இவரை அழைத்து கொண்டு பிரசாரத்திற்கு போக முடியாது..

அம்மா : ஏன் 

தொண்டர்கள்:  இவரால் பன்றி காய்ச்சல் வந்து விடும் என்று மக்கள் பயப்படுவார்கள்...அதனால் இவர் நம் கட்சிக்கு வேண்டாம்...

சோகத்துடன் அய்யா வீட்டிற்கு  கிளம்பி சென்றார்....ராம்.

அதே தொண்டர்கள் இல்லை இவர்கள் வேறு 

தொண்டர்கள் : உன் பெயர் என்ன...?

ராம் : பன்னிக்குட்டி ராமசாமி 

தொண்டர்கள் : சமீபத்தில் செய்த சாதனை என்ன..?

ராம் : வலைசரத்தில் 1000 கமெண்ட்ஸ் தாண்டியது அதனால் பதிவுலகில் என்னை தலைவனாக ஏற்றுகொண்ட ரெண்டு பொடியன்கள் இருக்கிறார்கள் (அந்த பொடியன்கள் சௌந்தர், செல்வா) 

அய்யா : உன் பெயரே சரி இல்லையே...  அய்யா பேசி கொண்டு இருக்கும் போதே அவர் காதில் ஒருத்தர் வந்து இவரை 'அந்த கட்சியில் இருந்து துரத்தி அடித்து விட்டார்கள் அதான் இங்கே வந்து இருக்கிறார்' என்றார்.

சரி உன் தனித்திறமை என்ன....?

 ராம் : எவனாவது வந்து என்னை கிண்டல் பண்ணி கருத்து சொன்னா  அவனை துரத்தி துரத்தி அடிப்பேன். 

தொண்டரும் தலைவரும் பேசி கொண்டனர், தலைவரே இவரை கட்சியில் சேர்த்து மக்களுக்கு பணம் தராமலே ஓட்டு போட வைக்கலாம்,

தலைவர் : எப்படி சொல்கிறாய் ? 

தொண்டர்கள் : ஆம் தலைவரே இவரை மக்களிடம் காண்பித்து எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் இவரை உங்கள் வீட்டில் தங்க வைத்து விடுவோம், பிறகு உங்களுக்கு பன்றிகாய்ச்சல் வந்துவிடும் என்று சொன்னால் போதும் நமக்கு பணம் செலவு இல்லாமல் ஓட்டு போட்டு விடுவார்கள்...
                                                            ================

அடுத்ததாக அம்மாவை பார்க்க சென்றவர் தேவா... 

தொண்டர்கள் : நீ யார் உன் பெயர் என்ன ? 

தேவா : தேவா என்கிற போராளி 
தொண்டர்கள் : எங்க அம்மாவிற்கு போராளி எல்லாம் பிடிக்காது...
சரி உன் தனி திறமை என்ன , உனக்கு எத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்கள்..

தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு  இருக்கிறது. அதைவிட முக்கியமாக சொந்தகாரர்கள் ஆதரவு வேற இருக்கிறது. கவிதை எழுத தெரியும்...

தொண்டர்கள் : அப்படியா உனக்கு கவிதை எழுத தெரியுமா இந்த ஒரு காரணத்திற்காகவே நீ இந்த கட்சிக்கு வேண்டாம்.  
தேவா : என்னங்க இது நியாயமா....?? நான் எழுதுவது கவிதையே இல்லை சொன்னா நம்புங்க....!!

கோபத்துடன் ஒரு கவிதை எழுதி கொண்டு அய்யாவை பார்க்க சென்றார்... 

அய்யா இந்த போராளி 
ஒரு போராளியை 
சந்திக்க வருகிறான் 
சாதிக்க வருகிறான்...!.
என்று கவிதை இருந்தது 


தேவா : வணக்கம் அய்யா 

தலைவர் : வா தம்பி வா...நதியாக வந்து இந்த நிதியை சந்திக்க வந்தவனே...

தொண்டர்கள் : சொல் உன் தனி திறமையை என்னவென்று தயங்காமல் சொல்

தேவா : எது எழுதினாலும் நான்கு தடவை படித்தால் தான் கொஞ்சம் புரியும். 

தொண்டர் தலைவரிடம், "தலைவா இவரை வைத்து தேர்தல் அறிக்கை எழுத வைத்தால், அதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியாது....அது புரிவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்"....!! அதனால் இவரை கட்சியில் சேர்த்துகொள்ளலாம்...மக்களிடம் இருந்து தப்பித்து விடலாம்...!

தலைவர் : சரி... நல்ல யோசனை.
                                                     ===================

அடுத்ததாக வந்தார் டெரர் பாண்டியன். நேராக அம்மாவின் வீட்டுக்கே சென்றார்

தொண்டர் : உன் பெயர் என்ன..?

டெரர் : டெரர் பாண்டியன்

தொண்டர் : இது வரைக்கும் நீ எத்தனை பேரை அடித்து இருக்கே...?

டெரர் : என்னது போற இடம் எல்லாம் நான் தான் அடி வாங்குறேன் என்று தான் உங்க கட்சியில் சேரவே வந்தேன்...(என் பொண்டாட்டியே என்னை போட்டு அடிப்பா)

தொண்டர் : நீ பொண்டாட்டி கிட்ட அடி வாங்கிறதா  சொன்னதால உன்னை கட்சியில் சேர்க்கிறேன்.

டெரர் : ரொம்ப நன்றிங்க. எங்க என் மாப்ஸ் ?? 

யார் தேவாவா ?  அவர் இங்கே  இல்லை. 
அவர் அந்த கட்சியில் இருக்கார்...

அப்போ நானும் அங்கேயே  போறேன்....  
                                                     =====================


அடுத்ததாக அம்மாவின் வீட்டிற்கு சென்றவர் இம்சை அரசன் பாபு 

தொண்டர்கள் : உன் பெயர் என்ன..?
பாபு : இம்சை அரசன் பாபு 

தொண்டர்கள் : எப்படி உனக்கு இந்த பெயர் வந்தது 

பாபு : நான் காக்காவை வைத்து ஆராய்ச்சி செய்தேன். எந்த காக்கா ஆண், எந்த காக்கா பெண் என்று ஆராய்ச்சி செய்து காக்காவை எல்லாம் இம்சை செய்தேன். அதனால் வந்தது இப்போ என்னை காக்கா கூட்டம் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்...காக்காவை இம்சை செய்ததால் எனக்கு இம்சை அரசன் என்று பெயர் வந்தது.

தொண்டர்கள்: எதற்கு இந்த கட்சியில் சேர வந்தாய் 

பாபு : எனக்கு அம்மா கட்சி தான் மிகவும் பிடிக்கும். நீங்களே அடித்து விரட்டினாலும் 
இந்த கட்சியை விட்டு போக மாட்டேன்.  

தொண்டர்கள் அம்மாவிடம்....அம்மா இவரை நம் கட்சியில் வைத்து கொள்வோம். நாம் ஹெலிகாப்ட்டரில் பறக்கும் போது காக்கா வந்து மோதாமல் பார்த்து கொள்வார்...மேலும் இந்த வருடம் நீங்கள் காக்காவை பார்க்க கூடாது என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். அதனால் இவர் தேவைப்படுவர்.

அம்மா: தம்பி உன்னை என் கட்சியில் சேர்த்து கொண்டேன் போ போய் காக்கா விரட்டு..    

இன்னும் பதிவர்கள் கட்சியில் சேர்வதற்கு வரிசையில் காத்து கொண்டு இருக்கின்றனர்...அவர்கள் எந்த கட்சியில் சேர்ந்தார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்....

84 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Me first :-)

பெசொவி said...

கலக்கல்!

ஜெய்லானி said...

//தேவா : எது எழுதினாலும் நான்கு தடவை படித்தால் தான் கொஞ்சம் புரியும். //

ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முதலில் அம்மா கட்சி வாசலில் போய் நின்றவர் நம்ம தலைவர் பன்னிக்குட்டி ராமசாமி////

அடங்கொக்கா மக்கா.... பெரிய எடத்துல கொண்டு போயி இப்பிடி கோர்த்து விடுறியே?

ஜெய்லானி said...

//தொண்டர் தலைவரிடம், "தலைவா இவரை வைத்து தேர்தல் அறிக்கை எழுத வைத்தால், அதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியாது....அது புரிவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்"....!! அதனால் இவரை கட்சியில் சேர்த்துகொள்ளலாம்...மக்களிடம் இருந்து தப்பித்து விடலாம்...!//

இதான் ஹை லைட் சூப்பர் :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராம் : வலைசரத்தில் 1000 கமெண்ட்ஸ் தாண்டியது அதனால் பதிவுலகில் என்னை தலைவனாக ஏற்றுகொண்ட ரெண்டு பொடியன்கள் இருக்கிறார்கள் (அந்த பொடியன்கள் சௌந்தர், செல்வா)////

வேணாம், அழுதுடுவேன்.... !

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4
////முதலில் அம்மா கட்சி வாசலில் போய் நின்றவர் நம்ம தலைவர் பன்னிக்குட்டி ராமசாமி////

அடங்கொக்கா மக்கா.... பெரிய எடத்துல கொண்டு போயி இப்பிடி கோர்த்து விடுறியே?////

நீங்க பெரிய ஆல் இல்லையா...அப்போ பெரிய ஆல் கிட்ட தான் போவிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு இருக்கிறது.////

அடடடா.. முன்னாடியே தெரியாமப் போச்சே...?

ஜெய்லானி said...

//
அய்யா : உன் பெயரே சரி இல்லையே... அய்யா பேசி கொண்டு இருக்கும் போதே அவர் காதில் ஒருத்தர் வந்து இவரை 'அந்த கட்சியில் இருந்து துரத்தி அடித்து விட்டார்கள் அதான் இங்கே வந்து இருக்கிறார்' என்றார்.//

செம உள் குத்து

ஜெய்லானி said...

//////தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு இருக்கிறது.////

எல்லம் சைனீஸ் , பிலிபைனியா ?????

புரியாத பாஷையில கவிதை எழுதும் போதே நினைச்சேன் எங்கையோ வில்லங்கமா தெரியுதேன்னு ஹா..ஹ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேவா : எது எழுதினாலும் நான்கு தடவை படித்தால் தான் கொஞ்சம் புரியும்.///

ப்ளாக்ககில் தவறான தகவல்களைகக் கொடுப்பதறகாக கண்டிக்கிறோம்!
(நாலு தடவ படிக்கிறது சரி, ஆனா அதுக்கப்பறம் புரியும்னு சொல்றீங்க பாருங்க, அதான்!)

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
////தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு இருக்கிறது.////

அடடடா.. முன்னாடியே தெரியாமப் போச்சே...?////

இப்போ தெரிந்து போச்சி இல்லையா இனி..உசாரா இருங்க

சௌந்தர் said...

ஜெய்லானி சொன்னது… 9
//
அய்யா : உன் பெயரே சரி இல்லையே... அய்யா பேசி கொண்டு இருக்கும் போதே அவர் காதில் ஒருத்தர் வந்து இவரை 'அந்த கட்சியில் இருந்து துரத்தி அடித்து விட்டார்கள் அதான் இங்கே வந்து இருக்கிறார்' என்றார்.//

செம உள் குத்து///

ஆமா ஆமா அதில் வெளி குத்தும் இருக்கு

சௌந்தர் said...

ஜெய்லானி சொன்னது… 10
//////தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு இருக்கிறது.////

எல்லம் சைனீஸ் , பிலிபைனியா ?????

புரியாத பாஷையில கவிதை எழுதும் போதே நினைச்சேன் எங்கையோ வில்லங்கமா தெரியுதேன்னு ஹா..ஹ..////

இன்னும் ரெண்டு ஊர் சாரி நாடு இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டெரர் : ரொம்ப நன்றிங்க. எங்க என் மாப்ஸ் ??


யார் தேவாவா ? அவர் இங்கே இல்லை.
அவர் அந்த கட்சியில் இருக்கார்...


அப்போ நானும் அங்கேயே போறேன்.... ////

ஓ மேட்டர் அப்பிடியா.... கூட்டுக் களவானிகளா இவிங்க..... ஓக்கே ஒக்கே

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 11
////தேவா : எது எழுதினாலும் நான்கு தடவை படித்தால் தான் கொஞ்சம் புரியும்.///

ப்ளாக்ககில் தவறான தகவல்களைகக் கொடுப்பதறகாக கண்டிக்கிறோம்!
(நாலு தடவ படிக்கிறது சரி, ஆனா அதுக்கப்பறம் புரியும்னு சொல்றீங்க பாருங்க, அதான்!)////


எங்க புரியும் சொன்னேன் கொஞ்சம் தான் புரியும் சொன்னேன் அதுவும் புரியாது தான் என்ன செய்றது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அம்மா: தம்பி உன்னை என் கட்சியில் சேர்த்து கொண்டேன் போ போய் காக்கா விரட்டு.. /////

என்னது அம்மா காக்கா வெரட்டசொன்னாங்களா? கிழிஞ்து கிருஷ்ணகிரி....! அங்க உள்ள காக்காய வெரட்ட முன்னாடி 4 எலக்சன் முடிஞசிடும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடேய் நீயுமா...

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 15
////டெரர் : ரொம்ப நன்றிங்க. எங்க என் மாப்ஸ் ??


யார் தேவாவா ? அவர் இங்கே இல்லை.
அவர் அந்த கட்சியில் இருக்கார்...


அப்போ நானும் அங்கேயே போறேன்.... ////

ஓ மேட்டர் அப்பிடியா.... கூட்டுக் களவானிகளா இவிங்க..... ஓக்கே ஒக்கே////

ஆமாங்க அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லா திருட்டு வேலையும் செய்வாங்க

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 17
////அம்மா: தம்பி உன்னை என் கட்சியில் சேர்த்து கொண்டேன் போ போய் காக்கா விரட்டு.. /////

என்னது அம்மா காக்கா வெரட்டசொன்னாங்களா? கிழிஞ்து கிருஷ்ணகிரி....! அங்க உள்ள காக்காய வெரட்ட முன்னாடி 4 எலக்சன் முடிஞசிடும்!////

அது பாபுவுக்கு தெரியலை எப்போ பாரு அம்மா அம்மா சொல்லறார்

சுபத்ரா said...

இந்த “வணக்கம்” சொல்லி ஒரு படம் போட்டிருக்கியே.. அது யாரு?

karthikkumar said...

kalakkal

சௌந்தர் said...

சுபத்ரா சொன்னது… 21
இந்த “வணக்கம்” சொல்லி ஒரு படம் போட்டிருக்கியே.. அது யாரு?////

அதுதான் நான் நல்லா பாரு...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nallavelai en peru illai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 24
nallavelai en peru illai////

எழுதி வைத்து இருக்கிறேன் அடுத்த பதிவு

Arun Prasath said...

உள்ளேன் அய்யா

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 24
nallavelai en peru illai////

எழுதி வைத்து இருக்கிறேன் அடுத்த பதிவு

//

athila naan illai thaane..

சௌந்தர் said...

வெறும்பய கூறியது...
சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 24
nallavelai en peru illai////

எழுதி வைத்து இருக்கிறேன் அடுத்த பதிவு

//

athila naan illai thaane..////

நீயும் இருக்கே நண்பா நீ இல்லாமல் பதிவா

மங்குனி அமைச்சர் said...

நான் ஓராண்டு காலம் இன்பச்சுற்றுலா சென்று விட்டேன் ............

NaSo said...

சௌந்தர் யாருமே நம்ம கேப்டன் கட்சிக்கு போகலயா? அப்புறம் வருத்தகறி எப்படி நூறு நாள் ஓட்டுறது?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் கூறியது...

நான் ஓராண்டு காலம் இன்பச்சுற்றுலா சென்று விட்டேன் ............''


என்னையும் கூட்டிட்டு போகலன்னா வெட்டு குத்து ஆகிப்போயிடும்..

Arun Prasath said...

நான் ஏற்கனவே சுத்தீட்டு தான் இருக்கேன்... நான் வரிசைல இல்லபா!

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் சொன்னது… 30
நான் ஓராண்டு காலம் இன்பச்சுற்றுலா சென்று விட்டேன் .........../////

கொடநாடுக்கு சென்று விட்டிர்களா...?

சௌந்தர் said...

நாகராஜசோழன் MA கூறியது...
சௌந்தர் யாருமே நம்ம கேப்டன் கட்சிக்கு போகலயா? அப்புறம் வருத்தகறி எப்படி நூறு நாள் ஓட்டுறது?///

சிரிப்பு போலீஸ் அங்கே செல்வார் என்று நினைக்கிறேன்

அருண் பிரசாத் said...

சரி நீ சொன்னவங்க எல்லாம் பதிவருங்களா # டவுட்டு

Anonymous said...

கலக்கலா இருக்கு ம்ம்

Anonymous said...

தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு இருக்கிறது.//
இத முதல்லியே சொல்றது இல்லியாப்பா..எங்க தேவா அண்ணன் பிளாக்

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி நீ சொன்னவங்க எல்லாம் பதிவருங்களா # டவுட்டு//

இதுல உனக்கு என்ன டவுட் .............

இம்சைஅரசன் பாபு.. said...

ஏன் அம்மா கட்சில என்ன சேர்த்து விட்ட ..........பேசாம அய்யா கட்சில போன கொஞ்சம் பைசா வாத்து சம்பாதிசிருக்கலாம்

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 40
ஏன் அம்மா கட்சில என்ன சேர்த்து விட்ட ..........பேசாம அய்யா கட்சில போன கொஞ்சம் பைசா வாத்து சம்பாதிசிருக்கலாம்////

நீங்க தான் "அம்மா அம்மா" சொல்றிங்க

தினேஷ்குமார் said...

கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு களையெடுக்கும் தருவாயில் நானிருக்கேன்

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா..... சீக்கிரம் தொடருங்க.

sathishsangkavi.blogspot.com said...

very Interesting.....

மாணவன் said...

செம்ம கலக்கல் அண்ணே

தொடருங்கள்.........

கட்சியில் மாணவனுக்கு ஏதாவது மாணவர் சங்கத்தில் உறுப்பினர் பதவி காலியா இருக்கா இருந்தா சொல்லுங்க நானும் சேர்ந்துக்குறேன்

ஹிஹிஹி.......

sakthi said...

ரசித்தேன்
சிரித்தேன்

Mathi said...

nice karpanai ...

எஸ்.கே said...

அருமை!!

செல்வா said...

//தொண்டர்கள்: இவரால் பன்றி காய்ச்சல் வந்து விடும் என்று மக்கள் பயப்படுவார்கள்...அதனால் இவர் நம் கட்சிக்கு வேண்டாம்...
//

என்ன கொடுமை ..?!

செல்வா said...

50

செல்வா said...

//(அந்த பொடியன்கள் சௌந்தர், செல்வா)
//

எங்கள் தலைவர் பன்னிகுட்டி வாழ்க ..!!

செல்வா said...

//தொண்டர் தலைவரிடம், "தலைவா இவரை வைத்து தேர்தல் அறிக்கை எழுத வைத்தால், அதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியாது....அது புரிவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்"....!! அதனால் இவரை கட்சியில் சேர்த்துகொள்ளலாம்...மக்களிடம் இருந்து தப்பித்து விடலாம்...!
//

அங்க போய் தேடல் எழுதினா என்ன பண்ணுவ ..?

செல்வா said...

//அம்மா: தம்பி உன்னை என் கட்சியில் சேர்த்து கொண்டேன் போ போய் காக்கா விரட்டு..///

பாபு அண்ணா காக்காய் விரட்டுரியா ..?

dheva said...

தம்பி எப்படியோ கட்சில சீட்டு வாங்கிட்டோம்ல..அதுவரைக்கும் நம்மள யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...

எனது அன்பான பாசத்துக்குரிய பதிவுலக பெரு மக்களே...!

இனிமே... என் டி.வி.....கலைஞர் டி.வி

என் சினிமா .....மன்மதன் அம்பு

எனக்கு பிடித்த ப்ரோகிராம்........மானாட மயிலாட..............

எப்பவும் பிடிப்பது நிதிகள்.! வ்

Gayathri said...

ஹஹஹா அரசியல் அப்போதாவது ஸ்வரசியமாகும்

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது… 36
சரி நீ சொன்னவங்க எல்லாம் பதிவருங்களா # டவுட்டு////

இப்போ அவர்கள் பதிவர்கள் இல்லை அரசியல்வாதி

சௌந்தர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 38
தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு இருக்கிறது.//
இத முதல்லியே சொல்றது இல்லியாப்பா..எங்க தேவா அண்ணன் பிளாக்//////

இதோ தரேன் எந்த ப்ளாக் லிங்க் வேண்டும்...

சௌந்தர் said...

dineshkumar சொன்னது… 42
கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு களையெடுக்கும் தருவாயில் நானிருக்கேன்///

சீக்கிரம் எடுங்கள்...நாங்கள் பார்கிறேன்

சௌந்தர் said...

Chitra சொன்னது… 43
ஹா,ஹா,ஹா,ஹா..... சீக்கிரம் தொடருங்க.////

சீக்கிரம் தொடர்கிறேன் நன்றி...

சௌந்தர் said...

சங்கவி சொன்னது… 44
very Interesting.....///

முதல் வருகைக்கு ரொம்ப நன்றிங்க

சௌந்தர் said...

மாணவன் சொன்னது… 45
செம்ம கலக்கல் அண்ணே

ரொம்ப நன்றி


தொடருங்கள்.........

சீக்கிரம் தொடருங்கள்

கட்சியில் மாணவனுக்கு ஏதாவது மாணவர் சங்கத்தில் உறுப்பினர் பதவி காலியா இருக்கா இருந்தா சொல்லுங்க நானும் சேர்ந்துக்குறேன்///

உங்களுக்கு விரைவில் பதிவி...



ஹிஹிஹி......./////

:)

சௌந்தர் said...

sakthi சொன்னது… 46
ரசித்தேன்
சிரித்தேன்///

உங்கள் வருகையை ரசித்தேன்...

சௌந்தர் said...

Mathi சொன்னது… 47
nice karpanai ...///

நன்றி மதி

எஸ்.கே சொன்னது… 48
அருமை!!////

நன்றி எஸ்.கே

சௌந்தர் said...

கோமாளி செல்வா சொன்னது… 51
//(அந்த பொடியன்கள் சௌந்தர், செல்வா)
//

எங்கள் தலைவர் பன்னிகுட்டி வாழ்க ..!!///

இந்த தலைவர் 100 ரூபாய் கொடுத்து ஆளுக்கு 50 ரூபாய் எடுத்து கொள்ள சொன்னார்

சௌந்தர் said...

dheva சொன்னது… 54
தம்பி எப்படியோ கட்சில சீட்டு வாங்கிட்டோம்ல..அதுவரைக்கும் நம்மள யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...///

பார்த்து உங்க பதிவை படித்து விட போறாங்க பிறகு சீட் தர மாட்டாங்

எனது அன்பான பாசத்துக்குரிய பதிவுலக பெரு மக்களே...!

இனிமே... என் டி.வி.....கலைஞர் டி.வி

என் சினிமா .....மன்மதன் அம்பு

எனக்கு பிடித்த ப்ரோகிராம்........மானாட மயிலாட..............

எப்பவும் பிடிப்பது நிதிகள்.! வ்///

ஒன்னு சொல்ல மறந்துடிங்க அப்போ வரட்டா..!

சௌந்தர் said...

Gayathri சொன்னது… 55
ஹஹஹா அரசியல் அப்போதாவது ஸ்வரசியமாகும்///

நல்ல ஆசை தான் கருத்திற்கு நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா... என்ன என்ன..??
ஒரே கலாய்ப்பா இருக்குது... செம செம... பட் ஒன் கொஸ்டின்... :-)))
பதிவுலகத்துல ஒரு பிரபல பதிவர் மட்டும் விட்டுட்டீங்க....

என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னது.... யார் அவுரா?? தி கிரேட் சௌந்தர் தான்.... :-)

இவரை கட்சியில் சேர்த்தால், அடிக்கடி திடுக்கிடும் அழகான படங்கள் போட்டு...
மக்களை கவர் பண்ணி நம்ம கட்சியில சேர்த்துருவார்....

இவர் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதால்..... குத்து பாட்டு விமர்சனம் போட்டே...
பெரிய அளவுக்கு கட்சிய முன்னுக்கு கொண்டு வருவார்....

இப்புடி ஏகப்பட்ட மேட்டர்ஸ் உள்ள... உங்கள கட்சியில சேர்க்காம.....ச ச ச... போங்கப்பா..... கட்சி நல்லாவே இல்ல... :D :D

அன்பரசன் said...

கலக்கல்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தேவா : எது எழுதினாலும் நான்கு தடவை படித்தால் தான் கொஞ்சம் புரியும்//
ஹா ஹா செம கலாய்ப்பு...ஹா ஹா

Jeyamaran said...

*/தொண்டர் தலைவரிடம், "தலைவா இவரை வைத்து தேர்தல் அறிக்கை எழுத வைத்தால், அதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியாது....அது புரிவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்"....!! அதனால் இவரை கட்சியில் சேர்த்துகொள்ளலாம்...மக்களிடம் இருந்து தப்பித்து விடலாம்...!/*

ithuthan toppu

thala nammaloda katchi engapa 4 petti vaangi enna thalaivana ethukittinga apparam enna..........

Anonymous said...

கலக்கல்!

ஹேமா said...

காக்கா விரட்டவும் ஒரு கட்சி இருக்கா சௌந்தர் !

சி.பி.செந்தில்குமார் said...

செம காமெடி நைனா

சி.பி.செந்தில்குமார் said...

இன்னும் 5 பதிவகளை நக்கல் அடித்திருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா 75 வது வட

Anonymous said...

Pl recommend good bloggers to my new Political Party..,
தமிழகம்-- 1,00,000 பகுதிநேர அரசியல்வாதிகள் தேவை!!! சமூக சேவையாற்ற!!!
Pl visit for policies..,
http://saigokulakrishna.blogspot.com/2010/12/100000.html

MANO நாஞ்சில் மனோ said...

//அய்யா இந்த போராளி
ஒரு போராளியை
சந்திக்க வருகிறான்
சாதிக்க வருகிறான்...!.///
இந்த ஒரு கவிதையால் கட்சி கலைக்க படுகிறது............ஒடுங்கடோய்...:]]]

THOPPITHOPPI said...

ஹஹஹா

கருடன் said...

80

Anonymous said...

நண்பர்களே, இது தேர்தல் நேரம் யாரேனும் தபால் வாயிலாக ஒட்டு போடுவது எப்படி, எந்த முறையாக அணுக வேண்டும் என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா ? எழுதுவது மட்டும் அல்லாமல் மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து மற்ற இனைய தளங்களில்லும் பகிர்ந்து ஒரு புரட்சிய ஏற்படுத்துவோம். இது கள்ள ஓட்டுகளை நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்.

நம்மால் அனா ஒரு புரட்சியை ஆரம்பிப்போம், வெறுமனே நாட்டில் நடக்கும் வன்முறை, ஊழல் பற்றி பேசி, படித்து குமிறியது போதும். ஏதாவது செய்க ப்ளீஸ். இது என்னால் முடிந்த சிறய கல், அனைவரும் முன்வாருங்கள், முன்னேற்றி முன்னேறலாம்.

ஜெய் ஹிந்த்.

ஆனந்தி.. said...

:)))

சண்முககுமார் said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….


http://tamilthirati.corank.com/

Asiya Omar said...

கற்பனை காமெடி நல்லாயிருக்கு சௌந்தர்.

Asiya Omar said...

கற்பனை காமெடி நல்லாயிருக்கு சௌந்தர்.

 
;