Monday, November 29 42 comments

கூட்டுக்குழு.....




கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி, அவை ஒத்தி வைப்பு, நடந்துகொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன.


பாராளுமன்ற கூட்டுக்குழு,  பாராளுமன்ற கூட்டுக்குழு என்று சொல்கிறார்கள், கூட்டு குழு என்றால் என்ன..? கூட்டு குழு அமைத்தால் என்ன ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியுமா அல்லது இதற்க்கு முன்பு கண்டு பிடித்து இருக்கிறார்களா..? 


கூட்டுக்குழு அமைக்கப்படும் முறை 

பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக செயல்படவேண்டும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு சபைகளின் ஒப்புதலுடனோ அல்லது இருசபைகளின் தலைவர்கள் கலந்து பேசியோ பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு எத்தனை பேர் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.


பொதுவாக பாராளுமன்ற கூட்டுக்குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு இடம் பெறுவார்கள் உதாரணமாக, ஒரு கூட்டு குழுவில் 15 எம்.பி.க்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துகொண்டால், அவர்களின் 10 பேர் மேல் சபையையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த குழு, தனது பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது


கூட்டுக்குழு செயல்படுவது எப்படி..?

பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட அந்த பிரச்னை பற்றி விசாரணையை தொடங்கி விடும். முதலில் விசாரணை நடத்தப்படும் இரண்டாவதாக,  வருங்காலத்தில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த விசாரணையின் போது சம்பத்தப்பட்ட துறையில் நிபுரணத்துவம் பெற்றவர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் இந்த பிரச்னையில் ஆர்வம் காட்டுகிறவர்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை குழு பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப பிரச்னைகளில் உரிய ஆலோசகர்களையும் நியமித்துக் கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் யோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளாலாம். கூட்டுகுழுவின் விசாரணை நடைமுறைகள் ரகசியமாக நடைபெற்று வந்தாலும், விசாரணையின் நிலவரம் குறித்து குழுவின் தலைவர் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கலாம்.

இது வரை அமைக்கப்பட்ட குழுக்களால் பயன் கிடைத்ததா..?

கடந்த 25 ஆண்டுகளில் 4 விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டன . ஆனால் இதில் ஒரு விவகாரத்தில் கூட குறிபிடத்தக்க பயன் கிடைக்க வில்லை என்ற கருத்து உள்ளது. 


முதலில் கடந்த 1987-ம் ஆண்டு 'போபர்ஸ் பீரங்கி ஊழல்' விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார் குறித்து குழு அமைக்கபட்டது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஸ்வீ டனின் "போபர்ஸ்" ஆயுதநிறுவனம் கொடுத்த லஞ்சப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிகமாக இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் விசாரணையை புறக்கணித்து விட்டனர். இதனால் அந்த குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 


இரண்டவதாக 1992-ம் ஆண்டில் ஹர்சத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையில் முதலீடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப்பின் குழுவின் அறிக்கை தாக்கல் செய்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தனி நீதி மன்றம் அமைப்பதற்கு 5 ஆண்டு காலம் பிடித்து குறிபிடத்தக்கது. அத்துடன் அந்த குழுவின் பல பரிந்துரைகள் அமல் படுத்தப்படவே இல்லை.


3 வதாக அவ்வளவாக பிரபலம் இல்லாத கேதான் பரேக்கின் பங்கு ஊழல் புகார் குறித்து அமைக்கப்பட்ட குழுவாகும். கேதான்பரேக்கிற்கு வங்கிகள் மற்றும் "கார்பரேட்" நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து இந்த குழு விசாரணைநடத்தியது. விசாரணைக்குப்பின் பங்கு மார்க்கெட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தாக்கல் செயயப்பட்ட அறிக்கை பின்னர் நீர்த்துப்போனது.

4 வதாக 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தாக புகார் குறித்து விசாரித்தது. 2004-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குழுவின் அறிக்கையில் அந்த குழுவின் அறிக்கையில் குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்த புகார் நிருபிக்கப்பட்டதுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரைகளும் இடம் பெற்று இருந்தன.

இந்த வரிசையில் ஸ்பெக்ட்ரம் இடம் பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஆளும்கட்சி தயங்குவதற்கு காரணம், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே...  

இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..?



  
Saturday, November 27 53 comments

கலக்கல் போட்டோஸ்....

இது யார் என்று கேட்க்க கூடாது.... 




என்னா டெக்னிக்...! 



                                              இதற்கும் உலங்கு வானுர்தியா...?




                                                       ஏதோ நடந்து இருக்கு.....!



                                     தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்



                                              இது என்ன சென்னையா....?




                அனைவரும் மறுபக்கம் மறுபக்கம் சொல்கிறார்களே அது இதுதானோ








                                                               no comments



                                                   நன்றாக பாருங்கள்....



                                           பிடித்து விட்டேன்.... பிடித்து விட்டேன்



                                                          LANDING GEAR NOT WORKING



                                                                          welcome



Thursday, November 25 56 comments

இது விருது வழங்கும் நேரம்...!



கலாச்சாரத்தை பற்றிய விவாதம் பதிவுலகில் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு தெரிந்து அனைவரும் லிவிங் டு கெதர் தேவை இல்லாத ஒன்றே என சொல்கிறாகள்....ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா... 

இது போல விவாதங்கள் வருவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம். பதிவுலகம் என்பது வெறும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் இல்லை என்பதை இந்த விவாதம் தெளிவாக சொல்கிறது. எதிர் பக்கம் இருந்து வாய் கூசா சொற்கள் வந்தாலும் மலை போல நின்று தன் வாதத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம். நம் கலாச்சாரத்திற்கு தீங்கு என்றவுடன், நம் கலாச்சரத்தைப் போற்றும் வகையில் பதிவெழுதிய... மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும்....




தேவா,கே.ஆர்.பி செந்தில், மங்குனிஅமைச்சர்,வால்பையன், தேனம்மைலெக்ஷ்மணன், கௌசல்யா, ஜெயந்தி, தெய்வசுகந்தி, ஆனந்தி ,சித்ரா, சாந்தி , நண்டு@நொரண்டு, நிலாமதி, பனிதுளிசங்கர், செல்வா, LK, இம்சைஅரசன்பாபு,   சிரிப்பு போலிஸ் ரமேஷ், எஸ்கே, வெறும்பையன் ஜெயந்த, வெங்கட் ,ஜீவன் பென்னி, டெரர்பாண்டியன், பன்னிக்குட்டி ராமசாமி, கணேஷ், விந்தை மனிதன்,  சதீஷ் பாண்டியன், தனிகாட்டுராஜா, பிரியமுடன் வசந்த்,  ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி, விஜய், நாகராஜசோழன், பிரியமுடன் ரமேஷ், பாலாஜி சரவணா, வருண்,




மாதவன், ஹேமா, அருண் பிரசாத், பதிவுலகில் பாபு, பிரசன்னா, தொப்பி தொப்பி, அப்துல்காதர், கும்மாச்சி, சிவா, சுசி, தமிழ்அமுதன், அன்பரசன், ஸ்ரீஅகிலா, ஆர்.கே.சதீஷ்குமார், சி.பி.செந்தில்குமார், ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, பாலாஜி சரவணா, ஜெயமாறன், கலாநேசன் ,கவிசிவா, அப்பாவி தங்கமணி, பட்டாபட்டி, காயித்திரி, ஜோதி, தமிழ் உதயம், சே.குமார், சுற்றுலாவிரும்பி அருண்பிரசாத், வில்சன், வினோ, மனோ சாமிநாதன்,  ஸ்டார்ஜன், தத்துபித்து பிரபாகரன் ,ஜெய்லானி, ஜில்தண்ணி யோகேஷ், தில்லுமுல்லு, பெயர் சொல்ல விருப்பமில்லை, சசிகுமார், ஹரிஸ், சேலம் தேவா, ஆசியாஉமர்,  SASHIGA, R.கோபி, அன்புடன் மலிக்கா, ராதாகிருஷ்ணன், வானதி, மரகதம், அமைதிசாரல்,



கலாச்சார நாயகர்கள் என்ற இந்த விருதை கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இது போக யார் யாரெல்லாம் நம் மண்ணின் மீதும் கலாச்சாரம் மீதும் தீராப் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்த விருதினை கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்..




77 comments

விஜயகாந்த் ஒரு சிங்கம்....!

                                        ஏய் யாரடா என் படத்தை தடுப்பது 



நேற்று ஒரு செய்தியை படித்தவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சி (என்ன செய்தியா.... இருங்க சொல்றேன், என்ன ஒரு ஆர்வம்....??! ) 

'எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த்' இது தான் அந்த செய்தி.  இதை படித்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை, விருதகிரி படம் வரும் அதை பார்க்கவேண்டும் என்று ஆவலோடு இருந்தேன், யார் தடுகிறார்கள் என்று சிங்கத்திடம் சாரி விஜயகாந்த் இடம் போய் கேட்கலாம் என கிளம்பி சென்றேன்...

நேராக விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன் அங்க ஒரு கை தடுத்து "எங்கே வந்தாய் யார் நீ"  என்றது, நானும் யாரென்று பார்த்தேன் கேப்டன் படைகள் தான் அவை. 

நான் : சிங்கத்தை பார்க்க வந்தேன் 

கேப்டன் படை : அதுக்கு நீ வண்டலூர் ஜூ தான் போகனும்

நான் : விஜயகாந்தை பார்க்க வந்தேன் 

கேப்டன் படை : எதற்கு....?


நான் பேட்டி எடுக்கலாம் வந்து இருக்கேன், என்னை உள்ளே விடுங்கள் என்றேன்.  அப்போது உள்ளே இருந்து விஜயகாந்த் வந்தார்..... 'என்ன இங்கு பிரச்னை யார் தம்பி நீ...?'  நான் சார் 'நான் உங்களை பேட்டி எடுக்க வந்து இருக்கேன், உங்கள் படை என்னை உள்ளே விட மறுகிறார்கள் என்றேன் . உடனே  கேப்டன் படைக்கு திட்டு "யோவ் என்னை பேட்டி எடுக்க எவனாவது வர மாட்டானானு  நான் பார்த்து கொண்டு இருக்கேன், வந்த ஒருத்தனையும் விரட்டி அடித்து விடுவிங்க போல" 

நீங்க வாங்க தம்பி நான் பேட்டி கொடுக்கிறேன்.... 

நான், 'சார் நேத்து உங்கள் பேட்டியை பார்த்ததில் இருந்து எனக்கு தூக்கமே வரலை.  உங்கள் படத்தை வெளிவர விடாமல் யரோ தடுக்க முயற்சிக்கிறார்கள்  என்று கேள்வி பட்டவுடன்...எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை, விருதகிரி படம் எப்போது வரும் என்று நான் ஆர்வமாய் இருக்கேன்...?!

விஜயகாந்த் : கவலைபடாதீங்க தம்பி உங்களுக்கு மட்டும் தனியா போட்டு காட்டுறேன்...

நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....போன வாரம் கூட உங்க படம் ஒன்னு பார்த்தேன் 

விஜயகாந்த்  : போன வாரமா ...? போனவாரம் என் படம் ஒன்னும் ரீலிஸ் ஆகலையே. 

நான் : அப்படியென்றால் அது யார் படம் சார் நீங்க நடிச்ச படம் தான் நார்னியா படம் பார்த்தேன். அதில் நீங்க வருவிங்க ஆனா கிராபிக்ஸ் பண்ணி இருப்பாங்க 

எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த். 

நான் : இப்படி ஆவேசமா பேசுற அளவுக்கு யார் உங்களை தடுகிறார்கள்

 விஜயகாந்த்  : பின்ன என்ன தம்பி எங்க வீட்டுகாரம்மா தான் தடுக்கிறாங்க நான் சூட்டிங் கிளம்பும்போது  போது வெங்காயம் வாங்கிட்டு வா, தக்காளி வாங்கிட்டு வா, சொன்னா எனக்கு கோபம் தாங்கலை அதான்....!

நான் : என்ன சார் "நான் யார் என்று காட்டுவேன்" என்று சொல்லி இருக்கீங்க இது வரை நீங்க யார் என்று யாருக்கும் தெரியாதா...? அப்புறம் எப்படி கட்சி ஆரம்பித்தீர்கள்...?!

விஜயகாந்த் : அவன் அவன் யாருன்னு தெரிந்தா கட்சி ஆரம்பிக்கிறான் ( இதை சொல்லும் போது அவர் கண்கள் சிவந்தது ஓகே ஓகே கூல் கூல் என்று சொல்லி தப்பித்தேன்) 

விஜயகாந்த் : "எனது முந்தைய மெகா ஹிட் படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன். 

நான் : என்ன மெகா ஹிட் படமா மகா......... படம் ஆச்சே

நான் : சார் நீங்க கடவுள்யிடம் மட்டும் தான் கூட்டணி என்று சொல்றீங்க ஏன்..சார் ?

விஜயகாந்த் : மைண்ட்வாய்ஸ் (ஒருத்தனும் என்னை சேர்த்து கொள்ளமாட்டுறான் நான் என்ன செய்ய....!)  இப்போதும் சொல்றேன் எப்போதும் சொல்வேன் கடவுளிடம் மட்டும் தான் கூட்டணி ஏன்னா  அவர் தான் பங்கு கேக்க மாட்டார்


காங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கிவிட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்படுவேனா... கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேனே. 

நான் : என்ன சார் இப்போது உங்களிடம் 100 கோடி இருக்காமே

விஜயகாந்த் : அடப்பாவிங்களா என்னிடம் 100 கொடி கூட இல்லை


நான் : சார் உங்க கேப்டன் டிவியை எங்க சார் கொண்டு போவிங்களா அப்போ நாங்க எல்லாம் என்ன செய்வது (ஒரு வேளை அமெரிக்காவில்  ஆபிஸ் வைப்பாரோ ?) 
குறிப்பு : கேப்டன் டிவியில் வடிவேல் காமெடி போடுவது இல்லை 

நான் : சரிங்க சார் விருதகிரி எப்போது ரீலிஸ் 

விஜயகாந்த்  : படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

நான் : போங்க சார் அதற்கு எதுக்கு தியேட்டர்..?

நான் : சார் ஸ்பெக்ட்ரம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க  சார் 

விஜயகாந்த் : யார் தம்பி ஸ்பெக்ட்ரம் ஹிந்தி பட ஹீரோயினா..?

விஜயகாந்த் : தம்பி நானும் பார்த்து கொண்டே இருக்கேன் நீங்க ஏன் பயந்து பயந்து உட்கார்ந்து இருக்கீங்க 

நான் : பின்ன என்ன சார் சிங்கத்து கூட உட்கார்ந்து இருந்தா பயமா இருக்காதா....?

விஜயகாந்த் : வாங்க தம்பி பிரியாணி வாங்கி தரேன் ....!
ஒரு பிரியாணிக்காக எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு 

தற்போதைய செய்தி : அடுத்த வாரம் முதல் விஜயகாந்த் கிளினிக் ஆரம்பிக்கிறார் அனைத்தும் இலவசம் டிசம்பர் 3ம் தேதியன்று   டாக்டர் பட்டம் வழங்கபடுகிறது


உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது 

Tuesday, November 23 57 comments

ஆலோசனை நேரம்...



நமக்கு பல நோய்கள் வருவது உண்டு, ஆனால் நமக்கு தெரிந்தது காய்ச்சல் தலைவலி இது மட்டும் தான் தெரியும். பல நோய்கள் பற்றி நமக்கு தெரிவதே இல்லை, அந்த நோய்கள் வந்த பிறகு தான் சிறிது அளவு தெரிந்து கொள்கிறோம்..நோய்கள் சிறிது அளவு இருக்கும் போதே நான் அதை கண்டு கொள்வது இல்லை, நோய்கள் தன்மை பெரிது ஆனதும் தான் அதன் வீரியம்  நமக்கு தெரிகிறது. நோய்கள் சிறுதாக இருக்கும் பொழுது கவனிக்க வேண்டும்...அதை பற்றியது தான் இந்த பதிவு

சில நோய்களை அதன் அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம், நோயின் தன்மை அதிகரித்து விடுவதற்குள் அதை சரி செய்து விடலாம். நோய்கள் பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றி  தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தலை வலி

நமக்கு தலைவலி வந்தால் கடையில் மாத்திரை வாங்கி போட்டு கொள்வோம். சாதாரண தலைவலி என்றால் பரவாயில்லை, ஆனால் சில அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும். ஏன் என்றால் தலையில் கட்டிஇருக்கலாம்...! 

வலதுபக்கம் தலைவலி இருந்தால் இடது பக்கம் கை கால்கள் மரத்து போய் உணர்ச்சிகள் குறைந்து விடும், கை கால்கள் வலி இருக்கும், இடது தோள்பட்டை வலி இருக்கும், வாந்தி மயக்கம், இடது கண் பார்வை குறைபாடு வரும். 

என்ன சாபிட்டாலும் வாந்தி வந்து விடும் தண்ணீர் குடித்தால் கூட, வலிப்பு (பிட்ஸ்) வரும்   

இடது பக்கம் தலை வலி வந்தால் அதே போல் எல்லாம் வலது பக்கம் அறிகுறிகள் இருக்கும் இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நிச்சயம் தலையில் கட்டி இருக்கலாம்...! 

தலையில் கட்டி இருந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்தால், சில பக்க விளைவுகள் வரலாம், தலையில் வலதுபக்கம் அறுவை சிகிச்சை செய்தால், இடதுபக்கம் ஒரு கை ஒரு கால்கள் செயல் இழந்து போகும். பேச முடியாது. அதே போல இடது பக்கம் அறுவைசிகிச்சை நடந்தால் வலதுபக்கம் செயல் இழந்து போகும். தவறாக அறுவைசிகிச்சை செய்தால் கூட இது போல் பக்க விளைவுகள் ஏற்படும்.  


சிலருக்கு தோள் பட்டை வலி இருக்கும் ஆனால் அது தோள் பட்டையால் ஏற்படுவது இல்லை, நமது கழுத்து வலி தான் தோள்பட்டை வலியாக உணரப்படும்,  முதுகுதண்டு எலும்புகளை டிஸ்க் 1, டிஸ்க் 2 என்று சொல்வார்கள் கழுத்தில் இருக்கும் ஒரு டிஸ்க் முலம் ஏற்படுவது தான், தோள்பட்டை வலி வந்தால் அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால், ஒரு பக்கம் கை தளர்ந்து விட்டும் எதையும் அந்த கையால் பிடிக்க முடியாது...தோள் பட்டைவலியை அறுவை சிகிச்சை செய்யாமலும் சரி செய்ய முடியும்.


அறிகுறிகள்: கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்து இருந்தால் மரத்து போய், அது தன்னை மீறி கிழே விழுந்து விடும், கை விரல்கள் செயலிழந்து போகும், வாந்தி, மயக்கம், குனிந்து கிழே பார்க்க முடியாது...

கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். இப்படி செய்தால் தோள் பட்டை வலி வராமல் தவிர்க்கலாம்

முதுகுவலி இது அனைவருக்கும் இருக்கும் பிரச்னை முதலில் சிறு வலியாக இருக்கும் அதை நாம் கவனிக்க தவறினால் பெரிய பிரச்னை ஆகிவிடும், மேல் முதுகுவலியும், கீழ்முதுகு வலி, என்று வகைகள் மிகவும் கவனிக்க படவேண்டியவை, அனைவருக்கும் சாதரணமாக வரும் முதுகு வலி என்றால், அது சரி ஆகிவிடும், சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.

அறிகுறிகள் : இரவில் தூக்கமின்மை, கால் மரத்து போய் விடும், கால் கட்டவிரல் தன்னால் அசையும், தன்னால் சிறுநீர் வந்து விடும் அடக்க முடியாது, கிழே குனியமுடியாது, எப்போதும் கால்கள் மரத்தது போல் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தும், பிசியோ தரபிஸ்ட் செய்தும் வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் 
ஆனால் அறுவை சிகிச்சை செய்தால், பக்கவிளைவுகள் வரலாம், அறுவை சிகிச்சையில் தவறு நடந்தாலும், முடக்கு (paralyzed) இடுப்புக்கு கிழே உணர்ச்சி இல்லாமல் போய்விடும் கால்களை அசைக்க முடியாது. முதுகு வலி இருந்தால் உடனே கவனிப்பது நல்லது....       



முதுகு வலி இருப்பவர்கள் கவனிக்க 

*  தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்

*  உறங்கும் போது நேராக படுக்க வேண்டும் முதுகு நன்றாக நேராக இருக்க வேண்டும். சிறிய ஒரே ஒரு தலையணை மட்டும் வைத்தால் நல்லது (தரையில் உறங்கவும்.)

*  இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகதடை, மற்றும் மேடு பள்ளத்தில் வேகம் குறைவாக செல்லவேண்டும்

*  கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்
*  எடை அதிகம் உள்ள பொருளை தூக்க கூடாது 


முதுகு வலி குறைய : தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.


எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுக்கு சொல்லிருக்கிறேன் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்

Friday, November 19 84 comments

கலாச்சார மாற்றம் ............. இது தேவையா...?



இப்பொழுது பதிவுலகில் எது கலாச்சாரம் என்ற பதிவுகள் தான் ஓடி கொண்டு இருக்கிறது அனைவரும் அவர் அவர்களுக்கு தெரிந்த (பிடித்த) கலாச்சாரம் பற்றி எழுதுறாங்க நானும் கலாச்சாரம் என்றால் என்ன..? சொல்றேன் 

முன்னோர்கள் காலத்தில் கணவன் இறந்து விட்டால், மனைவியை கணவர் உடன் எரித்து விடுவார்கள்...இது ஒரு கலாச்சாரம் .....இது நல்ல கலாச்சாரமா....? இல்லை அதனால் இதை எல்லாம் எதிர்த்தார்கள் அதனால் அந்த கலாச்சாரம் இப்போது இல்லை. கலாச்சாரம் என்பது மாநிலத்திற்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறு படும்.மதத்திற்கு மதம் வேறு படும்,

எங்க தாத்தாவுக்கு அம்மா எல்லாம் (பாட்டி) சட்டையே போட்டு இருக்க மாட்டாங்க ஆனா அப்போ அதான் கலாச்சாரம் அப்பறம் சட்டை போட்டாங்க வெறும் புடவை தான். பிறகு பாவாடை சட்டை போட்டாங்க, சுடிதார், இப்போ பேன்ட் ஷார்ட்ஸ் போடுறாங்க ஆடைகள் விஷயத்தில் கலாச்சாரம் மாறினால் பரவாயில்லை ஆனால் எந்த இடத்திற்கு போகிறோமோ அதற்க்கு ஏற்றார் போல் ஆடை அணிய வேண்டும்..

எப்போதும் நமக்கு வெளிநாட்டு கலாச்சாரம் மேல் தான் மோகம் வெள்ளைக்காரன் எது செய்தாலும் அதை நாம் உடனே செய்து விடுகிறோம் வெள்ளைக்காரன். சூரியகுளியல் குளிக்கிறான் என்றால் அவன் நாட்டில் சூரியன் ஒளி சில மாதங்கள் மட்டும் தான் வரும் அதனால் சூரியசக்தி வேண்டும் என்று அப்படி செய்கிறார்கள். அதே மாதிரி நாமும் செய்ய முடியுமா...? வெளிநாட்டுக்காரன் செய்யும் நல்லது எல்லாம் நம்ம மக்கள் கண்களில் படாது எது நமக்கு கெடுதலோ அதை தான் தேர்ந்தெடுப்போம். வெளிநாட்டு காரர்கள் ஏன் நமது கலாச்சாரம் பிடிக்கிறது ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதால் தான் 


திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்வது அதான் LIVING TOGETHER (அப்படிதானே...? எங்க பாக்குறீங்க உங்களை தான் கேட்கிறேன்???) 

ஏன் இப்படி LIVING TOGETHER முறை இவர்கள் தேர்ந்துஎடுக்கிறார்கள் என்றால் "பார்த்து பார்த்து" திருமணம் செய்து அதில் பிரச்னை வந்து விவாகரத்து செய்து கொள்வதை விட சிறிதுநாட்கள் பழகி விட்டு பிடித்து இருந்தால் கல்யாணம் செய்துகொள்வார்கள் இல்லை என்றால் பிரிந்து விடுவார்கள் அதுதான் LIVING TOGETHER,யார் இதை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை....   


கொஞ்சம் டவுட்:)))))
*  LIVING TOGETHER வாழ்க்கையில் இவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்றால் இவர்கள் பிரியும் போது அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விகுறி..?  

*  திருமணம் ஆகி இருந்தால் தன் மகன் வீடு மகள் வீடு என்று உரிமையுடன் போக முடியும் ஆனால் LIVING TOGETHER முறையில் வாழ்ந்தால் அவர்கள் வீட்டுக்கு போக முடியுமா, போனாலும் உரிமையுடம் இருக்க முடியுமா..? இல்லையென்றால் அவர்களே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்...! ஆமாம் தனித்தனியே வாழும் மனுசங்களுக்கு யாரு இருப்பா வயசான காலத்துல பாத்துக்க....????

*  வெளி நாட்டில் LIVING TOGETHER முறையில் பிறந்த குழந்தைகள் அவர்கள் பிரிந்தவுடன் சர்ச் அல்லது காப்பகத்தில் வளர்க்கப்படுகிறார்கள் அந்த குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறார்கள் 

*  இது ஆண்களுக்கு சாதகமான விசயம் LIVING TOGETHERமுறையில் வாழ்தால் ஜீவனாம்சம் கிடைக்காது.

டவுட் இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...


அனைத்திற்கும் ஒரு விதி இருக்கிறது சூரியனை பூமி சுற்றுவது ஒரு விதி, அதை மாற்றி சுற்ற வைக்கிறேன் என்று சொன்னால் என்ன நடக்கும் உலகம் அழியும் அதே போல் நமக்கு என்று கட்டுபாடு இருக்கிறது அதை மாற்றி செய்தால் நம் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர்கள். சந்ததியினர் எல்லாம் தெளிவான இரு வாழ்க்கை வாழ வேண்டுமா...இல்லை எனக்கு பிடிச்சத நான் செய்வேன் என்ற யாருடனும் ஒத்துப் போகாத அகங்கார படுகுழியில் விழ வேண்டுமா? ஆமா.. நான் கேக்குறேன்....நான் நான்னு வாழ்ற ஒரு வாழ்க்கை வாழ்க்கையாங்க...?   நினைச்சு பாக்கவே கேவலமா இருக்கு...... 

"அட அட என்ன என்னமோ பேசிட்டு போறேனே நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போறேன்" எங்கநாட்டு கலாச்சாரதிற்கு இந்த வாழ்க்கை முறை ஒத்து வராது எங்களுக்கு காதல் திருமணம் இருக்கு, பெரியோர்களால் நிச்சயக்கப் பட்ட திருமணம் இருக்கிறது. உங்களுக்கு LIVING TOGETHER வாழ்கை முறை பிடித்து இருந்தால் அந்த வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றுங்கள் உங்கள குழந்தைக்கு அந்த வாழ்கைமுறையை பின்பற்ற சொல்லுங்கள், 


ஏழைகள் இப்படி LIVING TOGETHER என்ற முறையை தேர்ந்துஎடுப்பது இல்லை பணம் கொளுத்து போய் இருப்பவர்களும் வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இந்த முறை புனிதமானது என்று சொல்கிறார்கள்





Monday, November 15 56 comments

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...



warrior தேவா ரஜினி படங்களை  பற்றி தொடர் பதிவு எழுத சொன்னார் நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லை என்றாலும் ரஜினி படங்களை பார்த்து விடுவேன் ஒருதடவை படையப்பா படம் பார்க்க சென்றோம்  ரஜினி படம் பார்க்கப்போனால் டிக்கெட் உடனே கிடைத்து விடுமா என்ன...?  3 மணி ஆட்டத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு  பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை...!அதில் ரஜினி டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்போது எந்திரனில் என்னமா டான்ஸ் ஆடுறார்...இதுவரை ரஜினி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார் 

10 : நினைத்தாலே இனிக்கும் 
இந்த படத்தில் கமல் கூட நடித்து இருப்பார் MSV குரலில் ரஜினி பாடும் சிவசம்போ பாடல் எனக்கு பிடிக்கும் இதில் டேப் ரெக்கார்டில் ஒரு குரல் வரும் அதை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது..அந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு காட்சியில் ரஜினி சிகிரெட்டை எடுத்து பற்ற வைப்பார் அதே போலே பத்து தடவை செய்யவேண்டும் என்று சொல்வார் பூர்ணம் விஸ்வநாதன், அந்த காட்சிகள் எனக்கு பிடிக்கும் 



9 : ஆறிலிருந்து அறுபது வரை
எதார்த்தமான திரைப்படம் இந்தப்படத்தை ஒரு நாள் டிவியில் பார்த்தேன். ரஜினியின் நடிப்பு அபாரமாக இருந்தது, இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன வயதில் அப்பா இறந்து விடுவார் ரஜினி தான் குடும்பத்தை காப்பாற்றுவார் தம்பி தங்கையை படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பார் ஆனால் தம்பி தங்கை இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் குடும்பம் கஷ்டப்படும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தாலி பறித்து விடுவார்கள் அப்போது ரஜினி காப்பாற்றி கொடுப்பார் அந்த பெண் வாழ்த்தி "உங்க குடும்பம் நல்லா இருக்கணும்" சொல்வார் ரஜினி வீட்டுக்கு வரும் பொழுது அவர் மனைவி குடிசை தீ  விபத்தில் இறந்து விடுவார் இந்த காட்சி உருக்கமான காட்சி. இப்போது உள்ள மனிதர்களுக்கும் இந்த கதை பொருந்தும்


8 : தில்லு முல்லு 
ரஜினியின் படங்களில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த படத்தில் முழுவதும் நகைச்சுவை இருக்கும் எனக்கு அந்த இன்டர்வியூ காட்சிகள் பிடிக்கும் இறுதி காட்சியில் கமல் வருவது மேலும் சிறப்பு ...ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...


7 : படையப்பா   
இந்த படத்தில் இவர் ஓபனிங் சீன் ரொம்ப சூப்பரா இருக்கும் ye who are you man ரம்யா கிருஷ்ணன் கேட்க என் பேரு படையப்பா...என்று பாடல் ஆரம்பிக்கும் அந்த காட்சிமுதல் கடைசி காட்சி வரை ரஜினி பட்டையை கிளப்பி இருப்பார் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் படையப்பா தான் மிக பெரிய திருப்பு முனை.. பிடித்த காட்சிகள் ஒரு காட்சியில் சிவாஜி, ரஜினியை கூப்பிட்டு சல்யூட் அடிக்க சொல்வார். ரஜினி சல்யூட் அடித்தவுடன் "யாரு இவன் என் பையன்" என்று சொல்வார்....

6 : பில்லா
இந்த படத்திற்கு முன்பு தான் எம் ஜி ஆர் ரஜினியை கூப்பிட்டு "நீ என்ன சூப்பர் ஸ்டாரா" என்ன கேட்டு மிரட்டியதாக சொன்னார்கள் அதற்க்கு தான் முள்ளும் மலரும் பாடலில் "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" எனக்கு ஒரு கவலை இல்லைஎன்ற பாடல் வைத்தார்.ரஜினி பில்லா படத்திற்கு பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து காட்டினார். பிடித்த காட்சிகள் ஓட்டலில் இருந்து ரஜினி தப்பிக்கும் பொழுது நடக்கும் காட்சிகள் பிடிக்கும் ரெண்டாவது ரஜினியின் நடிப்பு பிடிக்கும் இந்த படத்தை எங்க அஜித் நடித்து இருப்பார்  துளி கூட ரஜினியின்சாயல் இல்லாமல். அடுத்து "பில்லா" II வர போகிறது ...   


5 : சந்திரமுகி
பாபா படத்திற்கு பிறகு வந்த படம் "நான் யானை இல்லை குதிரை" என்று சொல்லி அதை செய்து காட்டியவர் ரஜினி. படம் முதல் பாதி காமெடியாக சென்று கொண்டு இருந்தாலும், சந்திரமுகி வந்த பிறகு படம் வேகம் அதிகரிக்கும் வேட்டையன் வந்த பிறகு அட என்னமா வில்லன் கதாபாத்திரம் நடிக்கிறார் ரஜினி இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் வேட்டையன் தான். லக்க லக்க லக்க.... சொல்லும் அந்த காட்சியை ரஜினியே வைத்து இருக்கிறார் விரைவில் "சந்திரமுகி" பார்ட் II வருகிறது 

4 : சிவாஜி 
ஷங்கர்இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி: த பாஸ்...80 களில் வந்த ரஜினியை அப்படியே இளமையாக காட்டினார் ஷங்கர்.வெள்ளைக்காரன்  மாதிரி  வந்து  கலக்கினர். பிடித்த காட்சி, வில்லன்  ஆதி  ஜெயிலுக்கு  போகும்  போது  ரஜினி  பேசும்  அந்த  வசனம் சூப்பரா இருக்கும். கிளைமேக்ஸில் மொட்டை பாஸ் வருவார். எப்போதும் ரஜினி படத்தில் எதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்... 


3 : எந்திரன்.
ரஜினி ரசிகர்கள் முதல் அனைத்து சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த திரைப்படம். எப்போதும் போல ரஜினிக்கு ஓபன் சாங் இல்லை ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் பிடித்த படம் . ரஜினி மாதிரியே ரோபோ நடந்து வரும்...அது எனக்கு பிடித்தகாட்சி 

2 : படிக்காதவன் 
அண்ணன் தம்பி கதை சிவாஜி அண்ணன் ரஜினி தம்பி. அண்ணி கொடுமை தாங்காமல், அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டை வீடு வெளியேறுவார் ரஜினி. தன் தம்பியை படிக்க வைத்து தான் படிகாதவனாய்..! பிடித்த காட்சி அம்பிகா கர்ப்பமா இருப்பதாக நினைத்து தன் காரில் ஏற்றுவார் வண்டி போகாது மறு நாள் பார்த்தா அம்பிகா கர்ப்பமா இருக்க மாட்டார் அதற்க்கு மறு நாள் கர்பமா இருப்பார் அந்த காட்சியில் ரஜினி குழப்பமா இருப்பார் அந்த காட்சி நன்றாக இருக்கும் இப்போதும் அந்த காட்சியை பார்த்தாலும் அந்த காட்சியை ரசித்து சிரிக்கலாம் 


1 பாட்ஷா   
பாட்ஷா  போல எத்தனையோ படம் எடுத்தாலும் இந்த படத்தை போல வேறு எந்த படமும் வெற்றி பெற வில்லை ஆனந்தராஜ் ரஜினியை போட்டு அடிப்பார் "என்னடா" ரஜினி அடி வாங்குகிறார் என்று இருந்தால் அடுத்த காட்சியில் ரஜினி அடிப்பார் அந்த காட்சியில் ரஜினி அவர் தம்பியை "உள்ளே போ" என்று சொல்வார் இன்னும் அந்த வசனம் எனக்கு கேட்டு கொண்டு இருக்கிறது சண்டை முடிந்த உடன் அவர் வயிற்றில்  இடைவேளை என்று போடுவார்கள் இன்னும் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் பாட்ஷா மாதிரி எத்தனை படம் வந்தாலும் ஒரே ஒரு பாட்ஷா தான். பாட்ஷா பார்ட் II விரைவில்...! எப்போதும் ரஜினி படம் என்றால் பாட்ஷா தான் முதலிடம்




Friday, November 12 35 comments

என்கவுண்டரில் சந்தேகங்கள்....


கோவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கடத்தல்காரர்கள் இதற்கு முன் இவர்கள் என்ன என்ன குற்றங்கள் செய்து இருக்கிறார்கள்..?
ஆனால் இதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றது இந்த கடத்தலில் சந்தேகம் இருக்கிறது


*  பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...?

*  கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..? 

*  எந்த வித டிமான்ட் எவ்வளவு பணம் தேவை என்று ஏன் எதுவும் கேட்கவில்லை கடத்தல்  காரர்கள் ..?


இவர் எப்போதும் வரும் டிரைவர் இல்லை என்று கூறுகிறார்கள்... குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பும் பொழுது ஏன் வாசல் வரை வந்து கூட வழி அனுப்ப முடியவில்லை வேறு டிரைவர் வந்தால் எப்போதும் வரும் டிரைவர் ஏன் வரவில்லை கேட்கவேண்டும் அல்லது நாமே சென்று பள்ளியில் குழந்தைகளை விட்டு விட்டு வரவேண்டும்


அதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.

கேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர் இதையடுத்துதான் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் 3 குண்டுகள் பாய்ந்து அவன் உயிரிழந்தான்,” என்றார் சைலேந்திர பாபு.



*  ஏன் கைதியை அதிகாலை தான் கூப்பிட்டு செல்ல வேண்டுமா..?

*  கைதிக்கு கைவிலங்கு போடலையா...?எப்பொதும் இந்த மாதிரி கைதிக்கு காலிலும் விலங்கு மாட்டி இருப்பார்கள்...    

கொலைக்கு கடத்தல் மட்டும் தான் காரணமாக இருக்குமா...? தொழில் போட்டி சொத்து தகராறு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஏன் என்றால் கடத்தல்காரன் எந்த வித டிமான்ட் வைக்கவில்லை என்பதே பெரிய சந்தேகம் வருகிறது.



*  என்கவுண்டர் நடக்க சில காரணகள் இப்படி இருக்கலாம்

*  இப்படி செய்தால் தான் இனி கடத்தல்கார்களுக்கு ஒரு பயம் வரும்

*  இந்த கடத்தலுக்கு பின் யாராவது பெரும்புள்ளி இருக்கலாம் அவர் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கலாம்...

*  இந்த குழந்தையின் தந்தையே பணம் கொடுத்து இப்படி என்கவுண்டர்செய்ய சொல்லி இருக்கலாம்

என்ன தான் போலீஸ்கார்கள் "இவன் தப்பிக்க நினைத்தான் அதனால் தான் நாங்கள் சுட்டோம்" என்றால் தமிழ் நாட்டில் ஒருத்தன் கூட அதை நம்பமாட்டான் எல்லாருக்கும் தெரியும் இது திட்டமிட்ட கொலை தான் என்று இந்த என்கவுண்டரை பார்த்து கடதல்கார்கள் பயந்தால் சரி தான் ஆனால் போலீஸ்காரர்கள் இதையே என்கவுண்டரை காரணம் காட்டி அனைவரயும் மிரட்டினால் என்ன செய்வது..?



இந்த கடத்தலால் அவதி படபோவது மோகனின் குடும்பம் தான். மோகனுக்கு தண்டனை கிடைத்தது சரிதான், எந்த தவறும் செய்யாத அவர்கள் குடும்பம் என்ன தவறு செய்தது...? இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்...! கடத்தல்காரன்

மோகன் மனைவி கூறியது, "என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார், அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி, கொலை செய்யப்பட்ட குழந்தைகள் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகளும், ஒரு பாவமும் அறியாதவர்கள். என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படாவிட்டால் கோர்ட்டு மூலம் தண்டனை கிடைத்து இருக்கும். இப்போது நானும் என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும்" என்று கூறினார்....  


அந்த குடும்பத்தை நாம் மன்னிப்போம்....



Wednesday, November 10 43 comments

"வ" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...



இந்தப்படத்தின் கதை முன்பே தெரிந்து இருந்தாலும் கதையில் எந்தச் சோர்வும் இல்லை இந்த இயக்குநர்  புஸ்கர்-காயத்ரி இயக்கிய ஓரம்போ படமே நன்றாக இருந்தது அந்த படமே இந்தப் படத்தை பார்க்க தூண்டியது,  காதல் கதை அதிரடி சண்டைக்காட்சிகள் என்று படம் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமானதே...ஒரு சின்ன விஷயத்தை ரெண்டே கால் மணி நேரம் திரைக்கதையாக்கி இருப்பது பாராட்டுக்குரியது தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு சிவா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது

ஹீரோ துபாய்க்கு வேலைக்குப் போகின்றான்..அங்கு தண்ணி அடிக்க கூடாது என்று சொல்கிறார்கள் மறுநாள் சவூதி போய் ஆகணும் அதற்குள் ஒரு குவாட்டர் கட்டிங் அடிக்கணும் என்று ஆசைப் படுகிறார் அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை

படத்தின் மொத்தக் கதையும் ஒரே இரவில், சென்னையில் நடக்கிறது...படத்தில் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன் ஆனால் சுறா... சுறா...என கூப்பிட சொல்கிறார் இந்த பெயரை சொல்லும் போது விஜய்யின் சுறா படம் நினைவுக்கு வந்து தொல்லை செய்கிறது விஜய் ரசிகர் என்று சொல்லி விஜய்யை கலாய்க்கிறார்..

ஒரு காட்சியில் தன் அக்காவிடம் போன் பேசிக்கொண்டே (பீச்சில் நடிகர்கள் மாதிரி கட்அவுட் வைத்து இருப்பார்களே அதே போல்கட்அவுட்) இவர் அஜித் கட்அவுட் பின்பு நின்று கொண்டு விஜய் கட்அவுட்டின் தோளை தட்டி கொடுப்பார்...இந்த படத்திலும் விஜய்யை கிண்டல் செய்து இருப்பார்கள்...

இந்தப் படத்தில் டைமிங் காமெடி தான் இருக்கும் அதை நன்றாக கவனித்தால் தான் நமக்கு தெரியும் ஒரு காட்சியில் சிவாவும் சரணும் பேசி கொள்வார்கள் 

சிவா: கேரளா ரொம்ப அழகான ஊர் 
சரண் : நல்ல ஊர் தான் என்ன...அந்த ஊரில் எல்லாம் மலையாளி..

கதாநாயகி லேகா வாஷிங்டன் இவர் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் தான் முழு கதாநாயகியாக நடித்து இருக்கார் இவரை "மக்கு... மக்கு" சொல்வார்கள் +2 மூன்று வருடமாக படித்து கொண்டு இருக்கிறார் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார்.. அந்த காட்சி முதல் இவர்களின் தேடலில் கதாநாயகியும் சேர்ந்து கொள்கிறார் சில இடங்களில் சிவா கையில் சரக்கு கிடைக்கும் ஆனால் அவரால் குடிக்க முடியாது..சீட்டு ஆட்டத்தில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றி விடுவார் அதனால் வில்லன் ஜான் இவரை தேடுவார் அப்போது சரணை பார்த்து பயந்து போய்விடுவார்கள் வில்லன் ஆட்கள்... ஏன் சரணை பார்த்து பயந்தார்கள் என்று ஒரு சஸ்பென்ஸ்..ஓரம் போவில் நடித்த ஜான் இதிலும் வில்லனாக இரட்டை வேடத்தில் கலக்கி இருக்கிறார்.

சென்னையில் முன்பு சில பைக்குகள் எரித்தார்கள் அதை படத்தில் சொல்லிய விதம் அருமை அதற்க்கு சிறிய கதையும் இருக்கிறது சரணின் தீக்குச்சி வாங்கி அவர் வண்டியை எரித்து விடுவார்... ஜெயிலில் அந்த தீக்குச்சியிடம் கேட்ப்பார்

சரண் : என்னை எரித்து விட மாட்டிங்களே..   
தீக்குச்சி : அது நான் இல்லை என் தோஸ்த் கஜாவுக்கு தான் மனுஷங்களை எரிக்க ரொம்ப பிடிக்கும் நான் வெறும் வண்டியை தான் எரிப்பேன் 
சரண் : ஏன் (சீட்டா) என் வண்டியை எரிச்சீங்க

தீக்குச்சி :  தர்மன்ஒரு குருட்டு பிச்சைக்காரன் தமயந்தி என்ற ஒரு நாய் வளர்த்தார் ஒரு நாள் தமயந்தி குப்பை தொட்டியில் இருந்து எதையோ கவ்வி கொண்டு வந்தது அது என்ன என்று பார்த்தால் குழந்தை. அதற்கு தண்டபாணி என்று பெயர் வைத்தார்கள். அன்று முதல் தமயந்தியும் தண்டபாணியும் உடன்பிறவா சகோதரர்கள். ஒரு நாள் தமயந்தி ரோட்டை கிராஸ் செய்யப்பார்த்தது.. அன்று ஒரு வண்டி தமயந்தி மேல் ஏறியது. அவ துடிக்கத் துடிக்க இன்னும் நிறைய வண்டிகள் ஏறியது. தமயந்தி அந்த இடத்துலேயே இறந்துட்டா. தமயந்தி மேல வண்டி ஏறி இறந்து போனதைக் கேட்ட தர்மனும் இறந்து போய்ட்டார். பிறகு அந்தக் குப்பைத்தொட்டிக் குழந்தை மீண்டும் அனாதை ஆகிடுச்சு. அந்தக்குழந்தை யாருன்னு தெரியுமா..? நான் தான் அது" என்று சொல்வார் தீக்குச்சி. அதனால் தான் வண்டியை எல்லாம் எரிக்கிறேன் அந்த காட்சியில் தீக்குச்சி நடித்த விதம் அருமை... (தீகுச்சி அந்த கதாபாத்திரத்தின் பெயர் )


சில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீட்டு ஆடும் காட்சிகள் கார் சேசிங் காட்சிகள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. படத்தில் அனைத்தும் இரவு கட்சிகள் எல்லாம் நன்றாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் நீரவ்ஷா..
படத்தில் மாணிக்க விநாயகம் ஒரு லாரியில் லிப்ட் கேட்டு வருவார் அவர் ஏன் வருகிறார் என்று தெரியவில்லை... 
சரண் கதாப்பாத்திரத்தில் சஸ்பென்ஸ் வைத்து அதை கிளைமேக்சில் பயன்படுத்தி முடித்தது நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல் சரக்கு..


 
;