மங்காத்தா அஜித்தின் 50 வது படம். அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள், படம் மே 1 அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றார்கள் ஆனால், வெளிவரவில்லை, ரசிகர்களுக்காக விளையாடு மங்காத்தா..என்ற ஒரு பாடலைவெளியிட்டார்கள்.. அந்த பாடல் ஏற்கனவே பிரபலமாகிவிட்டது.. இன்று மங்காத்தா படத்தின் அணைத்து பாடல்களையும்..வெளியிட்டுயிருக்கிறார்கள்..
நேற்றே இணையத்தில் வெளியிட்டதால் நேற்று இரவே பாடல்களை கேட்டு விட்டேன்.. இப்போது ஒவ்வொரு பாடல்களையும் அறிமுகம் செய்கிறேன்..
முதல் பாடல் ஏற்கனவே வெளியிட்ட விளையாடு மங்காத்தா பாடல் தான்..
யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித், சுசித்ரா , பிரேம் ஜி அமரன், அனிதா பாடியுள்ளார்கள்..பாடல் வரி கங்கை அமரன்
விளையாடு மங்காத்தா !
விட மாட்டா எங்காத்தா !!
வெளி வேஷம் போடாட்டா!
இந்த வெற்றி கிட்ட வாராதா !!
அஜித்தின் வாழ்கையை மனதில் வைத்து எழுதிய பாடல் போல் வரிகள் இருக்கிறது ஏற்கனவே இந்த பாடல்கள் வெற்றிபெற்று விட்டது.. இந்த வருடத்தின் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக இது இருக்கும்... இந்த பாடலையே கிளப் மிக்ஸ் செய்து இருக்கிறார்கள்..
அடுத்த பாடல் மேலோடி பாடல் sp சரண் பவதாரணி குரலில்..
கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்..!!
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..!!
என் தேடல் நீ உன் தேவை நான்..!!
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..!!
என் பாதி நீ உன் பாதி நான்..!!
என் ஜீவன் நீ உன் தேகம் நான்..!!
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்..!!
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..!!
நிரஞ்சன் பாரதி வரிகள் கவிதையாக... மற்ற பாடல்களை விட இந்த பாடலே எனக்கு மிகவும் பிடித்தது.. மனதிற்குள் மெல்ல மெல்ல நுழைந்து மனதை ஆக்கிரமிக்கிறது... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது..!!!
வாடா பின்லேடா என்ற பாடலை கிரீஸ் சுசித்ரா.. பாடியுள்ளார்கள்...வாலி வரிகளில்
வாடா பின்லேடா ஒளியாதே அச்சோ டா
டிவின் டவர், ஜப்பானின் ஹைக்கூ , ரஷ்யா, என வாலியால் மட்டுமே பாடல் எழுத முடியும்.. இந்த பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... இந்த பாடல் சுமார்ரகம் தான்.
மச்சி ஓபன் தி பாட்டில்.. என்ற ஃபோக் சாங் . மனோ, பிரேம்ஜி அமரன், திப்பு ,ஹரிசரண், நவீன் பாடியுள்ளார்கள்.. வாலி வரிகளில்....
இது அம்பானி பரம்பரை
ஐஞ்சாறு தலை முறை
ஆனந்தவளர்பிறை தான்
நாம கொட்டுன்னு ஒருமுறை
சொன்னாக்க பல முறை
கொட்டாதோ பண மழை தான்
நாம முன்னேற படிக்கட்டு
நாம் வாழ்வில் கிரிக்கெட்டு
இந்த பாடல் நடுவில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்ற பாடல் வரி வருகிறது. இந்த பாடலில் அஜித் என்ட்ரியாக இருக்கும் என நினைக்குறேன்.. ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.
மதுஸ்ரீ, யுவன்ஷங்கர்ராஜா சோகமான மேலோடி பாடல்... வாலி வரிகளில்...
ஏன் நண்பனே என்னை ஏய்த்தாய் யோ..
என் பாவமாய் வந்து வாய்தாய்
உன் போலவே நல்ல நடிகன்
ஊரெங்கிலும்யில்லை ஒருவன்
கேட்க கேட்க பிடிக்கும் பாடல் இது இனிமையாக இருக்கிறது.. அனைவரையும் கவரும் பாடலாக இப்பாடல் இருக்கும் யுவன் சங்கர் குரல் நன்றாக இருக்கிறது...
இது எங்க பல்லேலக்கா
நீ கேளு கொக்கமக்கா..
நியூடைப்பு நாக்கு முக்கா
இந்த பாடல் சுமார் ரகம் தான் பாடல் கேட்பதற்கு போர் அடிக்கவில்லை... இப்பாடலில் தயாநிதி அழகிரி, மனைவி அனுஷாவும் பாடியுள்ளார்.
பில்லா படத்தில் வருவது போல் இதிலும் தீம் மியூசிக் ஒன்று நன்றாகயிருக்கிறது, இனி அணைத்து டிவிகளில் இந்த தீம் மியூசிக்கே ஆக்கிரமிப்பு செய்யும்....
படம் வருவதற்கு முன்பு பாடலை கேட்டு விட வேண்டும் அதில் ஒரு ஆர்வம், எப்படியிருந்தாலும் படத்தில் பாடல் வர தானே போகிறதென்று இருக்க முடியாது. ஒரு அஜித் ரசிகனுக்கு, பாடல் அணைத்து கலவையானதாக அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பது சிறப்பு, மொத்தத்தில் இந்த வருடமுழுவதும் மங்காத்தா பாடல்கள் தான் கேட்க போகிறது.... அடுத்து விநயாகர்சதுர்த்தி வேறு வரபோகிறது... தெருவெங்கும் மங்காத்தா பாடல் பட்டைய கிளப்ப போகிறது....
பட்டைய கிளப்பும் ட்ரைலர்...
முந்தையப் பதிவு : அடைமழைக் காதல்.....
Tweet | |||||
6 comments:
இப்போதான் , உங்களின் முந்தைய பதிவுக்கு லேட் ஆஜர் ரோல் போட்டு விட்டு வந்தேன். அதற்குள் சூடாக இன்னொரு பதிவு.... ஆஜர்...ஆஜர்....ஆஜர்....
The trailer looks very good.
தள பாடல்கள் கொடுத்ததற்கு நன்றிகள்..
:)
அருமை பதிவு.....
சில பாடல்கள் உண்மையிலேயே சுமார் ரகம் தான்.
//தள பாடல்கள் கொடுத்ததற்கு நன்றிகள்.. //
விஜய் ரசிகர்கள் கோச்சுக்க போறாங்க கருண் ;)
இந்தா கேட்டுட்டு சொல்றேன்.
நீ அஜித் ரசிகனா?
Post a Comment