Monday, September 27

ஸ்டார் ஒரு பார்வை part I



சௌந்தர் இவர் பதிவுலகில் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது. (யார் சொன்னது இப்படி தான் பல பேர் சொல்கிறார்கள்) பெரிய நடிகர்( பதிவர்) இவர் நடித்த முதல் திரைப்படம்(பதிவு) அது copy paste பதிவு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க இவருக்கு பப்புவை போல தினம் ஒரு பதிவு போட புடிக்காது பிரபல நடிகர் அஜித்குமார் சொன்னதை போல இப்படி தினம் ஒருமொக்க போஸ்ட் போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம் என்று இருக்கிறார் சௌந்தர் இவருடைய தற்போதைய படம் (பதிவு) ஸ்டார் ஒரு பார்வை என்ற படத்தில் நடித்து உள்ளார் இவர் சிறப்பு அம்சம் ப மு க என ஒரு கட்சி நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு இவர் ஆட்சி தான்.



சினிமா உலகம் ஒரு பெரிய உலகம் , இதில் பலர் வந்து காணாமல் போய் இருகிறார்கள் நிலைத்து நின்றவர்கள் சிலர் மட்டுமே அடுத்து வரும் பதிவுகளில் மேலும் பல நடிகர்களை பற்றியும் அவர்கள் நடித்த முதல் மற்றும் கடைசி படம் பற்றி பார்ப்போம் 




தமிழ் பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் பாடிய பாடல்கள் இப்போதும் மிகவும் பிரபலமானவை இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் சுமார் 15 திரைப்படத்தில் நடித்து உள்ளார். இவரும் ஒரு கொலை வழக்கில் சிறை சென்று வந்தார் பின்னர் குற்றவாளி இல்லை என்று இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யபட்டார்.ஹரிதாஸ் திரைப்படம் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கில்) ஓடி சாதனை படைத்தது. இவர் கடைசியாக சிவகாமி என்றதிரைப்படத்தில் நடித்தார். சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்தது, சிவகாமி படத்தின் படபிடிப்பின் போதே சற்று உடல்நலம் குன்றி இருந்தார்,மருத்துவமனையில் சிகிச்சை பலன்அளிக்காமல் நவம்பர் 1, 1959, இயற்கை எய்தினார்..






                                           
                    
                                                                      
காதல் மன்னன்.
இவரது இயற் பெயர் கணேசன். ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்ததால் பின்னாளில் அவருக்கு ஜெமினி கணேசன் என்று வைக்கப்பட்டது. சிறுது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிபிடதக்கது .முதல் படம் :1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.






கடைசி படம்: அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் முதலில்  சிவாஜி நடிப்பதாக இருந்தது பின் வேறு சில காரணங்களால் ஜெமினி கணேசன் நடித்தார், அந்த வயதிலும் காதல் காட்சியில் நடித்து தான் ஒரு காதல் மன்னன என்று நிருபித்தார். ஜெமினி திரைபடத்தில் நடிகராகவே ஒரு ஐந்து நிமிடம் நடித்து இருந்தார்.

சிறு நீரகக் கோளாறு காரணமாக 2005ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்ட்டது. ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது



ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
யாருன்னு கேட்காதீங்க M.R. ராதா நடித்த முதல் படம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்து. M.R. ராதாவும் நாடக துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான், இவர் நாடகங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு, சினிமா கை கொடுக்க வில்லை. இவர் நடித்த முதல் சில படங்கள் வெற்றி பெறவில்லை பின்பு நாடகத்துறைக்கே திரும்பினார் 


ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, திரைத்துறைக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார் ரத்தக்கண்ணீர் மாபெரும் வெற்றியை பெற்றது அதற்கு பிறகு இவர் குணசித்திர வேடத்தில் நடித்தார். மு.க முத்து நடித்த சமையல்காரன் என்ற படத்தில் நடித்தார் பின் சில படங்களில் நடித்தார் தனக்கென்று ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வந்தார் ராதா மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இயற்கை எய்தினார்.அரசுமரியாதையை ஏற்க குடுபத்தினர் மறுத்துவிட்டனர். இன்னும் இவரை போல ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வில்லை 


     

59 comments:

செல்வா said...

இன்னிக்காவது வடை கிடைச்சதே ..!!

சுசி said...

நல்ல தகவல்கள் சௌந்தர்.

செல்வா said...

// தினம் ஒரு மொக்க போஸ்ட் போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம்//

என்னைய சொல்லுற மாதிரி தெரியுது ..?

இம்சைஅரசன் பாபு.. said...

சௌந்தர் உங்களுக்கு ஒரு கேள்வி
ரஜினிகாந்த் -பரட்டை
கமலஹாசன் -சப்பாணி
இதே போல் ஜெமினி ஒரு பெயர் உண்டு தெரிந்தால் போடுங்கள் பார்போம்

செல்வா said...

//இதே போல் ஜெமினி ஒரு பெயர் உண்டு தெரிந்தால் போடுங்கள் பார்போம்//

ஜெமினி .. இதே ஒரு பேரு தானே ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு நண்பா... இவர்கள் அனைவருமே காலத்தால் அழியாத கலைஞர்கள்... இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம்...

அருண் பிரசாத் said...

நல்ல முயற்சி செளந்தர். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. மேலும் சில சுவாரசிய தகவல்களை தந்தால் அருமையாக இருக்கும்

செல்வா said...

///இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம்...
//
அப்படின்னா சௌந்தருக்கு விவரம் பத்தாது அப்படின்னு சொல்லுறீங்களா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

@selva

செல்வா உங்க மொக்கையை போடாதீங்க உண்மையாக ஒரு பெயர் உண்டு சொல்லுங்க பார்போம்

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
சௌந்தர் உங்களுக்கு ஒரு கேள்வி
ரஜினிகாந்த் -பரட்டை
கமலஹாசன் -சப்பாணி
இதே போல் ஜெமினி ஒரு பெயர் உண்டு தெரிந்தால் போடுங்கள் பார்போம்////

அது என்ன பெயர் என்று எனக்கு தெரியும் ஆனா நான் போடலை

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் சொன்னது…

அது என்ன பெயர் என்று எனக்கு தெரியும் ஆனா நான் போடலை

///

என்னமா சமாளிக்கிறாங்க...

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது…
சௌந்தர் சொன்னது…

அது என்ன பெயர் என்று எனக்கு தெரியும் ஆனா நான் போடலை

///

என்னமா சமாளிக்கிறாங்க..////

இப்போ என்ன பெயர் தெரியனுமா அந்த பெயர் சாம்பார்

செல்வா said...

//இப்போ என்ன பெயர் தெரியனுமா அந்த பெயர் சாம்பார்//

அப்ப ரசம் இல்லையா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

//இப்போ என்ன பெயர் தெரியனுமா அந்த பெயர் சாம்பார் //


பப்ளிக் ல உணமையை சொன்னதற்காக உங்களை கட்சியில் இருந்து நீக்க தேவா அண்ணாவுக்கு பரிந்துரை செய்கிறேன்

dheva said...

என்ன நடக்க்குது இங்க... 30ஆம் தேதி எந்திரன் பார்க்க ரெடியாகிகிட்டு இருக்குற நேரத்துல...

மலரும் நினைவுகள்...சரி..ஒத்துக்குறேன்...! ஒரு ரீ கால் பண்ணி பாக்குறோம்...

அருணு நல்ல முயற்சின்னு சொல்றானே...என்ன முயற்சி இருக்கு இதுல....!

டெய்லி ஒரு மொக்கை போடுறத விடன்னு யார கேக்குறான் செளந்தர்....?

என்னங்கோ.. என்ன என்னமோ பேசுறீங்கோ...!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..... ஒர் சர்பத் ஒண்ணு போடுப்பா சில்லுன்னு.......!

dheva said...

மீண்டும் எல்லோரையும் சந்திக்க நல்லதொரு வாய்ப்பளித்த.....தம்பி செளந்தருக்கு..ஒரு கேள்வி..

ஏம்பா.. கோவிலுக்கு போய்ட்டு வந்து ஒரே பழைய படமா பாத்து இருகீங்கோ? என்னா ஆச்சு...புது சிடி ஒண்ணும் கிடைக்கலையா?

dheva said...

பப்பு..............


பப்பு நான் உருவாக்குன என்னோட எந்திரன்....! இன்னும் நிறைய விளையாடப் போறான்...

GET READY FORCE.....!

kavisiva said...

நல்ல தொகுப்பு!

dheva said...

//பப்ளிக் ல உணமையை சொன்னதற்காக உங்களை கட்சியில் இருந்து நீக்க தேவா அண்ணாவுக்கு பரிந்துரை செய்கிறேன்//

மன்னிச்சு வுட்டுடலாம் நைனா...இன்னன்ட்ற இப்போ....?

இம்சைஅரசன் பாபு.. said...

@dheva

சரி தல விட்டு விடுவோம் ஆனா என்னக்கு கட்சில ஒரு பெரிய பருப்பு .சீ ....தூ பொறுப்பு வேணும்

செல்வா said...

//.சீ ....தூ பொறுப்பு வேணும்//

சீ.தூ அப்படின்னு பதிவி இருக்கா என்ன ..?

dheva said...

இம்சை ..@ இன்னா பிரச்சினை இப்போ... தலைவர் போஸ்ட் காலியாதா இருக்குது

உனக்கு வேணா எடுத்துக்கோ.. கரிக்டா சூட்டாகும்...!

இம்சைஅரசன் பாபு.. said...

//சீ.தூ அப்படின்னு பதிவி இருக்கா என்ன ..? //

ஐயோ முடியல சாமி ...............

இம்சைஅரசன் பாபு.. said...

@dheva
தல இருக்கும் போது வால் ஆட கூடாது வேற எதாவது வெயிட் அ ஒரு போஸ்ட் கொடுக்கணும் இல்லேன்னா ................ நாளை முதல் டெய்லி ஒரு பதிவு போடுவேன் .......ஹி.........ஹி

செல்வா said...

//தல இருக்கும் போது வால் ஆட கூடாது வேற எதாவது வெயிட் அ ஒரு போஸ்ட் கொடுக்கணும் இல்லேன்னா .//

வெய்ட்டானா போஸ்ட் அப்படின்னா என்ன ..?
அம்மிக்கல் , ஆட்டுக்கல் , யானை , அப்படின்னு எழுதறதா ..?

Anonymous said...

அரசுமரியாதையை ஏற்க குடுபத்தினர் மறுத்துவிட்டனர். //
ஏன் என்பதையும் போட்டிருக்கலாம்

சௌந்தர் said...

வெய்ட்டானா போஸ்ட் அப்படின்னா என்ன ..?
அம்மிக்கல் , ஆட்டுக்கல் , யானை , அப்படின்னு எழுதறதா ..?/////

செல்வா சொன்ன பதவி வேண்டுமா இம்சை

Anonymous said...

எம்.ஆர்.ராதா ஒரு மாபெரும் மேதை.அவரை கலைஞர் எஸ்.வி.சேகருடன் ஒப்பிட்டு பேசினார்.அதற்கு என் கண்டனம்..
‘சவுந்தர் --;’ஆமா இதை இங்கு வந்து எதுக்குபா சொல்ற?
சதீஷ்;அப்பதானே உங்க்ளை தேடி ஆட்டோ வரும்..ஹிஹி

Anonymous said...

என்ன நடக்க்குது இங்க... 30ஆம் தேதி எந்திரன் பார்க்க ரெடியாகிகிட்டு இருக்குற நேரத்துல...//
30 ந்தேதியா? தம்பி மதுரையில் டிவிடி யே வந்துரிச்சாம்...
-வதந்தியை தீபோல பரப்புவோர் சங்கம்

செல்வா said...

// நாளை முதல் டெய்லி ஒரு பதிவு போடுவேன் .......ஹி.........ஹி
//

எச்சரிக்கை : இது நடந்தால் நான் மறுபடியும் நானும் மொக்கையும் அப்படின்னு பதிவு போடவேண்டி வரும் ..!!

Anonymous said...

நாளை முதல் டெய்லி ஒரு பதிவு போடுவேன் .......ஹி.........ஹி //
அப்படி போட்டு தாக்கு

Anonymous said...

சௌந்தர் இவர் பதிவுலகில் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது//
கும்முறதுக்குன்னே வலிய வந்து வாலை நீட்டறாங்கய்யா

Anonymous said...

சினிமா உலகம் ஒரு பெரிய உலகம் , இதில் பலர் வந்து காணாமல் போய் இருகிறார்கள் நிலைத்து நின்றவர்கள் சிலர் மட்டுமே//
அந்த உலகத்துல நீங்களும் ஐக்கியமாகலாம்னுதான் இந்த வேலையா

Anonymous said...

ஒவ்வொரு பேராவுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருக்கு..குறைத்து விடுங்கள்

லொள்..லொள்..அல்ல

Anonymous said...

எச்சரிக்கை : இது நடந்தால் நான் மறுபடியும் நானும் மொக்கையும் அப்படின்னு பதிவு போடவேண்டி வரும் ..!! //
இடி மேல இடியா... அடி மேல அடியா... விழுது!!!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

@soundar

இந்த ஆட கொஞ்சம் வளைச்சு பிடியேன் தலை கரி தின்னு ரொம்ப நல ஆகிடுச்சி

இம்சைஅரசன் பாபு.. said...

//இடி மேல இடியா... அடி மேல அடியா... விழுது//

என்ன விழுது ஆல மாற விழுது அ

இம்சைஅரசன் பாபு.. said...

//கும்முறதுக்குன்னே வலிய வந்து வாலை நீட்டறாங்கய்யா //

அவரு வலை நீட்டுனா நீங்க தலையை நீட்டுங்க................

இம்சைஅரசன் பாபு.. said...

//செல்வா சொன்ன பதவி வேண்டுமா இம்சை //

50 ௦ கிலோ தராசு கள்ள ஏன் விட்டு புட்டீங்க

செல்வா said...

//இந்த ஆட கொஞ்சம் வளைச்சு பிடியேன் தலை கரி தின்னு ரொம்ப நல ஆகிடுச்சி
//

அவரு தலைல கரி இருக்குது அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும் ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆயிட்டாரா?

ஜீவன்பென்னி said...

தெ......... ஆர்..........லெஜண்ட்ஸ்........ ஜெமினியோட நடிப்ப பாக்கனும்னா 'அருகில் வந்தாள் அமைதி தந்தாள்" பாட்டைப் பாருங்க. சான்ஸே இல்ல.ஒரு ஒரு விசயும் சத்தம் இல்லாம பாருங்க. நல்ல கமெடியா இருக்கும்.

Anonymous said...

என்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆயிட்டாரா? //
ஆமா இவர் ஃபோட்டோவுல தலையே காணொம்..சிரிப்பு போலிஸ் ரொம்ப விறைச்சு நின்னதுல தலை தெரியல...முகவாய் கட்டையை கீழே இறக்குங்க சார்

Anonymous said...

ஜெமினியோட நடிப்ப பாக்கனும்னா 'அருகில் வந்தாள் அமைதி தந்தாள்" பாட்டைப் பாருங்க.//
ஜெமினியோட...இத ..பார்க்கணும்னா..../?
-என் வாழ்க்கையில் 1000 பெண்களையாவது நான் பார்த்திருப்பேன் -ஜெமினி கணேசன்

Anonymous said...

அவரு தலைல கரி இருக்குது அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும் ..?//
ஆமா என் தலையில் கரி செல்வகுமார் தலையில் மூளை சுருள் சுருளா சுருண்டு இருக்கு...நல்லா கேட்குறாங்கய்யா டீடையிலு...மூளையை சுருளாம பார்த்துகபா செல்வகுமார தம்பி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

என்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆயிட்டாரா? //
ஆமா இவர் ஃபோட்டோவுல தலையே காணொம்..சிரிப்பு போலிஸ் ரொம்ப விறைச்சு நின்னதுல தலை தெரியல...முகவாய் கட்டையை கீழே இறக்குங்க சார்//

இவர் சீக்கிரட் போலீஸ். அதான் முகம் தெரியலை. ஹிஹி

Anonymous said...

இந்த ஆட கொஞ்சம் வளைச்சு பிடியேன் தலை கரி தின்னு ரொம்ப நல ஆகிடுச்சி//
சவுந்தர் நமக்காக நெஞ்சுகறியே.... கொடுப்பாரு நெஞ்சுகறி...
செல்வா நமக்காக என்ன தருவார்ப் தெரியுமா..சவுந்தர் நெஞ்சுக்கறியே தரும் போது..இவர் .....(யாராடாவன் சிரிச்சவன்...)

Anonymous said...

இவர் சீக்கிரட் போலீஸ். அதான் முகம் தெரியலை. ஹிஹி //
கொஞ்சம் அது ஏன் போலிஸ் கை ரெண்டையும் அட்டென்சன் போஸ் வெச்சிருக்கு...பிளஸ்டூ படிக்கும் போது ஹால் டிக்கெட்டுக்காக எடுத்ததா?

கவி அழகன் said...

நல்ல படைப்பு எதிர்பார்ப்பை தூண்டுது

பனித்துளி சங்கர் said...

அருமையானப் பதிவு நண்பரே . இன்றும் ரசனை குறையாமல் ரசிக்க சொல்லும் படங்களின் வரிசையில் ரத்தக் கண்ணீரும் ஒன்று . ஸ்டார் என்று தலைப்பை பார்த்து ஏதோ நினைத்து வந்தேன் .ஆனால் இங்கு வந்து வாசித்துப் பார்த்தவுடன்தான் இதன் சிறப்புத் தெரிந்தது பகிர்வுக்கு நன்றி

எஸ்.கே said...

பல விசயங்கள் படிக்காதவை நன்றி!

Asiya Omar said...

old is gold தான் எப்பவும்.

ஹேமா said...

பழைய நடிகர்கள் பற்றிய சுவார்ஸ்யமான தகவல்கள்.நன்றி சௌந்தர்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹலோ.. என்னாச்சு.. சினிமாவுல இறங்கிட்டீக..!! :-)

ஹ்ம்ம்.. தியாகராஜ பாகவதர், ஜெமினி, M .R .ராதா ...மூன்று பேருமே மூன்று முத்துக்கள்..தான்..

தேங்க்ஸ் சௌந்தர்... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
/////என்ன நடக்க்குது இங்க... 30ஆம் தேதி எந்திரன் பார்க்க ரெடியாகிகிட்டு இருக்குற நேரத்துல...

மலரும் நினைவுகள்...சரி..ஒத்துக்குறேன்...! ஒரு ரீ கால் பண்ணி பாக்குறோம்...////

ஹா ஹா ஹா.. அதானே கரெக்டா பாயிண்ட்ட பிடிக்கிறார்ப்பா.. :-))

@@சௌந்தர்

கண்வலி சரியாப் போனா..
பழைய படம் ஒரு பார்வை...ன்னு வேண்டுதலா....??? :D :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்

///ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..... ஒர் சர்பத் ஒண்ணு போடுப்பா சில்லுன்னு.......! ////

தேவா-வுக்கு ஒரு சர்பத் கொரியர் ப்ளீஸ்....!!! ;-)))

ஸ்ரீராம். said...

நல்லதொரு பதிவு...

elamthenral said...

soundar M.R.Radha sir naditha raththa kanneer padam ennaku romba pidikkum athuvum unga pathivila antha scene extraordinary performance and acting by M.R.Radha la... nice posting soundar...

Anonymous said...

ரை ரைட்ட்....:)

 
;