Wednesday, February 2

நீ வந்த நொடி முதல்..!





உன் இமைகளுக்குள்
நான் இருப்பதாலேயே..
தினம் நீ இமை மூடிய பின்பே
என்னிமைகள் மூடும்...
நீ கண்விழிக்கும் காரணம்
உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ...!!



கூட்ஸ் வண்டியாய்
நடை பயின்ற நம் நட்பு
இன்று
எக்ஸ்பிரஸ் ரயிலாய்
வேகம் பிடிக்க
அஞ்சுகிறேன்...!
தடம் புரளாமல்
இருக்க வேண்டுமே !!




உன் முகஅழகை பார்த்து...
பிரமித்து விலகிசென்றேன் ..!
கரம்பிடிக்க வந்தவனின்
கரத்தை நீ பற்ற
உன் கர அழகை பார்த்து...
உயிரற்று போனேன்
உன் உள்ளங்கையில்..!


எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!



என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!



44 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!

//

எங்கே போனேன்னு உனக்கே தெரியாதா..

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 1
என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!

//

எங்கே போனேன்னு உனக்கே தெரியாதா..////

அது எல்லாம் தெரியும்...சொல்லமாட்டோம் ல

சி.பி.செந்தில்குமார் said...

>>>எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!

eennaa ஏன்னா நீங்க அந்த பொண்ணை உயிருக்கு உயிரா லவ் பண்றீங்க...

S Maharajan said...

//உன் கர அழகை பார்த்து...
உயிரற்று போனேன்
உன் உள்ளங்கையில்..!//

அருமை சௌந்தர்.........

சி.பி.செந்தில்குமார் said...

சரி ஓக்கே சவுந்தர் இனி காதல் கவிதையா எழுதி அடுத்த கவிதைக்காதலனா தபு சங்கரா மாறப்போறாரு

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது சௌந்தர்!

சௌந்தர் said...

ரொம்ப நன்றி Maharajan

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 6
சரி ஓக்கே சவுந்தர் இனி காதல் கவிதையா எழுதி அடுத்த கவிதைக்காதலனா தபு சங்கரா மாறப்போறாரு////

அவர் எங்க நான் எங்க ரொம்ப நன்றி சி.பி.செந்தில்குமார்

sathishsangkavi.blogspot.com said...

//என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!//

உண்மையான வரிகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

உன் இமைகளுக்குள்
நான் இருப்பதாலேயே..
தினம் நீ இமை மூடிய பின்பே
என்னிமைகள் மூடும்...
நீ கண்விழிக்கும் காரணம்
உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ...!!



//

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா..

சௌந்தர் said...

மிக்க நன்றி... முனைவர்.இரா.குணசீலன்

மிக்க நன்றி... சங்கவி

மிக்க நன்றி...வெறும்பய

சக்தி கல்வி மையம் said...

காதல் மணம் கமழும் கவிதை அருமை..

Chitra said...

எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!



என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!


.......ஆஹா..... அருமை.... !!!

sulthanonline said...

என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!

கவிதை சூப்பர்

NaSo said...

இந்த கவிதை யாருக்காக சௌந்தர்?

Anonymous said...

நைஸ் மச்சி ;)

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு........ மெகானிகல் இன்ஜினியரிங் படிச்ச லவ்வா இருக்கும் போல ........... டிரைன் எல்லாம் வருது

மாணவன் said...

//உன் இமைகளுக்குள்
நான் இருப்பதாலேயே..
தினம் நீ இமை மூடிய பின்பே
என்னிமைகள் மூடும்...
நீ கண்விழிக்கும் காரணம்
உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ...!!///

சூப்பர் மச்சி .... கவிதை நல்லாருக்கு

வைகை said...

ம்ம்ம்....லவ் பண்ற புள்ளைக கவிதையா எழுதுங்க.....நான், போலிஸ் மற்றும் பலர் எல்லோரும் படிக்க மட்டும் செய்றோம்!

வைகை said...

மாணவனுக்கு ரெண்டு எழுதிகொடுக்கலாம்ல? பாவம் புள்ள ரெம்ப கஷ்ட்டபடுது!

Madhavan Srinivasagopalan said...

கவிதை.. கவிதை..
எல்லாரும், சவுந்தருக்கு பெரிய கை கொடுங்க !
All of you, Give Soundar, BIG HAND...

ஆனந்தி.. said...

ok...Once again u have proved..:)))))))))))))))))))))))))))))))))))))

Sriakila said...

//என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!
//

நல்லவேளை இனி செளந்தர் இல்லை, வேற யாரோ...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//அது எல்லாம் தெரியும்...சொல்லமாட்டோம் ல//

சொன்னா வெளங்கிருமோ ஹா ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ...!!//



அருமையான வரிகள்....

எஸ்.கே said...

உங்களுக்கு காதல் கவிதைகள் சூப்பரா வருது! Keep it up! Best wishes!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு அர்த்தம் சொல்லு மச்சி

செல்வா said...

//நீ கண்விழிக்கும் காரணம்
உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ...!!
/

மச்சி உண்மைலேயே இந்த வரிகள் நல்லா இருக்கு ..

செல்வா said...

/தடம் புரளாமல்
இருக்க வேண்டுமே !!//

எப்படிடா திடீர்னு நல்லா எழுதி பழகின ? ஹி ஹி

செல்வா said...

//எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!
//

ஒண்ணும் சொல்லுற மாதிரி இல்ல .. நல்லா இருக்கு மச்சி ..

karthikkumar said...

ம்... வெளங்கிருச்சு ..... (சத்தியமா ஹி ஹி )

ஹேமா said...

உங்களுக்குள் நீங்கள் இல்லையென்பதை வரிகளே சொல்லுதே.
தன்னை மறந்து மயங்கிய உணர்வு !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருக்காக.... இது யாருக்காக.... ?

சுசி said...

//என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!//

கலக்கல் கவிதை.

Anonymous said...

ரொம்ப அருமை சௌந்தர்
காதல் கைகூட வாழ்த்துகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nadakkattum nadakkattum...

Congrats & All the Best...:)))

TERROR-PANDIYAN(VAS) said...

arumaiyana kavidaigal soundar... thodarndhu eludhu... :)

Anonymous said...

நீ கண்விழிக்கும் காரணம்
உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ..//
அருமையான வரிகள்

Anonymous said...

கவிதையிலியும் கலக்குறீங்க

Anonymous said...

//எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!//


என்ன நிபந்தனைனு சொல்லவேயில்லையே..

Jaleela Kamal said...

arumaiyana kavithai

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஏதோ.. அவங்க வந்த பிறகாச்சும், ஒழுங்கா இருங்க.. :-))

கவிதை எல்லாம் கலக்கலா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்..

அருண் பிரசாத் said...

//எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!//

ஏன் தம்பி? அதான் பிரச்சனையே....

 
;