Tuesday, April 12

உனக்காக நான்...!!





நீ நினைக்கும் படியெல்லாம் 
மாற்றி கொண்டு 
உன்னை மட்டுமே நிஜமாக நினைத்து 
வந்தேன்....!!! 

உறவுகள் மறந்து உன்னை மட்டுமே 
உண்மையாய் நினைத்து...
உன் உள்ளங்கை பிடித்து வந்தேன்..!!

பார்க்கும் பார்வையெல்லாம் 
உன் உருவமாகவும்..!

கேட்கும் ஒலியெல்லாம் 
உன் குரலாகவும்..!!

உன்னை துணையாய் மட்டுமின்றி 
நேசத்தையும் முத்திரையிட்டு 
வந்த எனக்கு...

நீ கொடுத்த பரிசோ 
கவலை என்பதின் அர்த்தமும்..
கண்ணீரின் அர்த்தமும்..


சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம் 
என்னை சோதித்து பார்க்கின்றாய்..? 

உன்னை உயிராக நினைத்த 
என் உயிரையும் எடுக்க 
முயற்சிக்கிறாய்...!!!  


31 comments:

Anonymous said...

என்னா டா வரவர நீ இப்பிடி கிளம்பிட ... ஆனா கவிதை சூப்பர் அதும் அந்த லாஸ்ட் லைன் பக்கா சௌந்தர்

Anonymous said...

சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..?
//

எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்க தோன்னுது ..பேசாம நீ லவ் யாரையாவது லவ் பண்ணு டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது கவிதைதான?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
இது கவிதைதான?////

அட இது விழிப்புணர்வு பதிவுப்பா

MANO நாஞ்சில் மனோ said...

//சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..? //

அடடடா அருமையா இருக்கு கவிதை சௌந்தர் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னை உயிராக நினைத்த
என் உயிரையும் எடுக்க
முயற்சிக்கிறாய்...!!! //

கொன்னுட்டேய்யா சூப்பர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//கல்பனா கூறியது...
சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..?
//

எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்க தோன்னுது ..பேசாம நீ லவ் யாரையாவது லவ் பண்ணு டா//

லவ் பண்ணுரவங்களை முதல்ல இவர் பிளாக்கை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் ஆமா....

dheva said...

ஏக்கத்தில் விளைந்திருக்கும் கவிதையின் பின்னணி...காதல் என்ற ஒன்று என்று தெரியும். கவிதையை ரசித்து விட்டு...காதலைப் பற்றி கேட்க உனக்கு தனியே தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொள்கிறேன்...!

கவிதை...அற்புதம்!

MANO நாஞ்சில் மனோ said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இது கவிதைதான?//

சேலத்துல சாப்பிட்டது இன்னும் செமிக்கலை போல....

MANO நாஞ்சில் மனோ said...

// dheva கூறியது...
ஏக்கத்தில் விளைந்திருக்கும் கவிதையின் பின்னணி...காதல் என்ற ஒன்று என்று தெரியும். கவிதையை ரசித்து விட்டு...காதலைப் பற்றி கேட்க உனக்கு தனியே தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொள்கிறேன்...!//

அந்த பார்ட்டி யாருன்னு கேட்டு சொல்லுங்க மக்கா....

செல்வா said...

ஹி ஹி ஹி .. உன் உயிரை யாரு எடுக்குறாங்க மச்சி ?

Praveenkumar said...

சூப்பர் தல.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உன்னை உயிராக நினைத்த
என் உயிரையும் எடுக்க
முயற்சிக்கிறாய்...!!!

நல்லா இருக்கு பாஸ்! பினிஷிங் டச் சூப்பர்!!

அருண் பிரசாத் said...

தம்பி... கவிதையில் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.... தொடர்ந்து கலக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

MANO நாஞ்சில் மனோ சொன்னது… //சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..? //

அடடடா அருமையா இருக்கு கவிதை சௌந்தர் மக்கா....//

ஆமாம் சவுந்தர் மக்குதான். ஹிஹி

ரேவா said...

உறவுகள் மறந்து உன்னை மட்டுமே
உண்மையாய் நினைத்து...
உன் உள்ளங்கை பிடித்து வந்தேன்.

சூப்பர் சகோ கவிதை எல்லாம் பலமா இருக்கே...

Chitra said...

என்ன, இன்னைக்கு ஒரே சோக கீதம்?

பாலா said...

கவிதை நல்லா இருக்குங்க...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..? //

...ஹிஹிஹி... சாயுற ஆள் ஸ்ட்ராங்-ஆ இருக்கான்னு பாத்து இருப்பாங்களா இருக்கும்...!!

கவிதை, உண்மையில் நல்லா இருக்கு சௌந்தர். தொடருங்கள்.. :-)))

Jeyamaran said...

*/உன்னை உயிராக நினைத்த
என் உயிரையும் எடுக்க
முயற்சிக்கிறாய்...!!! /*

Migavum arumai nanbaa..........

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
MANO நாஞ்சில் மனோ சொன்னது… //சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..? //

அடடடா அருமையா இருக்கு கவிதை சௌந்தர் மக்கா....//

ஆமாம் சவுந்தர் மக்குதான். ஹிஹி//

ஓ அப்பிடியா, இதை அப்பவே சொல்லாம் ஏன்யா விட்டீர் ஹே ஹே ஹே ஹே....

பனித்துளி சங்கர் said...

///////பார்க்கும் பார்வையெல்லாம்
உன் உருவமாகவும்..!
////////

இதுதான் காதல்

ஆனந்தி.. said...

ஓகே..ஓகே...புரிஞ்சுருச்சு...:))))))))))))))

ஆனந்தி.. said...

//கல்பனா கூறியது...

சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..?
//

எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்க தோன்னுது ..பேசாம நீ லவ் யாரையாவது லவ் பண்ணு டா//


கல்ப்ஸ்...விஷயமே தெரியாதா???...ஹ ஹ...:)))

ராஜி said...

தம்பி சூப்பர். கவிதை அழகு. வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆனந்தி.. சொன்னது…
//கல்பனா கூறியது...

சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..?
//

எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்க தோன்னுது ..பேசாம நீ லவ் யாரையாவது லவ் பண்ணு டா//


கல்ப்ஸ்...விஷயமே தெரியாதா???...ஹ ஹ...:)))//

தெரியாதேப்பா ... இவன் என்னை பண்ணி தொலைச்ச்சன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனி ஹெல்ப்?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கவிதை சூப்பர்... ஆனா... சரி விடுங்க...

மாணவன் said...

கவிதை, உண்மையில் நல்லா இருக்கு சௌந்தர். தொடருங்கள்.. :-)))

மாணவன் said...

ஹி ஹி ஹி .. உன் உயிரை யாரு எடுக்குறாங்க மச்சி ?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை நல்லா இருக்கு சௌந்தர். தொடருங்கள்...

 
;