Friday, August 5

ஆனந்தமாய் வாழ்த்துவோம்...






நானும் மதுரை ஆனந்தியும் சேர்ந்து சித்ரா பிறந்தநாள் அன்னைக்கு அவங்களை கலாய்க்கலாம் என நினைத்தோம், (சித்ராவிற்கு பிறந்தநாள் கவிதை எழுதி கொடுத்த ரேவாவுக்கு இன்னும் 10 ரூபாய் பாக்கி தரனும்) அன்று பார்த்து ப்ளாக் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து விட்டது, அன்று அவர்களை கலாய்க்க முடியவில்லை ஆனால் இன்று மதுரைகாரிக்கு பிறந்தநாள், அவரை அன்புடன் கலாய்த்து இருக்கிறோம் மேலும் கவிதை எனப்படும் கிழ் வரும் சேமியா, நவாப்பழம் போன்ற வரிகளில் சந்தேகம் இருப்பினும் விளக்கம் கேட்பவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். 





அனா சொன்னா நீ ஆவனா சொல்வே 
ஆனாவுனா தாத்தா பத்தி பேசி 
கண்ணீர் விடுவ..!!!

நீ கற்றுக்கொடுத்தும் 
பள்ளியில் முதல் மாணவன் 
உன் மகன்..!!! 
அடடா ஆச்சரிய குறி... 

மாமியார் இல்லாததால 
சேமியாவை கொடுமை செய்யும் 
அழகிய தமிழ் மகள் நீ...!! 

உன்னை தேவதை என நம்பி வந்து 
ஒரு ஜீவனை ஏமாற்றி 
நேசத்தை கொட்டும் 
ராட்சசி நீ..!!!



குட்டி இதயத்துடன் வந்தவனிடம் 
குட்டி குட்டி ஊடல்கள் செய்து...
குட்டி குட்டி பாசாங்கு செய்கிறாய்..
நீ பிறந்த தினத்திலாவது ...
நேசத்தை காண்பித்து 
அவனை கொல்லாமல் இரு... !! 

அவனுக்கும் நேசத்தின் அளவை 
காண்பிக்க கிடைத்தது ஒரு நாள் 
அது உன் திருநாள்...!! 
அத் திருநாளே போதும் 
ஒரு நாள் என்றான்..!!!

நவாப் பழம் தின்னும் 
கிளியே..!!!
அத பச்சை குழந்தையிடம் 
பிடிங்கி தின்னும் கிளியே..!! 
குழந்தையிடம் சண்டையிடும் 
குழந்தை நீ...!!!

பூக்கும் மலரெல்லாம் உனக்காக 
முழு நிலவுவும் உன் வாசலில் 
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக .. 
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக..
இப்படியெல்லாம் பொய் 
சொல்கிறேன் உனக்காக..!!!





உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு 
உன்னை வாழ்த்த கிடைத்த ஒரு நாள் 
அது உன் பிறந்த நாள்...


இன்று பூத்த மலராய்.. 
என்றும் வாடா மலராய் 
இருக்க உன்னை வாழ்த்துகிறோம்.. 



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் 

ஆனந்தி கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு பதிவு போட்டுவிட்டேன், மொக்கையா இருந்தாலும் நல்லா இருந்தாலும் அது ஆனந்தியையே போய் சேரும்.. 



soundar

72 comments:

Balajisaravana said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்தி! :)

Balajisaravana said...

//அழகிய தமிழ் மகள்
சேமியா
ராட்சசி
நவாப் பழம்.. //

மச்சி, விளக்கம் ப்ளீஸ் ;)

Balajisaravana said...

//பூக்கும் மலரெல்லாம் உனக்காக
முழு நிலவுவும் உன் வாசலில்
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக ..
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக.. //

ஐம்பது ரூபாக்கு இது ரொம்ப அதிகம் மச்சி. ;)

Balajisaravana said...

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் //

நானும் சொல்லிகிறேன் அவங்களுக்கு, உன்கூட சேர்ந்து.. :)

சௌந்தர் said...

Balajisaravana சொன்னது…
//அழகிய தமிழ் மகள்
சேமியா
ராட்சசி
நவாப் பழம்.. //

மச்சி, விளக்கம் ப்ளீஸ் ;)///

அவங்க டெய்லி 50 ரூபாய்க்கு நவாப்பழம் சாப்பிடுறாங்க மச்சி ஒரு நாள் பச்சகுழந்தை கிட்ட இருந்து திருடி தின்னுடாங்க....

சௌந்தர் said...

Balajisaravana சொன்னது…
//அழகிய தமிழ் மகள்
சேமியா ///

ஒரு சேமியா உப்புமா செய்து போடுறேன் சொல்லி ரெண்டு உயிரோட விளையாடிடாங்க.... பாவம் அந்த ஜீவன் வேற வழியில்லாம சாப்பிட்டாங்க...

சௌந்தர் said...

Balajisaravana கூறியது...
//பூக்கும் மலரெல்லாம் உனக்காக
முழு நிலவுவும் உன் வாசலில்
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக ..
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக.. //

ஐம்பது ரூபாக்கு இது ரொம்ப அதிகம் மச்சி. ;)

ஆமாம் ஆமாம் அதிகம் தான் மீட்டர் மேல ஏதவாது போட்டு கொடுப்பாங்க பாக்குறேன்...

Balajisaravana said...

//உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு
உன்னை வாழ்த்த கிடைத்த ஒரு நாள் //

கொடுத்து வச்சவன்டா நீ! :)

சௌந்தர் said...

Balajisaravana கூறியது...
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் //

நானும் சொல்லிகிறேன் அவங்களுக்கு, உன்கூட சேர்ந்து.. :)///


தேங்க்ஸ் மச்சி :))

ஷர்புதீன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

சௌந்தர் கூறியது...
Balajisaravana கூறியது...
//உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு
உன்னை வாழ்த்த கிடைத்த ஒரு நாள் //

கொடுத்து வச்சவன்டா நீ! :)//

நான் ஒன்னும் கொடுத்து வைகல அவங்க தான் 50 ரூபாய் கொடுத்தாங்க வெளிய சொல்லாத...!!

Balajisaravana said...

//நான் ஒன்னும் கொடுத்து வைகல அவங்க தான் 50 ரூபாய் கொடுத்தாங்க வெளிய சொல்லாத...!! //

ஹா ஹா..அதான் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே! ;)

சௌந்தர் said...

Balajisaravana கூறியது...
//நான் ஒன்னும் கொடுத்து வைகல அவங்க தான் 50 ரூபாய் கொடுத்தாங்க வெளிய சொல்லாத...!! //

ஹா ஹா..அதான் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே! ;)///

அச்சச்சோ... உளறிட்டேனா... :) இட்ஸ் ஓகே மச்சி நம்ம ஆனந்தி தானே

Prabu M said...

So Sweet!! :)
kavithai kalakkal... ;-)
Happy Birthday to Aananthi Akka...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Happy Birthday to you Anandhi :)

Chitra said...

ஜெயம் ரவி பின்னாலே பூக்கூடை தூக்கி வரும் கூட்டம் தான் தமிழ் பதிவர்கள் கூட்டமா? நல்லா இருக்குதுங்கோ!

Chitra said...

கவுஜ வாழ்த்து நல்லா இருக்குது..... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Chitra said...

சூப்பர், நான் தப்பிச்சிட்டேன்.....தப்பிச்சிட்டேன்....தப்பிச்சிட்டேன்.... என் பிறந்த நாள் அன்று பந்த் அறிவித்த கூகிள் கட்சிக்கு , என் மனமார்ந்த நன்றிகள்.

Chitra said...

இந்த பதிவை, ஐந்து நிமிடங்கள் முன்பு பார்க்காமல் போயிட்டேனே.... இப்பொழுதுதான், மதுரையின் விடிவெள்ளி இடம் போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் , "குதறி" வைத்தேன். இதையும் சேர்த்து சொல்லி இருப்பேனே.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... மேடம், கோயிலுக்கு கிளம்ப போறாங்க.... கூப்பிட்டு , கவுஜையை வாசிக்க சொல்லுங்க.

சக்தி கல்வி மையம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ரேவா said...

ஆனந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....எங்களுக்கு ட்ரீட் இல்லையா அக்கா.........

ரேவா said...

பூக்கும் மலரெல்லாம் உனக்காக
முழு நிலவுவும் உன் வாசலில்
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக ..
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக..


இந்த வரிகளை ரசித்தேன் சௌந்தர்

Harini Resh said...

ஆனந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
Happy Birthday Akka :)

ஆனந்தி.. said...

அட....அக்கிரமம்...அம்பது ரூவாக்கு நவாப்பழம் சாப்ட்டு...தொண்டை கட்டி போயி புலம்பினதேல்லாம் தெரியாதே...-)))

சௌந்தர் said...

ஆனந்தி.. சொன்னது…
அட....அக்கிரமம்...அம்பது ரூவாக்கு நவாப்பழம் சாப்ட்டு...தொண்டை கட்டி போயி புலம்பினதேல்லாம் தெரியாதே...-)))///

தனியா சாப்பிட்டா அப்படி தான் :))

சௌந்தர் said...

Chitra கூறியது...
ஜெயம் ரவி பின்னாலே பூக்கூடை தூக்கி வரும் கூட்டம் தான் தமிழ் பதிவர்கள் கூட்டமா? நல்லா இருக்குதுங்கோ///

அது அவங்க ரசிகர் கூட்டம் :))

சௌந்தர் said...

Chitra கூறியது...
சூப்பர், நான் தப்பிச்சிட்டேன்.....தப்பிச்சிட்டேன்....தப்பிச்சிட்டேன்.... என் பிறந்த நாள் அன்று பந்த் அறிவித்த கூகிள் கட்சிக்கு , என் மனமார்ந்த நன்றிகள்//

சந்தோசமா...??? :)

ஆனந்தி.. said...

அடபாவி..பொறாமையா...:-)))

சௌந்தர் said...

Prabu M கூறியது...
So Sweet!! :)
kavithai kalakkal... ;-)
Happy Birthday to Aananthi Akka...//

thanks Prabu



Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...
Happy Birthday to you Anandhi :)//

thanks ananthi :))

சௌந்தர் said...

Chitra கூறியது...
இந்த பதிவை, ஐந்து நிமிடங்கள் முன்பு பார்க்காமல் போயிட்டேனே.... இப்பொழுதுதான், மதுரையின் விடிவெள்ளி இடம் போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் , "குதறி" வைத்தேன். இதையும் சேர்த்து சொல்லி இருப்பேனே.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... மேடம், கோயிலுக்கு கிளம்ப போறாங்க.... கூப்பிட்டு , கவுஜையை வாசிக்க சொல்லுங்க///

விடுங்க விடுங்க எங்க போக போறாங்க பொறுமையா குதறி வைக்கலாம் :))

ஆனந்தி.. said...

ஹலோ மிஸ்டர்.பாலாஜி ஏன் உசுப்பேத்தி விடுறீங்க இந்த பையனை?:)))

சௌந்தர் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

தேங்க்ஸ் கருன்

சௌந்தர் said...

ரேவா கூறியது...
பூக்கும் மலரெல்லாம் உனக்காக
முழு நிலவுவும் உன் வாசலில்
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக ..
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக..


இந்த வரிகளை ரசித்தேன் சௌந்தர்//

தேங்க்ஸ் ரேவா :)

சௌந்தர் said...

ஆனந்தி.. சொன்னது…
அடபாவி..பொறாமையா...:-)))///

லைட்டா...!!

Balajisaravana said...

//ஆனந்தி.. சொன்னது…
ஹலோ மிஸ்டர்.பாலாஜி ஏன் உசுப்பேத்தி விடுறீங்க இந்த பையனை?:))) //

ஹலோ மேடம் சௌந்தர் எப்பவும் ஸ்ட்ராங்.. யாரும் அவனை உசுப்பேத்த முடியாது..

ஆனந்தி.. said...

சௌ..உனக்கு நோ தேங்க்ஸ்.:-))

நிகழ்வுகள் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

ஆனந்தி.. said...

@balaji saravanan: ஓ..சௌ அதுக்குள்ளே...அல்லக்கை ரெடி பண்ணிட்டாரா..:-)))

சௌந்தர் said...

ஆனந்தி.. சொன்னது…
@balaji saravanan: ஓ..சௌ அதுக்குள்ளே...அல்லக்கை ரெடி பண்ணிட்டாரா..:-)))//

மச்சி உன்ன என்ன சொல்லிட்டாங்க பாரு :))

Balajisaravana said...

நோ அல்லக்கைஸ்.. ஒன்லி ஃபிரண்ட்ஸ்.. :)

ஆனந்தி.. said...

ஓ...பிரெண்ட்ஸ் ஆ...:-)) நம்பிட்டேன்..:-))

Balajisaravana said...

மச்சி, Birthday babyய இன்னைக்கு விட்டுடலாம் நாளைக்கு வச்சுக்கலாம் அவங்கள..

ஆனந்தி.. said...

////உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு
உன்னை வாழ்த்த கிடைத்த ஒரு நாள் //

கொடுத்து வச்சவன்டா நீ! :)//

ஹலோ பாலாஜி...சௌ எதுவும் என்கிட்டே கொடுத்து வைக்கல...நல்லா கொடுத்தாய்ங்கயா டீடீலு :-))

சௌந்தர் said...

Balajisaravana கூறியது...
மச்சி, Birthday babyய இன்னைக்கு விட்டுடலாம் நாளைக்கு வச்சுக்கலாம் அவங்கள///

இன்னைக்கு தான் அவங்க திருப்பி அடிக்க மாட்டாங்க நாளைக்கி அடிப்பாங்க பரவாயில்லையா ..???

ஆனந்தி.. said...

சௌ...நீ தான் என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்க...ஹலோ பாலாஜி கொஞ்சம் என் தம்பிட்ட கேட்டு பக்குவமா நடந்துக்கோங்க..:-))

சௌந்தர் said...

ஆனந்தி.. கூறியது...
சௌ...நீ தான் என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்க...ஹலோ பாலாஜி கொஞ்சம் என் தம்பிட்ட கேட்டு பக்குவமா நடந்துக்கோங்க..:-)///

ஆமா ஆமா அப்போ நான் சொன்னது எல்லாம் உண்மை ஒதுக்குறீங்களா..???

ஆனந்தி.. said...

நீ பொய்யே சொன்னாலும்..அது உண்மைன்னு வேணும்னால் ஒத்துப்பேன்..:-))

Balajisaravana said...

//இன்னைக்கு தான் அவங்க திருப்பி அடிக்க மாட்டாங்க நாளைக்கி அடிப்பாங்க பரவாயில்லையா ..??? //
மச்சி நோ ப்ராப்ளம் டா.. நாம எதையும் சந்திப்போம் டா.. :)

சௌந்தர் said...

ஆனந்தி.. கூறியது...
நீ பொய்யே சொன்னாலும்..அது உண்மைன்னு வேணும்னால் ஒத்துப்பேன்..:-))//

ஹி ஹி ஹி :))

சௌந்தர் said...

Balajisaravana கூறியது...
//இன்னைக்கு தான் அவங்க திருப்பி அடிக்க மாட்டாங்க நாளைக்கி அடிப்பாங்க பரவாயில்லையா ..??? //
மச்சி நோ ப்ராப்ளம் டா.. நாம எதையும் சந்திப்போம் டா.. :)///

அடிக்க வரும் போது நான் ஒரு நவாப்பழம் கொடுத்து எஸ்கேப் ஆகிடுவோம் மச்சி :))

ஆனந்தி.. said...

சௌ...அது உனக்கு :-)) பட் இந்த பாலாஜி யாருன்னே தெரியலையே...:-)))

Balajisaravana said...

//அடிக்க வரும் போது நான் ஒரு நவாப்பழம் கொடுத்து எஸ்கேப் ஆகிடுவோம் மச்சி :)) //
ஹீ ஹீ :) நல்ல ஐடியா!

Balajisaravana said...

//சௌ...அது உனக்கு :-)) பட் இந்த பாலாஜி யாருன்னே தெரியலையே...:-))) //
சத்திய சோதனடா பாலாஜி!

Jeyamaran said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
// உன்னை தேவதை என நம்பி வந்து
ஒரு ஜீவனை ஏமாற்றி
நேசத்தை கொட்டும்
ராட்சசி நீ..!!!//

நல்ல வரி நல்ல வரி
நிலாரசிகன்

Unknown said...

தம்பி சௌந்தர்...

கலக்கல் கவிதைக்கு விலையே இல்லை (இப்படி சொல்லி ஒரு காசும் கொடுக்காம போறேன்னு வருத்தம் வேண்டாம்)

ஜோக்ஸ் அபார்ட்.. உன் கவிதை அருமை..

அன்பு பிறந்த நாள் வாழுத்துக்கள் ஆனந்தி..

அன்புடன்,
ராசு @ ரமேஷ்

Ram said...

//பள்ளியில் முதல் மானவன் //

எழுத்துபிழை உள்ளது!!

Ram said...

//அடடா ஆச்சரிய குறி... //

குறியீடு இட்ட பின்னர் அதை வார்த்தையால் சித்தரிக்க இது என்ன வங்கி முதலீட்டு படிவமா.?

Ram said...

//சேமியாவை கொடுமை செய்யும் //

சேமியா என்பது ஆனந்தி அவர்களின் அவரை குறிப்பதா.?

அப்படி இருந்தால் அப்படி கொடுமை செய்தால் அழகிய தமிழ் மகளா.?

Ram said...

//நேசத்தை கொட்டும்
ராட்சசி நீ..!!!//

கொடுமை பண்ணினா அழகிய தமிழ் மகள்... நேசம் கொட்டினால் ராட்சசி.. என்ன கணக்கு இது.?

ஒருவேள தப்பு தப்பா பேசினா தான் கவிதையோ!!?

Ram said...

//நேசத்தை காண்பித்து
அவனை கொல்லாமல் இரு... !! //

நேசத்தை காமிச்சா கொல்லுறதா.? உங்கள எல்லாம் மனிசனே மனுசன கொல்லுற இடத்துல விடணும்.. அப்பரம் தெரியும்..

Ram said...

//அத் திருநாளே போதும்
ஒரு நாள் என்றான்..!!!//

TR எழுதின கவிதைய எங்கிருந்தோ பிச்சு தூக்கிட்டு ஓடிவந்த போல இருக்கே!!!

Ram said...

நவாப் பழம் தின்னும்
கிளியே..!!!
அத பச்சை குழந்தையிடம்
பிடிங்கி தின்னும் கிளியே..!! //

ரெண்டாங் க்ளாஸ் பாட புத்தகத்தை மேஞ்சுட்டு வந்து எழுதியிருக்கான் மக்களே!!

Ram said...

உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு //

உங்களுக்கு எப்படி ஆனந்தி மூணு வயசுல இருந்து தெரியுமா.?

Ram said...

இன்று பூத்த மலராய்..
என்றும் வாடா மலராய்
இருக்க உன்னை வாழ்த்துகிறோம்.. //

யாருயா அது அங்க கூட்டமா நின்னு வாழ்த்துறது...?

நானும் நானும்...

சௌந்தர் said...

தம்பி கூர்மதியன் சொன்னது…
//பள்ளியில் முதல் மானவன் //

எழுத்துபிழை உள்ளது!!//

தவறு திருத்தப்பட்டது சார்...!!

சௌந்தர் said...

தம்பி கூர்மதியன் கூறியது...
//நேசத்தை கொட்டும்
ராட்சசி நீ..!!!//

கொடுமை பண்ணினா அழகிய தமிழ் மகள்... நேசம் கொட்டினால் ராட்சசி.. என்ன கணக்கு இது.?

ஒருவேள தப்பு தப்பா பேசினா தான் கவிதையோ!!///

இதுக்கு பேர் கணக்கு இல்லை...!!!

சௌந்தர் said...

தம்பி கூர்மதியன் கூறியது...
உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு //

உங்களுக்கு எப்படி ஆனந்தி மூணு வயசுல இருந்து தெரியுமா.?//

ஆமா தெரியும் டா...

சௌந்தர் said...

தம்பி கூர்மதியன் கூறியது...
இன்று பூத்த மலராய்..
என்றும் வாடா மலராய்
இருக்க உன்னை வாழ்த்துகிறோம்.. //

யாருயா அது அங்க கூட்டமா நின்னு வாழ்த்துறது...?

நானும் நானும்..///

நேத்து பிறந்தநாளுக்கு இன்னைக்கு வந்து வாழ்த்து சொல்றான்... விட்டா அடுத்த வருஷம் வந்து சொல்வான்..!!!

Ram said...

நிறுத்தி நிதானித்து நான் எனது கருத்துகளை பகிர்ந்தேன்.. அதற்கு சரியான பதிலோ அல்லது விளக்கமோ தர நீங்கள் தவறிவிட்டீர்கள்... இது தான் நீங்கள் கத்துகொண்ட பாடமோ.!!! தரம் குறைவாக உங்களது பதில் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியது!!

சௌந்தர் said...

தம்பி கூர்மதியன் கூறியது...
நவாப் பழம் தின்னும்
கிளியே..!!!
அத பச்சை குழந்தையிடம்
பிடிங்கி தின்னும் கிளியே..!! //

ரெண்டாங் க்ளாஸ் பாட புத்தகத்தை மேஞ்சுட்டு வந்து எழுதியிருக்கான் மக்களே!///

ஓஹ இதெல்லாம் ரெண்டாங்க க்ளாஸ் பாட புத்தகத்தில் வருதா நான் அதையெல்லாம் படிக்கல... :))

சௌந்தர் said...

தம்பி கூர்மதியன் கூறியது...
நிறுத்தி நிதானித்து நான் எனது கருத்துகளை பகிர்ந்தேன்.. அதற்கு சரியான பதிலோ அல்லது விளக்கமோ தர நீங்கள் தவறிவிட்டீர்கள்... இது தான் நீங்கள் கத்துகொண்ட பாடமோ.!!! தரம் குறைவாக உங்களது பதில் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியது!//

முரண் நகையாய் இருக்கும் பொழுது நீங்கள் ஏன்... பலவாறு யோசிகுறீங்க..??? என்ன சங்கடம் கண்டுவிட்டீர் தோழரே :))

இராஜராஜேஸ்வரி said...

இன்று பூத்த மலராய்..
என்றும் வாடா மலராய்
இருக்க உன்னை வாழ்த்துகிறோம்..

 
;