Monday, August 8

நினைவுகளில் நீ...









நினைவுகளை மறந்து விடு
என்றாய்..!!!
உன் நினைவுகளை மறக்க
நினைக்கும் பொழுது
நீ கூறிய சொற்கள் 
நினைவுக்கு வருகிறதே..!!!



நீ வரும் பொழுது நான் இல்லை 
நான் வரும் பொழுது நீ இல்லை 
இருவரும் வரும் பொழுது 
நேசம் இல்லை..!!




உன் மெளனம் பல 
வார்த்தைகளை தருகிறது 
கவி எழுத...இருந்தும் 
ஏனோ மெளமாய் இருந்துவிடுகிறேன்..!!!


தேன் போல வார்த்தைகள் 
 வேப்பங்காயாய் இன்று..
சிரித்து மகிழ்ந்த காட்சி 
கானல் நீராய் இன்று.. 
நொடிக்கொருமுறை கேட்ட குரல் 
மௌனமாய் போனது இன்று..
 காயப்பட்ட மனதிற்கு 
உன் நினைவுகள் மருந்தாய் 
போனது இன்று..!!!



மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை

மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!


26 comments:

ரேவா said...

நீ வரும் பொழுது நான் இல்லை
நான் வரும் பொழுது நீ இல்லை
இருவரும் வரும் பொழுது
நேசம் இல்லை..!!


அது எங்க போனது.....

சௌந்தர் said...

ரேவா சொன்னது…
நீ வரும் பொழுது நான் இல்லை
நான் வரும் பொழுது நீ இல்லை
இருவரும் வரும் பொழுது
நேசம் இல்லை..!!


அது எங்க போனது.....///

அது தான் தெரியாது...!!!

ரேவா said...

உன் மெளனம் பல
வார்த்தைகளை தருகிறது
கவி எழுத...இருந்தும்
ஏனோ மெளமாய் இருந்துவிடுகிறேன்..!!!


சௌந்தர் சூப்பர்...எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு

சௌந்தர் said...

ரேவா சொன்னது…
உன் மெளனம் பல
வார்த்தைகளை தருகிறது
கவி எழுத...இருந்தும்
ஏனோ மெளமாய் இருந்துவிடுகிறேன்..!!!


சௌந்தர் சூப்பர்...எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு///

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் :)))

ரேவா said...

காயப்பட்ட மனதிற்கு
உன் நினைவுகள் மருந்தாய்
போனது இன்று..!!!

அப்படியா?...............

ரேவா said...

சௌந்தர் நினைவில் நீ நல்லா இருக்கு

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் சௌந்தர்..

காதல் மனம் கமழும் கவிதை..

சௌந்தர் said...

ரேவா சொன்னது…
காயப்பட்ட மனதிற்கு
உன் நினைவுகள் மருந்தாய்
போனது இன்று..!!!

அப்படியா?...............//

ஆமா அப்படி தான்....!!

சௌந்தர் said...

ரேவா சொன்னது…
சௌந்தர் நினைவில் நீ நல்லா இருக்கு///

ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..!!!!

சௌந்தர் said...

வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
அசத்தல் சௌந்தர்..

காதல் மனம் கமழும் கவிதை.//

ரொம்ப நன்றி கருன் வருகைக்கும் கருத்திற்கும்..!!!

Prabu Krishna said...

//மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
//

Nice lines

Harini Resh said...

//மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!//

கவிதை நல்ல இருக்கு சகோ :)


உன்னை மறப்பதாய்
என் நாட்குறிப்பில் தினம்
தவறாமல் கிறுக்கிவிட்டு
பார்கிறேன், அடுத்த கணம்
அதில் அழகாய் உன் பெயர் :)

Anonymous said...

///நினைவுகளை மறந்து விடு
என்றாய்..!!!
உன் நினைவுகளை மறக்க
நினைக்கும் பொழுது
நீ கூறிய சொற்கள் நினைவுக்கு வருகிறதே..!!!// ஆரம்ப வரிகளே அசத்தல் -நிதர்சனம்

இந்திரா said...

//உன் மெளனம் பல
வார்த்தைகளை தருகிறது
கவி எழுத...இருந்தும்
ஏனோ மெளமாய் இருந்துவிடுகிறேன்..!!!//


எழுத்துல என்னங்க மௌனம்???

இந்திரா said...

//நொடிக்கொருமுறை கேட்ட குரல்
மௌனமாய் போனது இன்று..
காயப்பட்ட மனதிற்கு
உன் நினைவுகள் மருந்தாய்
போனது இன்று..!!!//


ரணமும் அதுவே..
மருந்தும் அதுவே..
ரசித்த வரிகள்..

முனைவர் இரா.குணசீலன் said...

மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!


நன்றாகவுள்ளது.

ஆனந்தி.. said...

வந்துட்டேன் ஒருவழியா படிக்க..:-((

ஆனந்தி.. said...

ஓகே...ஓகே...கூல்...அந்த பொண்ணை பத்தி யார்ட்டையும் சொல்ல மாட்டேன்...:-))

பாலா said...

என்ன நண்பா பெயிலியரா? கவலைப்படாதே.. காலமிருக்கு, காதலுமிருக்கு, இதுதான் வாழ்வின் எதார்த்தம்.

ஆனந்தி.. said...

//மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!//
எச்சூஸ் மீ ...மீனிங் ப்ளீஸ்..:))

ஆனந்தி.. said...

சௌந்தர்...இங்கே பாலா சொன்ன கம்மென்ட்க்கு லைக் பண்ண விரும்புறேன்..ஏய்..இங்கே லைக் பட்டன் எல்லாம் இல்லையாப்பா:))))))))))

Balajisaravana said...

மச்சி அந்த படம் ரொம்ப அழகு டா.. :)
இணைந்திருக்கிற படத்த போட்டுட்டு பிரிவு கவிதையா? :(

//இருவரும் வரும் பொழுது
நேசம் இல்லை..!! //
புரிதல் இல்லா நேரங்களில், நேசம் கூட இருப்பதில்லை..

உணவு உலகம் said...

//மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..//
மறக்க நினைக்கும் கவிஞனின் வலி.

சௌந்தர் said...

பலே பிரபு கூறியது...
//மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
//

Nice lines///

நன்றி பிரபு...

சௌந்தர் said...

Harini Nathan கூறியது...
//மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!//

கவிதை நல்ல இருக்கு சகோ :)


உன்னை மறப்பதாய்
என் நாட்குறிப்பில் தினம்
தவறாமல் கிறுக்கிவிட்டு
பார்கிறேன், அடுத்த கணம்
அதில் அழகாய் உன் பெயர் :)//

நன்றி சகோ உங்கள் கவிதையும் சூப்பர் நன்றி கவிதைக்கும் கருத்திற்கும் :))

Chitra said...

மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை
மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!


...... இந்த நாலு வரிகளுக்காகவே அவள், அடுத்த பக்கமாக ஓட்டம் பிடிச்சிருப்பாளே ...... ஹா,ஹா,ஹா,ஹா,....

 
;