Thursday, July 29

ஆயுதம் செய்......

 துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. பிஸ்டல்  ரிவோல்வர் ஆகியன முக்கிய  கைத்துப்பாக்கி வகைகளாகும். பிஸ்டலில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். ரிவோல்வரின் சுழலும் சிலிண்டரின் துளைகளுள் குண்டுகள் இடப்படும்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு தடவை சுடக்கூடிய கைத்துப்பாக்கிகளே உருவாக்கப்பட்டன. அடுத்தடுத்துச் சுடுவதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுடுகுழல்கள் பயபடுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரிவோல்வர் கண்டுபிடிக்கப்பட்டமை ஒரே சுடுகுழலுடன் அடுத்தடுத்துச் சுடுவதைச் சாத்தியமாக்கியது.

துப்பாக்கிகள் சுழல் குளாய்களைக் கொண்டுள்ளன. இது தோட்டா அல்லது எறிபொருளில் சுழற்சியை ஊட்டுவதால், எறிபொருள் (பறந்து) செல்லும் பொழுது மேம்பட்ட நிலைப்பாட்டோடு பறந்து செல்கின்றது. கைத்துப்பாக்கிகள் பொதுவாக தற்பாதுகாப்பு ஆயுதங்களாகவே கருதப்படுகின்றன. தேர்ந்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை மிக நெருங்கிச் சென்று தாக்கவும் பயன்படுகின்றன.

இயந்திரத் துப்பாக்கி சர். ஹிராம் மக்சிம் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.


(Ak-47, 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.



















நம்ம ஊர் போலீஸ் வைத்து இருக்கும் சுழல் துப்பாக்கி
















































                                                            

20 comments:

Kousalya Raj said...

ம் ....மனிதனுக்கு எதிராக மனிதனின் கண்டுபிடிப்பு...!

என்ன சௌந்தர் ஒரு முடிவில இருக்கிற மாதிரி இருக்கு....

Chitra said...

துப்பாக்கியோட எங்கே புறப்பட்டாச்சு? எதுனாலும் பேசி தீத்துக்கலாம்...... :-)

எல் கே said...

தம்பி .. யாரை போட்டு தள்ள இது?? கழகத்தில் குழப்பம் விளவிததர்க்கு , தேவாவை எதுவும் செய்யாதே

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன நண்பா திடீர்ன்னு இப்படி...

இப்படி ஒரு அறிக்கையும் போட்டிரு..

ஓட்டு போடாதவங்களுக்கும், கமெண்ட் எழுதாதவங்களுக்கும் இவை பயன்படுத்தப்படும்"

ஜில்தண்ணி said...

அது பிஸ்ரலா பிஸ்டலா எது சரி ?

இப்டி துப்பாக்கி முனையில ஓட்டு கேட்டா நாங்க போட்டுடுவோமா ???

நல்லாயிருக்கு

Unknown said...

சரி.. சரி.. ஓட்டு போட்டுட்டேன்...

சௌந்தர் said...

LK சொன்னது…
தம்பி .. யாரை போட்டு தள்ள இது?? கழகத்தில் குழப்பம் விளவிததர்க்கு , தேவாவை எதுவும் செய்யாதே//

@@lk தலைவர் பதிவி கேட்டால் இப்படி தான் மிரட்டுவோம்

அருண் பிரசாத் said...

ஏன் இந்த கொலை வெறி?

என்னை விட்டுருங்க. நான் ஓட்டும், கமெண்டும் போட்டாச்சு

செல்வா said...

ஹே .. நிறுத்து .. இருக்கறது பத்தலையா...? இனி எங்கயாவது ஆயுதம் செய் அத செய் இத செய்னு சொல்லிப்பாரு ..!!

Anonymous said...

எனக்கு தெரியும் உங்க கையில் பொம்மை துப்பாக்கி தானே இருக்கு.அப்புறம் ஏன் உங்க நண்பர்கள் எல்லோரும் பயப்படறா ?

Anonymous said...

நான் பயந்துகிட்டு ஒட்டு போட வில்லை.சொல்லிப்புட்டேன்

விஜய் said...

என்ன சௌந்தர் தலைவா
இப்படி அவதாரம் எடுத்துட்டீங்க, நான் வலைப்பக்கம் சரியா வரது இல்ல, சரியா பின்னோட்டம் இடுவதில்லை உங்களுக்கு, இது காரணமோ இருக்குமோ..


ஹ ஹ ஹ எ

எல் கே said...

//@@lk தலைவர் பதிவி கேட்டால் இப்படி தான் மிரட்டுவோம்
//

ithu sari illa, pathiliku RDX bomb varum

Jeyamaran said...

ஐயோ என்னோட சொந்த துப்பாக்கிய ஏன் இங்க வெளி இட்ட சௌந்தர்

ஸ்ரீராம். said...

துப்பாக்கிப் படங்கள் அழகாய், கவர்ச்சியாய் இருக்கின்றன.

சீமான்கனி said...

தொகுப்பு நல்லா இருக்கு சௌந்தர் ஆனால் எதுவா இருந்தாலும் பேசியே தீர்த்துக்கலாம் தீர்த்துட்டு பேசுனா பேட்டி மட்டும்தான் குடுக்க கவனம்...

ஜீவன்பென்னி said...

சுவுந்தர் அண்ணே!!!!!

லேட்டா வந்தே நம்மள சுட்டுபுடாதீங்க சொல்லிப்புட்டேன்.

Priya said...

ஓ.. இத்தனை வகைகள் இருக்கா?

Karthick Chidambaram said...

என்ன இது துப்பாக்கிய எடுத்த சௌந்தருக்கு இப்படினா ? குண்டடி வாங்குன .... ?

ஜெயந்தி said...

இப்படி பயமுறுத்துறீங்களே?

 
;