Thursday, August 5

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?







நாம் தெருவில் நடந்து போகும் போது, ஓரு நோட்டீஸ் கொடுத்து.. இதே போல் 100 பேருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள், கொடுக்க வில்லை என்றால் உங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்று சொல்வார்கள், ஆனால் நடுத்தெருவில் நின்று கொண்டுதான்  அந்த நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருப்பான்  அதே போல பதிவுலகத்தில் இப்போது தொடர் பதிவு என்று வந்துள்ளது,





தொடர் பதிவு மற்றவர் வலைப்பதிவை பார்க்க சென்றால் அங்கே நமது பெயரை போட்டு தொடர வேண்டும் என்று போட்டு இருப்பார்கள்... பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் அதனால் அருண் நம்மளை தொடர் பதிவெழுத சொன்னார் தொடர்கிறேன்....





 1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ரசிகன்




2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

 என் உண்மையான பெயர் சௌந்தரபாண்டியன். ரசிகன் என்று வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து வைத்தேன், ரசிகன் என்ற பெயரில் ஏற்கனவே மூன்று வலைபதிவு இருப்பதை பிறகு தெரிந்து கொண்டேன்...











3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

இப்படி வலைபதிவுகள் (blog) இருப்பதே எனக்கு தெரியாது... திடீர் என்று தொடங்கியது தான் ஒன்றும் பெரிய விசயம் இல்லை



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்றும் செய்ய வில்லை தமிழிஷ் இணைத்தேன் அவ்வளவு தான். (நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )


,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னை பற்றி எழுதியது கிடையாது, என்னை பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை.  எனக்கு தெரிந்தவர்களை பற்றி எழுதியிருக்கிறேன், இதுவரை எந்த விளைவும் இல்லை..... 


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாம் பொழுதுபோக்குக்காக எழுதுகிறேன்...நிறைய நண்பர்கள் மற்றும் எழுதும் அறிவை சம்பாதித்து வைத்து இருக்கிறேன்...(இதுவரை ரெண்டு கோடி லாபம் வந்து இருப்பதை சொல்லவில்லை...)


7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

முதலில் ஒன்றுதான் இருந்தது, இப்போது நண்பர் தேவா, விஜய், இவர்களுடன் சேர்ந்து கழுகு என்று வலைபதிவு தொடங்கி உள்ளோம், (குறிப்பு: தேவா அண்ணா என்று சொன்னால் அவருக்கு புடிக்காது)



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 

மற்ற பதிவர்கள் போல வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. பொறாமை இல்லை கோபம் வரும் அளவுக்கு எந்த பதிவும் இல்லை....


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எங்க அண்ணன் தான் சொன்னார் இந்த வலைபதிவுக்கு அவர் தான் எடிட்டர்
Jay சொன்னது…
Good Start





10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

இது பெரிய கடல் பத்து நாள் பதிவு எழுதவில்லை என்றால் காணமல் போய்விடுவோம்.


lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா, கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்
அடுத்து தொடர போகும் ஆடுகள் 







37 comments:

எல் கே said...

//lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்
/

appadi podu arivaalai

எல் கே said...

நல்ல தெளிவான பதில்கள். உங்களை போலவே எளிமையாக உள்ளது பேட்டி. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

(மறக்காம அமௌன்ட் என் கணக்கிற்கு மாற்றவும் )

Chitra said...

நல்ல கூட்டணி.... நல்ல பதில்கள்..... :-)

விஜய் said...

ரொம்ப யதார்த்தமா உண்மைய சொல்லி இருக்கீங்க , வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர சௌந்தர் ...சரி அதெல்லாம் இருக்கட்டும், என் பெயர் ஏன் எழுதி இருக்கீங்க?...ஹஹா ஹ ஹ ஹ எ

ஜெய்லானி said...

ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..உய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஜில்தண்ணி said...

நச் பதில்கள் :))

ஓட்டு போட்டாச்சி,கட்சி வளர்ச்சி நிதிக்காக அல்லாருட்டையும் வாங்குன அமவுண்ட மாமா கட அக்கவுண்ட்ல போட்டுடுங்க :)

virutcham said...

வாழ்த்துக்கள்

Kousalya Raj said...

//lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்//

சௌந்தர் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதிங்க....!!? சொன்ன கெடுவுக்குள் கண்டிப்பாக பதிவு வந்துவிடும்....ம்... ( எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது )

LK...
//appadi podu arivaalai//

என்ன ஒரு சந்தோசம்...!!

Kousalya Raj said...

சௌந்தர் பதில்கள் எளிமையாக நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள்

Karthick Chidambaram said...

நச் பதில்கள்

Anonymous said...

சௌந்தர் பதில்கள் எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள்

செல்வா said...

///(நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )///
தலைவரே நீங்க பயப்பட வேண்டாம் .. நானும் சொல்ல மாட்டேன் ..!!

செல்வா said...

///இதுவரை ரெண்டு கோடி லாபம் வந்து இருப்பதை சொல்லவில்லை...////
விடுங்க தலைவரே .. கட்சி நிதின்னு சொல்லி சமாளிச்சுடலாம் ..!

Unknown said...

பத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்...

உண்மை... உண்மை ...

வால்பையன் said...

நல்லா சொல்லியிருக்கிங்க!

ஜீவன்பென்னி said...

பத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்...

உண்மையான வரிகள்....

வெளிப்படையான பதில்கள்....

dheva said...

10 நாள் பதிவு போடலேன்னாலும் காணமப் போய்டுவோம்....வாசிப்பாளனை பாதிக்காத வகையில் எழுதினாலும் காணாமப் போயிடுவோம், தனித்தன்மை இல்லேன்னாலும் காணாமப் போயிடுவோம்....


பிட் நோட்டீஸ் கொடுத்த மாதிரின்னு சொன்னீல்லா அதுதான் தம்பி உன்னோட தனித்தன்மை....! உன்னைப் பற்றி தெரியுமே..அதனால் மற்றவர்கள் பட்ட சுவாரஸ்யம் எனக்கு இல்லை!

kavisiva said...

நீங்க எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேங்க :)

அருண் பிரசாத் said...

சூப்பர். கலக்கிட்டீங்க. சரியான ஆளை தான் கூப்பிட்டு இருக்கேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதில்கள் அருமை...

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி...

ஹேமா said...

கேள்விகளுக்கான பதிலா உங்கள் மனமா !

Riyas said...

பதில்கள் ம்ம்ம் கலக்கல் சௌந்தர்

jothi said...

nice..............

Jeyamaran said...

(நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )
ha ha ha

சீமான்கனி said...

நல்ல பதில்கள் சௌந்தர்...யாரு மேல என்ன கோவமோ தெரியல...எதுவா இருந்தாகும் பேசிக்கலாம் சௌந்தர்...வாழ்த்துகள்,....

ஸ்ரீராம். said...

simple and good...

Jey said...

பதில்கள் எளிமையா இருக்கு. என்னதா அழகா சொல்லிரிக்கீங்க.):

Giri Ramasubramanian said...

பத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்...

may be...உண்மை...

But you can give a good come back thala...

Anonymous said...

padivukku nandri

Anonymous said...

how i creat a blog.. can anyone tell me

சௌந்தர் said...

@@@பெயரில்லா சொன்னது ஹாய் மேல இருக்கும் Create Blog அதை கிளக் பண்ணுங்க

School of Energy Sciences, MKU said...

ரொம்ப நல்லா இருக்கு தம்பி.

SShathiesh-சதீஷ். said...

அவனா நீ? சும்மா.....தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹ ஹ ஹ... சூப்பர் கேள்வி... கலக்கல் பதில்கள்...

உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க
http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html

ஸாதிகா said...

//பத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்..// அட பதில்கள் அருமை.

ஜெயந்தி said...

அருமையான பதில்கள்.

Anonymous said...

ungalukku oru award koduthu irukiren . petruk kollavum

http://divyamma.blogspot.com/2010/08/blog-post_07.html

 
;